3 Mar 2015

பூநாத்து,,,,


                   
ஒருவட்டம்,ஒருசதுரம்,ஒருசெவ்வகம்,ஒருமுக்கோணம்,ஒரு அருங்கோணம் எனநீண்டுவிரிந்து காட்சிப்படுகிற எல்லாமும்தனித்தனியாகவும்,ஒன்றுக்குள் ஒன்றாகவும்   சேர்ந்தும்,  விலகியும்,  வைத்துப்  பார்க்கும்போது  நன்றாகவும்
ஆசையாகவும்தான் இருக்கிறது.
 
    அதன் உருவமும்,அதன் சுற்று வெளியும்,அதன் உள்ளீடாக விரிந்து தெரிகிற வெளியும் பார்க்க வும்,அதைவைத்துபணிசெய்யவும்நன்றாகத்தான் இருக்கிறது.
 
    கணக்கில் மட்டுமல்லாமல் வாழ்க்கையிலும் வந்து  பதியணிட்டு சென்று விடுகிற இவைகள் என்று,எப்பொழுதும்நம்முடன்நகர்பவையாகவே/
 
    வாழக்கற்றுத்தந்தவாழ்க்கையின்கோணங்கள் வட்டமாயும்,சதுரமாயும்,செவ்வகமாயும்,
முக்கோணமாயும்,அருங்கோணமாயும் காட்சிப்படஅவற்றின் மாறுபட்ட வெளிகள் நம்மிடம் ஏதாவது சொல்லிக்கொண்டும் நம்முடன் கைகோர்த்துக்ண்டுமாய்/
 
    வீடேறி தவழ்ந்து வருகிற குழந்தையின் உடல் மொழி என்னவாக இருந்த போதிலும் எதை பிரதிபிம்பம் செய்தபோதிலும் அதுபார்க்க அழகாகவே இருக்கிறது.
 
    நான்,நீ,அவன்,அவள்,இவன்,இவள்,இவர்கள்,அவர்கள்,,,,,,,என யார் பார்த்தபோதும் வெற்று மேனியாக தவழ்ந்து வருகிற அதைத்தூக்கி கொஞ்சஆவல் பொங்காமல் இல்லை.
 
    எதெதற்கோ சட்டமிடுகிற,வரையறை வகுத்துக்கொள்கிற நாம் ஒரு குழந்தை தவழ்ந்து வருகிற போது அதன் குறுக்காக யாரும் போய்விடக்கூடாது எனவும் அது வருகிற பாதையில் யாரும் நடமிட்டு விடக்கூடாது எனவும் முடிந்தால் அதை மலர் தூவி வரவேற்கவும்,மலர் செண்டு கொடுத்து உபசரிக்கவும் செய்யவேண்டும்.
 
   அதன் பூமேனி தரை தொட அதை நாம் தொட ஏங்கி கை நீட்டுகிற பொழுதுகளில் நேசமிட்டு விரிகிற உறவு இழைகள் நமது மனதிலும்,அதன் குட்டி மனதிலுமாய் குடிகொண்டு கூடு கட்டிக் கொண்டுவிடுமாஎன்ன?
 
“ஏ,,குழந்தை,குட்டிக்குழந்தை,,,,,,அருகே வா,வா,,,,அன்பாய் வா,வா”,,,,,,என இன்னும் இன்னுமாய் நிறையவும்,அள்ளியுமாய் கொஞ்சத்தோணுகிற பொழுதுகளின் நகர்வுகளில் வானம் பொழிய, இயற்கை பூச்செரிய,விண்மீன்கள் வட்டமிட,நிலா மிக நெருக்கமாய் அருகில் வந்து தன் முகம் காட்டிகன்னம்தட்டிவிளையாடதேவதைகளின்,தேவதூதர்களின்வாழ்த்துக்கள்அசரீரீயாகஒலிக்க அதன் பிண்ணனியில் வெற்று மேனியாய் தவழ்ந்து வருகிற குழந்தையை அள்ளிக்கொஞ்ச யாருக்குத்தான் ஆசை இல்லை.
 
   தள்ளிப் போங்கள்எல்லோரும்,நான் குழந்தையை கொஞ்சவேண்டும்.தேவைப்பட்டால் அலுவலகத்திற்கு விடுப்பு சொல்லிவிட்டு கூட குழந்தையுடன் பொழுதை கழிக்க தயார் என்கிற மனோநிலையில் இருக்கிற போது வீடேறி தவழ்ந்து வருகிற குழந்தையின் உடல் மொழி என்னாவாய் இருக்கும் என யோசிக்க நேரமற்றுப்போகிறது.
 
      இரண்டு    பேரின்   பயணமும்   எதிரெதிர்  திசையில்   பயணிக்கிற   சம்பவமாக.
 
     அவள் யாருக்கு தாய் என சரியாகத் தெரியவில்லை.அவள் யாருக்கு மனைவி என்பதுவும் தெரியாமலேயே.அவள் இன்னாரின் மகள் என யாரும் இதுவரை சொல்லவில்லை.அவள் யாருக்கு என்ன உறவாக இருந்த போதிலும் அவள் எந்த ஊரைச்சேர்ந்தவள்,,,,,,   என்கிற   விடைகள்  யாவும்  அவளிலிருந்து  பறை  சாற்றித்தெரியவில்லை
 
    புதுநிறம்,  அழுத்தமான  முகம்,  அடர்  கலரில்சேலைமற்றும் சட்டை. அள்ளிச் சொருகியிருந்த  தலைமுடி  எண்ணை காணாது வறண்டு கலைந்திருந்தது.
 
அலுப்புஅப்பியிருந்தமுகமும்கண்களும்,உயர்ந்துவளர்ந்தஉடலும்அவள்கிராமத்துக்காரிஎன்பதை  அடையாளம் சொல்லியது.
 
    அள்ளி சொருகியிருந்த சேலையின் பூக்கள் வெளுத்தும்,சாயம் இறங்கியுமாய் இதழ் விரித்துசிரித்தது.
 
   சேலையின்அடிப்புறமாய் வெளித்தெரிந்த பாவடையின் அடிப்புறம் நைந்தும்,நூல் பிரிந்து தொங்கியுமாய்/
 
    வாங்கியசரக்கைஅள்ளிக்கட்டிக்கொண்டுபலசரக்குகடைவாயிலிலிருந்து எனது
இருசக்கர வாகனத்தை பின்னோக்கி உருட்டி திருப்பிய போதுஎன்னை கடந்த அவள் 30லிருந்து 35ற்குள்ளாக தனது வயதை அறிவித்தாள்.
 
    என்னை ஏறிட்ட அவளது பார்வையும்,அவளை ஏறிட்ட எனது பார்வையும் ஒரே நேர்கோட்டில் சட்டென நிகழ்ந்து போன அதிசய சம்பவமாக/
 
   கடையிலிருந்து நானும் கிளம்பி விட்டேன்.அவளும் போய் விட்டாள்.இரண்டு பேரின் பயண மும் எதிர்,எதிர் திசையில் சம்பவித்த  நிகழ்வாக /
 
 வீட்டிலிருந்து கிளம்பி இங்கு கடைக்கு சரக்கு வாங்க வருகிறவரை சந்தித்த,பேசிய மனிதர்களின் முகங்கள்,நடவடிக்கைகள்இன்னும்இன்னுமானஎல்லாவற்றிலுமாய்தெரித்துத்தெரிந்த நாகரீகம், படோடோபம்,மிகைநடிப்புஇன்னும்,இன்னுமான எதுவும்அவளிடம் இல்லை.அல்லது காணக் கிடைக்கவில்லை.
 
 அவள் அணிந்திருந்த உடையிலிருந்து நடைவரை வளர்ந்து தெரிந்த இந்தநகர நாகரீகத்திலிருந் து சற்று கூட அல்ல ரொம்ப தூரமாகவே விலகி/
 
    அவளது நடையில் தெரிந்த அவசரமும்,அவளிலிருந்த படபடப்பும் அவள்தனது ஊருக்கு  செல்வதற்கான கடைசிநேர இரவுப்பேருந்தை பிடிக்க   எட்டிப்போய்க்கொண்டிருக்கிறாள்  என்பது மட்டும் உறுதுயாகத்தெரிந்தது.
 
    அவளினது வருகை எதற்காக இங்கு நிகழ்ந்தது,அல்லது அவசியப்பட்டது என சரியாகதெரியாத பொழுதிலும் கூட,,,,,,,,,,,,,
 
     பள்ளியிலபடிக்கிறதனதுமகள்,மகனுக்குஏதேனுமாய்பொருள்வாங்க வந்திருக்கலாம்.அல்லது  தனது தோட்டங்காடுகளில் விளைகிற பயிர்களுக்கு மருந்து,உரம் வாங்க வந்திருக்க லா ம்.
 
    அவளது வருகை எதுகுறித்து என்பதாக இருந்த போது அவளது புறப்பாட்டில் கூட்டை நோக்கி புறப்படுகிற பறவையின் வேகம்  தெரிந்தது.
 
 அவள் யாருக்கு தாய் எனத்தெரியவில்ல.அவள் யாருக்கு மனைவி என்பதுவும் புரியாமலேயே/ அவள் யாருக்கு மகள் எனபதுவும் இதுவரை தெரியாமலே/
 
    அவள் யாருக்கு என்ன உறவாக இருந்த போதிலும் அரிதாரம் பூசிக்கொண்ட இந்தஊரில்இப்படிஒருயதார்த்தப்பெண்ணைபார்த்ததுமிகவும்சந்தோசமாகவே/   

9 comments:

'பரிவை' சே.குமார் said...

அவள் யாருக்கு என்ன உறவாக இருந்த போதிலும் அரிதாரம் பூசிக்கொண்ட இந்தஊரில்இப்படிஒருயதார்த்தப்பெண்ணைபார்த்ததுமிகவும்சந்தோசமாகவே/



அருமை அருமை அண்ணா....

Yarlpavanan said...

"அவள் யாருக்கு தாய் என சரியாகத் தெரியவில்லை.அவள் யாருக்கு மனைவி என்பதுவும் தெரியாமலேயே.அவள் இன்னாரின் மகள் என யாரும் இதுவரை சொல்லவில்லை.அவள் யாருக்கு என்ன உறவாக இருந்த போதிலும் அவள் எந்த ஊரைச்சேர்ந்தவள்,,,,,, என்கிற விடைகள் யாவும் அவளிலிருந்து பறை சாற்றித்தெரியவில்லை" என அழகாக அடையாளப்படுத்துகிறீர்கள்.
உணர்வு வெளிப்படும் நல்ல பதிவு.
தொடருங்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

அழகான சிந்தனை... ரசித்தேன்...

balaamagi said...

அவளது வருகை எதுகுறித்து என்பதாக இருந்த போது அவளது புறப்பாட்டில் கூட்டை நோக்கி புறப்படுகிற பறவையின் வேகம் தெரிந்தது. அது தான் உள் உணர்வு தொடு பாசமோ,,,,,,,,,,,,,,,,,. அருமையான தொகுப்பு, நன்றி.

vimalanperali said...

வணக்கம் ம்கேஸ்வரி பாலச்சந்திரன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் திண்டுகல் தனபாலன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் பரிவை சேக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

Thulasidharan V Thillaiakathu said...

அவள் யாருக்கு என்ன உறவாக இருந்த போதிலும் அரிதாரம் பூசிக்கொண்ட இந்தஊரில்இப்படிஒருயதார்த்தப்பெண்ணைபார்த்ததுமிகவும்சந்தோசமாகவே//

அருமை! நண்பரே! ரொம்பவே ரசித்தோம்!

கரந்தை ஜெயக்குமார் said...

இப்படிஒருயதார்த்தப்பெண்ணைபார்த்ததுமிகவும்சந்தோசமே
நன்றி நண்பரே
தம +1