5 Apr 2015

அந்திமம்,,,,,,,

அவரை நாங்கள்அந்நியமாகப் பார்த்ததில்லை.தொந்திரவாகவும் உணர்ந்ததில் லை.
எழுபத்தைந்து வயது கடந்து விட்ட அந்த மூதாட்டியை பாட்டி என்றே அழைத் தோம். அவரும் எங்கள் அனைவரையும் டேய் என்றுதான் அழைப்பார்.

மாதா மாதம் எங்களது வங்கிக்கு வருவார். வட்டிப் பணம் எடுக்க.(மொத்தமாக போட்டிருந்த பணத்திலிருந்து மாதாமாதம் வட்டி எடுக்கிற மாதிரி ஏற்பாடு)

முதுமையை எட்டி விட்ட போதிலும் அவரது உடலிலும்,மனதிலுமாய் ஒட்டிக் கொண்டிருந்த ஆரோக்கியம் எங்களை ஆச்சரியப் படவைத்ததுண்டு.

அந்த வயதிலும் தனது உழைப்பை மட்டுமே நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் சனாதனவிதவைத்தாய்.இன்றளவும்யாருடையதுணையும்அற்றுதனியாளாய் இந்தியகிராமங்களில்வசிக்கும்ஆயிரக்கணக்கானமூதாட்டிகளைபோலஇவரும்./

அவரை பார்க்கும் கணங்களில் தனியாளாய் வசிக்கும் எனது தாயின் ஞாபகம் வர மறப்பதில்லை .

அவர் வங்கிக்கு வரும் போதெல்லாம் சொல்லுவார்.”இப்பொழுதான் களை எடுத்து விட்டு வரு கிறேன்” “ஆட்டுக் குட்டிக்கு புல்லுப் புடுங்கப் போனேன்.” “வீட்டுலசமையல் வேலைஇ ருந்துச்சி”என./

“விடுங்கடா,ஏந்துன்பம் என்னோட, பணத்தக் குடுங்கப்பா நான் போறேன், தலை போற வயசுல இந்த கெழவியப் பத்திப் பேச என்ன இருக்குடா என்பார். அவரது மகன் பெயரிலும், மருமகள் பெயரிலுமாக வங்கியில் டெபாசிட் இருந் தது மாதந்திர வருவாய்த்திட்டத்தில்.

அதில் கிடைக்கும் வருவாயை மாதாமாதம் தனது தாய்க்கு தந்து விடுமாறு ஒப்புதல் கடிதம் எழுதிக் கொடுத்திருந்தார்கள் வங்கிக்கு./

அதன் படியே தடம் புரளாமல் ஓடிக் கொண்டிருந்தது இந்த ஏற்பாடு. பணம் எடுக்க வரும் அந்த மூதாட்டி பணத்தை வாங்கிக் கொண்டு உடனே போவ தில்லை.

“போடா,வாடா,இந்தக் கெழவிக்கு ஒங்க மத்தியானச் சாப்பாட்டக் குடுங்க டா”......,,என்றெல்லாம் நிறையப் பேசிக் கொண்டு செல்வார். பெரும்பாலும் மதியநேரம்,அல்லதுகணக்கு முடிக்கப் போகும் நேரமாகப் பார்த்துதான் அவர் வருவார்.

அவரின் பேச்சு பெரும்பாலான நாட்களில் “ஒங்க சாப்பாட்ட எடுத்துசாப்டுரு வேன்டா”என்ப தாக த்தான் முடியும்.அல்லது அந்தப் புள்ளியில்தான் மையம் கொண்டுநிற்கும்.

ஒரு நாளானால் அவரது கையில் இருந்த “டிபன் பாக்ஸை” எடுத்துக் கொண்டு விட்டேன். மள,மளவென்று அழுதே விட்டார் பாவம்.

இம்மாதிரியன நடைமுறைகள் இன்று, நேற்றல்ல நான் அந்த அலுவலகத்தில் பணியில் சேர்ந்த நாள் முதலாக இதுதான் நடைமுறையாக./ இப்படியான நடைமுறையின்ஊடாக ஒரு நாள் அலுவலகத்திற்குகணவன்,மனைவியுமாக இருவர் வருகிறார்கள். தோற்றத்தில், உடை யில், அலங்காரத்தில் பணக்காரத் தனம்.

“டாடா சுமோ”வில்தான் வந்திருந்தார்கள்.மடிப்புக்கலையாத சூட்,கோட்,டை.சூ எனகணவனும்,,,,,,, விலைஉயர்ந்த புடவைக் கட்டு,வாசனை செண்ட் ,பவுடர் பூச்சு,லிப்ஸ்டிக்,நகை அலங் காரம் என மனைவியுமாய் ./

வந்தார்கள்,மேலாளரிடம்சென்றார்கள்,இரண்டு பேருடைய டெபாசிட் பத்திரங் களையும் கா ட்டி முடித்துத் தருமாறு கேட்டுக் கொண்டார்கள். இடையில் முடிப்பதால் வட்டி குறையும் என்றோம். பரவாயில்லை.பண்ணிக் கொடுங்கள் என்றார்கள்.

எல்லாம் முடிந்து பணம் வங்கிக் கொண்டு போகும் போதுதான் நான் கேட் டேன்.என்ன சார்திரும்ப பணம் எதுவும் போடுவீங்களா,இல்ல,,,,,,,, ?/ “இல்ல சார் நானும் ஏங் வொய்ப்பும் இதுவரை வெளிநாட்டுல இருந்தோம்.இப்ப இங்கயே செட்டில் ஆயிடலாம்னு ஒருயோச னை. சின்னதா ஒரு பேக்ட்ரி வைக்கலாம்னு இந்த பணமெல்லாம் ட்ராப் பண்றேன். மிச்சம்இருந்தா கொணாந்து போடுறான் கண்டிப்பா./ எனக் கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.

சரியாக அவர்கள் போன அரைமணி கழித்து அந்தப் பாட்டியும் வந்து விட்டார். என்னப்பா வந்தாங்களா ஏங் மகனும்,மருமகளும்.?

பாட்டியின் குரலில் சுதி குறைந்திருந்தது. தேகம் வாடி முகம் கறுத்துக் காணப்பட்டார்.திரு விழாக் கூட்டத்தில் காணாமல் போன குழந்தையின் பரிதவிப்பு அந்த பாட்டியின்முகத்தில்.

ஏங் பேர்ல இருக்குற கணக்க முடிச்சு குடுங்கடா,என அந்த பாட்டி நீட்டிய அவரதுகணக்கு ப் புத்தகத்தில் 150 ரூபாய் இருந்தது

ஏதாவது இந்த அனாதக் கழுதைக்கு செலவுக்கு ஆயிட்டுப் போகட்டும்டா என கலங்கியவிழி களுடன் நின்றார்.

மகனும் மருமகளும் வந்தார்கள், பணம் கொடுத்தோம்.தாயாரும் வந்தார்கள் பணம் கொடுத்தோம், இனி மேல் யார்வருவார்கள் அந்த தாய்க்கு பணம் போட? இனிமேல் அவர் எங்கு போவார் மாதா மாதம் பணம் எடுக்க?

அவரது வாழ்க்கையின் அன்றாட நகர்வுக்கானபொருளாதாரத்தை அவர்எங்கி ருந்துஈட்டுவார்?

என்பது போன்ற நிறைந்து போன கேள்விகள் எங்களில் எழாமல் இல்லை. இப்படி விடை தெரியாத கேள்விகள் பல அந்த மூதாட்டியின் கண்ணீருக்குப் பின்னாலும், அவரைப் போன்ற எண்ணற்ற தாய்மார்களின் கண்ணீருக்குப் பின்னாலும்./

7 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

//இப்படி விடை தெரியாத கேள்விகள் பல அந்த மூதாட்டியின் கண்ணீருக்குப் பின்னாலும், அவரைப் போன்ற எண்ணற்ற தாய்மார்களின் கண்ணீருக்குப் பின்னாலும்./
என்ன உலகம் இது
தம +1

kowsy said...

இறுதியாக மனம் கனத்தது. இவ்வாறு எத்தனை பாட்டிகள் எமக்குத் தெரியாமலே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

என்னத்த பேக்ட்ரி வைச்சி... முன்னேறி...

Thulasidharan V Thillaiakathu said...

மனம் கனத்து விட்டது நண்பரே! இவங்க எல்லாம் மனுசங்க.....கடைசி வரிகளில் தொக்கி நிற்கும் கேள்விகளுக்குப் பலராலும் பதில் சொல்ல முடியாது. ஏனென்றால் மனிதம் செத்துக் கொண்டிருக்கின்றது. மட்டுமல்ல இன்றைய மனைவிகள் நாளை மாமியார் ஆவார்கள், நமக்கும் வயதாகும் என்ற எண்ணமே வருவதில்லையே...ஆச்சரியம்தான்...எத்தனை பாட்டிகளோ இது போன்று....

vimalanperali said...

வணக்கம் சந்திர கௌரி சிவபாலன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் துளசிதரன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/