1 May 2015

பச்சை,சிவப்பு மற்றும் மஞ்சள்,,,,,,,


போனான் அப்படியே .நேரமிருந்தது கொஞ்சமாய்அலுவலகம் முடியப் போகிற நேரமாய் வந்த போன் இவனது பையனின் பேச்சடங்கியதாய் இருந்தது.

வெளியூரில்படிக்கிறஇவனதுஇளையமகன்வழக்கமாய்பள்ளிமுடிந்து வருகிற பஸ் போய் விட்டதென்றும் நானும் என்போன்றோர்களும் அடுத்த பஸ்ஸீற் காத்துக் கொண்டிருக்கிறோம்,வருகிறேன் அடுத்த பஸ்ஸில் ஏறி என்கிறான்.

இன்றுஐந்துநிமிடம்முன்சென்றுவிட்டதாம்அந்தபஸ்,அதுஅரசுப்பேருந்தா
அல்லது தனியார் பேருந்தா என்பது தெரியவில்லை.பையன் சொல்லவும் இல்லை. ஆனால் சொன்னது இது மட்டுமே,நான் பரவாயில்லை,வீடு வந்து படிக்கவும்பாடங்கள்எழுதவும்தான்போகிறேன்.ஆனால்ஆஸ்பத்திரிகடைமுக்கி
யங்களின்முனைகள்பலவற்றிலுமாய்வேலைகளைசுமந்துகொண்டு இருக்கி றவர்கள் என்ன செய்வார்கள் பாவம், என்பதுதான் அவனது குரலில் தொனித்த முதல் கவலையாக இருந்தது.

இருக்கட்டும் அது அப்படித்தான் ரொம்பக்காலமாய் நடக்கிறது.சரி வா அடுத்த பஸ்ஸிற்கு எனசொல்லிவிட்டு அலுவலகத்தில் ஒரு ரவுண்ட் வந்த பொழுதும் போகவில்லை பொழுது.

போனவருடமென நினைவுவேலை விட்டுவரும் பொழுது தனியார் பேருந்தில் தான் வந்தான். அன்றைக்கு வழக்கத்திற்கு மாறாக சீக்கிரம் வந்து விட்டது பேருந்து.சரிஏறிக்கொள்ளலாம் என முனைந்த வேளை கண்டக்டர் சொன்னார், ”சார்இதுஇன்று மட்டும் கொஞ்சம் தாமதமாகப் போகும்” என.ஏன் எனக் கேட்ட தற்குபக்கத்துஊரில்பொங்கல்சார்,பொங்கலுக்குஅந்தஊர்போனஜனமெல்லாம் பக்கத்து ஊர் பஸ்டாப்பில் வந்து ஏறுவார்கள். அதில்ஒரு கால்மணி லேட்டா கும் நீங்கள் அதற்கு முன் அவசரம் என்றால் ஏதாவது இரு டூ வீலர் வந்தால் ஏறிப்போய்க் கொள்ளுங்கள்.பல வேலைக்காரர் நீங்கள்.ஏதாவது முக்கியமான வேலைஉங்களது பெயர் சொல்லிக்காத்திருக்கலாம்.ஆகவே”,,,,,எனகொஞ்சம் இழுத்த அவரிடம் இல்லை அப்படியெல்லாம்இன்றுதங்களது பேருந்துலேயே வருகிறேன்.தங்களுடன்பேசிக்கொண்டும்அமர்ந்துகொண்டுமாய்/எனச் சொன்ன வேலை வயதான அம்மா தனது கர்ப்பிணி மகளை ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டும்.சீக்கிரம்போங்கள்கொஞ்சம் என்றார். போகலாம்,போகலாம் உங்கள் பேச்சைக்கேட்டு சீக்கிரம் போனால் எங்களுக்கு பக்கத்து ஊரில் ஏற வேண்டிய ஆட்களைஏற்றமுடியாமல்போய் விடும். ஆமாம் என்ற பொழுது இவன்தான் அம்மா கவலைகொள்ளாதீர்கள், பஸ் பக்கத்து ஊர் போய் புறப்படதாமதமானால் அலுவலகத்திலிருந்து வரும் நாங்கள் இரண்டுபேர் அங்கிருந்து ஆட்டோவில் போகலாம் என இருக்கிறோம், அப்படிப் போனால் தங்களையும் கூட்டிக் கொண்டு போகிறோம்.நீங்கள் போக வேண்டிய ஆஸ்பத்திரியிலேயே இறக்கி விட்டு விடுகிறோம் என அந்த அம்மாவிடம் சொன்னது இன்று ஞாபகம் வருகிறது பையன் பேசியதும்.

பள்ளிக்குப்போகும்போதுதண்ணீர்பாட்டில்கொண்டுபோகமறுக்கும்அவனைவம்ப டியாய் கொண்டு போகச்சொல்வான்ஆளுயர பாட்டிலைக்கொடுத்து/”உனக்கு இல்லையென்றால் கூடபஸ்ஸில்வருகிறயாருக்காவது உதவும்”,என/அவனு ம் சரி எனக்கேட்டுக் கொள்வான்,தண்ணீரும்கொண்டுபோவான்.

இப்படித்தான்அன்றுநான்பஸ்ஸில்வந்துகொண்டிருக்கும்பொழுது,,,எனசொல்லிஆரம்பிப்பான். எப்படிப்போனாலும் அவன் வர இன்னும் முக்கால் மணி நேரமிருக்கிறது. அப்படியே கிளம்பினோம் என்றால் சூடாக ஒரு டீ முடிந்தால் டீயுடன் வடை யை சேர்த்துக்கொள்ளலாம் என ஐந்தரை மணிக்கு அலுவலகம் விட்டுக் கிளம்புகிறான்.அலுலவகம் விட்டு படியிறங்கி வருகையில் என்றும் தோணாத யோசனையாய் இன்று.

பெரும்பாலுமாய் மக்கள் தொடர்புடன் கைகோர்த்துக்கொண்டிருக்கிற அலுவ லகங்கள் கீழ்த்தளத்தில் மட்டுமே இயங்க வேண்டும் எனச்சொல்ல வேண்டும். பாவம் வயதானவர்கள்,இருதய நோயாளிகள் இன்னும் இன்னு மான உடல் பலவீனமானவர்கள் பலர் வந்து போக சௌகரியமாய் இருக்குமே என்கிற எண்ணம் தாங்கி படியிறங்கிய பொழுது அப்பொழுதான் பெய்து ஓய்ந்திருந்த மழை தன் குளிக்கரம் நீட்டி வரவேற்று உபசரித்ததாக/

இரு சக்கர வாகனத்தை எப்பொழுதும் போல் தியேட்டரில் நிறுத்தி விட்டு வந்திருக்கலாம். எந்தப்படம் ஓடிய போதும் அதற்கு எவ்வளவு கூட்டம் கூடிய போதும் இவனது வாகனத்திற்கென அந்தத்தியேட்டரின்சைக்கிள் ஸ்டாண்டில் நிரந்தரமாக ஒரு இடம் இருந்து கொண்டுதான் இருந்திருக்கிறது.பின்னே இவனதுசொந்தக்காரர்தியேட்டரில்இவனது இருசக்கர வாகனத்திற்கு இடமில் லையென்றால்எப்படி,,?வாகனம்வைப்பதுமட்டுமேஅங்கு.மற்றபடிசொந்தக்காரர் தியேட்டர் ஓசி டிக்கெட், சினிமா,அது,இதுஎன்கிறமாதிரியெல்லாம்,,,,,,ம்ஹீம் எதுவும்வைத்துக்கொள்ள மாட்டான்.எப்பொழுதாவதுதியேட்டருக்கு வாகனம் வைக்கப்போகிற பொழுது அல்லது அதை எடுத்துக்கொண்டு வருகிற பொழுது எதிபடுகிற ஓனர்எப்படியிருக்கிறாய் என்ன செய்கிறாய்.எனக்கேட்கிற சமயங் களில்கொஞ்சமாய்பேசிக்கொண்டிருப்பார்.

அப்படியாய் பேசிகொண்டிருந்த ஒரு மழை நாளில் ஒரு வருடம் தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறஒரு படத்தை ப்பற்றி சொன்னார்.இந்தப்படத்தில் அப்படி என்ன இருக்கிறது என ஜனங்கள் வந்து இப்படி அலை மோதுகிறார்கள். எனத் தெரியவில்லை என்றார்.

அவர்சொல்லில்இருந்த வாஸ்தவமான வருத்தத்தை பின் ஒரு நாளில் அந்தப் படத்தை டீவியில் பார்த்த பொழுது உணர்ந்து கொள்ள முடிந்ததுஇவனால்/

வெட்டவெளியில் நிறுத்தியிருந்ததனால் வாகனம் முழுக்க ஒரே தூசி,ஓடி ஓடி துடைக்க நினைத்தாலும் இப்போது வாகனத்தை துடைக்க துணியில்லை கைவசம்/வாகனத்தின் சீட்டிலிருந்த தூசியை கையால் தட்டி விட்டு விட்டு வாகனத்தைஎடுத்துக்கொண்டுக்கொண்டுகிளம்புகிறான்.வாகனம்நேராகஇவன் மனது அம்புக்குறியிட்டு வைத்திருந்த இடமான சாத்தூர் ரோடு சென்றது.

அந்தப்பக்கம்போனால் ஒன்று ஜேம்ஸ் தோழர் டீக்கடை,அல்லது பாண்டியண் ணின்டீக்கடைஇரண்டில்ஏதாவதுஒன்றில்தான்இவன்மனம்டீக் குடிக்க ஒப்பும். ருசிகண்டநாவின் சுவையறும்புகளுக்குத்தெரிந்திருக்கிறது அந்தக் கடைதான் உன் ருசிக்கு ஏற்றது.விடாதேபிடித்துக்கொள்கெட்டியாக. என மனம் அறிவித்த படி சென்றமர்ந்து விடுவான் டீக்குடிக்கவும் யாராவது நண்பர்கள் தோழர்கள் நலம் விரும்பிகள் வந்தால் பேசிக்கொள்ளவுமாய்/

இன்று தோழர் குமார் இருந்தார் இவன் கடைக்குப்போன நேரத்தில்,சிவகாசி போய்வந்திருப்பதாகச்சொன்னார்.கூடவேநண்பரும்கவிஞருமானஒருவருக்
காய் காத்திருப்பதாகச்சொன்னார்.நண்பர் கவிஞராய் எப்படி உருக்கொண்டார் உங்க ளி லும் பிறரிலுமாய் எனக்கேட்டதற்கு அவர் சொன்னார்,

இப்படித்தான் நல்லதான மழை நாளின் முகூர்த்தப்பொழுதில் பக்கத்து ஊரில் சாமி கும்பிடும் பொழுது நடந்த சண்டையைப்பற்றி சிகெரெட் அட்டையில் ஒரு மினிக்கவிதையை எழுதிக் கொண்டு வந்து காண்பித்த பொழுது என்றார். ஆமாம் உண்மைதான் அது என பின் ஓர் நாளில் அவர் வீட்டிற்குப்போன போது தெரிந்தது,சிகரெட்அட்டையில்எழுதப்பட்டிருந்தகவிதையைபெரிதாக்கி லேமி னேஷன்செய்துசுவற்றில் மாட்டியிருந்தார்,அதில் அவரது மனைவிக்கும் குழந் தைகளுக்கும் ரொம்பவே பெருமை.அவரது மனைவி சொன்னார்,இதிலே என்ன தப்பு இருக்க முடியும் சார், இயக்கம் சார்ந்தவர்கள் அவரைகூப்பிட்டு தட்டிக்கொடுக்க வேண்டிய பணியை அவர் சுயமாய் செய்து கொள்கிறார்,தன் பிள்ளைகளைதூக்கிஉச்சிமுகர்வதுபோல்அவரதுபடைப்பைஅவர் இப்படியாய் கொண்டாடி மகிழ்ந்து கொள்கிறார்.வீட்டிற்கு வரும் நான்குபேரிடம்சொல்லிக் கொள்கிறார்என்றார்.அவரதுபேச்சிலும் கூற்றிலும்தப்பில்லைஎனத்தெரிந்தது.

குமாரையும்கவிஞரையுமாய்பார்த்துவிட்டுடீசாப்பிட்டுக்கொண்டிருக்கையில் இவனது பையன் வருகிறேன் எனச்சொன்ன ஐந்தரை மணி பஸ் வருகிறதா எனப்பார்த்துக்கொண்டிருந்தான்.அமர்ந்திருந்தடீக்கடையைகிராஸ்செய்யவில் லை. இவனும்அந்த நோக்கில் தான் வந்திருந்தான்.ரோட்டோரமாக இருக்கிற டீக்கடையில்டீயைக்குடித்தவாறுபஸ்ஸைப்பார்த்துக்கொண்டிருந்தான்.மணி
யும்ஆறைநெருக்கிஆகிறது.சின்னதும்பெரியதுமானமுட்கள்இரண்டுதுணைக்கு ஒன்றானவிநாடிமுள்ளைகைபிடித்துக்கொண்டுநகரவட்டவடிவமாய்இருக்கிற டயலுக்குள் காட்டிய நேரம் ஆறு என அறிவித்தது.

சரித்தான்அப்படியே அல்லம்பட்டி முக்கு வரை சென்றால் அவ்வழியேதான் வரும் பஸ். அந்த ஸ்டாப்பிலிருந்து பையனை இறங்கச்சொல்லி கூட்டி வந்து விடலாம் வீட்டிற்கு/கடையில் வேறேதேனுமாய் சாப்புடுகிறானா எனக்கேட்டு விட்டு/

அவன் அப்படி ஏதும் அனாவசியமாய் வாங்கிச்சாப்பிடுவதில்லை.அப்படியாய் சாப்பிடபிரியம் கொள்கிறவனும் இல்லை.அப்படியே எதற்காயும் ஆசைப் பட்டாலும்வாங்கிக்கொள்ளட்டுமாஇதை,இதற்குஇருக்கிறதாஉன்னிடம்பணம்,,,? எனக்கேட்டுக்கொண்டுதான் செய்பவனாகிறான்.அப்படியெல்லாம் வேண்டாம் ,சும்மாஇஷ்டப்பட்டதைக்கேள்,இஷ்டப்பட்டதற்குஆட்படவும்ஒத்திசைவுகொள் ளவுமாய் பழகிக்கொள்.எனச்சொன்னபோதுகூடவேண்டாம் அதுஅனாவசியம். இப்பொழுதேஅனாவசியங்களில்திளைத்துப்போனோமேயானால்பின்னாளில் சிரமம்என்றான்.

சரிதான் அவனது கூற்றும் என யோசித்துக்கொண்டிருந்த வேளையில் இவன் தேடி வந்த பஸ் சென்று ஐந்து நிமிடங்கள் ஆகிப்போனது என சொன்னவளின் பேச்சை ஏற்று பஸ்டாப் நோக்கி விரைகிறவனாகிப்போகிறான்.பஜார் வழி தான்போனான்பஸ்டாண்ட்நோக்கி/

எப்பொழுதுஅந்தப்பக்கம் போனாலும் இவன் படித்த பள்ளி வழியேதான் போய் விட்டுவருவதுவழக்கமாகஇருந்தது.ஆனால்இன்றுஎன்னவோநினைவின்உந்து தலில்பஜார் வழியாகப்போனான். பெய்திருந்த மழைக்கு பஜார் கசகசவென்றி ருந்தது.அழுக்கும் தூசியும் ஈரமும் மண்ணும்பிசுபிசுப்புமாக/

நட்டுவைத்திருந்த மரங்களைவெட்டிஎறிந்துவிட்டுபூமிபிளந்துரோடுகொண்டு வந்தது போல்பதித்திருந்தடிசைன்சிமிண்ட் கற்கள் பார்க்க அழகாக இருந்தன. பசும் பாய் விரித்தது போலாய் நீள இறங்கிக்காணப்பட்ட சாலையின் இரு புறமாய் நட்டு வைத்திருந்த கல்லென பல வர்ணங்களில் ஜொலித்த கடைகள் பார்க்க நன்றாகவே இருந்தன.குறிப்பிட்ட இடைவெளி விட்டு நான்கடிக்கு ஒரு தடவையாய் வெள்ளைக்கற்களின் ஊடாக பதிக்கப் பட்டிருந்த சிவப்புக்கற்கள் பார்க்க அழகாக இருந்தது.ஒரு முறையல்ல இரண்டு முறையல்ல,மூன்று முறைகூட அல்ல,,,,,,எத்தனை முறைப்பார்த்தாலும் அப்படித்தான் தெரிந்தது.

இந்த ரோட்டின் வளைவு தள்ளி இருக்கிற கடையில் தான் எப்பொழுதாவது காலை டிபன் சாப்பிடுவான்.சின்னதாக இருக்கிற கடை தான்.ஒரு நேரத்தில் ஐந்துஅல்லதுஆறுபேர்அமர்ந்துசாப்பிடுவதுகூடகடினம்.அப்படிஒன்றும்வரிசை யில் நிற்கமாட்டார்கள்,ஆனால் ஒருவர் சாப்பிட்டு முடித்து எழுந்திருக்கவும் அடுத்தடுத்தாய் ஆள் வந்து கொண்டே இருப்பார்கள்.

இவன்போனால் இவனது மெனுபெரும்பாலுமாய்பூரியாகத்தான் இருக்கும். மூன்று அல்லது நான்கு பூரிகள்,கொஞ்சம் சாம்பார் ஆசைக்கு சட்னி,,,போதும்
எழுந்துவிடுவான்.இவன் சாப்பிடும்அந்தக்கடைக்கு கொஞ்சம் தள்ளிதான் ஒரு பூரிக்கடைஇருந்தது,அதில்உட்கார்ந்துசாப்பிடும்அளவிற்குவசதியில்லை.ஆனா
ல் கடைமுன்இருக்கிறஇடத்தில்நின்று கொண்டுவாங்கிச்சாப்பிடலாம். அந்தக் கடையில்மொச்சையும்,வடையும்தட்டாம்பயறுவகைகளும்,பூரியுமாய்விற்றுக் கொண்டிருந்தநேரங்களில்கைவண்டிக்காரர்களும்மூட்டைதூக்குபவர்களும்தான் அந்த கடையின் நிரந்தர வாடிக்கையாளர்கள்.

வேலைமுடித்தமாலைவேலையில்அங்குகுடிகொள்கிற கைவண்டிக்கார் க ள் ஆளுக்கு ஒரு மொச்சைஇரண்டுவடை,இரண்டுபூரிஎனசாம்பாரும் சட்னியும் கலந்துசாப்பிட்டு விட்டுதிரும்பவுமாய் பணிக்கு தயாராவார்கள். திரும்பவும் ஒருமுறை ஓட வேண்டும்.உழைப்பெனும் நூல்ப்பிடித்து.அப்படியாய் அவர்கள் உழைப்பின்களத்திற்குள்திரும்ப நுழைய அவர்களது உடலை தயார்ப் படுத்திக் கொள்ளும்முன்தயாரிப்பாயும்,சத்துமிகுந்தஉணவாயும்ஆகிப்போகிறஅவ் உணவு அவர்களைப் பொறுத்தவரை மிகவும் எளிமையானதாகவும் வலிமை
யானதாகவும்/

என்கிறநினைவோடும்,இப்பொழுதுஇல்லாதஅந்தக்கடைகளின்சுவடு பார்த்துக் கொண்டுமாய் போய்க் கொண்டிருக்கிறான்.

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை ஐயா...

கரந்தை ஜெயக்குமார் said...

///உனக்கு இல்லையென்றால் கூடபஸ்ஸில்வருகிறயாருக்காவது உதவும்”///
நல்ல மனம் வாழ்க
நன்றி நண்பரே
தம +1,

Unknown said...

;நடை நன்று!

vimalanperali said...

வனக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் புலவர் ராமான்நுசம் ஐயா அவர்களே,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/