18 May 2015

திருப்பு முனை,,,,

 நல்லதொரு வேளை நாளின் காலை நேரம் என்பதாக நினைவு.முதல் நாள் இரவு வெகுநேரம் விழித்துவிட்டதால் மறுநாள் காலை ஏழு மணிக்குதான் எழுந்தேன்.

வெகுநேரம்விழுப்புஎன்றால் இரவு11.30அல்லது பணிரெண்டு மணிவரைதா ன். ஏதோ ஒரு வேலை அல்லது “உட்கார நேரமில்லாத” கதையாக ஓடிக்கொண்டி ருந்த கணங்களாய் இருந்திருக்கும்.

காலைஎழுந்தவுடன்முகம்கழுவிதேநீர்குடிக்கையில் தொலைக்காட்சிபெட்டி யை இயக்க ஆரம்பித்துவிடுவேன்.அந்நேரத்திலிருந்து அலுவலகம் செல்லும் வரை தொலைகாட்சியில் குறிப்பிட்ட சேனல்களில் பழைய பாடல்கள் ஓடிக் கொண்டிருக்கும்.

கேட்கஇனிமையாகவும்,இதமாகவும் சந்தோசம் தருகிற மாதிரியாகவும் இருக் கிற பாடல்கள் மனதை அள்ளிக்கொண்டு போய் எங்கோ வைத்து விடுகிற ரசவாத வித்தையை செய்து விடுகிறது அந்த கணத்தில்.

ஏழுகடல், ஏழுமலை தாண்டி நடு கடலுக்குள் இருக்கிற பொக்கிஷத்தை காட்டு கிறதோற்றுவிக்கிறமாதிரியானசெய்கையைசெய்துமனதைகட்டிப்போட்டு விடுகிற தனம் அதற்கு இருந்தது.

அம்மாதிரியான மனக் கிறக்கத்தை இழக்க விரும்பாமல் அன்றும் அதைதான் செய்துகொண்டிருந்தேன்.கையில்டீடம்ளர்.எதிரில் தொலைகாட்டிபெட்டி.
தரையில்தான்உட்கார்ந்திருந்தேன்சேர்வெற்றுடம்புடன்தரையில்அமர்ந்திருந்தது.அதன் உடம்பில் கையூன்றி சாய்ந்துதான் உட்கார்ந்திருந்தேன்.

ட்யூப் லைட் மிதமான வெளிச்சத்தில் மின்னிக்கொண்டிருந்தது.மாட்டி ஒரு வருடத்திற்கும் மேலாகப் போகிறது.இத்தனை வருடமும் உழைத்து உடல் தேய்ந்ததுபோகமிச்சமிருக்கிறசக்தியைமட்டுமேவெளிபடுத்திக்கொண்டிருந்தது.
இவ்வளவு வெளிக்கு இந்த வெளிச்சம் சற்று குறைவுதான்.பதினைந்துக்கு பத்து செவ்வக ஹால்.மின் விசிறி ஓடிக்கொண்டிருந்தது.ட்யூப் லைட் எரிந்து கொண்டிருந்தது.பழகிப் போன அலுவலக சூழல் வீட்டிலும் கேட்கிறது.

அதிலும் வீட்டில் நான் இருந்தால் கண்டிப்பாக் லைட் எரியும்.மின்விசிறி சுழன்று கொண்டிருக்கும்.

தொலைக்காட்சி, அதன் அருகிலிருந்த தையல் மிஷின் மேஜையில் தைப்பதற் காய் காத்திருந்த துணிகள்,மடிக்கப்பட்டும் கலைந்து போயுமாய்/

அதிலும்அந்தசிவப்புநிறதுணிஇருக்கிறதே?அடேயப்பா,உயர தலைதூக்கவும்,
காற்றில் அசைந்து கொடுக்கவுமாய் தனது இருப்பை காட்ட ஏதேதோ செய்தது நண்பர் சொன்னதை ஞாபகபடுத்தியது.”எங்கு பள்ளம் இருக்கிறதோ அங்கு தான் சிவப்பு உயர்ந்து தெரியும்” என.

தையல் மேஜையின் அருகிலிருந்த மூன்று ப்ளாஸ்டிக் சேர்களும், ஒரு வயர் சேரும்காலியாக கிடந்தது.இன்னம் நான்கு சேர்கள் வாங்க வேண்டும் அல்லது சோபா இது போல ஏதாவது வாங்கினால் தேவலாம் போல படுகிறது.யாராவது வந்தால் போனால் அமர்வதற்கு தோதாக வேண்டுமே.

நாங்கள் நான்குபேர்.கணவன் மனைவி பிள்ளைகள் இரண்டு பேர்.இது போக யாராவதுவீட்டிற்குவந்துவிட்டால்அனைவரும்நிற்கவேண்டியதாகவேஉள்ளது. அதற்காகவாவது வாங்க வேண்டும்.

கைக்கும் வாய்க்குமாய் சரியாகப்போகிறவாழ்க்கையில்எங்கேமிச்சம் பிடித்து எதை வாங்க.......?என்கிற எண்ணமே துரத்துவதாக/

துரத்தலிலிருந்துதப்பிக்கஎங்காவதுஅதலபாதாளத்தில் விழுந்து அடையா ளம் தெரியாமல் எழுந்து உருச்சிதைந்து போன மத்தியமர்களுள் ஒருவனாகிப் போய்விடக்கூடாது என்கிற பயம் என்னுள் எப்பொழுதும் உண்டு.கடன், வட்டி, சொத்து அடமானம் அதுஇது என எதுவும் இல்லாமல் கெளரவமாக ஓட்டி விட்டேன்இதுவரை.இனியும்அப்படியேஇருப்பேன்என்கிற நம்பிக்கை உள்ளது. அந்த நம்பிக்கை கூடிய விரைவில் சேரை வாங்க வைத்து விடும்.

தரைக்கு வேறோர் கலரில் டைல்ஸ் ஒட்டியிருக்கலாம் என சொன்னார்கள் வீட்டிற்கு வந்திருந்த நான்கைந்து பேர். டைல்ஸ் வெள்ளை கலர் என்பது அவர்களது வாதம்.இல்லை அரை வெள்ளை என்பது எனது மேன்மையான எனதுவாதம்.

ஹால்அரைவெள்ளையுமாக,வராண்டாலேசானசிவப்புபிரதிபலித்தகலருமாக இருந்தது.அதைஇங்கிலீஸ் கலர் என்றார்கள் கடைக்காரர்கள்.

டைல்ஸ் எடுக்க நானும்,எனது மனைவியும்தான் போயிருந்தோம்.இங்கிலீஸ் கலர் என சொல்லப்பட்ட டைல்ஸின் நிறமும்,அவள் உடுத்தியிருந்த சேலை யின் நிறமும்ஒன்றுபோலஇருந்தது.

கடைக்காரர்தான்சொன்னார்நல்லாயிருக்கும்,எடுத்துட்டு போங்க என.அப்படி எடுத்துவந்துஒட்டிய டைல்ஸின் மீது அமர்ந்துதான் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கிறேன்.ஹாலிருந்தஷெல்ப்,ஷெல்பிலிருந்த புத்தகங்கள்,பேப்பர், டீ.வீ.டீ ப்ளேயர் அதைத்தாண்டி நிலைக் கண்ணாடி,காலண்டர்,சுவிட்ச் போர்ட், அகல வாய் திறந்திருந்த ஜன்னல் ட்யூப் லைட் வெளிச்சத்தில் ஓர நிழல் காட்டிய வாசல் கதவு,மின் விசிறியின் காற்று பட்டு தரையில் படபடத்த பேப்பர்,பேப்பரின் அசையும் நிழல்,அதனடியில் தங்கியிருந்த சிறு,சிறு தூசி துகள்கள் என ஒட்டு மொத்த ஹாலும் என்னையே உற்றுப் பார்த்து கொண்டி ருந்ததாய் பிரமை எனக்கு.

போதாதற்குசுவரும்அதிலிருந்தவர்ணமும்,வர்ணம் உதிர்ந்துபோய் அது காட்டி ய உருவங்களும் உடன் சேர்ந்து கொண்டதாய் நினைக்கிறேன். சுவரின் உருவ ங்களும்,தொலைக்காட்சியில் தெரிந்த உருவங்களும் ஒத்துப் போனதாய் தெரி ந்தார்கள் எனக்கு.

நல்ல அழகான வரம்பு மீறாத காதல் பாடல் அது. தொலைக் காட்சியில்ஓடிக் கொண்டிருந்தது.

கதாநாயகனும்,கதாநாயகியும் கைகோர்த்து ஓடிகொண்டிருக்கிறார்கள். நாயகி கண்ணை உறுத்தாத கலரில் சேலை உடுத்தியிருந்தார்.அதற்கு மேட்சிங்காக சட்டை அணிந்திருந்தார்.

அவர் சேலையைஇடுப்பில்கட்டியிருந்தாரா அல்லது நடு வயிற்றிலா ......? என்பது இப்பொழுதுவரைபுரியாத புதிராகவே. நாயகனும் இப்பொழுது பேஷன் அல்லது மாடல் என சொல்லக்கூடிய விதத்தில் இருந்த பேண்ட், சட்டை அணிந்திருந்தார் நல்லதொரு கலரில்.

இருவருமாய்அந்த நேரத்தில் பெரிதாக பேசப்பட்ட காதல் ஜோடி.பிண்ணனி குரல் கொடுத்த பாடகர்கள் குரலில் இழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.இசை பிரவாகமெடுத்து செவியை நுழைத்து,மனதை நிரப்பி ஆளை இழுத்துக் கொண்டுபோகிறது.

காடு, மலை தாண்டியவனாக நானும் மனமிழந்து ஓடிக்கொண்டிருக்கிறேன் அவர்களின் பின்னாலேயே/ ஏற்கனவே சிலிர்த்தெழுந்து நின்ற புல்வெளி மீது கால்பட்டதும் மீண்டும் சிலிர்தெழுந்ததாய் நினைவும்,பூரிப்பும்/

காதைஅடைந்துமனதைஇழைத்தபாடலின்வரிகள்காற்றில்மிதக்கநாயகனும்,
நாயகியும் சந்தோஷித்து பாடி வாயசைத்து காதலில் மேம்பட்டு நடித்துக் கொண்டிக்க நானும் சுண்டி இழுக்கபட்டவனாய் பின்னால் சென்று கொண் டிருக்கிறேன்.

பாடல்,நாயகன்,நாயகி அவர்களது நடிப்பு,பாடகர்களது குரல்,மனம் மயக்கிய இசைஅவர்கள்ஓடிக்கொண்டிருந்த புல்வெளி,பின்னாலேயே சென்று கொண்டி ருந்தநான்என்பதுமாயும்உடலும்,மனதும்,உணர்வுகளும்,புலன்களனைத்துமாய் ஒரேபுள்ளியில் இணைந்துபணியாற்றிக்கொண்டிருந்த பதிவை தவிர பார்வை யிலோ,புத்தியிலோ வேறெதுவும் புலப்டாத நேரமது.

குடித்துமுடித்தடீடம்ளர்கையில்இருக்கிறது.திறந்திருந்தவாயைமூடத் தோண வில்லை.சொரிந்துகொண்டிருந்தகைதாவங்கட்டைதாடிமுடிகளிலினூடேயிரு ந்து விடுபடவில்லை.

வீடு மறக்கிறது,மனைவியை மறந்து போகிறேன்,பிள்ளைகள் ஞாபகத்திற்கு வரவில்லை. டாக்டரம்மா சுத்தமாக மறந்து போகிறாள். பூப்போட்ட கைலியும்,
வெற்றுடம்பில் போட்ட துண்டுடனுமாய் முழங்காலைக்கட்டிகொண்டு அமர் ந்து இருக்கிறேன்.அப்பொழுதான் அந்த போன் வருகிறது.

“இப்பிடியெல்லாம் பேசாதப்பா நீயி” சரி என்று நானும் வைத்து விடுகிறேன்.
கதாநாயகனும்,கதாநாயகியும் கொண்ட கூட்டணி என்னை லேசாகதிரும்பிப் பார்த்து‘ஒன்றுபோனில்பேசுங்கள்அல்லது பாடலை ரசியுங்கள்” என்கிறார்கள். நானும் இல்லை............என சமாளித்து சிரித்து வருத்தப்பட்டவனாக “நீங்கள் தொடருங்கள்” என்கிறேன்.

திரும்பவும் பாடல் போய்கொண்டிருக்கிறது.புல்வெளி கடந்து வேறு பக்கம் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.நானும்பின்தொடர்கிறேன்.வெகுசிலகணங்களில் திரும்பவும் போன். “அவர்ட்ட என்னசொன்ன நீ?” என எதிர்முனையில் கேட்ட பேச்சு அவசியம் குறித்து கொஞ்சம் நீள்கிறது.

இந்தநேரத்தில்பாட்டுச்சத்தம்படக்கெனநின்றுவிட்டது.நாயகனும்,நாயகியும்
கொண்ட குழு என்னருகில் வருகிறது.

“நிறுத்துங்கள்சார்,ஒன்றுபாடலைகேளுங்கள்,அல்லதுஒங்கசொந்தகாரங்ககிட்ட பேசுங்க’,என்கிறது.

இல்லை எங்களது மிகமுக்கிய சொந்தக்காரர் அவர்.அவரிடம் பேசுவதை எங்க ளால் தவிர்க்க முடியாது.நீங்கள் பாடலை தொடருங்கள் என்கிறேன்.

“இல்லைஅப்படியெல்லாம்தொடரமுடியாது.நீங்கள்உங்களதுசொந்தக்காரருட னேயேபேசுங்கள்.நாங்கள்போய்வருகிறோம்உங்களதுரசனையைபாரட்டிமீண் டும் வருகிறோம் பாடுவதற்கும்,ஆடுவதற்கும்,நடிப்பதற்கும்.”எனபோய் விட் டார்கள்.நானும்வருத்தத்துடன்அவர்களிலிருந்து விடுபட்டுவந்துவிடுகிறேன்.

(பி:கு ; பாடலைகேட்டுக் கொண்டிருந்த காலை நேரத்தில் அந்த போன் வந்திருக்காவிட்டால் நான் இந்த எழுத்தை எழுதியிருக்கமாட்டேன்,ஆகவே போன் பண்ணியவருக்கு எனது கோடான ,கோடி வணக்கங்கள்.)

9 comments:

”தளிர் சுரேஷ்” said...

அன்றாடம் நடக்கும்வீட்டு சம்பவங்களை அழகாக எழுதுகின்றீர்கள்! வாழ்த்துக்கள்!

vimalanperali said...

வணக்கம் தளிர் சுரேஷ் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

Kasthuri Rengan said...

படம் அருமை தோழர்
எங்கே கிடைக்குது உங்களுக்குன்னு
தம +

vimalanperali said...

வணக்கம் மது அவர்களே
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... ஏதேனும் ஒன்றில் கவனம்...

Nagendra Bharathi said...

நேரில் பார்ப்பது போன்று இருந்தது . வர்ணனை அருமை

Nagendra Bharathi said...

'ஒட்டு மொத்த ஹாலும் என்னையே உற்றுப் பார்த்து' அருமை

vimalanperali said...

வணக்கம் நாகேந்திர பாரதி சார்
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் நாகேந்திரபாரதி சார்,
நன்றி திரும்பவுமான கருத்துக்கு/