19 Feb 2016

பூப்பூக்கும் ஓசை,,,,

எட்ட நின்ற குழந்தையை கை நீட்டி
அழைத்தபோதும் பக்கம் வர மறுக்கிறது.
அருகில் செல்கிறேன்,விலகிப்போகிறது.
பிஸ்கட் தருகிறேன் வாங்க மறுக்கிறது.
சாக்லேட்,இனிப்பு, இன்னமும் இன்னமுமாய்
பிற என நான் தந்த தின் பண்டங்களை
வாங்க மறுத்த குழைந்தையின் அருகில்
சென்று விளையாட்டுக்காண்பிக்கிறேன்.
அட அதிசயம்,என் முதுகில் ஏறி
சவாரிக்கு தயாராகிறது குழந்தை. தூரத்தில் எங்கோ பூப்பூக்கும் ஓசை/

1 comment:

'பரிவை' சே.குமார் said...

பூப்பூக்கும் ஓசை அருமை அண்ணா.