20 Apr 2016

பார்வை ஒன்றே போதுமே,,,,,

மருத்துவமனைவாசல்களிலும்அதன் உள்,வெளி அறைகளிலும் எப்போதுமே ஒரு பத்துப்பேருக்கு குறையாமல் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

மாறும் பருவநிலைகளுக்கு ஏற்பவும்,நகர்கிற நாட்களின் தட்பவெட்ப நிலை களுக்கு ஏற்பவுமாய் இதன் விகிதாச்சாரத்தில் வித்தியாசமிருக்கலாம்.

அதிலும் சிறப்பு மருத்துவர் என்றால் தனியாக எதுவும் சொல்ல வேண்டியதில் லை.

மருத்துவமனை வளாகம்,வசதி மருந்து வாசனையற்ற அதன் சுகந்தம் குறுக் கும்,நெடுக்குமாய்நடமாடும்பணியாளர்கள்மற்றும்இதர,இதரஎனஅடேயப்பா,,,,,
,நேற்று மாலை அலுவலகம் முடிந்து வரும் போது -------------மருத்துவரை பார்க்கலாம் என்கிற யோசனை.

சமீபகாலமாக தொந்தரவு பண்ணிக்கொண்டிருக்கும் “அல்சருக்கு” பார்க்க வேண்டும் என்கிற முடிவு எடுத்த போது எனது இருசக்கர வாகனத்திற்கு கீழே நழுவி பின் சென்ற சாலை என்னைக்கொண்டு போய் நிறுத்திய இடம் அந்த குறிப்பிட்ட மருத்துவரின் மருத்துவமனையாக இருந்தது. 

இல்லாதவர்களின்கடவுளாகஇந்தபகுதிமக்களுக்குஆரம்பகாலத்தில்காட்சியளி
த்தவர் இன்று வரை அப்படியே தெரியவும் வெளிப்படவும் செய்கிறார். 

நிறைந்து வீடுகள் அடுக்கப்பட்டிருந்த தெரு அது.எதிரெதிர் சாரியில் குடியிரு ந்த மத்தியதர வர்க்கர்களைசுமந்து கொண்டிருந்தவீதிமருத்துவமனையையும் சுமந்துகொண்டிருந்தது.

ஆமாம்.எப்பொழுதும்,எல்லா நகரங்களிலும் வீதிகள் சுமந்து கொண்டும்,சூழ்க் கொண்டவாறும் காட்சிப்படுகிறதுதான்.அந்த காட்சிப்படுதலில் நட்பு, பகை,
பொறாமை,இன்பம்,துன்பம்,கோபம்,ஆற்றாமை சண்டை,சச்சரவுகள் எல்லாம் கலந்து இருப்பவையாகவும்,கண்ணுக்குத் தெரிபவையாகவும்/

வாகனத்தின் ஸ்டாண்டை இழுத்துப்பிடித்து நிறுத்திய போது எனது கண்களில் புலப்பட்டதுமருத்துவமனைவாசலில்கிடந்த செருப்புக்கள்தான்.

ஒன்று,இரண்டு,மூன்று,,,,எனஎண்ணிப்பார்த்துமுடியாமல்விட்டு விடுகிறேன்.

எப்படியும்15,அல்லது20ஜோடிகளுக்குகுறையாமல்இருக்கலாம்.பரவாயில்லை காத்திருந்துபார்த்துவிட்டுப்போகலாம்.என்கிறநினைப்புடனேஉள்ளே செல்கிறேன்.

எல்லோரும் மரப்பெஞ்ச்சிலும்,ப்ளாஸ்டிக் சேரிலுமாய் அமர்ந்து கொண்டிருக் கிறார்கள் மருத்துவபிரதிநிதி உட்பட/

நான் அமர்வதற்கு இடம் பார்க்கிறேன்.இல்லை.கையைக்கட்டிக்கொண்டு ஒரு ஓரமாக நின்று விடுகிறேன். 

சுழன்று கொண்டிருந்த மின் விசிறியின் நிழல் ட்யூப் லைட் வெளிச்சத்தில் தரையில் சிந்தி சிரித்துக்கொண்டிருந்தது.தொலைக்காட்சியில் ஏதோ பெயர் தெரியாத மெகாத்தொடர் ஓடிக்கொண்டிருந்தது.

தினசரிகளின் மாலை நேரங்களை ஆக்கிரமிக்கும் இந்த மெகாத்தொடர்கள் எங்களது கம்பெனி மேலாளர் ஒருவருக்குமிகவும் பிடித்தமானதாக/

எரிந்து கொண்டிருந்த ட்யூப்லைட்களும்,சுழன்று கொண்டிருந்த மின் விசிறி களும்,ஒளிபரப்பாகிக்கொண்டிருந்ததொலைக்காட்சியும்அங்கிருந்தவர்களின் தற்காலிக ஆசுவாசமாக/

மருத்துவம் பார்க்க வந்திருந்தவர்கள் ஒருவர் பின் ஒருவராக மருத்துவரை போய் பார்த்து வந்து கொண்டிருந்தார்கள்.

காலம்கரைந்துகொண்டிருந்தது.வீட்டிலிருந்துமனைவிபோன்பண்ணிவிட்டாள்.
நேரமும்ஓடிக்கொண்டிருக்கிறது.வந்துஒருமணிநேரமாகிப்போகிறது. போகும் போது காய்கறிவாங்கிப்போக வேண்டும்.இரண்டு நாட்களாய் பல்வேறு வேலை காரணமாக முடியாமல் போன விஷயத்தை இன்று சாத்தியப்படுத்த வேண்டும்.இல்லையெனில் மனைவி வையக்கூடும்.

ஜோடியாக தனியாளாக,குடும்பமாக காட்சி தந்தவர்களிலிருந்து கழன்று கைக் குழந்தை ஒன்று நின்று கொண்டிருந்த என்னை நோக்கி தனது பிஞ்சுக் கரங் களையும்,பாதங்களையும்கீழூன்றிதவழ்ந்துவருகிறதுகையை,கையைஅசைத் தவாறும்,சிரித்தவாறும்,வாயிலிருந்து எச்சில் ஒழிக்கியவாறும்/

நானும் சிரித்துக் கொண்டே அந்த பூம்பிஞ்சை நோக்கி கையை அசைத்தவாறே செல்கிறேன்.

எங்களுக்குள்இருந்ததூரமும்,சுற்றிஇருந்த வெளியும்,மனிதர்களும்காணாமல் போக தனி உலகத்தில் நுழைந்தவர்களாய் ஆகிப்போகிறோம் .

சிறிதுநேரம்கழித்துசட்டெனமீண்டு நினைவு வந்தவனாக வீட்டுக்குக் கிளம்புகி றேன்.

இனிமருத்துவம்எதற்கு? போகிற வழியில் இதுமாதிரி இரண்டு மூன்று குழந் தை களின் சிரிப்பை பார்த்தாலே போதுமே/

6 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

மேலே காட்டியுள்ள அசையும் படமும், கீழே கொடுத்துள்ள //இனி மருத்துவம் எதற்கு? போகிற வழியில் இதுமாதிரி இரண்டு மூன்று குழந்தைகளின் சிரிப்பை பார்த்தாலே போதுமே// வரிகளும் மிகவும் பொருத்தமாக அழகாக உள்ளன. தலைப்பும் அருமை. பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

KILLERGEE Devakottai said...

குழந்தையை நேசிப்பது எல்லோருக்கும் வராது தங்களது மனம் பதிவில் தெரிகின்றது அருமை நண்பரே
தமிழ் மணம் 1

vimalanperali said...

வணக்கம் வை கோபாலகிருஷ்ணன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

துரை செல்வராஜூ said...

>>> தொலைக்காட்சியில் ஏதோ பெயர் தெரியாத மெகாத்தொடர் ஓடிக்கொண்டிருந்தது.<<<

மருத்துவமனையிலும் தொடரும் - தொடர்களின் அவலம்!..

காட்சிப்படுத்தியமை நன்று..

கரந்தை ஜெயக்குமார் said...

இனிமருத்துவம்எதற்கு? போகிற வழியில் இதுமாதிரி இரண்டு மூன்று குழந் தை களின் சிரிப்பை பார்த்தாலே போதுமே/
உண்மைதான் நண்பரே

vimalanperali said...

அணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/