9 Sept 2017

வாராந்திரி,,,,,,,,,,,,,,

சென்ற இடம் டீக்கடையாகவும் வாங்கிய பத்திரிக்கை ஒரு வாரந்திரியாகவும் இருந்தது.

அது எப்படி அது டீக்கடையில் போய் வாரந்திரியை எப்படி வாங்க முடியும்,,,? என்பதல்ல,டீக்கடை குடிகொண்டிருக்கிற இடத்தின் அருகாமையாய் இருக்கிற ரஹீம் பாய் கடையில்தான் வாராந்திரியை வாங்குவான்,

என்ன பாய் நல்லாயிருக்கீங்களா என்பதுதான் இவன் அவரைப் பார்த்ததுமாய் கேட்கிற முதல் கேள்வியாய் இருக்கும்.

அவரும் என்ன சார் ,நல்லாயிருக்கேன் சார்,நீங்கள்ளாம் இருக்கும் போது எனக்கு என்ன சார் எனச் சிரிப்பார்.

சிரிப்பின் முடிவாய் கேட்பார்,என்ன சார் இப்பத்தான ஒரு மணிநேரத்துக்கு முன்னாடி பஜாருக்குப்போது நல்லாயிருக்கீங்களான்னு கேட்டீங்க,இப்ப திரு ம்பி வந்து கேக்குறீங்களே,என்பார்,

இருக்கட்டும் பாய் என்ன இப்ப கேட்டதாலா,நான் கேக்குறதுல எதுவும் ஒங்களுக்கு மன சங்கடம் இருந்துச்சின்னா கேக்கல பாய் என்பான்,

அய்யய்யோ அப்பிடியெல்லாம் இல்ல சார்,நீங்க நிமிஷத்துக்கு நிமிஷம் அப்பிடி கேட்டாலும் நான் வருத்தப்பட போறதுல்ல சார்,இன்னும் சொல்லப் போனா நீங்க கேட்டதுல எனகு சந்தோஷம்தானே தவுர வருத்தமெல்லாம் ஒண்ணும் கெடையாது என மறுமுறையுமாய் சிரிப்பார்.

அவரது வெள்லைச்சிரிப்பிற்கும் அவரது உடல் கனத்திற்குமாய் சம்பந்ஹ்டம் இருக்காதது போல் தோணும் சமயத்தில்/

கடை இருக்கிற வெள்ளியங்கிரி ரோட்டில் இருந்து அவரது வீடு இரண்டு கிலோ மீட்டர்களாவது இருக்கும்.

சின்னதான அட்ல்ஸ் சைக்கிள்தான் அவரது வாகனம்,பெருத்த உடலை தூக்கி சைக்கிள் மீது வைத்துக்கொண்டு அவர் சைக்கிள் மிதித்து வருகிற அழகே தனிதான்,அசைந்து வருகிற தேர் தோற்றுப்போகும்.

கடையின் தெற்குப்புறமாக சைக்கிளை நிறுத்தி விட்டு கடையை திறப்பவர் மதியம் சாப்பிடப்போகும் போதுதான் பின் சைக்கிளை எடுப்பார் கடையை பூட்டிவிட்டு.

சாப்புட்டதும் ஒரு மணி நேரமாவது தூக்கம் இருக்கணூம் சார் நமக்கு, இல் லைன்னாஅந்தநாளே அன்னைக்கி வெளங்காதது போலஆயிரும் பாத்துக்கங்க என்பார்.

அப்படி தூங்கி எந்திரிச்சி வந்துட்டோம்ன்னு வச்சிக்கங்க,ஒடம்பு சொடக்கு எடுத்து விட்ட மாதிரி ஆயிரும்.அதுனால்த்தான் பிடிக்குதோ பிடிக்கலையோ அப்பிடி படுத்து எந்திரிச்சி வர்றது,

இல்லைன்னா சார்,இந்த வலது கால் பாருங்க ரொம்ப வலி எடுத்து தொந்தரவு குடுக்க ஆரம்பிச்சிரும்.எனச்சொல்கிற அவர் கடைகுள்ளாயும் சரி கடை யை விட்டு வெளியில் வரும் போதும் கடைக்குள் போகிற போதுமாய் வலது காலை சாய்த்து சாய்த்துதான் நடப்பார்.

என்ன பாய் இந்த வயசுலயே இப்படியா எனக்கேட்டால் ஒடம்பு பெருத்துப் போச்சில்ல சார் என்பார்,எனக்கென்ன ஒங்க வயசுதான் இருக்கும்ன்னு நெ னைக்கிறேன்,என்ன சின்ன வயசுல கல்யாணம் ஆகிட்டதுனால பேரன் பேத்தி எடுத்துட்டேன்,அதுவும் ஏங் மகளத்தான் கல்யாணம் முடிச்சி குடுத்துருக்கேன், இன்னும் ,மகன் ஒருத்தன் இருக்கான்,அவனுக்கு முடிக்கணும்.என்பவர்,ஏங் சார் தப்பா நெனைச்சிம்க்கிறாதீங்க ஒங்க வயசு என்ன சார் என்பார்,

சொன்னதும்அய்யோ சார் அதேதான் என்னோட வயசும் என சின்னப் பிள்ளை போல் துள்ளிக்குதிப்பார்,

நீங்க பச்ச்சதெல்லாம் இந்த ஊர்லயா,இல்ல வெளியூர்லயா சார் என்பவரிடம் பாய் நான் அச்சடிக்கப்பட்ட இந்த ஊர்க்காரன் பாய்,தூத்துக்குடி ரோட்டுல இருக்குற ஹைஸ்கூல்லதான் படிச்சேன்.என்றதும்

சார் அப்பிடியா நானும் அந்தஸ்கூல்லதான் சார் படிச்சேன்,எந்த வருசம் சார், என்பவரை இடைமறித்து வருசமெல்லாம் ஞாபகம் இல்ல பாய் ,வாழ்க்கை யோட அழுத்ததுலயும் ஓட்டத்துலயும் அதெல்லாம் மறந்து போச்சி பாய், மறைமலை சார் ஹெட் மாஸ்டர்,அண்ணாமலை சார் அசிஸ்டெண்ட் ஹெட் மாஸ்டர், செல்வின் சார் கணக்கு சார்,பாலகுரு சார் என் சி சி மாஸ்டர், ஆறுமுகம் நம்பி சார் பி டி மாஸ்டர்,நம்ம ரெஜினா டீச்சர் தமிழும், நாகே ந்திரன் சார் ஹிஸ்ட்ரி,,,,,,அப்புறமாய் பெத்துன்னன் சாரும் மண்டை வாத்தி யாரும் இருந்த நேரத்துல படிச்சேன் பாய்,

இதுல என் சி சி மாஸ்டர் கத்துக் குடுத்த லெப்ட்,ரைட்டும்,,,கணக்கு வாத்தி யார்பெரம்பால இழுத்த இழுப்பும் ,,,,ஹிஸ்ட்ரிசாரை பள்ளிக்கூடத்துல இருந்து சஸ்பெண்ட் பண்ணுனப்ப பள்ளிக் கூடத்துல படிக்கிற செவன்த்துல இருந்து டென்த் பையங்க வரைக்கும் ரோட்டுல யெறங்கி ஊர்வலம் போனது எல்லாம் ஞாபகம் இருக்கு பாய் என்றதும் அந்த ஊர்வலத்துல நானும் ஒரு பையன் சார் அப்பம் என்பார்.

அப்பம் ரோட்டுல யெறங்கி போராட்டம் பண்ணுன கொணம் இன்னைக்கி வரைக்கும் அப்பிடியே இருக்கறதாத்தான் சார் நெனைச்சிக்கிட்டு வர்ரேன் சார்,அதகட்டி காபாத்தீட்டும் வர்றேன் சார் என்பார்.

போனவாரம் நீங்க வந்துட்டுப்போன கொஞ்ச நேரத்து தண்ணியப்போட்டுட்டு வந்த ஒருத்தன் வாழைப்பழம் வாங்கிதின்னுட்டு காசு குக்க முடியாது, தெரி ஞ்சத பாத்துக்கன்னு சொல்லீட்டு போயிட்டான்,

அவன் ஒரு விருதான்னு எனக்குத்தெரியாது நான் கடைய விட்டு யெறங்கிப் போயிசட்டையப் புடிச்சிட்டேன்,வாழப்பழத்தத்தின்னுட்டு அப்பிடியே போயி ருந்தாலும் கூட ஒண்ணும் தெரியாது.சரி போறான் தொழஞ்சின்னு விட்டுருக் கலாம். அவன் பேசுன பேச்சு இருக்கே அந்தப்பேச்சு பேசீட்டான், அதான் எனக்கு கோபமா போச்சி,அவனும் எட்டி சட்டையப்புடிக்க நான் ரெண்டு அடிஅடிச்சிட் டேன்,அடிச்சிட்டுகடையிலவந்துஉக்காருறேன்,என்னவேகத்துலபோயிவந்தான்னுதெரியலஅவுங்க தெருவுலபோயிஆட்களகூட்டிக்கிட்டு வந்துட்டான்.

வந்தவன் சும்மா இல்லாம நான் இன்னாரு ஏங் ஆளுகிட்டயேவா வந்து நொரண்டு இழுக்குறன்னு சொல்லி பெரிசா பேச ஆரம்பிச்சிட்டான்,

நான் எதுக்கும் அசையல,ஒக்காந்த யெடத்த விட்டு கூட அசையல.என்ன சத்தம் குடுத்தவனுக்கு மறுப்பு சொல்லி பேசும்போது எழுந்திச்சி நிக்க வேண் டியதா போச்சி/கொஞ்சம் சத்தம் போட்டு பேச வேண்டியதா போச்சி சார்,

ஏய் இந்தா பாரு ஒன்னைய எனக்கு தெரியும்,ஆனா என்னையப்பத்தி ஒனக்கு த்தெரியாது,ஒங்க தெருவுலயே ஒனக்கு பக்கத்துலயே எனக்கு ஆள் இருக்கு பாத்துக்க,,,,,ஒனக்கு ஆள்களோட வந்து அரட்டுற தெம்பு இருந்துச்சின்னா அந்த மெரட்டலுக்கு பயபடாமா அத எதுத்து நிக்குற தெம்பு எனக்கு இருக்கு . வேணு முன்னா இன்னைக்கி ஓங் வீட்டு வாசலுக்கு வரட்டுமா பாத்துக்கிருவமா என்றதும் என்ன பாய் நீங்க யாருன்னு தெரியாம வந்துட்டேன். வேணுமின்னா ஒடச்ச ஒங்க கடை ஓட்ட மாத்திக்குடுத்துருரேன் பாய்ன்னு சொல்லீட்டு கால்ல விழுகாத கொறையா மன்னிப்பு கேட்டுப்போனான்.

அன்னையில இருந்து அந்த விருதாபைய இந்தக்கடைப்பக்கமே வர்றதில்ல, இன்னைக்கி மதியம் கடை பூட்டபோன சாப்பாட்டு வேளையில வந்துட்டு கடைஓரமாமொகத்ததொங்கப்போட்டுட்டுநின்னான்,நாந்தான் தொலஞ்சி போறா ன்னு ரெண்டு வாழை பழத்த பிச்சிகையில குடுத்து விட்டேன்.என்ன செய்ய பின்ன நமக்கு மனசு கேக்கல சார் என்கிற பேச்சின் முடிவோடு கையில் புத்தகத்தை எடுத்துக்கொடுத்தார்.

இன்று நேற்றல்ல கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக வாங்கி வருகிறான்,

பத்திரிக்கை சின்ன சைஸாக இருக்கும் பொழுதிலிருந்து இன்று வரை ஒரு வாரம் கூட தவறாமல் வாங்கி வந்து கொண்டிருக்கிறான்.

அதிலிருக்கிற கதைகளும் துணுக்குகளும் ஜோக்குகளும் பிரபலம் என பல பேர் சொல்லி கேள்விப்பட்டும் உணர்ந்தும் இருக்கிறான்,ஆனால் இவனுக்குப் பிடித்ததெல்லாம் வருடத்திற்கு ஒருமுறை அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை புதிதாய் ஏதாவது ஒரு தொடர் புத்தம் புது முயற்சியாய் செய்து கொண் டிருப்பார்கள்,

வடக்கு மாவட்ட பக்கமிருந்து அறிமுக எழுத்தாளரின் எழுத்து என ரத்தமும் சதையுமாய் அப்பொழுதுதான் ஜனித்த புத்தம் புதுகுழந்தையாய் ஒரு தொட ரை இறக்கி வைத்தார்கள்,அது வயலும் காடும் தோட்டமும் அது சார்ந்த ஊழைப்பாளிமக்களையும் அவர்களது குடும்பப்பாடுகளையும் பேசிச்சென்றது கொஞ்சம் ஒட்டுதலாக.

அது போல் தென் புற மண்ணிலிருந்து ஒரு எழுத்தாளர் எழுதிய சிறு கதை மற்றும் தொடர்கதை மனம் கவர்ந்ததாகவும் மிகவும் பிடித்துப்போனதாகவும் இருந்தது.

இது போலாய் அதில் வரும் கெள்வி பதில் பகுதியும் விஞ்ஞானம் சுமந்த இருப்பும் இன்னும் இன்னுமுமான பல பக்கங்கள் அவனைகவர அது கவர்ந் தது போல் வேறெதுவும் இவனை கவராமல் போக படிக்கிற பழக்கம் தொட ரட்டும்,என்கிற பிடிவாதத்துடன் வாங்கிய பத்திரிக்கை இன்று வரை கையில் இருக்கிறது,

அதன்ஈரமும்பசைதன்மையும் உயிர்ப்பும் இன்றும் அப்படியாய் இருக்க தவறா மல் வாங்கி வருகிறான்.

”எதுக்குடாஇதுக்குப்போயிகாசசெலவழிச்சிக்கிட்டுவெட்டியா,அதுக்குஏதாவது வாங்கித்தின்னாலாவது ஒடம்புல ஒட்டுமுல்ல என்கிற நண்பனிடம் அடப் போடாதின்னாலாவது தின்னாலாவதுன்னு நெறைய வாங்கி தின்னாச்சி, இனி வாங்கித்தின்ன ஏதாவது ஒரு புது ஐட்டமா கண்டுப்பிடிச்சாத்தான் உண்டு, சமையல் உலக சக்கரவர்த்திகள்கிட்ட சொல்லி செய்யச்சொன்னா சரியா இருக்கும்ன்னு நெனைக்கிறேன்” என சொல்லுவான் இவன்/

”போடா டேய் நீயி அந்தமானிக்க தின்னுட்டாலும் மிஞ்சி மிஞ்சி போனா டீக் குடிப்ப,வடைசாப்புடுவ,அதவிட்டாபன்னு,இல்லைன்னாவாழைப்பழம்இதுதான ஓங் வழக்கமா வெளிய வாங்கித்திங்குறதுல இருக்குற ஐட்டங்க, என்னமோ ஊரையே வளைச்சிப்போட்டு சாப்புட்டு அலுத்துப்போன மாதிரியில்ல பேசுற போடா டேய் போடா உண்மையிலயே சொல்லப்போன இங்க என்ன இருக்கு ன னே ஒனக்கு தெரியாது,,இதுலதின்னு அலுத்துப்போனானாம் அலுத்து,,/ போடா டேய் போடாஎன்னமாவது சொல்லீறப்போறேன்” என்பான் நண்பன்.

அவன்பதிலுக்குப்பேசுகிற போது,உண்மைதான்,அவரவர்கள் தேடித்தேடி போய் சாப்பிடுவதை பார்க்கிற போதும்சாப்பிடுவதற்கான அயிட்டத்தை தேர்ந்தெடுத் து சாப்புடுவதை பார்க்கிற போதும் கொஞ்சம் பொறாமையாகவும் கொஞ்சம் எரிச்சல் காட்டியும் ஆகிப் போகும்,

இது போக கல்யாண சமையல் சாதம் என சாப்பிடுபவர்களும் உண்டு, நான்கு இட்லி,இரண்டு தோசை, ஒரு பூரி செட்,இரண்டு வடை, ஒரு டீ,,,,, என சாப்பி டுவர்களும் உண்டு,எப்படி இப்படியெல்லாம் சாப்பிட முடிகிறது என்கிற ஆச்ச ரியம் ஒருபக்கம் இருக்க ஒருபக்கம் இப்படியும் சாப்பிட்டு செமிப்பவர்கள் மிகவும் கொடுத்துவைத்தவர்கள் என்பான்,

அப்படியாய் சாப்பிடுபர்களும் சாப்பிட வாய்க்கப்பெற்றவர்களும் மிகவும் கம்மி யாகத்தான் இருக்கிறார்கள் ,ஒன்று சாப்பிட வாய்ப்பிருப்பவனுக்கு கையில் பணம் இருப்பதில்லை,கையில் பணம் இருப்பவன் சாப்பிட முடிவதில்லை.

இப்படியானஈருகெட்டநிலைஇவனதுநண்பனுக்குவாய்த்தாய்ச் சொல்லுவான், அரசு அலுவலகத்தில் தற்காலிக ஊழியராய் வேலை செய்த போது பற்றாக் குறை சம்பளத்தில் சாப்பிடக்கூட வசதி வாய்க்கப்பெற்றதில்லை எனவும், இப் பொழுது வசதி வந்து விட்ட பிறகு சாப்பிட முடியவில்லை எனவுமாய் சொல் லுவான்,

சுருக்கமாக சொல்லப்போனால் அப்போது சாப்பிட வயிறு இருந்தது,சாப்பாடு இல்லை,இப்போதுசாப்பாடுவேண்டுமட்டும்இருக்கிறது,சாப்பிடவயிறுஇல்லை எனவுமாய் சொல்லுவான்.அவன்சொன்னசொல்உண்மைதான் என நிரூபணம் ஆகும் நண்பரைப் போல் இன்னும் சில பேரை சந்திக்கிற போது/

அப்பொழுதெல்லாம் பெரும்பாலுமாய் கலியூர்கடையில்தான்சாப்பிடுவான். கணக்கு வைத்து சாப்பிடுகிற அளவிற்கு பழக்கம்,

“பழக்கம் என்ன பெரிதாய், எங்களை வைத்து உங்களுக்கு சாப்பாடு,உங்களை வைத்து எங்களுக்கு காசு, என்பார் ,உங்களது மூலமாய் வருகிற ஒரு மாத வருமானத்தை பத்து பேர் வந்து சாப்பிட்டால்தான் பார்க்க முடியும். ஆகவே உங்களைப்போலானவர்களைசகித்துக்கொள்கிறோம்,தவிரஉங்களைப்போலா னவர்களி ன்நல்லமனமு ம் நல்ல எண்ணமும் நல்ல சிந்தனையும் எங்களைப் போலானாவர்களுக்குகூடுதல் ப்ளஸ் பாயிண்டாகவும் கூடுதல் தைரியமாவும் ஆகிப் போகிறது.”

”உங்களைப்போன்றவர்களின் நல்ல மனமும் நல்ல சிந்தனையும் இங்கு விரிகிற போது கடைக்கு வருகிற நான்கு பேர் கடையை கொஞ்சம் மதிப்புட ன் பார்க்கிறார்கள்.கடை வளர்ச்சிக்கும்,கடை விரிவாவதற்கும் இன்னும் கொஞ் சம் அது உதவியாய் இருக்கிறது,என அவர் சொல்லிக்கொண்டிருந்த நாட்க ளில் இவனுக்கு அறிமுகமான தந்தையின் நண்பரை கூட்டிக்கொண்டு ஒரு நாள் கடைக்கு சாப்பிடப்போனான் .

இவன்கொஞ்சம்வேகமாய்சாப்பிட்டுமுடித்துவிட்டான்.அவர்பதறாமல்சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.இவன் வெளியில் போய் விட்டு வருவதாய் சொல்லி விட்டுச் சென்றான்,

சென்ற வேலை கொஞ்சம் தாமதமாகிப்போக இவன் வருகிற போது அவர் கடைகல்லாஓரமாகஅமர்ந்திருந்தார்.கடைமுதலாளிதான்அமரவைத்திப்பதாகச் சொன்னார்,”ஏன் அவரை போகச்சொல்லியிருக்கலாமே” என முதலாளியிடம் கேட்ட போது அவர் கடையையும் வியாபாரத்தையும் பார்க்க வேண்டும் எனச் சொன்னதாகவும் சொன்னார்,

அனுப்பி வைத்தலுக்கும் இருப்பிற்குமான இன்மை அவ்விடத்தில் உறை கொண்டு தெரிய அவரை அழைத்துக்கொண்டு போனான்.

போகும் போது நண்பனின் அப்பா ஒரு ஹோட்டல் வைக்க வேண்டுமானால் எவ்வளவு செலவாகும் எங்கு வைத்தால் வியாபாரம் ஆகும்,அதற்கு பேங்கில் லோன் தருவார்களா என இன்னும் இன்னுமாய் நிறைய நிறைய கேட்டுக் கொண்டே வந்தார்.

அதைஅப்படியே தாங்கி ஏந்திக்கொண்டு போய் நண்பனிடம் சொன்ன பொழுது நீ இரு பேசாமல்,,,/அவரு இப்ப கொஞ்ச காலமா எதப் பார்த்தாலும் இப்படித் தான்பேசிக்கிட்டும்கேட்டுக்கிட்டுமாஇருக்கிறாரு,பெட்டிகடைக்குப்போனாலும் சரி டீகடைக்குப்போனாலும் சரி ,இல்ல வேற ஏதாவது ஒரு சின்ன கடையை பார்த்துட்டாலும்சரி ,அதை தான் செஞ்சி பார்த்தா எப்படி இருக்கும்,அதுக்காக பேங்க் லோன் கிடைக்குமான்னு விசாரிட்டு இருக்குறாரு,சமீப காலங்களா,,, நீ ஒண்ணும் கண்டுக்காதே அதப்பத்தி கேட்டா நல்ல படியா விசாரிச்சிச் சொல் றேன்னு சொல்லீட்டு ஒதுங்கிக்க,,,, வருசமெல்லாம் அரசின் அதிகாரம் செலுத்தும் பதவியில இருந்தவர்,நல்லதானாலும் கெட்டாதானாலும் முடிவெ டுக்கிற இடத்தில் இருந்தவர்,இப்பொழுதும் அப்படியேஇருக்க நெனைக்கிறாரு. அதுதான் பிராபளம் இப்பொழுது,அதை ஜெயித்து வந்து விட்டால் போதும் இப்போதைக்குங்குறநெலைமையிலஇருக்குறோம்நாங்க”/எனசொன்னநண்பன் இன்னும் சிறிது நேரத்தில் இங்கு வருவான்,டீ சாப்பிட/

பூத்துக்குலுங்குகிற மரங்களில் இருக்கிற பூக்களிடம்யார்பேசிஎன்ன அறிந்து கொள்ளமுடிகிறதுஎனத்தெரியவில்லை.

பூத்து நிற்கிற பூக்கள்,வளர்ந்து நிற்கிற மரம் கிளர்ந்து நிற்கிற இலைகள், மற்றும் மற்றுமான இன்னும் இன்னுமானவைகளுடன் உருக்கொண்டு நிற்கிற மரம் மரமாகஅல்லாமல் ஒரு அடையாளம் கொண்டு அந்தக்கடை முன்னாக நிற்கிறது,பூக்கிற மரம் காய்க்கவும்,காய்த்த மரம் கனியவுமான காட்சியை முன் நிறுத்திக் கொண்டு/

ராஜன் மாஸ்டர் போட்டுத்தருகிற டீக்கும் பெயர் தெரியாத ஒரு மாஸ்டர் சுட்டெடுத்துத்தருகிற வடைக்குமான தூரம் அந்த கடையில் வெகுவாய் வித்தி யாசம் கொண்டு தெரிந்ததாய் தெரியவில்லை.

ஒரு வடை சாப்பிட்டால் ஒரு டீ அல்லது டீக்குடிக்க போகும் முன் ஒரு வடை என்பது அங்கு டீக்குடிக்க வருகிறவர்களுக்கு முன் எழுதப்படாத சட்டமாயும் முன் வரைவாயுமாய் இருக்கிறது.

அந்தகடைக்குமுன்னாய் இருந்த பாய் கடையில் நின்றுவாரந்திரியை வாங்கிக் கொண்டிருக்கும் போதுதான் நண்பரும் தோழரும் உடன் பணி புரிபவருமான மகேஷ் கடந்து போகிறார் இவனை,

”என்ன சார் இப்பத்தான டீ சாப்பிட்டீங்க ஆபீஸ் முடியப்போற நேரத்துல, அதுக்குள்ள என்ன தேவை இருந்துற முடியுமுன்னு இன்னொரு டீ சாப்புட வந்துருக்கீங்க,”எனக்கேட்ட அவரை நோக்கி சொல்கிறான்.

இல்ல சார்,நான் டீக்குடிக்க வரல,இங்கன நண்பர்கள் சில பேர பாக்கறதுக்காக வந்தேன்,இங்க எனக்குன்னு சில பேரு இருக்குறாங்க,நட்பு கொள்ளவும் தோழமை பூக்கச்செய்யவுமா,/

அப்பிடியா இருக்குற நாங்க எல்லாரும் இங்க ஒண்ணு கூடுவோம்/அதுக்காக வர்றதுதானே ஒழிய டீக்குடிக்க வர்றது ஏங் நோக்கம் இல்லை.அப்படி வர்ற நேரத்துல டீக்குடிக்க வர்றது தவிர்க்க முடியாம போகுது.அவ்வளவுதான்.என ச் சொல்லியவாறே பேசிக்கொண்டிருந்த காட்சியை முடித்து அவரை வழிய னுப்பி வைக்கிறான்.

9 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
அருமை

'பரிவை' சே.குமார் said...

அருமை அண்ணா...
வாசித்து ரசித்தேன்.

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றியும் அன்பும் பிரியமும்..../

vimalanperali said...

வணக்கம் நாகேந்திர பாரதி சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் பரிவை சேக்குமார் அண்ணா,
நன்றியும் அன்புமாய்/

வலிப்போக்கன் said...

அப்போதிலிருந்து இன்றுவரை டீ குடிக்கும் பழக்கம் எமக்கு இல்லாமல் போச்சு தலைவரே....

M0HAM3D said...

அருமை

vimalanperali said...

வணக்கம் வலிப்போக்கன் சார்,
டீக்குடிக்கப்பழகிக்கொள்ளலாம்தானே,,,?
நன்றி வருகைக்கும் கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் முகமது அல்தாப் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/