25 Nov 2017

புதுப்பையி,,,,

புதிதாக வாங்கிய பையில் சாப்புடுகிற பண்டம் வாங்குகிற பாக்கியம் எத்தனை பேருக்கு வாய்க்கும் என்பது தெரியவில்லை.இவனுக்கு வாய்த்திருந்தது.

கனமான தன் உடல் விறைப்பு காட்டியும் உயரம் காட்டியும் கலர் காட்டியு மாய் இருந்தது.

பையின் மீது ஒரு முண்ணனி கம்பெனியின் விளம்பரம் ஒன்று பொரிக்கப் பட்டிருந்தது,கரடிப் படத்துடனும் பனி நிறைந்த இடத்துடனுமாய்.

பனி நிறைந்த இடத்தில் முளைத்து உருக்கொண்ட மரங்களை ஸ்பிர்ச் மரங் கள் என எங்கோ எப்பொழுதோ நாவல்களில் படித்ததாய் ஞாபகம்.

அந்த நாவல்களைப் படிக்க அந்நேரம் எவ்வளவோ கஷ்டப்பட்டிருக்கிறான்.

காரணம் முதலாய் நாவல் கிடைக்காது.அப்படியே கிடைத்தாலும் அதில் மன ம் ஊன்றி படிக்கிற அளவிற்கு இவனுக்கு புத்திக்கூர்மை அல்லது ஞானம் இருந்தில்லை,

கீழேகிடந்து எடுத்த பேப்பரை முழுதாக படிக்கவே இவனுக்கு ஒரு நாள் முழு க்க தேவைப்படுகிற பொழுது நூறு அல்லது நூற்றி ஐம்பது பக்க நாவலைப் படிப்பதென்பது பரமபிரயத்தன விஷயமாகவே ஆகித்தெரியும்.

அதெல்லாம் போய் கை ஊன்றி கரணம் அடித்து மனம் ஊன்றி படித்த போது வந்த சிக்கல் புது விதமாக இருக்கும் என இவன் கனவில் கூட நினைக்க வி ல்லை,

யாரிட்டமிருந்து புத்தகம் வாங்கி படிக்கலாம் என இவன் முழுதாக நம்பினா னோ அவரிடமிருந்து இவனுக்கு புத்தகம் கிடைப்பது தாமதமானது. அல்லது கிடைக்கவில்லை.

அப்புறம்தான்தெரிந்தது,தாமதத்திற்கும்கிடைக்காமல் போனதற்கான காரணத் திற்குமான விடை.

வேண்டுமென்றே புத்தகம் கொடுப்பதை தவிர்த்திருக்கிறார்,இவன் முழுவது மாய் நம்பிய மனிதர்,

பின்னர் அவர் பிடி விடுத்து வெளியுலகம் பழக்கமான பின் இவனைப்போல் கொஞ்சமாய் படிக்க ஆரம்பித்த ஒருவரது வீட்டில் போய் புத்தகங்கள் வாங்கி வந்தான்.

அவர் இவன் தங்கியிருந்த ஊரிலிருந்து பத்தாவது கிலோ மீட்டலிருக்கிற கிராமத்தில் ஓட்டு வீட்டில் வசித்தார்,விதவை தாயுடனும் திருமணமாகத தங்கையுடனுமாய்.

அவரிடம் புத்தகம் வாங்க வேண்டும் என்றால் வாரத்திற்கு ஒரு முறை அவர் டவுனுக்கு வரும் பொழுது இன்ன புத்தகம் இன்னார் எழுதியது கொண்டு வா ருங்கள்,,,,எனச் சொல்லி வாங்க வேண்டும்,இல்லையென்றால் இவன் போய் தான் வாங்க வேண்டும்,அவர் வீட்டில் இருக்கிற நேரமாய் பார்த்து.

வீட்டில் அவர் இருக்கிற நேரம் என்றால் வேலை முடிந்து அவர் வீட்டுக்கு வர இரவு ஏழு மணியாகிப் போகும்.

கோயில் பட்டிப் பக்கம் வேலை பார்க்கிறார்,அவர் வேலை முடிந்து இரவு கடைசி பஸ்ஸில்தான் வருவார்,

ஏழு மணிக்கப்புறம் அவரது ஊரில் இருந்து வர வேண்டும் என்றாலும் அவ ரது ஊருக்கு போக வேண்டும் என்றாலும் சைக்கிளில்தான் செல்ல வேண் டும்.

இவனும் புத்தகம் வாங்குகிற ஆவலில் அவர் வருகிற ஏழு மணி பஸ்ஸிற்கு முன்பே சென்று அவரது ஊரில் காத்திருந்தான் ஒரு மழை நாள் இரவு அவர் வரவில்லை,

வீட்டில் கேட்டதில் அவன் அப்படித்தான் அவ்வப்பொழுது ஏதாவது வேலை இருக்கிறது என வேலை பார்க்கிற ஊரில் தங்கி விடுவான் எனச் சொன்னார் கள்.

இவனுக்கானால் என்ன செய்வது எனத் தெரியவில்லை.காத்திருந்ததிலும் இன்னும் கொஞ்ச நேரம் பார்த்து விட்டுசெல்லலாம் என முடிவு செய்திருந்த திலும் நேரமாகிப் போனது.

வாடகை சைக்கிள்,வயிற்றைக்கிள்ளும் பசி,தேடி வந்தவரை பார்க்க முடியாத வருத்தம்,வந்தது வேலை முடியவில்லை என்கிற ஆதங்கம்,எல்லாமும் ஒன்று சேர சைக்கிளை மிதித்தவனாய் அந்த ஊரில் எதாவது டீக்கடை இருக் குமா எனத் தேடிய போது எதிர்ப்பட்டவரிடம் கேட்கிறான்.

”என்னது டீக்கடையா பாதி ஊரு தூங்கிப்போன இந்த அர்த்த ராத்திரிப் பொ ழுதுல டீக் கடையாவது ஒண்ணாவது, ஊருக்குப் புதுசா எனக்கேட்டு விட்டு வந்த விஷயம் கேள்விப்பட்டதும் அவன் அப்பிடித்தான் நம்ம சொந்தக்கார பையதான், யெள ரத்தமில்ல,கொஞ்சம் அது இதுன்னு பேசிக்கிட்டு அலை வான்,ஆனா அவன் எது செஞ்சாலும் அதுல ஒரு அர்த்தம் இருக்கும் தெரிஞ் சிக்க என்றவர் சும்மா பயமில்லாம போங்க தம்பி,யாராவது கேட்டா இன்னார் வீட்ல இருந்து வர்றேன்னு அந்த தம்பி பேரச் சொல்லுங்க,தம்பி பேரச் சொன் னப் பெறகும் ஒங்ககிட்ட ஒருத்தன் நொரண்டு இழுத்தான்னா அவன் இருக்கு றதா எப்பிடி,,,,எனச்சொல்லி அனுப்பியதும் நடந்தது இவன் புத்தகம் தேடி அலைந்த நாட்களில்,

பின்னாளில் இதெல்லாம் ஞாபகம் வருகிற பொழுதுகளிலும் புத்தகம் படிக் கிற நாட்களிலுமாய் புத்தகம் தந்து உதவியவரும் புத்தகம் தர மறுத்து ஒதுக்கிய வரும் ஞாபகங்களில் வந்து உருத்தரிப்பவர்களாய் ஆகிப்போகிறார்கள் தான் இது போலாய் ஸ்பிர்ச் மரங்களையும் வேறு சிலவற்றையுமாய் படங்களிலும் இன்னமும் தொலைக்காட்சியிலுமாய் பார்க்க நேர்கிற சமயத்தில்/

கைக்கும் வாய்க்கும் எட்டாத தூரத்தில் யாராலோ இருப்பு கட்டி வைக்கப்பட் டிருக்கிற போல கண்ணாமூச்சி காட்டியும் மினுக்கிட்டு தனம் பண்ணிக் கொ ண்டுமாய், இருக்காமல் கிடைக்கப்பெறுகிற பாக்கியம் நேரடியாய் கிடைத்தால் நன்றாக இருக்கும் என எண்ணத் தோணுகிறது,

“அடபோங்கப்பா,பாக்கியமாம்பாக்கியம்பெரிய,,,,,நம்மசொல்லிக்கிட்டுஅலைய வேண்டியதுதான்,வெக்கமில்லாமயும், வேலையத்துப் போயுமா, யாருக்கு வேணும் ஒங்க பாக்கியமும்,யோகமும்,ஒழைக்கிற ஒழைப்புக்கும் சிந்துற வேர்வைக்கும் பலன் கெடைச்சா போதும்ண்ணு தோணுது.,அது கெடைச்சிட் டாலே பெரிய பாக்கியம்ன்னு சொல்வேன்” நானு என்பான் நண்பன் சின்னச்சாமி.

“ஆனா நண்பா நீ சொல்றதெல்லாம் வாஸ்தவம்தான்னு வச்சாலும் கூட சீறி ல்லாத யெடத்துல கொஞ்சம் வளஞ்சி நெளிஞ்சிதான் போகவேண்டியிருக்கு, அது இல்லாம நேராத்தான் போவேன்னு சொன்னா முட்டிக்கிட்டும் மோதிக் கிட் டும் நிக்க வேண்டியதுதான் தெரிஞ்சிக்க,அது வம்பு அநியாயமுன்னு தெரிஞ்சி கூட அதை ஏத்துக்கிட்டும் கண்டும் காணாமத்தான் போக வேண்டியி ருக்கு. சமயத்துல,அது போலத்தான் நம்ம சிந்துற வேர்வைக்கும் ஒழைக்கி ற  ஒழைப் புக்கும் இருக்குற மரியாதை தெரிஞ்சிக்க” என்பான் அவனே/

முதலில் திண்பண்டம் எதுவும் வாங்குவதாய் எதுவும் எண்ணம் இல்லை இவனிடம்,

பாய் கடையில் டீ சாப்பிட்டுக் கொண்டிருக்கிற வேளையாய் தோனிய ஒன்றா கவே இருந்தது, எதாவது வீட்டுக்கு வாங்கிப் போகலாம் என்பதாய்/

இப்பொழுதான் என இல்லை. சிறிது நாட்களாகவே இவனுக்குள்ளாய் அப்படி ஒரு பழக்கம் தானாய் உருவெடுத்து முளைத்ததாக/

சமீப நாட்களாய் வீட்டில் அதிக வேலை இருக்கிறது என சுணங்கிப் போகிறாள் மனைவி.

என்னதான் செய்வாள் பாவம் அவளும்.வீட்டு வேலை அவளை தின்று தீர்த்து விடுகிறது.அப்படியிருந்தும் கூட சமாளிக்கிறாள்தான்,தன்னை மீறிய உடல் வலியால் அல்லது ஏதோ மித மிஞ்சிய சோம்பேறித்தனத்தால் எப்போதாவது கடையில் வாங்கலாம் என சொல்லுவாள்,

கல்யாணியக்காதான் சொல்லுவாள் ”என்னடா இன்னைக்கி நைட்டுக்கு கடை பார்ச்சலாஎன,ஆமாக்கா,,,,,”எனதலைசொறிகிறசமயங்களில்பிடித்துவிடுவாள் ஒரு பிடி,

“ஏம்பா அவளும் மனுசிதான,அவளுக்கு இருக்குறதும் ஒடம்புதான,என்னவோ அவள் இரும்பால அடிச்சி வச்சது போல இல்ல பீல் பண்ணுற, என்னமோ போ,,,இவ்வளவு தயங்குறவன் என்ன இதுக்கு கல்யாணம் பண்ணிக்கிற,இல்ல நான் கேக்குறேன்,

“தெனம் தவறாம விடி காலையில எந்திரிச்சி வாசத்தெளிச்சி கோலம் போட்டு தூங்கிக்கிட்டு இருக்குற ஒனக்கும் புள்ளைகளுக்குமா காபி போட்டு தலை மாட்டுல வச்சிக்கிட்டு ஒங்கலயெல்லாம் மனசு நோகாம எழுப்பி ஒக்காரவச்சி காப்பி தண்ணிய குடிக்க வச்சிட்டு நீங்க குளிச்சி ரெடியாகுறதுக்கு முன்னாடி ஒனக்கும் புள்ளைகளுக்குமா சோறு எடுத்து வச்சி டிபன் ரெடி பண்ணி அதுல ருசி கூடி கொறைஞ்சிறாம பாத்து ஒன்னைய ஆபீஸிக்கும் புள்ளைங்கள பள்ளிக் கூடத்துக்கும் அனுப்புன பெறகு பாத்தரம் வெலக்கி ,துணி மணி தொவைச்சி மத்த மத்த வீட்டு வேலைகள கவனிச்சி பெசகாம செஞ்சி முடிச்சிட்டி ஆந்து ஒக்காருற நேரம் புள்ளைங்க பள்ளிக்கூடம் விட்டு வர்ற நேரமாகிப்போகுது,அப்பறம் நீ வந்துருவ ஆபீஸ் விட்டு/

”இதுலஅவஎங்கதான் ரெஸ்ட்டுக்கு சொல்லு,ஒன்னைய நம்பி வந்தவ கையில ஒருவேலைன்னு ஒண்ணும் கெடையாது,என்னையப் போல, ஒன்னொன்னுக் கும் அவ ஒன்னைய எதிர்பாத்துதா நிக்கணும்.ஒரு சேலை ஜாக்கெட்டு, துணி மணி வாங்குறதுலயிருந்து ஏதாவது ஒரு நல்லது பொல் லது வாங்கித் திங்கி றதுக்குக்கூட ஓங் கைய எதிர்பாத்துதான் நிக்க வேண்டியிருக்கும்,

“நீ என்னதான் சம்பளம் எல்லாத்தையும் அவ கையில குடுத்துட்டுப் போனா லும் கூட ஒண்ணொன்னுக்கும் அவ ஒண்ணையக் கேட்டுதான செய்ய வேண் டியிருக்கும் சொல்லு,

நானும்கிட்டத்தட்ட ஓங் பொண்டாட்டி போலதான், ஆனா ஒங்க மாமா என்ன செய்வாருன்னா,என்னையநம்பி எல்லாப் பொறுப்பையும் ஒப்படைச்சிருவாரு, என்னென்னமோ சொல்லுவாரு பேசுவாரு,எனக்கு அவரு பேசுறதுல பாதி புரியும்,மீதி புரியாது.ஆனா அவரு சொல்லுலயும் பேச்சுலயும் ஒரு ஞாயம் இருக்கும்,பொம்பளங்கள மதிக்கிறது போல இருக்கும்,அவுங்க இருப்புக்கு எதுவும் பங்கமோ இழிவோ வந்துறக் கூடாதுங்குற ஆழமான தீர்மானமும் பிடிவாதமும் இருக்கும்.அப்படியாப்பட்டவரையே சமயத்துல நான் கரிச்சிக் கொட்டுவேன்.சமயத்துல புடுங்கி வீதியில போடுவேன்,

”ஆனா அதுக்கு சரி சரின்னு தலையாட்டிக்கிட்டு சிரிச்சிக் கிட்டு நான் கோபப் பட்டது சரியில்ல அந்த நேரத்துலைன்னு பதனமா எடுத்துச்சொல்லி எனக்கு புரிய வைக்கிரதுங்குள்ள தலையால தண்ணி குடிச்சி அசந்து போவாரு மனுசன்.சரி ஏங் தப்ப ஒனர்ற அதே நேரம் அவருகிட்ட இருந்த தப்பவும் சொல்லிக் காட்டீட்டு பாரஸ்பரம் ரெண்டு பேரும் சரியாயிருவோம்.

”ஒங்க மாமா மாதிரி ஆக மாட்டா நீயின்னு எனக்கு உறுதியா தெரியும் சுட்டுப் போட்டாலும் அவரப்போல நீ வர மாட்ட,அப்பிடி ஆளும் நீ கெடை யாதுன்னு தெரியும். நீ அப்பிடி ஆள்க கூட சேர்க்க வச்சிகிர்றதில்லைன்னும் தெரியும். பின்ன எப்பிடி ஒனக்கு ஒங்க மாமாவப்போல சிந்தனை வரும்,சும்மா என்னை யப் பாக்குற நேரம் மாமா கிட்ட சொல்லி ஓங்கிட்ட பேருற பேச்சுலயும் சொல்ற சொல்லுலயும் பாதி அளவுக்காவாது ஏங்கிட்ட பேசச் சொல்லு க்கா ன்னு சொன்னா மட்டும் போதுமா சொல்லு,

“ஒனக்கு தினம் சாய்ங்காலம் ஆச்சுனா ஓங் பிரட்ண்சுக கூட சேந்துட்டுப் போயி ஒயின் ஷாப்பு பக்கம் போயி நிக்கணும் குடிக்கிறயோ குடிக்கலையோ அந்த வாடை பட்டாதான் தூக்கம் வரும் போல இருக்கும் ஒனக்கும்,

“என்னஓங் மாமாவவுடவா குடிச்சிறப் போற,ஒனக்காவது தெனசரி சாய்ந்தரம், அவருக்கும் காலம் நேரம் மணி எதுவும் கெடையாது, நெனைச்சா நெனைச்ச யெடம் போனா போன யெடம்,வந்தா வந்த யெடம்தான்,என்ன எங்க போனா லும் தண்ணி மயக்கத்துலயும் தண்ணி மப்புலயும்தான் இருப்பாரு.தீடிர்ன்னு எங்கயாவது விழுந்து கெடக்காருன்னு சொல்லுவாங்க,போயி ஆட்டோவுல அள்ளிப் போட்டுட்டு வருவோம்,

“ஒரு காலகட்டத்துல இதே வேலையா அவரு இருந்தது போலவும் தன்னை மாத்திக்கிறதுக்கு கடுகளவும் முயற்சி பண்ணாதது போலவும் தெரிஞ்சிச்சி,

”அதுக்காக சோத்துக்கு வழியில்லாம செலவுக்கு இல்லாம குடும்பத்த கஷ்டத் துல தவிக்க விட்டுறல, பெரியவ காலேஜிக்கு போனா,சின்னவன் பத்தாப்பு படிச்சான்,அதுக்கு எந்தவித பங்கமும் வந்துறல,என்ன குடும்பமானம்தான் காத்துல பறந்துச்சி,பாக்குறவுங்கள்லாம் என்ன ஒங்க வீட்டுக்காரரு இப்பிடி திரியிறாரமுல்ல வைக்கிறாரமில்லைன்னு ஒரே பேச்சு,பேச்சுன்னா பேச்சு லேசுப்பட்ட பேச்சுல்ல,நாக்கப்புடுங்கிக்கிற மாதிரி ரெக்க கட்டி பறந்த பேச்சா ஆகிப்போச்சி,

“யாராவது ஏங்கிட்ட தற்செயலா சௌக்கியாமன்னு கேட்டாக் கூட அவுங்க இத மனசுல வச்சிக்கிட்டுதான் பேசுறாங்கன்னு நெனைக்கிற அளவுக்கு ஆகிப் போச்சி.என்ன செய்யிறதுன்னு தெரியல எனக்கு.

“அது வரைக்கும் சங்கடப்படாத ஏங் பெரிய மகளும் ரொம்ப சங்கடப்பட்டு நின்ன ஒரு லீவூ நாளனைக்கி கறி எடுத்து சாப்புட்டுட்டு ஒக்காந்துருந்தப்ப மண்ணெண்ணக் கேனோட போயி நின்னோம் அவரு முன்னாடி,தொடந்து இப்பிடியே தண்ணியடிச்சிக்கிட்டு ரோட்டுக் காட்டுல விழுந்து எந்திரிச்சிக் கிட்டு திரிஞ்சிக்கின்னா எங்களகொளுத்திக்கிறதத்தவுர ரெண்டு பேருக்கும் வேற வழி தெரியலைன்னு அழுதுக்கிட்டும் கோபத்தோடயும் சொல்லி பேசிக் கிட்டு இருக்கும் போது தற்செயலா வீட்டுக்கு வந்த பக்கத்து வீட்டு தம்பி மாமாவ தனியா கூட்டீட்டு போயிட்டாரு, எங்ககிட்டயிருந்து மண்ணெண்ணக் கேன புடுங்கிக்கிட்டு/

”அவரு அன் னைக்கி ஒங்க மாமாகிட்ட என்ன பேசுனாறோ என்னவோ, தெரி யாது, மறு நாளையிலயிருந்து மனுசன் குடிக்கிறத கொஞ்ச கொஞ்சமா நிறு த்தி இப்ப அந்த வாடைய கண்டாலே தூரப்போயிற அளவுக்கு பொடம் போட்ட மனுசனா மாறிப் போனாரு.

அப்பிடி அவரு மனச மாத்துனது அந்த தம்பிதானா இல்ல அவரா மாறிட்டா ருன்னு தெரியல,கண்டிப்பா அவரா மாறிருக்க மாட்டாரு,அந்த தம்பிதான் மாத்திருக்கும்.

“ஆனா அந்த தம்பி செஞ்ச பெரிய உபகாரத்துனால ஏங் குடும்பம் இன்னைக்கி தலை நிமிந்து நிக்குது,அதுக்கு தம்பிக்கு என்ன கைமாறு செய்யப்போறேன்னு தெரியல.

“விசாரிச்சதுலஅந்தத்தம்பிஎதுவோபொதுஇயக்கத்துலஇருக்குறதாசொன்னாங்க, நானும் பாத்துருக்கேன்,அப்பப்ப,மொத்தமா வயசுப்பயல்களோட திரிவாப்புல, ஆனா இயக்கத்துல இருக்குறது,அதுக்கான வேலையா இருக்குறது பத்தி என க்கு தெரியாது,பலரும் சொன்னப்பொறகுதான் தெரியும்,

ஏங் வீட்டுக்காரர நல்ல வழிக்கு கொண்டு வரத்தெரிஞ்ச தம்பிக்கு இயக்கம் கட்டி பொதுவா என்னென்ன வேலைக செய்யணும்ன்னு தெரியாதா என்ன, அந்ததம்பிஎங்கஇருந்தாலும் நல்லா இருக்கணும் என காற்றில் கையெடுத்துக் கும்பிட்டகல்யாணியக்கா,சொல்லுவாங்க,சும்மாமோகமும்ஆசையும் அறுபது நாளும் முப்பது நாளுமுன்னு,என்னையக்கேட்டா அதெல்லாம் சுத்த கப்சா, வருசமெல்லாம் மோகத்தையும் ஆசையையும் பரஸ்பரம் ரெண்டு பேரும் சொமந்துக்கிட்டும்,கட்டிக்காத்துக்கிட்டும் இருந்திங்கின்னா வாழ்க்கை நல்லா இருக்கும்,

“அத விட்டுட்டு ஹோட்டல்ல சாப்பாடு வாங்க சலிச்சிக்கிறது, அவளுக்கு
உத வி பண்ண சலிச்சிக்கிறது இதெல்லாம் அர்த்தமில்லாதது என்பாள் நீ,,,,,,,,,,,ளமாக/

சாப்பாடு வாங்கி விடலாம் என முடிவாகிப் போனது,என்ன வாங்குவது, புரோட்டா தவிர்த்து ஏதாவது வாங்க வேண்டும் அது வாங்கி வாங்கி சலித்துப் போனது,

வெங்காய தோசை வாங்கி விடலாம்,சின்னவளுக்கும் பெரியவளுக்கும் விருப் பம் கொஞ்சம் அதன் மேல்.

தவிர்த்து ”இது போல ஓட்டல் சாப்பாடு சாப்புடணும்ன்னு பிரியமெல்லாம் இல்லை எனக்கு,நீங்க வாங்கீட்டு வர்ற பார்சல் மூலமா நாமெல்லாம் சாப்பு டுட்டது மாதிரியும் ஆகிப்போச்சி.அம்மாவுக்கு கொஞ்சம் ரெஸ்ட் குடுத்தது போலவும் ஆகிப்போச்சி இல்லையா என்பாள் பெரியவள்.

அதற்கு ஆட்பட்டாவது வாங்கியே ஆக வேண்டும் போல் இருக்கிறது, கடை யில் சொல்லி விட்டான்.சொல்லி விட்ட பண்டத்தை எதில் வாங்கிக் கொண்டு போவது தெரியவில்லை,

பை ஒன்று இருந்தால் நன்றாக இருக்கும் ,சொல்லியதை கட்டிவைக்கச் சொல்லி விட்டு பஜாரில் போய் புதிதாக பை ஒன்று வாங்கி வந்தான்.

புதிதாக வாங்கிய பையில் சாப்புடுகிற பண்டம் வாங்குகிற பாக்கியம் எத்த னை பேருக்கு வாய்க்கும் என்பது தெரியவில்லை.இவனுக்கு வாய்த்திருந்தது.

8 comments:

'பரிவை' சே.குமார் said...

புதுப்பையி... வாசமாய்.

vimalanperali said...

வணக்கம் பரிவை சே குமார் அண்ணா,
வருகைக்கும் கருத்துரைக்கும்.நன்றி!

vimalanperali said...

தவிர வாசமான புதுப் பையில் அடை கொண்ட
வாழ்க்கை சொல்லிச் செல்வதும் நிறையவே!

கரந்தை ஜெயக்குமார் said...

வருசமெல்லாம் மோகத்தையும் ஆசையையும் பரஸ்பரம் ரெண்டு பேரும் சொமந்துக்கிட்டும்,கட்டிக்காத்துக்கிட்டும் இருந்திங்கின்னா வாழ்க்கை நல்லா இருக்கும்,

அருமை
அருமை
நன்றி நண்பரே
தம +1

vimalanperali said...

கட்டிக் காக்கிற மோகமும் ஆசையும்
உடலுக்கு மட்டுமல்ல,
பரஸ்பரம் இரு மனங்களுக்குமானதாய்
ஆகிப்போகிறதுதான்,
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி,

vimalanperali said...

தவிர காதறுந்ததானாலும் சரி
அது அல்லாததானாலும் சரி.
அதனுள் குடிகொண்டிருக்கிற
வாசனையே தனிதான் எனச்
சொல்லிச்செல்லத்
தோணுகிறதுதான் இந்நேரம்,,,,/

ஸ்ரீராம். said...

பைக்குள் நினைவுகள்..

vimalanperali said...

நன்றியும் அன்பும்,,,/