19 Nov 2017

தார்க்கீத்து,,,,,

கருத்துப் பருத்து நீண்டு ஓடிய தார்ச்சாலை அது,

ரயில்வே ஸ்டேசனின் நுழைவாயிலே அதன் துவக்கப்புள்ளியாய் இருந்தது. அங்குஆரம்பித்து பின்அது நீட்சி கொண்டு எங்கு போய் முடிகிறதென்பது தெரி யாமலும் தெரியவும் செய்யாமலுமாய்/

ரயில்வே ஸ்டேசன் எனச் சொல்லும் போதுதான் ஞாபகம் வருகிறது.ஒரு நாள் இரவு இரண்டு மணி வாக்கில் டீக்குடிக்கலாம் என இவன் இவனது அலு வலகத்தில் உடன் வேலை மதிவாணன் ராஜா இளங்கோ ராமு மற்றும் நான் கைந்து பேர்கள் சேர்ந்து வந்திருந்தார்கள்.

போன பினதான் தெரிந்தது, ஏன் இங்கு டீக்குடிக்க வந்தோம் என/

அவசர பணி காரணமாக அலுவகத்தில் இரவு தங்கி வேலை செய்ய வேண்டி இருந்தது.

இரவு தங்கி வேலை செய்தது இவனுக்கு புதிது.ஆனால் அவர்களுக்கு பழசு, இவன் தவிர்த்த அவர்கள் நான்கு பேரும் இங்கு வேலைக்கு புதிது,ஆனால் இதற்கு முன்னாக அவர்கள் வேலை செய்த தனியார் கம்பெனியில் இதெல் லாம் வழக்கமானதுதான் என்றும் மிகவும் சர்வ சாதாரணமாக நடக்கக்கூடிய ஒரு நிகழ்ச்சிதான் இது என்றும் சொன்னார்கள்.

சரிதான் அதுதான் இரவு பணி அலுவலத்தில் ஒரு மாதத்திற்கு எனச்சொன்ன போது தயங்காமல் சம்மதித்தார்கள்.

இவனுக்கு புதிதென்பதால் கொஞ்சம் தயக்கமாக இருந்தது,மற்ற படி வேறொ ன்றுமில்லை.

இரவுப் பணி துவங்கிய நாட்களில் இவனுள் இருந்த தயக்கமும் கொஞ்சமே யான துவளலும் பணி ஆரம்பித்த இரண்டாவது தினம சரியாகிப் போகிறது.

வழக்கமாய் இரவு பத்து மணிக்கு ஆரம்பிக்கிற பணி முடிய காலை நான்கு ஆகிப் போகும்,

ஒரு நாள் யாரும் எதிர்பாராத விதமாக இரவு இரண்டரை மணிக்கெல்லாம் முடிந்து போகிறது.

இவனுக்குள்ளானால் பெருத்த சங்கடம்,இந்நேரம் வீட்டிற்கு போவதானால் ஐந்து கிலோ மீட்டர் மனித நடமாட்டமற்ற பாதையில் போக வேண்டும். டவுனுக்குள்தான் என்றாலும் கூட மற்ற எந்த பயமும் இல்லை,ஆனால் நாய் களின் பயம்தான் வெகுவாய் ஆட்டிப் படைக்கிறது,

எங்கு பார்த்தாலும் எப்பொழுது பார்த்தாலும் கொத்துக்கொத்தாக நாய்கள் தன் முனைப்பு காட்டி இரை வேண்டியும் இருப்பிடம் தேடியுமாய் அலைந்து திரிந் து கொண்டிருக்கிறதுதான்.

இதில் எது நல்லது எது கெட்டது என கூட்டம் கட்டி திரிகிறவற்றின் அருகில் போய் கேட்டு விட முடியாது.கேட்டு விடவும் கூடாது போல் இருக்கிறது.

அதன் பாஷையில் சொல்வதானால் எது நல்லது எது கெட்டது என அறுதியி ட்டெல்லாம் சொல்லி விட மாட்டோம்.

நேரமும் காலமும் சமயமும் எப்படி எப்படி இருக்கிறதோ அப்படியப்படிதான் நடந்து கொள்வோம்.

சாம தண்ட பேதம் எங்களுக்கும் தெரியும் .அது மனிதர்களான உன்க்களுக்கு மட்டுமே சொந்தமான வார்த்தைகளல்ல.தெரிந்து கொள்ளுங்கள்.’இனி இது போலாய் வந்து எங்களது அருகில் வந்து யார் நல்லவர் யார் கெட்டவர் என புரிந்து கொள்ள முயற்சி மேற் கொள்ளாதீர்கள்,ஜாக்கிரதை எனஒரு முறை லொள்,,,லொள் என குரைத்து அனுப்பியது ஞாபகம் வருகிறது.

அந்தஞாபகத்துடனும் மிதமிஞ்சிய கிலியுடனுமாய் இரண்டரை மணிக்கு பணி முடிந்த அன்று இரவு வீடு நோக்கி பயணிக்கிறான்,

போகிற வழியில் இருக்கிற ரயில்வே கேண்டீனில் டீ சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் அமர்ந்திருந்தான், எவ்வளவு நேரம்தான் அப்படி அமர்ந்திருக்க,இரவு ரொந்து பணியில் இருந்த ரயில்வே போலீஸ் சந்தேகமாகப் பார்க்க வேண் டாம் அந்த சந்தேகம் என்கிற நினைப்பில் எழுந்து போய்விட்டான்,இன்னும் இரு ஒரு மணி அல்லது ஒன்னறை மணி நேரம் இருந்தால் போதும்.விடிந்து விடும் ஆட்கள் நடமாட்டம் ஆரம்பித்து விடும்,பாலடிக்கிறவரிலிருந்து ரயிலடி க்குப் போகிறவர் வரை கொஞ்சம் நடமாட்டமும் கூடிப் போகும்,கொஞ்சம் தைரியமாகவும் போய்க்கொள்ளலாம்,

அது அல்லாமல் இப்போது போய் நாய்கள் கடித்து வைத்து விட்டால்,,,இது போல் இரண்டாவது ஆட்டம் சினிமா பார்த்து விட்டு வந்த இவனது பக்கத்துத் தெருக்காரரை போஸ்ட் ஆபீஸ் முக்கு திரும்பும் போது அவரது இரு சக்கர வாகனத்தின் பின் ஓடி துரத்திய நாய்கள் எட்டிக்கடித்து விட்டது.கிட்டத்தட்ட ஐந்து நாய்கள் வரை துரத்தியிருக்கிறது,இதில் கொடுமை என்னவென்றால் துட்டுப்பட்ட இடம் போஸ்ட் ஆபீஸ் முக்கு என்றால் கடி பட்ட இடம் கிட்டத் தட்ட இருநூறு அடி தாண்டிதான்.அப்படியானால் முதலில் குரைத்து துரத்திய நாய் ஒன்றாகவும் கடித்த நாய் வேறொன்றும் என அர்த்தம் ஆகிறது.

அது அப்படிதான் இரவின் புழுக்கத்தில் ரோடு முழுக்கவும் வரிசை கட்டியும் அது அல்லாது ஆங்காங்கேயுமாய் ஒன்றிரண்டாய் படுத்துக்கிடக்கிற நாய்கள் நான்கும் ஐந்துமாய் இருக்கின்றன,ஒரு முனையில் ஒன்று குரைத்து அந்த வழியில் வருகிற வரை விரட்ட ஆரம்பித்தால் போதும் மற்றதெல்லாம் அப்ப டியே வரிசையாய் தொடர்ந்து கொள்ளும்.முதலாவது நாய் கும்பலால் விரட் டுப் பட்டவரை இரண்டாவது,மூன்றாவது நான்காவது,,,,என வரிசை கட்டி படுத்திருக்கிற கும்பல் விரட்டத் தொடரும்,அந்த சப்தம் சமயத்தில் தெருவில் படுத்திருக்கிற நாய்களையும் தொற்றி உசுப்பி விட்டு அவைகளையும் பின் தொடரச் செய்து விடுவதுண்டு.துரத்துப்படுபவர் ஆட்டோவிலோ இல்லை காரிலோ போனால் தப்பித்தார்,மாறாக இரு சக்கர வாகனத்திலோ இல்லை சைக்கிளிலோ சென்று விட்டாரானால் தொலைந்தார்.

ஒரு தடவை ஆட்டோவில் சென்றவரையே அந்தப்பாடு படுத்து எடுத்து விட்டதாம்,

அவரால் ஆட்டோவை ஓட்ட முடியாமல் போஸ்ட் ஆபீஸ் தாண்டி இருக்கிற பெட்ரோல் பங்கில் ஆட்டோவை சிறிது நேரம் நிறுத்தி விட்டு பின் எடுத்துச் சென்றிருக்கிறார்,

அந்த நிலை தனக்கு வேண்டாம்,நாய் கடியைப்பற்றி பலபேர் பேச பலவாறாக கேட்டிருக்கிறான்.

அதனால் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என்றாலும் கூட இப்பொழுது வீட் டிற்கு போய்தான் ஆக வேண்டும்.

என்ன செய்ய,,,,,?குருட்டுத்தனமாக வரவழைத்த தைரியத்தின் கைபிடித்துக் கொண்டு கிளம்பி விட்டான்.

இவன் நினைத்தது போலவே போஸ் ஆபீஸ் முக்கு வரவும் நாய்களின் படை இவனை சூழ்ந்து துரத்த் ஆரம்பிக்கிறது,முதலாவதாக இவனைப்பார்த்து குரை க்க ஆரம்பித்ததென்னவோ ஒரு நாயோ இல்லை இரண்டோதான்,பின் அணி சேர்ந்து கொண்டு சாலை முழுவதுமாய் வரிசை கட்டி படுத்திருந்த நாய்கள் கை கோர்த்துக் கொண்டு இல்லையில்லை குரல் கோர்த்துக்கொண்டு துரத்த ஆரம்பித்தன,

வேறு வழியில்லை வண்டியை திருப்பி வேகத்தில் வந்தவன் சொந்தக்காரர் வீட்டில் படுத்திருந்துவிட்டு அதிகாலையின் அரையிருட்டில் எழுந்து வந்தான்.

தார்ச்சாலையில் பயணிப்பதென்பது இவனுக்கு மிகவும் பிடித்தமானதாக/

அதற்கு காரணம் தன்னைப் போலவே இருக்கிற அதன் கருநிறமும் அதன் மீது நடமிடுகிற மனிதர்களும் ,தார் ரோட்டில் ,முள்ளு முள்ளாய் நீட்டிக் கொ ண்டு அழகுகாட்டிச்சிரிப்பதுபோலிருப்பதுவுமானபொடிப்பொடி கற்கள்தான். எனவும் அதுதாண்டிஇப்போதைக்குவேறெதுவும் இல்லை எனச்சொல்லி விடத் தோணு கிறது,

இல்லையென்றால் நீண்டு போகிற வம்புப்பேச்சு கிளை முளை த்து இஷ்ட த்திற்கு திரிந்து போய் கிடக்கும். பின் அதன் இடர்பாடுகளில் சிக்கித்திணறி மூச்சு முட்டி சங்கடப்பட வேண்டியிருக்கும்,

அதிலும் இந்த மதனராமன் இருக்கிறானே,,அடேயப்பா,,,,,நூல் விட ஆரம்பித் தால் நிறுத்துவது சிரமம்,விடுவான் விடுவான் விட்டுக்கொண்டே இருப்பான், ஏய் என்னப்பா சும்மா தார் ரோடு அதோட கருப்பு நிறம் தடிமன் அடர்த்தி நீட்டிக் கிட்டிருக்குற கல்லு அது இதுன்னு கதை சொன்னாப்புல நம்பீருவமா நாங்க, அதெல்லாம் அங்கிட்டு வச்சிக்க தம்பி என்பான் பெருங்குரலெடுத்து,

அவன் சொல் குறித்தோ பேச்சு குறித்தோ இவனிடம் கோபம் இருந்ததில்லை எப்பொழுதும்/

ஆனால் ஏன் இப்படியெல்லாம்பேசுகிறானே எசக்கேடாக என்கிற ஆதங்கமும் வருத்தமும் இருந்ததுண்டு அவன் பேசுகிற சமயங்களில்.

அவனிடம் இது குறித்து கேட்டு விட நினைக்கிற சமயங்களில் அவன் சிக்கு வதில்லை, அல்லது அது சம்பந்தமான பேச்சை ஆரம்பிக்கிற நேரங்களில் தப்பித்து போய் விடுவான் அந்த இடத்தை விட்டு.

ஒரு மழை நாளின் மாலை வேலையாய் சிவன் கோவில் அருகில் இருக்கிற டீக்கடையில் நின்று கொண்டிருந்தபொழுதுவந்துவிட்டான்.

இவன் இருப்பதை கவனித்தானோ இல்லை கவனிக்கவில்லையோ இவனுக் கானால் அந்த ஞாபகமோ இல்லை அது பற்றி கேட்க வேண்டும் என்கிற முனைப்போ கொஞ்சம் கூட இல்லை,

கிட்டத்தட்டமறந்து போன ஒன்றைப் பற்றி ஏன் இந்த நேரத்தில் கேட்க வேண் டும் என்கிற நினைப்பில் டீக்குடித்துக் கொண்டிருந்த போது அவனாகத்தான் ஆரம்பித்தான் பேச்சை/

”டேய் தம்பி ஓங்கிட்ட அப்பிடியெல்லாம் பேசனுமுன்னு விருப்பம் இல்லை எனக்கு,சும்மா ஜாலிக்காக பேசுறதுதான்,நான் உண்மையில அப்பிடிப் பட்ட ஆளும் இல்லை அது ஒனக்கு நல்லாவே தெரியும்.”

”ஓங்கிட்ட பழகுனது கொஞ்ச நாள்தான்னாலும் கூட என்னையப் பத்தி முழுசா தெரிஞ்சி வச்சிருப்பைன்னு நெனைச்சேன்,ஆனா நீயி என்னடான்னா என்
னோட வெளையாட்டுத்தனமான பேச்சையெல்லாம் வெனையா நெனைச்சிரு க்குற,ஏங் நெனைச்சஎதுக்குநெனைச்சைன்னுநான்கேக்கப் போறது இல்லை, அது ஏங் வேலையும் கெடையாது”

“ஏன்னா தனக்குத் தெரிஞ்ச ஒவ்வொரு மனுசனப் பத்தியும் ஒவ்வொரு வித மா நெனைக்கிறதுக்கு ஒவ்வொருத்தருக்கும் உரிமை உண்டு,அத தடுக்கவோ இல்லை, அதப் பத்தி கேக்கவோ யாருக்கும் எந்த உரிமையும் கெடையாதுன் னு நெனைக்கிறவன் நானு,”

“அப்பிடி தடுக்கிறதுனால நெனைக்கிற நெனைப்பு நின்னு போயிறப் போறது கெடையாது.அதுனால ஒரு பிரயோசனமும் கெடையாது. அதுக்குத்தான் ஓங் கிட்ட இத்தன காலமும் எதுவும் பேசாம இருந்தேன்,இல்லை பேச சந்தர்ப்பம் வாய்க்கிறப்ப கூட நானா கழண்டு ஓடிருக்குறேன் ஓங்கிட்ட இருந்து, எதுக்குப் போயிக்கிட்டு வம்படியா பேசிக்கிட்டுன்னு,,,,ஆனா இன்னைக்கி தானா சந்தர் ப்பம் அமைஞ்சிருக்குது, விட்டுறலாமா அதை,”

“இன்னைக்கி ஓங்கிட்டயிருந்து நானோ இல்லை ஏங்கிட்டயிருந்து நீயோ தப்பிச்சி ஓடிற முடியாது, ஏன்னா மழை பேஞ்சிக்கிட்டு இருக்குது வெளியில, வா நீயும் நானுமா பேசுவம்,”

“இன்னொரு டீகூட சொல்லு சாப்புடுவம்,இப்ப என்ன கொறஞ்சி போயிறப் போகுது.நான் பொதுவா பெரும் பாலான நாட்கள்ல ஒரு டீயக்குடிச்சி முடிச்ச கையோட இன்னொரு டீயை யும் சேத்து சாப்புடுற ஆளு,”

”வீட்டுல அப்பத்தான் டீக்குடிச்சி முடிச்சி வந்துருப்பேன்,அப்படி வந்தாக்கூட இங்க கடைக்கு வந்து டீ சொன்ன ஒடனே அப்பிடி ஒரு ஆசையாகிப்போகுது அல்லது தேவையாகிப்போகுதுன்னு நெனச்சி நானா செஞ்சிக்கிறது உண்டு. அதுஅந்த நேரத்தைய தேவையா,இல்ல அந்த நேரத் தோட என்னோட மனோ நிலையான்னு தெரியல, மொத்தத்துல டீக்குடித்து வாழ்வாறே வாழ்வார், மற்றவரெல்லாம் டீயின் ருசி அறியாது பின் செல்வார்ங்குற நெனைப்பும் எனக் குள்ள ஆழப்பதிஞ்சிருக்குறது உண்டு,”

“சரி அது எதுக்கு இப்ப ,நா பொதுவா நீ நென்னைக்கிறது போலவும்,நீயி நெனைச்சி வருத்தப் படுறது போலயும் கெடையாது நானு,சும்மா ஓங்கிட்ட கேலிக்காக ரெண்டு கெட்ட வார்த்தை பேசுவேனே ஒழிசு நான் அந்த மாதிரி தப்பான ஆளு கெடையாது. தெரிஞ்சிக்க,,,,ஆமா”என மதன ராமன் சொல்லும் போது அய்யய்யோ அதெல்லாம் இல்லைண்ணே,நீங்க பேசுனது வருத்தம் இல்லை எனக்கு,நான் அப்பிடி வருத்தப்படுற ஆளும் கெடையாது,.அது ஒங்க ளுக்கும் தெரியும்,பின்ன எதுக்கு இது போல சொல்றேன்னா இப்பிடியே போற யெடம் வர்ற யெடம் போயி ஒக்கார்ற யெடம் பூராவும் கொச்சையா பேசிக் கிட்டே திரிஞ்சிங்கின்னா நாளைக்கி கெட்டுப்போகப்போறது ஒங்க பேருதானே ஒழிய ஏங் பேரு இல்லை தெரிஞ்சிக்கங்க,” என்பான் இவன்.

இவனும் மதனராமனும் பரஸ்பரம் இப்படி பேசிக்கொள்வது புதிது இல்லை தான் என்றாலும் கூட இவர்களது பேச்சின் ஊடாக ஏதோ பெரிதாக நடந்து விடப்போகிறது என்கிற நினைப்புடன் சுற்றி இருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சிப்போகும் அந்தக் கணங்களில்/

மிஞ்சிப் போன ஏமாற்றத்தை கையில் பிடித்துக்கொண்டு அந்த நேரத்தில் ஒன்றும் செய்ய இயலாதவர்களாய் ஆகிப் போவார்கள் அவர்கள். தொடர்ச்சி யான அவர்களது பேச்சின் ஊடாக கடைசியாய் கலைந்து போய் விடுவார்கள் பேச்சின் மிச்சத்துடனும் டீயின் ருசியுடனுமாக/

பொதுவாக இவனுக்கு சிமிண்ட் ரோட்டை விடதார்ரோடுகள் மிகவும் பிடித்து போனதற்கு காரணமே இவனது சொந்தங்களும் அவர்களைச் சேர்ந்தவர்களும் ஒரு காலத்தில் தார் ரோடு போடுகிற வேலையில் இருந்த காரணத்தினால் தான்,

இவன் நாலாவது வகுப்போ ஐந்தாவது வகுப்போ படிக்கும் போது என்கிறதாய் நினைவு,

காலையில் பொழுது விடிந்து விடியாத பொழுதில் வேலைக்குப்போய் விட்ட அம்மாவிடமும் அப்பாவிடமும் பள்ளிக்குச் செல்லும் பொழுது சென்று காசு வாங்கிப் போவான் ஏதாவது வாங்கித்திங்க,என,,,/

அம்மாவும் அப்பாவும் வைது கொண்டும் கரிசனம் கொண்ட பேச்சுடனுமாய் காசை எடுத்து கையில் தருவார்கள்.கண்டத வாங்கித்திங்காதடா என்கிற பேச்சுடனும் அக்கரை சுமந்த மனதுடனுமாய்,,/.

அப்போது மனதில் குடி கொண்ட தார் டின்னும் அதன் அடர்த்தியான வாச மும் தார் காய்ச்சுகிற அடுப்பும் அதன் வெந்தனலும் தார் வாசனை தாங்கி வேலை செய்து கொண்டிருக்கிற மனிதர்களும் அவர்களது சங்கடமான உடல் மொழி யும் வேலை நடக்கிற தளமும் இவன் மனம் பிசைந்ததாய் அமைந்து போன துண்டு பல நாட்களில்,

அதிலும் அவனது அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சோறு கொண்டு போய் கொடு க்கவும்,காசு வாங்கவுமாய் போகிற நாட்களில் பார்க்கிற இது போலான காட் சிகள் இவனை வெகுவாக பாதித்து விடுவதுண்டுதான்,

காலையில் கோழி கூப்பிடும் முன்பாக எழுந்து விடுகிற அம்மாவும் அப்பாவும் பாட்டியிடம் சோறு பொங்கி கொடுத்து விடுமாறு சொல்லி விட்டுப் போய் விடுவார்கள்.

அப்படியாய் போய் விடுகிற நாட்களிலும் இவனது ஊரை ஒட்டிய பகுதிகளில் ரோடு போடுகிற வேலை நடக்கிற நாட்களிலும் இவன்தான் இவனது அம்மா விற்கும் அப்பாவிற்குமாய் சாப்பாடு கொண்டு போவான்.

அப்பா காலில் சாக்கை கட்டிக்கொண்டு அழுக்கு கைலியுடனும் அழுக்குச் சட்டையுடனும் சட்டையிலும் கைலியிலுமாக பொட்டடித்துத் தெரிகிற தார்ப் புள்ளிகளுடன் ரோட்டில் குவிக்கப்பட்டிருக்கிற ஜல்லிகளை பரப்பிக் கொண்டி ருப்பார்,

தலையில் சுருமாடு சுற்றிய புடவையுடனும் காலில் சுற்றப் பட்டிருக்கிற சாக்குடனும் ஜல்லிகளை தட்டில் அள்ளி சுமந்து கொண்டு வருவார்.அப்போது மனம் பதிந்த அம்மா அப்பாவின் நினைவுகள் தாலாட்டுகிற இப்போதும் தார் ரோட்டைப் பார்க்கிற போது மிகவும் பிடித்துப் போகிறது.

அப்படியாய் தினமுமாய் பயணம் செய்து செல்கிற ரோட்டின் வலது ஓரமாய் அமைந்திருந்த கடையில் டீக்குடித்துக்கொண்டிருக்கும் பொழுதுதான் ரோட்டி ன் ஓரமாய் சென்ற போக்கிடம் தெரியாமல் அங்கும் இங்குமாய் திரிந்து கொண்டிருக்கிறது.

2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை நண்பரே

vimalanperali said...

அன்பும் நன்றியும்...!