5 Nov 2017

நகர்வுகளின் நொடிகளில்,,,


போன வழி தூத்துக்கு சாலையாகவும் போய் சென்றடைந்த இடம் காதி வஸ் திராலயமாகவும் இருந்து,

தூத்துக்குடிசாலைஇங்கிருந்து ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கும் மேலிருக்கும்,

கடக்கப்போகிற ஐந்து கிலோமீட்டர்களும் வெறும் காட்டுப்பாதையோ இல்லை வெறும் பிளாட்டான இடமோ இல்லை.

பெரிய பெரிய வீடுகளையும் கடையும் இன்னமும் இன்னமுமான பிற கட்டங் களையும் தன் இருபக்கமுமாய் அடைகொண்டு வைத்திருக்கிற சாலைகளில் பயணிக்க எப்பொழுதும் பிரியம் நிறைந்து இருக்கிறதுதான்.

இங்கிருந்து கலெக்டர் ஆபீஸ் வரையிலும் இங்கிருந்து சிவகாசி ரோடு வரை யிலும் சாத்தூர் ரோடு வரையிலுமாய் செல்கிற பாதையெங்கிலுமாய் இருக் கிறகட்டிடங்கள்புதிதுபுதிதான வண்ணங்கள் சுமந்தும் பளிச் காட்டியும் அழுக்கு சிலவைகளும்அழுக்கு சுமந்து இன்னும் சிலவைகளுடனுமாய் காட்சிப் படுகிற போது மனம் சில்லிட்டும் மகிழ்ந்தும் போகிறதுதான்.

அந்த மகிழ்வில் படக்கென பிடிபட்டுப்போகிற சந்தோஷம் மனமகிழ்ந்து சிறகு முளைக்கப் பண்ணி விடுகிறதுதான்.

தூரங்களெல்லாம் இப்போது தூரங்களாக அல்லாமல் பக்கத்தில் வந்து விட்ட நேரமிது,

தவிர தூரத்தை சுருக்கிட்டு பக்கத்தில் அழைத்து கக்கத்தில்வைத்துக்கொள்ள பிரயணத்தனப்பட்டுக்கொண்டிருக்கிறவர்களில் இவனும் ஒருவனாய்.

செல்கிற வழியெங்கிலுமாய் கண்ணுக்குள் உறுத்துகிற கட்டிடங்களுக்குள்ளா ய் சின்னதாய் அடைகொண்ட டீக்கடையில் நின்று டீக்குடித்துவிட்டும் நண்பர் க ளுடன் மொபலில் பேசி விட்டுமாய் செல்கிற போது தூரமும் அலுப்பும் தெரி வதில்லைதான்.இரு சக்கரவாகனம்தானே,வேகமாக சென்று விடலாம்,

இருசக்கர வாகனம் இவனிடம் இல்லாத காலங்களில் சைக்கிளில்தான் இவனது பயணம்எங்கு போனாலும்/

சைக்கிளை தூக்கி கைக்குள்ளாய் அடக்கி வைத்துக்கொண்டால் நினைத்த நேரத்திற்கு நினைத்த இடத்திற்கு போய் விட்டு வரலாம் என்பது இவனது அரிச்சுவடியாய்இருந்தது.

சைக்கிளோடு சைக்கிளாய் சுற்றி வருவான், சைக்கிளை தூக்கி கக்கத்தில் வைத்துக் கொள்ளாத குறைதான்.

ஊரிலிருந்து ஏழு கிலோ மீட்டர் சைக்கிளில் வருகிற தூரங்களிலும் கூட அலுப்புப்பட்டுத் தெரிந்ததில்லை இவனுக்கு.

பழைய சைக்கிள் மிதிக்க நன்றாக இருக்கும்,அப்பொழுதெல்லாம் இவனது சைக்கிளின் உயர் மருத்துவர் ஆர் ஆர் சைக்கிள் கடைதான்,

அவர்தான் சொல்வார்,”சைக்கிள வாரத்துக்கு ஒருதடவை தொடைக்கணுங்கு றது வாஸ்தவம்தான்.அதுக்காக இப்பிடியா சைக்கிள்ல இருக்குற பெயிண்ட் போற அளவுக்கு தொடச்சி தேங்காய் எண்ணையில முக்கி எடுக்குறது அடுத்த வுங்க கண்ணு கெட்டுப் போற அளவுக்கு பளபளன்னு,,,,”/என்பார்.

அந்தளவுக்கு சைக்கிளை பிரியமாக வைத்திருந்தவன் கல்யாணத்திற்கப்புறம் தான் இரு சக்கர வாகனம் வாங்கினான்,முதலில் பழைய சைக்கிளை வாங்க லாம் என்பதுதான் இவனது நினைப்பு,

பின் வந்து நின்ற பழைய சைக்கிளையும் அதன் ரிப்பேருக்கு செலவழிக்கப் போகிற தொகையையும் ஒத்துப் பார்த்த போது புது சைக்கிளே வாங்கி விட லாம் என்கிற முடிவில் புது சைக்கிளே வாங்கி விட்டான்,

அதன்பின்புது சைக்கிள் கையில்இருக்கிற பிரியத்தில் வழக்கமாக பயணிக்கிற தூரத்தைவிட கொஞ்சம் பிரியம் சுமந்து எக்ஸெட்ராவாக நிறைய தூரம் சுற்றி வந்தான்,

அலுவலகத்திற்கு கிளம்ப வேண்டிய நேரத்திற்கு அரை மணி முன் கிளம்பிப் போய் அலுவலகத்திற்கு நேராக செல்லும் பாதையை விடுத்து சுற்றிச் செல் வான்.

பின் அலுவலகத்திற்கு போன பின்னாயும் அலுவலகம் ஆரம்பிக்க கொஞ்சம் நேரம் இருந்தால் அப்படியே சைக்கிளில் வலம் ஒரு ரவுண்ட் வருவான்.

சரி காலையில்தான் அப்படி என்றால் அலுவலகம் முடிந்த பின்னும் சிறிது நேரம்வலம் வருவான் எப்படியும் ஐந்து அல்லது ஏழு கிலோ மீட்டர்கள் என்பது இவனது கணக்கு.

வேகமாகவும் மூச்சு இறைக்க இறைக்கவுமாயும் சைக்கிளில் சுற்றி வருகிற வேலையை ஒரு யாகம் போலவே செய்வான். கணக்கு வழக்குடனும் நேரம் காலத்துடனும்/அது நல்லஎக்ஸர்சைஸ் என எண்ணி,/

அந்த எண்ணம் முதன் முதலாய் அறிவானந்தம் டாக்டரால் நிறுத்தப்பட்டது. அவர்தான் சொன்னார்,

”சார் சின்னதா ஒரு லூனாவாவது வாங்கிக்கங்க, இப்பிடி யே சைக்கிள் சைக் கிள்ன்னு இருந்துங்கின்னா கால் வழி வரத்தான் செய்யும் எக்ஸர்சைஸ்ங்கு றது நல்ல விஷயம்தான்.,ஆனா அத விட நல்ல விஷயம், நம்ம உடல் நலத் தையும் பாதுகாக்குறதுங்குறது முக்கியம் தெரிஞ்சிக்கங்க” என்றார் கொஞ்சம் கடுமையாக/

”நீங்க பொதுவா எல்லோரையும் போல நாங்க சொல்றத ஏத்துக்கிட்டு அப்பி டியேசெய்யிற ஆளில்லைதான்,உங்களுக்குன்னு தனி யோசனை, தனி ஏற்றுக் கொள்ளல் தனி மன ஒப்புதல் என தனித்தனியா இருக்கும்,அது படி தர்க்கங் கள்ல விழுந்தெந்திரிச்சி அப்புறம்தான் நாங்க தர்ற மருந்தையே சாப்பிடுவீ ங்க, இல்ல நாங்க சொல்றதையே ஏத்துக்கீவீங்க,,” என்றார் முழங்கால் வலி என போய் நின்ற போது/

காதி வஸ்திராலத்திற்குள்ளாய் நுழையும் முன்னாய் வெளியில் வண்டியை நிறுத்தி விட்டு நின்ற போது சக்கரபாணி ஓடி வந்து வாங்க சார்,வாங்க சார் என்றான்,

சக்கரபாணி. மிகவும் பிரியம் சுமந்தவன் ,அவன்அங்குதான்வேலை பார்க்கிறா ன்,பார்க்கிறசமயங்களிலெல்லாம் அவன் பேசுகிற பேச்சும் சொல்லிச் செல்கிற வணக்கமும் காட்டுகிற பிரியமும் ஒரு வாஞ்சை மிகுந்தே காணப்படுவதாய் இருக்கும்,

”என்ன சார் எப்பிடி இருக்கீங்க, நல்லா இருக்கீங்களா,வீட்ல அக்கா புள்ளைங்க எல்லாம் சௌக்கியமா”,,,,,, என்பான்,

அவன் சொல்கிற அக்காவும் பிள்ளைகளும் இவனது மனைவியும் மகன் களும் ஆவார்கள்,இத்தனைக்கும் அவன் இவனது மனைவி மக்களை ஒரு தடவை கூடப் பார்த்ததில்லை.

கேட்டு வைப்பதுதானே இப்படியெல்லாம் என ஒப்புக்கும் அவனது பேச்சு இருக்காது,அவனது பேச்சில் கேள்வியில் ஒரு ஒட்டுதலும் மிதமிஞ்சிப் போன வாஞ்சையும் இருப்பதை எல்லோராலும் உணர முடியும்.

அவன் போட்டிருக்கிற சட்டையும் பேண்டும்எப்பொழுதும்ஒருஅப்பாவித்தனம் சுமந்தும் படோடபமற்றுமாய் காணப்படும்,

ஏன் கண்ணு,,,,,(இவன் அப்பிடித்தான் அவனை கூப்பிடுவதுண்டு)வேலைக்கு வந்துட்ட நல்லதா ரெண்டு பேண்டு சட்டை எடுத்து போட்டுக்கிர வேண்டியது தான எனக்கேட்ட போது அவன் சொல்கிறான்,

“எங்க சார் ஒவ்வொரு மாசமும் சம்பளம் வாங்கும் போதும் நெனைக்கிறது தான்,ஆனா வீட்ல இருக்குற தம்பி தங்கச்சி அம்மாவை நெனைக்கிற போது ஏங் தேவை தள்ளிப் போயிரும் சார்”

ஏங் வீட்ல யாரும் வேலைக்குப் போறதில்லையா, ஓங் ஒருத்தன் சம்பாத்திய ந்தானா எனக் கேட்கிற சமயங்களில் இல்ல சார்,அப்பா கூலி வேலை பாக்கு றாரு, அம்மா ஒடம்புக்கு முடியாதவுங்க,தம்பியும் தங்கச்சியும் படிக்கிறாங்க, தம்பி நாலாவது வகுப்பு,தங்கச்சி அஞ்சாவது வகுப்பு .தம்பிக்கு மூத்தவ,,,,எப்ப வேணாலும்குத்தவச்சிறுவா,அவளுக்குன்னுஅப்பாசம்பாத்தியத்துலகொஞ்சம்  ஒதுக்கீருவாரு குடும்பத் தேவைக்குப் போக,,,,,/

அது போக அம்மாவுக்கு ஆஸ்பத்திரி செலவு தம்பி தங்கச்சிக்கு படிப்புன்னு ஆகுற செலவுகள ஈடு செய்யிறது ஏங் சம்பாதியமும், அம்மா அந்த முடியாத ஒடம்போட போயிட்டு வர்ற காட்டு வேலை சம்பாத்தியமும்தான்.

நல்லாகெதியானஒடம்போடஇருக்குறவுங்களுக்கேவேலை கெடக்காத இந்தக் காலத்துல இவுங்கள வேலைக்கு கூப்புடுறது அபூர்வம்தான்,அதுவும் காட்டு வேலைக்கு கூப்புடுறதுங்குறது அபூர்வத்துலயும் அபூர்வம்/

இதையும்மீறிஆள்க பழக்கத்துனால வாரத்துக்கு ஒரு நா ரெண்டு நாள் கெடை க்கிற வேலையவும் விடமாட்டாங்க,கேட்டா அதுல வர்ற அஞ்சி பத்து வருமானத்த ஏங் விடணும்ன்னுவாங்க, சரின்னு நானும் ஒண்ணும் சொல்ற தில்ல,ஒரு நா எல்லாரும் தூங்கிப்போன பின்னாடி ராவுல சாப்பாடு எடுத்து வைக்கும் போது கேட்டாங்க,

“ஏந்தம்பி நீ வேலை பாக்குற யெடத்துல எனக்கும் ஏதாவது ஒரு வேலை இருந்த விசாரிச்சி சொல்லுன்னாங்க,எனக்கு கண்ணீரே வந்துருச்சி, கண்ணீ ரோட என்னையப்பாத்த அம்மாவும் கண்ணுல தண்ணி வழியவிடவும் எனக்கு ரொம்பசங்கடமா போச்சி,என்ன செய்ய பின்ன,அப்பிடியே ஒண்ணும் சொல்லா தவனா தலைய குனிஞ்சிக்கிட்டே சாப்பிட்டேன்,

”என்ன செய்ய சொல்றீங்க சார் வறுமைக்கு வாக்கப்பட்ட குடும்பத்துல இதெ ல்லாம் அன்றாட நிகழ்வுகளாகிப்போகுதுதான் சார்”,என்றான் சிரித்துக் கொண் டே./

இது போலான சிரிப்பை அனுதினமும் அணிகொண்ட அவனது பேச்சு ஆடை களின் ஏழ்மையை மூழ்கடித்து மேழெழுந்து வரும் ஒன்றாகவும் ஒட்டுதலு டனுமாய்/

இவன்கூட பல சமயங்களில் நினைப்பதுண்டு,அவனது இது போலான செயல் களுக்கு எப்படி,என்ன கைமாறு செய்ய முடியும் என,,,பதிலுக்கு இது போலான அன்பை அவன் மீது செலுத்தி விட முடியாது,

அது இவனுக்குத் தெரிவதில் லை அல்லது வருவதில்லை.இவனுக்கு மட்டு மில்லை இவனைப் போல் இருக்கிற பலருக்கும் வருவதில்லை,

வருமானம்,பட்ஜெட்,மாதச்செலவு,இதர இதரவான தணைக்கடன்கள் அடைப் பது, சீட்டுப்பணம்,வங்கி பேலன்ஸ் போன்ற இதர இதரவற்றில் மட்டுமே இருக்கிற கவனமும் அக்கறையும் இது போன்றவற்றில் கவனம் கொள்ளச் செய்ய மறு த்து விடுகிறது அல்லது மறத்துப் போகச் செய்து விடுகிறது,

”கூறு கெட்ட மாடு ஏழு கட்டு புல்லுத்தின்ன கதையா,,,, ”என்பார்கள் இவனது ஊரில்,

ஊரில் வளர்கிற வரையும் வாழ்கிற வரையும் இருப்புக் கொண்ட வரையுமாய் நன்றாகவும் புடம் போடப்பட்டவனாகவுமாய் இருந்தான்.

பணி வேண்டியும் அது கிடைத்ததுமாய் நகரத்தில் இவன் ஊனுதல் ஆரம் பித்த நாளிலிருந்து இவன் இது போலாய் கரடு தட்டுப் போனதாய் நண்பன் அடிக்கடி சொல்வதுண்டு,

பதிலுக்குஇவன்”நான்மட்டுமா என்னையப்போல இருக்குற பலபேரும் இப்பிடி த் தான் ஆகிப்போனதா அறியிறேன், நல்ல சாப்பாடா நல்லா சாப்பிட்டு பெரிசா ஏப்பம் விட்டு நல்லதா உடுத்தி கண்ணுக்கு லட்சணமா வீடு கட்டி டூ வீலர் காருன்னு இன்னும் இன்னுமான இதர இதர ஆடம்பரங்களிலும் படோடோ பங்கலுமா லயிச்சிப்போற மனசு பக்கத்துல இருக்குற அப்பாவிகளப் பத்தி அறியிறதில்ல. இல்ல வீண் பிடிவாதம் காட்டி அறிஞ்சிக்கிற விரும்பு றதில்ல” என சக்கரபாணியை பார்க்கிற ஒவ்வொரு கணமும் இவனுக்குள்ளாய் எழுந்த முங்குற நினைவுகள் யாரை கை கட்டி இழுத்து வர உதவும் அந்தக் கணங் களில் எனத் தெரிவதில்லை.

அப்படியே தெரிந்தாலும் கூட அவனை சுட்டிக்காட்டி நீ வா அவன் உயரத்திற்கு என சொல்லிவிட முடியாது இல்லை சொல்லி விடப் போவதும் இல் லை இவன்.

முதலில் அவனுடன் பழகுகிற தகுதியைப் பெற வேண்டும் அல்லது அவனது உயரத்திற்கு இவனை வளர்துக்கொள்ளமுயற்சி செய்ய வேண்டும் , பின்தான் எல்லாமும்.

பின் என்ன சார்,இவனுடன் மட்டுமல்ல ,பார்க்கும் எல்லோரிடமும் எல்லா சூழ்நிலையிலும் எப்படி இவ்வளவு ஒட்டுதலாகவும் சமாளிப்பாகவும் சகித்து மாய் பேசியும் உறவாடியும் மனம் விடவுமாய் முடிகிறது அந்த சக்கரபாணி யால்,,,/என்கிற கேள்விக்குறி தாங்கிய ஆச்சரியம் இருக்கும் இவனிடம்.

அவன் வேலை பார்க்கிற கடையின் முதலாளி சொல்வார்,”டேய் ஒன்னையப் போல நாலு பேரு இருந்தா போதும்டா நான் ஏங் கடையே வாரத்த எங்கயோ கொண்டு போயிருவேண்டா” என,,,/

அதற்கு அவன் தலையை குனிந்து சிரித்துக்கொண்டே சொல்வான் மென் மை யாக/ ”இல்ல சார் நான் எப்பவும் போலதான் இருக்குறேன் சார்,இதுதான் ஏங் இயல்பு,எங்க ஊர்ல இப்பிடித்தான் இருப்பேன் சார்,ஒங்களுக்குத்தான் இது என்னமோ பெரிய ஆச்சரியமா தெரியுது”,

”நான் எப்பவும் போல இப்பிடியே இருந்துட்டுப் போறேன் சார், என்னோட இயல்போட,நான் மட்டுமில்ல என்னைய மாதிரி வெள்ளந்தியான பையலுக பொண்ணுங்க இதுபோலான கடைகள்லயும், வியாபார நிறுவனங்கள்லயும் கௌவர்மெண்ட் ஆபீசுலயும் வேலையில இருக்காங்க,அவுங்களோட இந்த மனசு விரிஞ்ச தன்மையையும் வெள்ளந்தித்தனத்தையும் பலபேரு இளிச்ச வாய்த்தனமாப் புறிச்சிக்கிறவும் எடுத்துக்கிறவும் செய்யிறாங்களே தவிர்த்து நல்லவிதமா புரிஞ்சிக்கிறவுங்க ரொம்பக்கொஞ்சம் பேருதான்,அந்தக்கொ றை ச்சலுல நீங்களும் ஒருத்தரு சார்” என்பான் இவனிடம்பேசுகிற சமயங்களில் எப்பொழுதாவது,,,,,/

தூத்துக்குடி சாலையை எட்டிப்பிடித்து அடைவதென்றாலோ அதன் மேனி மீது ஊர்வதென்றாலோ மேம்பாலத்தின் மீதுதான் வர வேண்டும்

அப்படித்தான் வந்தார் சக்கரபாணியின் அப்பா,,,/

மேம்பாலம் வழி கொஞ்சம் சுத்து என்றாலும் வேகமாக போய்விட்டு வந்து விடத் தோதாய் இருக்கிறது,இல்லையென்றால் காட்டுப்பாதை வழியாக குறு க்கு வழியில் வரவேண்டும்.டூ வீலர் வருவதற்கு மட்டுமே கத்தரித்து விட்டது போல அளவாக இருக்கும் வால் போல் நீண்டு,

அதன் வழியாகதான் அன்றாடம் டவுனுக்கு வந்து போகிறார் சக்கரபாணியின் அப்பா .

அன்றும் பக்கத்து வீட்டு பெண்ணின் கல்யாண வேலையாக டவுனுக்கு வந்த வர் சக்கர பாணியை பார்த்து விட்டும் வேலை முடிந்து திரும்பிப் போய்க் கொண்டிருக்கும் போது பாலத்தின் இறக்கத்தில் இறங்கும் போது பக்கவாட் டாக வந்த லாரிக்காரன் இவருக்கு ஹாரன் கொடுத்து விட்டு ஒதுங்கியி ருக்கிறான் அதே வேகத்திலும் அவர் வண்டியை ஓரம் கட்டிவிடுவார் என்கிற நம்பிக் கை யிலுமாய்,

படக்கென வந்த ஹாரன் சப்தத்தை எதிர்பார்க்காதவர் வண்டியை சைடில் ஒதுக்க ஹேண்டில் பாரை திருப்பியிருக்கிறார்,இடது பக்க ஹேண்டில் பாரில் மாட்டியிருந்த சில்வர் வாளி அந்தத் திருப்புதலுக்கு இடைஞ்சலாய் இருக்க சக்கரபாணியின் அப்பா டூ வீலரை ஓரம் கட்டுவார் என்கிற நம்பிக்கையில் லாரியை சைடாக ஓட்டிய டிரைவர் வண்டி மீது இடித்து விட்டார்,

இடித்த வேகத்தில் வண்டியை பிரேக்கடித்து நிறுத்திவிட்டும் கூட பின்னால் வந்த கனரக லாரி ஒன்று வேகத்தைகட்டுப்படுத்தியும் முடியாமல் முன்னால் நின்ற லாரியின் மேல் இடிக்க அது முன்னகர்ந்து டூவீலரிலிருந்து நிலை குலைந்து விழுந்து கிடந்தவரின் மீது ஏறி விடுகிறது.

பாவம் உடல் நசுங்கி இறந்து போகிறார் அந்த இடத்திலேயே/

அவர் இறந்த பிறகு இன்று சக்கரபாணியை பார்த்து பேசிவிட்டும் காதி வஸ்த ராலத்திற்குள்ளாய் போய்விட்டுமாய் வருகிறான்.

4 comments:

Anonymous said...

arumai

Anonymous said...

நன்றாக உள்ளது.!

vimalanperali said...

வணக்கம் அனானிமெஸ் அவர்களே!நன்றி வருகைக்கும் கருத்துரைக்குமாக!

vimalanperali said...

வணக்கம் அனானிமெஸ் அவர்களே, நன்றி வருகைக்கும் கருத்துரைக்குமாக!