12 Nov 2017

சூழ்கொண்டவைகளின் மிச்சமாய்,,,,/

வீடும் வீடு சுமந்த நினைவுகளுமாய் சூழ்க்கொண்ட ஒரு விடுமுறை நாளின் மாலை நேரமாய் பஜாருக்குக்கிளம்பும் போது மனைவியிடம் சொல்லிக் கொ ண்டு கிளம்புகிறான்.

அப்பொழுதான் படுத்து எழுந்த மதிய நேர தூக்கத்தின் கலிப்பும் அலுப்பும் அழுக்கும் போக குளித்தும் பல் துளக்கி விட்டுமாய்த்தான் கிளம்புகிறான்.

அப்படியானதொரு பழக்கம் இவனில் எப்படி எப்பொழுது வந்து ஒட்டிக் கொ ண்டது எனத் தெரியவில்லை.விடுமுறை தினங்களில் கொஞ்சம் தாமதமாக எழுந்து வீட்டிலிருக்கிற வேலைகளில் கொஞ்சம் கை கொடுத்துவிட்டும் குளி த்துவிட்டும்வந்து அப்படியே மதிய சாப்பாடு சாப்பிட்டு விட்டு தூங்கிப்போகிற நாட்களில் எழுந்ததும் திரும்ப ஒரு தடவையாய் குளித்துவிட்டுதான் மற்ற மற்றதான வேலைகளைப் பார்ப்பான்.

மனைவி கூட சப்தம் போடுவாள்,”ஒரு மனுசன் ஒரு நாளைக்கு எத்தனை தடவதான் குளிக்கிறதுன்னு கணக்கு இல்லையா சாமி,என்னவோ கொடுமை தான் போங்க ஒங்களோட என்ன அப்பிடியா வந்து ஒடம்புல அழுக்கு வந்து ஒட்டிக்கிருது என,,,/

இப்படித்தான் வீட்டில் கரண்ட் இல்லாத ஒரு நாளில் காலை குளித்து முடித் து விட்டு பஜாருக்குப்போய் விட்டு வந்து திரும்ப ஒரு தடவையாய் குளித்து முடித்து விட்டு மதியம் சாப்பிட்டு விட்டுப் படுத்தவன் எழுந்ததும் பாத்ரூம் போய் விட்டான் குளிப்பதற்கு,

அன்றும் அது போல்தான் சபதம் போட்டாள் மனைவி,”என்ன கொஞ்சமாச்சும் நெனைச்சி பாக்க வேணாமா இருக்குற நெலைமைய,இப்பிடியா செய்வீங்க, இந்தகரண்டு இல்லாத நேரத்துல,இருக்கிற கொஞ்ச நஞ்ச தண்ணியவும் காலி பண்ணீட்டு போயிட்டீங்கன்னா வீட்டுப் பொழக்கத்துக்கு தண்ணி வேணாமா. கரண்டு இல்லாம மோட்டரு வேற போட முடியல,

”இனி நான் தெரு முக்குல இருக்குற அடிகொழாயில போயி தண்ணி அடிச்சி எடுத்துக்கிட்டுவரணும்,மாங்கு,மாங்குன்னு வீட்டுல இருக்குற எல்லா வேலை யவும்பாத்துட்டு இப்பிடி தண்ணிப்பானைய தூக்கீட்டு அலைய வேண்டி யதா வேற இருக்கு,நீங்களாவது புள்ளைங்களாவது வருவீங்களா தண்ணி எடுக்க ன்னு பாத்தா அதுவும் கெடையாது,புள்ளைங்க படிக்கப்போறேன்னு ஒக்காந் துருவாங்க,நீங்க என்னமோ வேற்றுகிரகத்துல இருந்து வந்த மனுசன் மாதிரி வீட்டு வேலைக எதுலயும் பட்டுக்கிறமா இருந்துக்கிறுவீங்க,நான் ஒருத்திதா ன் கிறுக்கச்சி மாதிரியும் நேந்துவிட்டது போலவும் வேலைகளச்செய்யணும்,

“இந்தமாதிரிகரண்டு இல்லாம வெளியில தண்ணி எடுக்குற நாட்கள்லயாவது வந்து கூடமாட ஒத்தாசைக்கு நிக்கக்கூடாதா,என்னமோ எங்க தலையிலதான் எழுதி ஒட்டீருக்குற மாதிரி எந்த வேலையவும் தொடாம கையக்கட்டிக்கிட்டு உக்காந்துட்டு கையக்கட்டிக்கிட்டு எந்திரிச்சி போயிட்டா எப்பிடி,,,,?

“இந்த லட்சணத்துல ஒங்களையோ இல்லை ஒங்க புள்ளைங்களையோ ஒரு வேலை சொல்றதுங்குள்ள ஒங்க அம்மாவுக்குள்ள கோவம் பொத்துக்கிட்டு ள்ள வந்துருது கோவம்.,,,,என கொஞ்சம் பொய் கோபம் காட்டி பேசி முடிப்பாள்

அவளதுபேச்சில்உரைக்கிற வாஸ்தவமும் சூடும் அந்த வீட்டில் எப்பொழுதும் நிலை கொண்டதாகவே,,/

பொதுவாகவே அப்படியொரு பழக்கமாகிப்போனது, முன் பெல்லாம் இப்படியி ல்லை, நாலாவது தெருவிலிருக்கிற மாந்தோப்பு அக்கா சொன்ன பிறகுதான் இப்படியெல்லாமும்,கிளம்பும் போது சொல்வது ,நீ வச்ச சோறு கொழம்பு நல்லாயிருக்கு,,,கூட்டுபிரமாதம்,,,,போன்றவார்த்தைகோர்வைகள்இவன்மனதில் படம் விரித்து வார்ப்பு கொண்டும் உருக்கொண்டுமாய் ஆகித் தெரிகிறது.

அது போலான உருக்கொள்ளல்கள் சமயா சமயங்களில் சரியாயும் சரியற்று மாய் ஆகிப்போகிற போது ஏற்படுகிற சங்கடங்கள் இவனை வாதிக்காமால் இருந்ததில்லை,

அதையெல்லாம் இருகிய முகத்திற்குள்ளாக மறைத்து வைத்து காத்து வந்து ள்ளான்.

சின்ன மகள்தான் சொல்வாள்,”என்னப்பாதீடீர்ன்னு என்னைக்கும் இல்லாத திரு நாளா திடீர்ன்னு மனம் திருந்திய மைந்தன் மாதிரி ஆகிப் போயிட்டீங்க, எங்க யாவது வெளியில போனா அம்மா கிட்ட போயிட்டு வர்றேன்னு சொல் லீட்டுப் போறீங்க/ அம்மா சமையல பாராட்டுறீங்க,கடையில போயி காய்கறி வாங்கீட்டு வர்றீங்க, பாஜாருக்குப் போறப்ப அம்மாவ டூவிலர்ல வச்சி கூட்டீ ட்டுப்போறீங்க,அம்மா கூட கோயிலுக்கெல்லாம் போறீங்க,சாமி கும்புட்டு க்கிறீங்க, நெத்தியில திருநீறு பூசிக்கிறீங்க,குங்குமம் சந்தனமெல்லாம் வச்சிக் கிறீங்க, அடுத்தடுத்ததா என்ன செய்யிறதா உதேசம் மிஸ்டர் அப்பா அவர்க ளே எனச்சிரிப்பாள் சத்தமெடுத்து.

மகள்சொல்லிலும்வாஸ்தவம்இல்லாமல்இல்லை.கோயிலுக்குப்போக வேண் டும் என அவள் சொல்கிற சமயங்களில் ”பஸ்ஸீல போயிட்டு வந்துரு,,,”என் பான்,அதையும் மீறி கூட்டிப்போகிற என்றாவது ஒரு நாளன்றின் போது அவளை கோவில் வாசலில் இறக்கிவிட்டு விட்டு இவன் கொஞ்சம் தள்ளி இருக்கிற கடையில் டீ சாப்பிட்டுக்கொண்டிருப்பான்.

அவள் சாமி கும்பிட்டு வரும் வரை கடையில் உட்கார்ந்திருந்து விட்டு பின் கூட்டிப் போவான்,

வழக்கமாக போகிற கடை என்பதால் கடைக்காரரும் கேட்டு விடுவார்,

“என்ன சார்,கோயிலுக்கு வந்தீங்களாக்கும்,ஏங் சார் நீங்களும் சேந்து போக வேண்டியதுதான,அது என்ன அவுங்கள மட்டும் விட்டுட்டு இங்க வந்து உக்கா ந்துக்கிறது என்கிற கடைக்காரரின் பேச்சிற்கு சிரிப்பான்,இல்லையென்றால் தெய்வத்தக் கும்புடப் போன தெய்வத்த நான் கும்புட்டுக்குறேன் என்பான்.

சாரு இப்பிடியே பேசி சமாளிக்கப்பாக்குறாருடா,விடுவோம் எனச்சிரிப்பார்கள்.

அவள் சாமி கும்பிட்டு முடிந்ததும் செல்லில் சொல்லுவாள்.போய் கூட்டிக் கொண்டு போவான்,

இதில் சிறிதாய் நடந்த மாற்றமாய் போன மாதம் கடைசி சனிக்கிழமையன்று அவளுடன் சேர்ந்தே கோயிலுக்கு சென்று வந்தான்,

வருடங்கள் பல கடந்து அன்றுதான் நீளமாக நின்ற வரிசையில் நின்று சாமி கும்பிட்டு விட்டு பிரசாதமும் வாங்கி விட்டு வீடு வந்து சேர்ந்தான்,

வாங்கிய பிரசாதத்தை இவனும் மனைவியுமாக சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது இவனைப்போலபிரசாதம் வாங்கி சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்களி லும்,நீண்டவரிசையில்நின்றுகொண்டிருந்தவர்களிலும்தெரிந்தவர்கள்நிறையப் பேர் தென் பட்டார்கள்.

இனி தெரிந்தவர்களையும் சொந்தக்காரர்களையும் பார்க்க வேண்டுமென்றால் கோயிலுக்கு வந்து விடலாம் போலிருக்கிறது.

”ஏய் போடி அதிகப் பிரங்கி புடிச்சவளே,என்னமோ மேடையில பிரங்கம் பண் ணுன மாதிரியில்ல பண்ணிக்கிட்டு இருக்கா,என இவனது மனைவி மகள் பேசுகிற சமயங்களில் சப்தமிடுவாள்.

அது போலான சமயங்களில் இவனுக்கு கொஞ்சம் பெருமையாகக்கூட இருக் கும், ஆமாம் இவனுக்குக்காகப் பேச அப்பிராணியாய் ஒரு ஜீவன் இருக்கிறது என்பதை காணும் பொழுதும் பார்க்கிற சமயங்களிலுமாய்,

ஆனால் மனதினுள்ளாய் மெலிதான ஒருசங்கடம் இருந்ததுண்டுதான் அவள் அப்படியாய் பேசுகிற சமயங்களில்,,,,/

அவன்சொல்வான் ”சரிவிடுஇப்பஎன்னபேசட்டும்பேசுற அவளஏங்தடுக்குற”,,, என அவளை தூக்கிக் தோளில் வைத்துக் கொள்வான்.

“பேசட்டும்,பேசட்டும்,,,,இப்பப் பேசாமா எப்பப் பேசப் போறோ சொல்லு,எனக்கு ஒரு தீராத ஆசை ,அது தீர்ற ஆசை யா இருக்கலாம் இல்ல தீராத ஆசையாக் கூட இருக்கலாம்ன்னு வையேன்/ இப்பிடி வீட்ல பேசுற இவ பள்ளிக் கூடத் துல பொது வெளியில மேடையில பேசணும் ,நம்ம ரெண்டு பேரும் அதை கேட்டு கண்ணீர் முட்டவும் மனசு நெறஞ்சி போயிமா நின்னு பாக்கணும்.அந்த நாளு நம்ம வீட்டுல வரணும்ன்னு நெனைக்கிறேன்,வருமா வராம போகுமா ன்னுதெரியல, இப்போதைக்கு வருமுன்னு நம்புவோம்.அதுவரைக்கும் ஓங் சொல் படி அவ ஒரு பிரசங்கியாவே இருந்துட்டு போகட்டும் விடு இப்போதை க்கு” எனவும் என்ன நம்ம ஊக்குவுகிறதுலயும் நடத்துறதுலயும் தான் இருக்கு அவ வளர்ச்சி” என முடிப்பான்,

“அதெல்லாம்ஒண்ணும்வேணாம்பிரங்கியாவோ,வேறஎதுவாவோஆக வேணாம், நல்லாபடிச்சி நல்ல மார்க் எடுத்து முன்னுக்கு வந்தாபோதும்,படிச்ச படிப்புக்கு தெய்வாதீனமா எங்கிட்டாவது ஒரு வேலை கெடச்சின்னா நல்லது, இல்லை ன்னாக்கூட பெரிசா ஒண்ணும் இல்ல,கூடுதலா நாலு பவுனப்போட்டு கல்யாணம் கட்டிக் குடுத்துட்டுட்டம்முன்னா நம்ம கடமை முடிஞ்சிச்சி.

”இவளுக்கு அடுத்து மூத்தவந்தான,ஆம்பளப்பையதான அவனப் பத்தி பெருசா கவலைப்பட தேவையில்லை.அவன் கைய ஊனி கரணம் பாஞ்சிக்கிருவான். என சொல்லிமுடிக்கிற நாட்களிலும் அது அல்லாத நாட்களிலுமாய் அவளிடம் சொல்லிவிட்டுப்போவதுதான் இவனது வழக்கமாகிப் போகிறது.

அப்படியான நாட்களில் மாந்தோப்பு அக்கா சொன்னது நினைவில் வந்து போகும்.

“பின்னஎன்னடா மத்தமத்த வேலைகளுக்கெல்லாம் அவ தயவும் தொணை யும் வேணும் ஒனக்கு.,எல்லாத்துக்கும் தயவு செய்து நிப்பா வீட்டுல,ஒனக்கு பொண்டாட்டியா ,ஓங் புள்ளைகளுக்கு அம்மாவா,அவ பொறந்த வீட்டுல பொண்ணா,சொந்தக்காரங்களுக்குமகளா,மதினியா,அக்காவா,தங்கச்சியாஇப்பிடி எல்லாமுமா,,,,இருக்குறவள சொந்த யெடத்துல இருந்து புடுங்கி வேற யெடத் துல நட்ட நாத்தா ஓங்கையில குடுத்து ஒனக்கு பொண்டாட்டியாவும்,ஓங் புள்ளைகளுக்கு தாயாவும் ஆகி நிக்குறா இல்ல,அவளகொஞ்சமாச்சும் மனுசி மாதிரி நடத்த முயற்சி பண்ணு,என்னமோ வீட்டுல இருக்குற பீரோ, கட்டிலு, மிக்ஸி கிரைண்டரு மாதிரி,,,,ஒரு பொருளா வச்சிக்கிட்டா எப்பிடி சொல்லு,

“ஏதோ ஒரு ஆத்திர அவசரத்துல அவள கவனிக்க முடியமையோ இல்ல மறந்து போறதோ இயல்புதான்,அதுக்காக எந்நேரமும் அவள கவனிக்க முடி யாம நான் பிஸியாவே இருக்கேன்னு சொல்றதும் அப்பிடி காட்டிக்கிறதும் கடைஞ்செடுத்த அயோக்கியத்தனம் பாத்துக்க,

“ஒனக்கே ஒனக்கானவதானப்பா அவ,ஒன்னைய நம்பித்தானப்பா வந்துருக்கா, அவ ஓன் ஒடம்புலயும் உருருலயும் பாதிடா,ஒன்னைய விட்டா அவளுக்கு பெரிசா வேற யாருடா,பொறந்த வீடும் பெத்த புள்ளைங்களும் இருந்தாலும் கூட அவளுக்குன்னு சாய்ஞ்சிக்கிற இருக்குறது ஓங் தோள்தானடா அத மொதல்ல சரியா புரிஞ்சிக்கிறனும்,நீயி,

”ஒங்களுக்குள்ள எப்பிடின்னு எனக்கு தெரியாது.ஆனா ஒரு நா தற்செயலா என்னைய பாத்தப்ப பேசிக்கிட்டு இருந்தோம் கொஞ்ச நேரம்,அப்ப பேச்சுல இருந்து புரிஞ்சிக்க முடிஞ்சது இதுதான்.ஒரு வேளை நான் தப்பா புரிஞ்சிக் கிட்டேனோ என்னவோ தெரியல,சொல்லணும்ன்னு தோணுச்சி சொல்லீ ட் டேன்,அக்காவ தப்பா நெனைக்காத,மனசுல பட்டத சொல்லைன்னா எனக்கு தூக்கம் வராது .பாப்போம், அடுத்தடுத்த நாட்கள்ல ஓங் நடவடிக்கைய”எனச் சொன்னவளின் பேச்சை ஏற்று இப்பொழுதெல்லாம் எங்கு போனாலும் சொல் லிக் கொண்டுதான் செல்கிறான்.

திருமணமாகும் முன் அம்மாவிடம் அல்லது அக்காவிடம் இல்லையானால் அண்ணன் தம்பி யாரிடமாவது சொல்லிக்கொண்டுதான் கிளம்புவான்,அது இப்பொழுது வரை அது நீடிக்கிறதுதான்.

என்னஅம்மாவிடம் சொல்லிக் கொண்டு போகும் போது பாத்துப்போப்பா என்கி ற வார்த்தை இலவச இணைப்பாகக் கிடைக்கும், மற்றவர்களிடம் சொல்லிச் செல்கிற போது அது கிடைப்பதில்லை,

கிடைக்கா விட்டால் கூட பரவாயில்லை,மிதமிஞ்சிய அல்லது கொஞ்சமே யான கிண்டல் சுமந்தா வார்த்தை ஒன்று ஒட்டிக் கொண்டு வரும்.அதிலும் அக்கா செய்கிற குசும்பிற்கு அளவேயில்லை.

”என்னடா மதுரை ரோட்டுப் பக்கமா பாத்து போ ,நீயி போற சைக்கிளையும் ஒன்னையும் அவ அப்பன்காரன் பிரிச்சி காயலான் கடையில போட்டுறாம என்பாள்.

இது மூத்த அக்காள் என்றால் இளைய அக்கா பார்த்து மௌனம் சுமந்த வார்த்தைகளால் கண்ணடிப்பாள்.

பொதுவாக இருவரும் ஒன்று சேரமாட்டரகளே,இளைய அக்கா வட துருவம் என்றால் மூத்த அக்கா தென் துருவம்,இதில் எப்படி இருவர் கருத்தும்,,,,,?பேசி வைத்துக்கொண்டார்களோ,,?

இதை எல்லாம் பார்க்கிற அண்ணன் ”நீங்க என்ன அவன ரொம்பத்தான கிண் டல் பண்ணுறீங்க, என்ன அவனெல்லாம் காதல் பண்ணக்கூடாதா,,,?நாங்க என்ன விதிவில்லக்குலயா இருக்கோம். இதெல்லாம் ஆம்பளப்பச்சங்க சுதந்தி ரம், ஆமா ,நீங்களெல்லாம் இதுல ரொம்ப தலையிடக்கூடாது” என்பான்.

பின் நாட்களில் இவனுக்கு கல்யாணம் பேசிய போது இரண்டு அக்காக்களும் தான் அந்தப் பெண்னை பேசி முடித்து இவனுக்கு முடித்து வைத்தார்கள். அவர்கள் பேசி திருமணம் முடித்து வைக்கிற வரை இவனும் இவனது சைக் கிளும் பத்திரமாகவே இருந்தார்கள்.

அந்த சைக்கிளைத்தான் இப்பொழுது எக்ஸர் சைஸ் பண்ண ஓட்டிக் கொள்கி றான். பின்னே சைக்கிள் ஓட்டுவது இப்பொழுதெல்லாம் எக்ஸர்சைஸ் என்கிற அளவிற்கு சுருங்கிப் போனது.

திருமணத்திற்குமுன்பு இங்கிருந்து சாத்தூர வரை சைக்கிளில் பணிக்கு போய் திரும்பியிருக்கிறான்,ஆனால் இப்பொழுது பத்தடி தூரம் சைக்கிள் மிதிப்பதற்கு யோசனையாய் இருக்கிறது,.

”போடாபோடாபோக்கத்த பையலே என்பார் நண்பரும் சொந்தமுமான ஒருவர், சைக்கிள் மிதிக்கிறதுன்னா மிதிச்சி போ நீ வாட்டுக்கு,ஒன்னைய யாரும் கையப் புடிச்சிக்கிட்டா இருக்காங்க,இல்ல கால கட்டிப் போட்டுட்டாங்களா ,,,, போக வேண்டியதுதான நீ வாட்டுக்கு ,அதான் வீட்டுல ஒண்ணுக்கு ரெண்டு சைக்கிள் இருக்குதுல்ல, நானே இந்தவயசுல சைக்கிள் மிதிக்கிறேன் ஒனக்கு என்னப்பா, கொள்ளையா,”என்பார்,

அவர்சொன்ன படி சைக்கிள் மிதிக்கலாம் என முடிவு செய்துள்ளான் இப்பொ ழுது/

என்ன முன் தினம் இரவு தூங்கப்போகிற நேரமும் மறு நாள் காலை எழுந்தி ருக்கிற நேரமும் தாமதாய் ஆகிப் போகிறது.அதுவே சைக்கிளின் ஆர்வத்தை அமல்ப் படுத்த முடியாமல் போகிறது,

இல்லையென்றால் இது போலான நாட்களில் சைக்கிளில் பஜார் போய் விட்டு வரலாம். என்றெல்லாம் நினைப்பவன் மனைவியிடம் சொல்லிவிட்டு போக முடியாத நாட்களில் பையன்களிடம் சொல்லி விட்டுப் போவான்.

வீடும் வீடு சுமந்த நினைவுகளுமாய் சூழ்க்கொண்ட ஒரு விடுமுறை நாளின் மாலை நேரமாய் பஜாருக்குக்கிளம்புகிறான் மனைவியிடம் சொல்லிக் கொ ண்டு,,,/

6 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
தம+1

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக../

'பரிவை' சே.குமார் said...

அருமையான கதை அண்ணா...
இப்படிக் கதை சொல்ல ஒரு சிலரால்தான் முடிகிறது... அதில் தாங்களும் ஒருவர்... அருமை.

vimalanperali said...

வணக்கம் பரிவை சேகுமார் அண்ணா,
நன்றி வருகைக்கும் கருத்துரைக்குமாக,,/

வலிப்போக்கன் said...

கதை நண்பரின் அனுபவமாக தெரிகிறது ...அருமை...

vimalanperali said...

வணக்கம் வலிப்போக்கன் சார். நன்றி வருகைக்கும் கருத்துரைக்குமாக!