ஓடி
விளையாடிய
தரையின்
வெளிகள்
புல்பூத்தும்
அது
கட்டிடம்
விளைந்துமாய்,,,/
*********
விளைந்து
நிற்கிற
கட்டிடங்களின்
வீர்யங்கள்
விளை
நிலங்களில்
காயடித்து
காட்சிப்படுகிறதாய்,,,/
*********
காட்சிப்படுகிற
காயப்பட்டவைகள்
விளை
நிலங்களை
தின்று
பெருத்தவையாகவே,,,/
*********
தின்று
பெருத்தவைகள்
நின்று
காட்சிப்படுகிற
காட்சி
புதுப்புது
வர்ணம்
காட்டிச்சிரிப்பதாய்,,,,/
********
வர்ணம்
காட்டிச்சிரிக்கிற
காட்சிகளின்
உறைவு
நிரப்பப்பட்ட
பக்கங்கள்
யாவுமாய்,,,/
*********
யாவுமாகி
நின்ற
பக்கங்களின்
உறைவு
காணக்கிடைக்கிற
காட்சி
கொண்டதாய்,,,/
********
காணக்கிடைக்கிற
காட்சிகளின்
கனம்
மனம்
சுமந்ததாயும்
அது
அல்லாததாயும்,,,/
*******
அல்லாததாயும்
உள்ளாதாயுமாய்
உறைகொண்ட
காட்சிகளின்
உயிர்ப்பு
தொட்டுத்
தொடர்கிறதாகவே,,,/
*********
தொட்டுத்தொடர்கிற பந்தங்களை சுற்றங்களை நட்புகளை மற்றும் தோழமைகளை விட்டுச்செல்லா மனம் ,,/
****************
விட்டுச்சென்றால்தான்
என்ன,
பட்டுச்சென்றால்தான்
என்ன
என
கேட்கிற
நட்பும்
தோழமையும்
நம்மை
சுற்றிய
கொடியாகவும்
மனமிறங்கிய
வேராயும்,,,
********
வேர்களின்
பலம்
தெரியா
விழுதுகளும்
விழுதுகளின்
பலமறியா
வேர்களும்
மண்ணையும்
மரத்தையும்
அடை
கொண்ட
கவசம்
கொண்டு,,,/
**********
கவசம்
பூண்டவைகளின்
உள்ளும்
புறமும்
அறியத்தரப்பட்டிருக்கிற
வெளிகள்
பட்டு
படர்ந்து
காட்சி
கொண்டதாய்,,,/
**********
**********
காட்சி கொண்டவைகளின் படர்வு உள்ளம் பூரித்தும் அது அற்றுமாய்,,,,/
********
பூரித்த உள்ளங்களின் களிகொண்டாட்டம் உன்னிலும் என்னிலும்
நம்மிலுமாய்,,,/
********
களி கொண்டாட்டம் கொண்ட உள்ளங்கள் உடல் பற்றியும் உயிர்
பற்றியுமான யோசனையில்,,,,,,/
*********
யோசனையின் கொண்டாட்டங்கள் எழுதிச்சென்ற பக்கங்களில் திருத்த
நேர்ந்து போகிற பிழை,,,,/
*********
பிழைகளாகிப்போனால்தான் என்ன ,,? எழுதிக்கொடுத்துவிட்டுச் சென்று விடுகிற வாய்ப்பு
திருத்தி கொடுத்து விட்டுப்போகிறததுதான்,,,,/
********
எழுதுவதும் திருத்துவதுமாய் சென்றடைகிற வாழக்கை வலியதின்
பாதையிலும் எளியதின் பாதையிலு மாய்,,,,
********
வலியதிலும் எளியதிலுமாய் மாறி மாறி பயணிக்கிற வாழ்க்கை
தன் வலிவு காட்டி காட்சிப்படுவதாய்,,,/
*********
காட்சிப்படுகிற வலிவின் அழுத்தங்கள் உறை கொள்கிற பொழுதுகள்
தன்னிலை காட்டிச்செல்வதாகவே,,,/
*********
தன்னிலை காட்டிச்செல்கிற பொழுதுகளின் நகர்வுகள் ஊனிச்செல்கிறவைகள்அழுத்தம்காட்டியே,,,/
No comments:
Post a Comment