:: :::::::::::::::::🍂🍂🍂🍂
அவர் தோசைகளை சுட்டடுக்கிக்கொண்டே இருக்கிறார்.
ஒரு மாய வித்தைக்காரனைப்போல!
சின்னதான அடுப்பின் மீது வைக்கப்பட்டிருந்த தோசை சட்டியும்,
அருகிலிருந்த டீ பாய்லரும்
வெந்தலின் மீது அவரது இருப்பு போலவே,,,!
அவரது இரு கரங்களை
ஒட்டி முளைத்திருக்கிற பல கரங்கள்
புதிதாக அவரைப்பார்ப்பவர்களுக்கு ஏதோ செய்வித்தைக்காரரை
ஞாபகம் செய்வதாக,,,!
சேர்ந்தாற்போல் நான்கு பேர் மட்டுமே அமர்ந்து சாப்பிடக்கூடிய
சின்னதான கடை
பறவையின் கூட்டைப்போல
பார்க்க அழகாயிருக்கிறது.
மண்கீறி,துளிர் விட்டு,கிளைத்து இலைபரப்பி,பூவும்,பிஞ்சும்
காயும் கனியுமாய் விழுதிறக்கிய மரத்தின் ஆகுருதியாயும்
அதில் அமர்ந்தெழுந்து பறக்கிற
ஒற்றைப்பறவையாயும் உணர முடிகிறதுதான் அக்கடைக்குச்செல்கிற கணங்கள் தோறுமாய்,,,,!
:: ::::::::::🐬🐬🐬🐬

 
 
No comments:
Post a Comment