28 Mar 2021

ஒற்றை,,,,,

 ___________::::::::::⛲⛲⛲⛲



கோவிலின் முன் வாசலோரமாய்

காற்றாடிகளும்,பலூன்களும் விற்றவன் நிலை கொண்டிருக்கிறான்.

பலூன்களுக்கு காற்றடிக்கிறான்.

பீப்பிகளை ஊதிக்காண்பிக்கிறான்.

வண்ண வண்ணமான அகன்ற காற்றாடிகளை சுழல விடுகிறான்.

கார்களை தரைபாவி ஓடவிட்டும்,

விமானங்களை ஆகாயம் நோக்கி பறக்கவிட்டும்,,,

அவைகளின் மீது சோப்புக்குமிழிகளின் முட்டைகளை நிற்க வைத்தும்

கொண்டிருந்தவனை கடக்கையில் எதிர்பட்ட சிறுமி

பலூன் வாங்கித்தருமாறு 

தாயிடம் பணிக்க,,, 

பலூனோடு நின்று போகாது 

மகளது கேட்பின் குரல்

என்றுணர்ந்த தாய் 

முதலில் சாமி வழிபாடு,

பின்தான் எல்லாம் எனவும்,

கோவிலுக்குள் சென்று திரும்பி வருகையில் பலூன்காரன் அங்கிருக்கமாட்டான் என்கிற நம்பிக்கையுடனும்,,,!


                                  __________|||❄❄❄❄

No comments: