15 Sept 2021

விழிவழி


 


🍂🍂🍂🍂______||         ||||


நடமாட்டம் மிகுந்த சாலையோரமாய்

அமர்ந்திருக்கிறாள் அவள்.

அவளின் தோற்றமும் செய்கையும் 

மன நலம் குன்றியவள்

என முன்னறிவித்துச்செல்கிறதாய்!

சாலையில் விரைகிற பேருந்திற்கு 

கையசைக்கிறாள்.

இரு சக்கர வாகனத்தில் ஏறி அமர்வது போல் பாவனை காட்டுகிறாள்.

மிதி வண்டிக்காரர்களை விரைந்து போகச்சொல்லி போக்குவரத்து காவலர் போல் சைகை செய்கிறாள்.

அமர்ந்த இடம் விட்டு நகராமல் 

இச்செய்கைகள் அனைத்தையும்

செய்தவள் 

தன்னைச்சுற்றிலுமாய் 

சுத்தம் செய்து விட்டு 

தன் கைகளை நீட்டி அதைச்சுற்றிலுமாய்

கோடிழுத்து வரைகிறாள்.

கால்களையும் அப்படியே செய்கிறாள்.

மீதமிருப்பது உடல் மட்டுமே,,,

வாகு பார்த்து  வரைந்த

கைக்கும் காலுக்குமாய் உடலைப்பொருத்தி 

நீட்டி படுத்தவள்

தன்னை சுற்றிலுமாய்

கோடு வரைகிறாள்.

கோடிழுத்து வரைந்ததை உற்றுப்பார்த்து திருப்தியுற்றவளாய்

எழுந்து தன் கையிலிருந்த சாக்பீஸால்

கலர் கொடுக்கிறாள்,

அது வரையிலும் போக்குவரத்து மட்டும் நடந்து கொண்டிருந்த

சாலையின் ஓரம் 

நிமிட நேரங்களின் சடுதியில்

மரங்களும்,செடிகளும் பறவைகளுமாய்

பூத்துக்காட்சிப்படுகிறதாய்!


                          ||||||       ||________🍂🍂🍂

No comments: