Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

19 Apr 2020

படர் கொடியாய்,,,,,


எனது இருபத்தி ஐந்தாவது வயது வரை
அவனை நான் சரியாக பார்த்தாய்
எந்தப்பதிவும் இல்லை என்னில்,
அவன் கருப்பா,சிவப்பா,உயரமா,குள்ளமா
இல்லை இரண்டிற்கும் இடைப்பட்டா
அதுவும் தெரியாது.
காற்றுக்கு தகவல் அனுப்பிக்கேட்ட போதும் கூட
அதையே ருசுப்படுத்தி விட்டுச்செல்கிறது,
அநேகமாய் அவனிலும் என்னைப் பற்றி
அப்படித்தான் இருக்கவேண்டும் தகவல்கள்.
நானும் அவனைப்போல ஒரு சாமாயன் தானே,,,?
அவன் ராம் என்கிற ராம்குமார், எனது நண்பன்,
சரக்குக்கும் சால்னாவுக்கும்,சைட்அடிக்கவுமாய்
கிளைத்ததில்லை அவனது நட்பு,
மண்பிளந்து துளிர்த்து இலை விட்டு கிளைபரப்பி
பூவும் பிஞ்சும் காயும் கனியுமாய்
நிறை கொ ண்ட மனதிலிருந்து விழுதிறக்கியவன்.
தொண்ணூறுகளின் பிற்பகுதியில் நடை பெற்ற
எனது சொந்தங்கள் மற்றும் தோழமை நட்பு வட்டாரத்தின்
திருமணங்களில் எனது கலப்பும் சிரிப்பும்
அடையாளப்பட்டிருந்த அடர் பொழுதுகள்/
ஒரு மழை மாதத்தின் இளங்காலைப்பொழுதில்
”வெள்ளென முகூர்த்தம்” என்கிற அடையாளத்துடன்
நடைபெற்ற நண்பனின் திருமணத்தில்
எனக்கு முன்பாய் வந்து நின்றிருந்தான்
அவன் மாப்பிளையின் தோழனாகவும்
,படர்ந்து பட்ட உறவினனாகவும்/
கொஞ்சம் பேச்சு,அதிராத மென் சிரிப்பு,ஆழ்ந்த அமைதி,,,,,
இவைகளுடன் மட்டுமே முடியிட்டு அடையாளப்பட்டிருந்தான்.
மேல் நோக்கி நீட்டுகிற ஒற்றை சுட்டும் விரலின்
பின்னால் போய் அவசரம் காட்டி
ஒழிந்து கொள்கிற பூஞ்சை உடல் அவனது,
ஒட்டி குழி விழுந்த கன்னம்,ஒடுங்கி உள்ளடங்கிய கண்கள்.
ஏறிய நெற்றி,தலையில் நட்டு வைத்தது போலாய்
அலசலாய் இருந்த முடிகள்,
அளவிற்கு மேல் இருந்தால் வலிக்கும் உடலுக்கு
என்பதாலோ என்னவோ மிகச்சொற்பமாய்
எலும்புகளையும்,அதை மூட சதையையும்
கொண்டவனாய்  தெரிந்தான்,
அதனால் என்ன எலும்பும் சதையும் மட்டுமல்லவே உடல்,,,,,?
உள்ளமும், உயிரும், மேலோ ங்கிய உணர்வுகளின்
கலவைதானே உடல்,,,,/
என நெருக்கம் காட்டி பேச விழைந்த நாட்களில்
அவரை ஒருமையில் அழைக்கவும்,
பேசவும் பழகவும் உரிமம் பெற்றிருந்தேன்,
அவன் சென்ற திருமண மற்றும் விஷேச நிகழ்வுகளுக்கு
இவன் சென்றானா இல்லை,
இவன் சென்ற திருமண மற்றும் விஷேச வைபவங்களுக்கு
அவன் வந்தானா தெரியவில்லை.
ஆனால் பெரும்பாலுமாய் இருவரும்
ஒன்றாகவே கலந்து கொள்வோம் திருமணங்களில்,
இத்தனைக்கும் ஒரு ஆறு மாதங்களுக்கு முன்பு வரை
அவனை யாரென எனக்குத்தெரியாது,
அவனை யாரென நான் அறிந்திருக்கவில்லை.
இது குருவி உட்கார அல்ல,
அவன் உட்கார இவன்  நழுவி விழுந்த கதை,
”ஊரெல்லாம் திருமணம்,விஷேசங்கள்”,,,,,
எனப் போய்க்கொண்டிருக்கிற நீ
உனது திருமணம் எப்போது என பொழுதுகளில்
தன் வாழ்நாளில் அப்படியொரு பாக்கியம்
இனி இல்லை.தனக்கு வாழ்நாள் நீட்டிப்பு
என இனி இருப்பது அபூர்வமே/
உடல் கொண்ட நோய் உதிரம் குடித்து உயிரைப்போக்குவது உறுதி
ஆகவே மறையப்போகும் முன்னாவது,இம்மண்ணின் பரப்பையும்,
அதில் குடிகொண்ட மனிதர்களையும் பார்த்தே ஆக வேண்டும்
என்கிற உந்துதலும்,வேகமும் என்னில் இருக்கிறது,
அது உறை கொள்ளும் நாள்வரை
இப்படித்தான் ஓடிக்கொண்டிருக்கக் கடமைப்பட்டுள்ளேன்.
ஆகவே என் நலம் பற்றி பேசுவதை தவிர் நண்பா,,
என்றவன் உனது அனுமதியுடன்
”இப்போதைக்கு உன் தோளில் கைபோட்டுக் கொள்கிறேன்”
எனச்சொன்னவனை அதற்கப்புறமாய் இது நாள்வரை
திருமணம் மற்றும் விஷேச நிகழ்வுகளில் பார்க்க முடிந்ததில்லை,

27 Dec 2018

சுழல் நகர்வுகள்,,,,,

தூக்கம்பிடிக்கவில்லைமனோகரிக்கு,புரண்டுபடுக்கிறாள்,மல்லாக்கப் படுத்துப் பார்க்கிறாள்,கால்களுக்குள்கையைவைத்தவாறுஇருக்கிக்கொண்டுபார்க்கிறாள். எது செய்தும் பலனினில்லாமல் போகவே எழுந்து அமர்கிறாள்,

படுத்திருந்த பாயில் நீட்டிக்கொண்டிருந்த சின்னதான கோரைக்குச்சி கால் பாதத்தின் அருகில் குத்தியது., தடவி விட்டவாறே எழப்பார்க்கிறாள், சலனம ற்றஅமைதி, வீடு முழுவதுமாய் போர்வையாய் போர்த்தியிருந்த மென் இருள், மேற்குப் பார்த்த ஜன்னல் வழியே புகை போல் வந்த வெளிச்சம் லேசாய் திறந்திருந்த ஜன்னல் கிராதியையும் ஜன்னலின் விளிம்பையும் நனைத்துக் கொண்டு வீட்டினுள் புக யத்தனித்தோஅனுமதி கேட்டோ நின்றது ஜன்னல் கிராதியிலிந்து உதிர்ந்த பூ ஒன்றுடன்/

இரவு சாப்பிட்ட உணவு நெஞ்சிலேயே நின்றது,பிள்ளைகளும் கணவரும் சாப்பிட்டது போக மிச்சமிருந்த சோறில் எண்ணை ஊற்றிசாப்பிட்டாள், நல்லெ ண்னைஇல்லை,கடலெண்ணெய்தான்ஊற்றிக் கொண்டாள்,தொடு கறி எதுவும் இல்லை,எலி கறும்பியது போல் யாரோ தின்று விட்டு வைத்திருந்த அரை தேங்காய்ச்சில்இருந்தது,காலையில்தான்கடையில்வாங்கியிருந்தாள்,கடைக் காரர்தான் சொன்னார்,”சோத்துக்குத் தொட்டுக்க தேங்காய்ச்சில்லு வாங்குற ஒரே ஆளு நீங்களாத்தான் இருப்பீங்கக்கா, ஏங் வயசுக்கும் அனுபவத்துக்கும் இப்பிடியெல்லாம் பாத்ததும் இல்ல, கேள்விப்பட்டதும் இல்லக்கா”,என்றார் சிரித்துக்கொண்டே/

வீட்டுக்காரர்தான்சாப்பிட்டிருக்க வேண்டும்,

சின்னவயதுபழக்கம்,இப்பொழுதுதீடீரெனபோஎன்றால்எப்படி,,,?பள்ளிக்கூடம் விட்டு வீட்டிற்கு வந்ததும் ஏதாவது தின்ன வேண்டும் போல் இருக்கிறவள் நேரடியாய் சமையலறைக்குள் புகுந்து கொஞ்சம் பொரி கடலை,கொஞ்சமாய் கடிக்கப்பட்ட தேங்காய்ச்சில்,பச்சை மிளகாய் சின்னதுண்டு என வாயில் போட்டுமென்று கொண்டே சிறிது நேரம் வீட்டிற்குள் வலம் வருவாள்,அவளது அம்மா கூட வைவாள்,”கொஞ்சம் உப்பையும் ரெண்டு கறி வேப்பிலையையும் சேத்துப்போட்டையின்னா தாளிச்சா மாதிரி ஆகிப் போகுமில்ல” என்பாள்,

அம்மாவின் பேச்சிற்கு சிரித்துக்கொண்டே ஓடிவிடுவாள்,

அப்பொழுதுசிரித்தசிரிப்புஇப்பொழுதுதன்வசமிருக்கும்அரிசி,பருப்பு,அரசலவில் இருந்து தேங்காய்ச்சில்லை மட்டும் எடுத்துக்கொள்ள வைத்துக்கொண்டிருக் கிறது இத்தனை ஆண்டுகள் கடந்தும்.

இரவு சாப்பிடும் போதே வீட்டுக்காரர் சொன்னார்,நாங்களெல்லாம் சாப்புட் டோம் இனி நீதான் சாப்புடணும்,கொழம்பு கொஞ்சமாத்தான் இருக்கு,நீ வேணு முன்னா ஊத்திக்க நான் தண்ணி ஊத்தி சாப்புட்டுக்குறேன் என்றார், இல்லை வேணாம் நான் சாப்புடகொஞ்சம் நேரமாகும் ,நீங்க சாப்புட்டு படுங்க என்ற வளின் அருகில் வந்தவர் அவளது முகப்போக்கை கவனித்தவராய் இரு என இருவருக்குமாய் சாப்பாடு போட்டுக்கொண்டு வந்து தட்டுகளை அருகில் வைத்தவர் இருந்த கொழம்ப ஒனக்கு ஊத்திருக்கேன்,நான் தண்ணி ஊத்தி சாப்புட்டுக்கிறேன் என்றவர் அவள் அருகில் அமர்ந்து வெண்மை படர்ந்த முடிகள் கலைந்திருந்த தலையை மென்மையாய் கோதி விட்டவாறு நெற்றி யில் முத்தம்மிட்டார்,

“சும்மா இருங்க ,இத்தன வயசுக்கு மேல போயிக்கிட்டு,புள்ளைங்க முழிச்சிக் கிட்டா மானக்கேடு என்றவள் அவரின் தோளில் சாய்ந்து கொண்டாள்.இப்ப மட்டும் புள்ளைங்க முழிச்சிக்கிறாதாக்கும், கிறுக்கி” என்றவர் ”முழிச்சா முழிச்சிப்பாக்கட்டுமே என்ன இப்ப கொறஞ் சிறப்போகுது விடு” என்றவாறு பிசைந்து வைத்த சோற்றை அவளுக்கு ஊட்டி விட்டார்,அவரது தோளில் சாய்ந்து கொண்டே சாப்பிட்டவள் அவரது தோள் மீது கொஞ்சம் சிந்தினாள், சிந்தாமசாப்புடு என லேசாக அவளது தலையில் தட்டி விட்டு அவரும் சாப்பி ட்டார்.

சாப்பிட்ட இடத்திலேயே தட்டில் கையை கழுவி விட்டு அப்படியே படுத்து விட்டாள்,எழுந்துலைட்டைப்போட்டவள்மணியைப்பார்க்கிறாள்,மணிமூன்று, கணவர் ஆழந்து தூங்கிக் கொண்டிருந்தார்,பிள்ளைகள் இருவரும் ஆளுக்கு ஒரு மூலை என தூங்கிக் கொண்டிருந்தார்கள்,கல்லூரியின் இளங்கலையும் முதுகலையுமான இருவரும் படித்து முடித்துத்தூங்க கொஞ்சம் தாமதம் ஆகியிருக்கும், ஆனால் கணவர் தூங்க எப்படியும் ஒரு மணிக்கு மேல் ஆகியி ருக்கும்.பரிட்சைக்குப்படிக்கிற பிள்ளைகள் கூட தோற்றுப் போகும் போல, அவ்வ ளவு படிக்கிறார்,அவ்வளவு பார்க்கிறார், அவ்வளவு கேட்கிறார்,எதற்கு இதெல் லாம் உதவப்போகிறது எனத்தெரியவில்லை,எனச்சொல்லும் போது படிப்பது வீணல்ல என்பார்.

அவர் சொல்வதும் உண்மை தான்,தெள்ளத்தெளிவான சிந்தனையோடும் ,செயலோடும்தான் இதுநாள்வரை இருக்கிறார்,அதற்க்காகவாவது அவரது படிப்பு அவருக்கு கை கொடுக்கட்டும். என்கிற ரீதியில் அவரை இடைஞ்சல் செய்வ தில்லை.

நன்றாக தூங்கிக் கொண்டிருந்தவர் எழுந்து விட்டார் மனோகரி லைட்டைப் போடவும்/ ”என்ன இந்நேரத்துக்கு என அருகில் வந்தவர் அவளது தலையை வாஞ்சையுடன் வாரிக்கொடுத்தவர் ஒடம்பு இப்ப எப்பிடி இருக்கு அசதியா இருக்குன்னு சொன்னியே சரியாயிருச்சா” என கேட்டார்,

“சரியாகுறது என்ன பெரிசா சரியாகுறது,நீங்க நாலு தடவை இப்பிடி கேட்டீங் கன்னாலேசரியாயிரும்” என்றவாறு கணவரது தோளில் சாய்ந்து கொள்கிறாள் மனோகரி/

”என்ன மதுரைக்காரம்மா நல்லாயிருக்கீங்களா என்கிற சப்தம் கேட்டுத்தான் திரும்பிப் பார்ப்பவளாகிப் போகிறாள் அவள், உள்ளபடிக்கும் அவள் எந்த ஊர் என்பது இவனுக்குத் தெரியாது,பின் எப்படி மதுரைக்காரம்மா என்கிற துணைப் பெயரைஅவள் மீது ஒட்டினான்எப்பொழுது ஒட்டினான் என்பது சரியாக ஞாபக மில்லை.ஊர் மீது வந்த உறவோ இல்லை,இல்லை எதன் மீது ஆன ஞாபகப் பிசகோதெரியவில்லை,ஒருவேளைவயதானதால்வந்தஞாபகதடுமாற்றமாய்க் கூட இருக்கலாம்,

எதானால் என்ன,,? கண் முன் பார்த்து பேசி பழகிய ஒருவரின் ஊர் பற்றிய ஞாகபத்தடுமாற்றம் அவளைப் பற்றி பெரிதாக நினைவின் அடுக்குகளில் பதிந் து வைத்துக்கொள்ளவில்லை என்கிற அர்த்தத்தைதானே விதைக்கிறது” என இவனுக்குள்ளாய் இவனாய் சொல்லிக் கொள்வதுண்டு இது போலான சமயங் களில்/

இவன் வேலை பார்க்கிற அலுவலகத்தில் ஒரு நாள் தற்செயலாய் பார்த்தது தான்,அப்பொழுது இவனின் பேச்சையும் அதிலிருந்த மிதம் மிஞ்சிய வாஞ்சை யையும் கண்ட அவள் எப்பொழுது அலுவலகம் வந்தாலும் அவனைத்தேடித் தான் வருவாள்,

பக்கத்து இருக்கைக்காரர் கூட கேட்பார் கேலியாக ”எண்ணண்ணே எப்ப வந்தா லும் அந்தம்மா ஒங்களத்தேடித்தான்வர்றாங்க,ஏன் எங்களையெல்லாம் பாத் தா அந்தம்மாவுக்கு ஆளாத் தெரியலையாமா என சிரித்துக்கொண்டே சொல் பவர்அந்தம்மாவுக்குமதுரைபோலஇருக்கு,எப்பப்பாத்தாலும்மதுரைமதுரைண்ணேபேசுவாங்க” என பேசிக்கொண்டிருந்த ஒரு நாளில் வந்த அந்தம் மாதான் வந்த வேலையை கொஞ்சம் சீக்கிரம் முடித்துத்தர இயலுமா என்றும், கொஞ்சம் தாமதமானால் பஜார் வரை போய் விட்டு வந்து விடுகிறே ன் எனவுமாய் சொன்ன அவளை “கொஞ்சம் நேரம் ஒக்காருங்க,இதோ சொடக்குப் போடுற நேரத்துலமுடிச்சிக் குடுத்துருறோம்வேலைய”எனச்சொன்னஇவனை ஏறிட்ட பக்கத்து இருக்கைக் காரர் ”என்ன சார் இது அந்தம்மா எப்ப வந்தாலும் கால்ல வெந்நித் தண்ணி ஊத்திகிட்டுதான்வர்றாங்க,நீங்களும்அவுங்கஅவசரத்துக்குஏத்தாப்புலநடந்துக் கிறீங்க,ஏன் சார் அப்பிடி”? என அவரிட்ட கேள்விக்குறியை மனதில் வாங்கிய வர் ”அப்பிடியில்லசார்,நம்ம பாடு என்னன்னு அவுங்களுக்கு தெரியாது,ஆனா அவுங்கதேவைவந்தவேலையசீக்கிரம் முடிச்சிட்டு போகணும்ங்குறது மட்டும் தான்.அத நம்ம முடிஞ்ச அளவுக்கு நிறைவேத்திக் குடுப்பமே  என்ன இப்ப கொறைஞ்சிறப் போகுது,,?” என்ற போது அவர் கடகட வென சிரித்தார்,

அவரது சிரிப்பில் குடிகொண்டிருந்த அர்த்தம் ஆயிரங்களை விதைத்து சென் றதாய்,அப்படித்தான்அவள் மதுரைக்காரம்மா என அறிமுகமாகிறாள் இவனுக் கு.

அன்றிலிருந்து இன்று வரை அவள் மதுரைக்காரம்மா தான் இவனுக்கு, எப்பொழுதாவது பஜார் அல்லது இது போலான பொது வெளிகளில்பார்க்க நேர்கிற போது இப்படித்தான் அழைத்துக் கொள்கிறான்.

பஸ்ஸை விட்டுஇறங்கியதும் நேராய் சந்து கடைக்கு போய் விடுவான் டீக் குடிக்க,

அதென்ன சந்துக்கடை, நல்லாயிருக்கு ஞாயம் கடைக்கின்னு ஒரு பேரு வேணாமா இப்பிடியா சந்து கடை பொந்து கடையின்னு பேரு சொல்லிக்கிட்டு போயி டீக்குடிப்பாங்க என்பார்கள். இவன் வீட்டில் பிள்ளைகளும் மனை வியும்,/

உண்மையில்அந்தக்கடையின்பெயர்ஆனந்தன்டீக்கடை,வைத்திருந்தபிளக்ஸ் போர்டு இத்துப்போய் பெயர் அழிந்து போன பிறகு கடைக்காரர் அதை மாற்றி வைக்க முயற்சிக்கவில்லை,

கேட்டதற்கு ”இருக்கட்டும் பேரு என்ன பேரு பெரிசா வாழுது,அதான் நீங்க ள்லாம் சொல்றீங்கில்ல சந்து கடைன்னு,அது போதாதா,அந்தப்பேரே அடையா ளமாகிப் போச்சி,நெலைச்சும் நின்னுருச்சி,இதுக்கு மேல என்ன வேணும் சொல்லுங்க”,என்பார்,

அவரது கடையில் மெலிதாக ஒலித்துக்கொண்டிருக்கும் சினிமாப் பாடல்களு க்கு அவர் உயிர் கொடுத்து நிறுத்துவார்.

கை தூக்கி உயர்த்தி ஆற்றுகிற டீக்கு உயிர் இருக்குமானால் டபராவிலிருந்து எழுந்து வந்து இவருடன் கலந்து இசையை ரசிக்க ஆரம்பித்து விடும்,

கடையின் உள்ளிருந்து கேட்கிற பாடல்கள் டீக்குடிக்க வருவோர் கவனத்தை முழுமையாய் ஈர்த்து விடுவதுண்டு,சில பேரானால் பாட்டுக்கேட்டுக் கொண் டே இரண்டு டீகூட குடித்து விடுவார்கள்,

”ஏன்பா ஒனக்கென்ன எள வட்டமுன்னு நெனைப்பா, வயசாகிப்போச்சி,இனி என்னவாம் ஆட்டம் பாட்டம், ரசிபுன்னுக்கிட்டு என்கிற வர்களின் கிண்டலுக்கு ஒடம்புக்குத்தான வயசு, மனசுக்கு என்ன அது இன்னும் துள்ளிக்கிட்டுதான் கெடக்குதுன்னு வையிங்களேன்” என்பவர் டீ என்று சொல்லிவிட்டு திரும்பும் முன் டீக்கிளாஸை முன்னால் நீட்டி விடுவார்,

“எண்ணண்ணேநீங்க,நான் வருவேன்னு எற்கனவேபோட்டுவச்சிருந்தீங்களா”  என்றால்,,,கடகடவென சிரிப்பார்,

”எப்பவும் போலத்தான் போட்டேன்,நீங்கதான் ஏங் வேகத்த வேடிக்கை பாக்குற ஆளாவும் அத சுட்டிக் காட்டி பேசுற ஆளாவும் வேற இருக்கீங்களா,அதான் ஒங்க தலை தெரிஞ்சதும் சட்டுன்னு ஒரு வேகத் தயாரிப்பு” என்பார்.

“ஏன்கிட்ட இருக்குற மிகப்பெரிய சொத்து இதுதான்னு நெனைக்கிறேன், அத முடிஞ்சஅளவு எத்தன வயசு வரைக்கும் வச்சி காப்பாத்த முடியுமோ காப்பா த்திக்கிற வேண்டியதுதா,இப்ப வயசு அம்பத்தி அஞ்சு ஆகுது, இனி என்ன கொஞ்சகாலம்இதே வேகம் இருக்கணுமுன்னு நெனைக்கிறேன்,பாப்போம் எது வரைக்கும் ஓடுதுன்னு/” என்பார் கேலி பேசிக்கொண்டும் டீப்போட்டுக் கொண்டுமாய்/

கூடவே கடையின் உள்ளிலிருந்து ஒலிக்கிற பாடல்களுக்கு தலையசைத் தவாறும் இசையின் லயங்களில் கரைந்தவராயும்/

அப்படியான ஒரு கரைதலுக்கு ஆட்பட்டவராய் அவரும் அந்தகரைதலின் கரைகளில் நின்று கொண்டே நீச்சல் அடிப்பவர்களில் ஒருவனாய் இவனும்,/

இவன் போன்ற இன்னும் பலருமாய் இருக்கும் வரை சந்துக் கடையில் டீயும் பிஸ்கெட்டும் கரை கடந்து ஓடும்,என நினைத்துக் கொண்டிருந்த நாளன்றின் ஒரு மாலை வேளையில் மழை விடாது பெய்து கொண்டிருந்தது,

பூமிக்கும் வானத்திற்கும் நட்டு வைத்தவெள்ளிக்கம்பிகளாய் நெசவிட்டிருந்த மழை தண்ணீர் தன் விருப்பம்கொள்ளுமளவுக்கு பெய்து தீர்த்டு விடலாம் என முடிவு கட்டிக்கொண்டிருந்தது போல் அடர்ந்திருந்த வானம்பிடிவாதம் காட்டி தன் விடாது தன்னை பதிவுசெய்தகொண்டிருந்ததாய்/

சாலையில்விரைந்துகொண்டிருந்த சைக்கிள்க்காரர் சைக்கிளை ஓரம் கட்டி விட்டு டீக்கடையோரம் ஒதுங்கினார்,

இப்பொழுதெல்லாம்சாலைகளில்சைக்கிளைப்பார்ப்பதுஅபூர்வமாகிப்போகிறது, பத்து இரு சக்கர வாகனங்களுக்கு மத்தியில் ஒரு சைக்கிளை பார்ப்பது அபூர்வமாகிப் போகிறது,

போன வாரத்தின் கடைசி நாளில்தான் வீட்டில் நின்ற சைக்கிளை விற்கக் கொடுத்து விட்டு வந்தான்.

இரு சக்கர வாகனம் இருந்ததால் சைக்கிள் மிதிப்பது குறைந்து போனது என இவன்தான் வம்படியாக வாங்கிப் போட்டான்.

ஆனால் நீண்ட நாட்களாகவே வெறும் காட்சிப்பொருளாகவே வீட்டில் நின்றி ருந்தது பொறுக்காமல் விலைக்குப்போட்டு விட்டான்,

”சும்மாவே நின்னா எப்பிடி,,?ஏதாவது ஒரு வேலையின்னா ஆத்திர அவசரத் துக்கு வண்டிய தூக்கீட்டுதான் ஓடுறோம்,இதுல இது வேற எதுக்கு பாரமா” என்றான் சைக்கிளை கடையில் விற்கப்போட்ட நாளன்று,

இப்பொழுது இது போன்று சைக்கிளை பார்க்கிற நாட்களில் சைக்கிள் ஓட்ட வேண்டும் என்கிற ஆசை திரும்பவுமாய் முளை விடுகிறது.

பார்ப்போம்எதுநிலைக்கிறதுஎன ,இரு சக்கரவாகனமா,சைக்கிளாஎன மனதில் நினைத்தவனாய்மழைஓய்ந்தபின்கிளம்பிப்போனான்.டீக்கடைக்காரர்இவனுக்காய் பாடவிட்ட பாடலைக் கேட்டவாறே/

கடையின் முன்னால் இருக்கிற புங்க மரத்திற்கு தண்ணீர் ஊற்றுகிறாரோ இல்லையோ தினமும் இசை ஊற்றி வளர்க்கிறார் போலும்/மரத்தின் வளர்ச்சி யிலேயே தெரிந்தது அது.

”ஐய்யைய்யோ சார், ஒங்களப்பாக்கலையில்ல,நல்லாயிருக்கீங்களா எனக் கேட்டவள், டாக்டர் கிட்ட வந்தோம்.பேத்தியாளுக்கு ஒடம்புக்கு முடியல என அருகில் நின்றிருந்த சிறுமியைக் காட்டினாள்.

அவளை பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்த இவனிடம் நாலாப்பு படிக்கிறா, பார்வைக்கு ஒண்ணாப்புபடிக்கிற புள் ளையப் போல இருப்பா,அவுங்க அம்மா அப்பா இங்க கொண்டு வந்து விட்டுட்டாங்க, அவங்க ரெண்டு பேரும் மில்லு வேலைக்குப் போறதால ஏங்கிட்டதான் வளருறா,நானும் ஊட்டிஊட்டிதான் வளக்குறேன்,ஆனாலும் தேறுவேனாங்குறா, அது ஒண்ணுமில்ல மூணாப்பு படிக்கிற வரைக்கும் அவங்க அம்மா அப்பாகிட்டதான் வளந்தா,

அவஅம்மாகாரி என்ன செய்வான்னா வாரத்துக்கு ரெண்டு தடவை மாவரை ச்சிவச்சிட்டுதினம்காலையிலையும் நைட்டும்தோசையா ஊத்திக் குடுத்துருக் கா, மதியம்தான் புள்ளைகளுக்கு ஸ்கூல்ல சோறு போட்டுறாங்கள்ல, அது னால சாப்பாட்டுல அதையே வழமையா கொண்டு வந்துட்டா,

காலையிலயும் இராத்திரிக்கும் தோசை,மதியத்துக்கு ஸ்கூல் சாப்பாடுன்னு ஆகிப்போகுது.

நம்மளப்போலபெரியாளுகளுக்கேஒருதடவைசாப்புட்டதஇன்னொரு மொறை சாப்புட்டா ஒரு மாதிரி இருக்கு.பாவம் சின்னப்புள்ள என்ன செய்வா, இப்பிடித்தான்சாப்புட்டும் சாப்புடாம தேவாங்கு மாதிரி இருக்கா பாத்துக்கங்க, என்றாள்,

பாரிய உடல் மாநிறம்,களைத்து போனமுகம்,அடர் கலரில் அவள் கட்டியிரு ந்த சேலை அவளை ஒட்டிய நிறத்திற்கே/

களைந்துபோனகேசத்தை ஏனோ தானோவெனவாரிமுடிந்திருந்தாள். நெற்றிக் கிட்டிருந்த பொட்டு கொஞ்சம் இடம் பிசகி அமர்ந்திருந்ததாய்/

அவசரமும்பரபரப்புமாய் நின்றிருந்த அவள் வியர் வையை சேலை முந்தா னையால் துடைத்தவாறே பஸ்ஸீக்கு நேரமாச்சி வர்றேன் சார் எனக் கிளம்பு கிறாள். தூரத்தில் பஸ் வெளிச்சமிட்டவாறு வந்து கொண்டிருந்தது,

2 Oct 2018

வடிவெடுப்பு,,,,,,

  பூப்பதெல்லாம் –சிறுகதைகள்                                       விமலன்

நூல் : பூப்பதெல்லாம்,,,,,,
ஆசிரியர் : விமலன்

மின்னஞ்சல் : vimalanperali@gmail.com
மின்னூலாக்கம் : சீ.ராஜேஸ்வரி
மின்னஞ்சல் : sraji.me@gmail.com
வெளியிடு : FreeTamilEbooks.com
உரிமை : Creative Commons Attribution-Non-commercial-No Derivatives 4.0 International License.
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.



                                                 பதிவிறக்க*

ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
Download “பூப்பதெல்லாம் epub” Poopthellam.epub – Downloaded 15 times –
புது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “பூப்பதெல்லாம் mobi” Poopthellam.mobi – Downloaded 4 times –
குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க
Download “பூப்பதெல்லாம் A4 PDF” Poopthellam_A4.pdf – Downloaded 40 times –
பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க
Download “பூப்பதெல்லாம் 6 inch PDF” Poopthellam_6_inch.pdf – Downloaded 17 times –


Send To Kindle Directly


பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/Poopthellam6Inch/
புத்தக எண் – 451

9 Sept 2017

வாராந்திரி,,,,,,,,,,,,,,

சென்ற இடம் டீக்கடையாகவும் வாங்கிய பத்திரிக்கை ஒரு வாரந்திரியாகவும் இருந்தது.

அது எப்படி அது டீக்கடையில் போய் வாரந்திரியை எப்படி வாங்க முடியும்,,,? என்பதல்ல,டீக்கடை குடிகொண்டிருக்கிற இடத்தின் அருகாமையாய் இருக்கிற ரஹீம் பாய் கடையில்தான் வாராந்திரியை வாங்குவான்,

என்ன பாய் நல்லாயிருக்கீங்களா என்பதுதான் இவன் அவரைப் பார்த்ததுமாய் கேட்கிற முதல் கேள்வியாய் இருக்கும்.

அவரும் என்ன சார் ,நல்லாயிருக்கேன் சார்,நீங்கள்ளாம் இருக்கும் போது எனக்கு என்ன சார் எனச் சிரிப்பார்.

சிரிப்பின் முடிவாய் கேட்பார்,என்ன சார் இப்பத்தான ஒரு மணிநேரத்துக்கு முன்னாடி பஜாருக்குப்போது நல்லாயிருக்கீங்களான்னு கேட்டீங்க,இப்ப திரு ம்பி வந்து கேக்குறீங்களே,என்பார்,

இருக்கட்டும் பாய் என்ன இப்ப கேட்டதாலா,நான் கேக்குறதுல எதுவும் ஒங்களுக்கு மன சங்கடம் இருந்துச்சின்னா கேக்கல பாய் என்பான்,

அய்யய்யோ அப்பிடியெல்லாம் இல்ல சார்,நீங்க நிமிஷத்துக்கு நிமிஷம் அப்பிடி கேட்டாலும் நான் வருத்தப்பட போறதுல்ல சார்,இன்னும் சொல்லப் போனா நீங்க கேட்டதுல எனகு சந்தோஷம்தானே தவுர வருத்தமெல்லாம் ஒண்ணும் கெடையாது என மறுமுறையுமாய் சிரிப்பார்.

அவரது வெள்லைச்சிரிப்பிற்கும் அவரது உடல் கனத்திற்குமாய் சம்பந்ஹ்டம் இருக்காதது போல் தோணும் சமயத்தில்/

கடை இருக்கிற வெள்ளியங்கிரி ரோட்டில் இருந்து அவரது வீடு இரண்டு கிலோ மீட்டர்களாவது இருக்கும்.

சின்னதான அட்ல்ஸ் சைக்கிள்தான் அவரது வாகனம்,பெருத்த உடலை தூக்கி சைக்கிள் மீது வைத்துக்கொண்டு அவர் சைக்கிள் மிதித்து வருகிற அழகே தனிதான்,அசைந்து வருகிற தேர் தோற்றுப்போகும்.

கடையின் தெற்குப்புறமாக சைக்கிளை நிறுத்தி விட்டு கடையை திறப்பவர் மதியம் சாப்பிடப்போகும் போதுதான் பின் சைக்கிளை எடுப்பார் கடையை பூட்டிவிட்டு.

சாப்புட்டதும் ஒரு மணி நேரமாவது தூக்கம் இருக்கணூம் சார் நமக்கு, இல் லைன்னாஅந்தநாளே அன்னைக்கி வெளங்காதது போலஆயிரும் பாத்துக்கங்க என்பார்.

அப்படி தூங்கி எந்திரிச்சி வந்துட்டோம்ன்னு வச்சிக்கங்க,ஒடம்பு சொடக்கு எடுத்து விட்ட மாதிரி ஆயிரும்.அதுனால்த்தான் பிடிக்குதோ பிடிக்கலையோ அப்பிடி படுத்து எந்திரிச்சி வர்றது,

இல்லைன்னா சார்,இந்த வலது கால் பாருங்க ரொம்ப வலி எடுத்து தொந்தரவு குடுக்க ஆரம்பிச்சிரும்.எனச்சொல்கிற அவர் கடைகுள்ளாயும் சரி கடை யை விட்டு வெளியில் வரும் போதும் கடைக்குள் போகிற போதுமாய் வலது காலை சாய்த்து சாய்த்துதான் நடப்பார்.

என்ன பாய் இந்த வயசுலயே இப்படியா எனக்கேட்டால் ஒடம்பு பெருத்துப் போச்சில்ல சார் என்பார்,எனக்கென்ன ஒங்க வயசுதான் இருக்கும்ன்னு நெ னைக்கிறேன்,என்ன சின்ன வயசுல கல்யாணம் ஆகிட்டதுனால பேரன் பேத்தி எடுத்துட்டேன்,அதுவும் ஏங் மகளத்தான் கல்யாணம் முடிச்சி குடுத்துருக்கேன், இன்னும் ,மகன் ஒருத்தன் இருக்கான்,அவனுக்கு முடிக்கணும்.என்பவர்,ஏங் சார் தப்பா நெனைச்சிம்க்கிறாதீங்க ஒங்க வயசு என்ன சார் என்பார்,

சொன்னதும்அய்யோ சார் அதேதான் என்னோட வயசும் என சின்னப் பிள்ளை போல் துள்ளிக்குதிப்பார்,

நீங்க பச்ச்சதெல்லாம் இந்த ஊர்லயா,இல்ல வெளியூர்லயா சார் என்பவரிடம் பாய் நான் அச்சடிக்கப்பட்ட இந்த ஊர்க்காரன் பாய்,தூத்துக்குடி ரோட்டுல இருக்குற ஹைஸ்கூல்லதான் படிச்சேன்.என்றதும்

சார் அப்பிடியா நானும் அந்தஸ்கூல்லதான் சார் படிச்சேன்,எந்த வருசம் சார், என்பவரை இடைமறித்து வருசமெல்லாம் ஞாபகம் இல்ல பாய் ,வாழ்க்கை யோட அழுத்ததுலயும் ஓட்டத்துலயும் அதெல்லாம் மறந்து போச்சி பாய், மறைமலை சார் ஹெட் மாஸ்டர்,அண்ணாமலை சார் அசிஸ்டெண்ட் ஹெட் மாஸ்டர், செல்வின் சார் கணக்கு சார்,பாலகுரு சார் என் சி சி மாஸ்டர், ஆறுமுகம் நம்பி சார் பி டி மாஸ்டர்,நம்ம ரெஜினா டீச்சர் தமிழும், நாகே ந்திரன் சார் ஹிஸ்ட்ரி,,,,,,அப்புறமாய் பெத்துன்னன் சாரும் மண்டை வாத்தி யாரும் இருந்த நேரத்துல படிச்சேன் பாய்,

இதுல என் சி சி மாஸ்டர் கத்துக் குடுத்த லெப்ட்,ரைட்டும்,,,கணக்கு வாத்தி யார்பெரம்பால இழுத்த இழுப்பும் ,,,,ஹிஸ்ட்ரிசாரை பள்ளிக்கூடத்துல இருந்து சஸ்பெண்ட் பண்ணுனப்ப பள்ளிக் கூடத்துல படிக்கிற செவன்த்துல இருந்து டென்த் பையங்க வரைக்கும் ரோட்டுல யெறங்கி ஊர்வலம் போனது எல்லாம் ஞாபகம் இருக்கு பாய் என்றதும் அந்த ஊர்வலத்துல நானும் ஒரு பையன் சார் அப்பம் என்பார்.

அப்பம் ரோட்டுல யெறங்கி போராட்டம் பண்ணுன கொணம் இன்னைக்கி வரைக்கும் அப்பிடியே இருக்கறதாத்தான் சார் நெனைச்சிக்கிட்டு வர்ரேன் சார்,அதகட்டி காபாத்தீட்டும் வர்றேன் சார் என்பார்.

போனவாரம் நீங்க வந்துட்டுப்போன கொஞ்ச நேரத்து தண்ணியப்போட்டுட்டு வந்த ஒருத்தன் வாழைப்பழம் வாங்கிதின்னுட்டு காசு குக்க முடியாது, தெரி ஞ்சத பாத்துக்கன்னு சொல்லீட்டு போயிட்டான்,

அவன் ஒரு விருதான்னு எனக்குத்தெரியாது நான் கடைய விட்டு யெறங்கிப் போயிசட்டையப் புடிச்சிட்டேன்,வாழப்பழத்தத்தின்னுட்டு அப்பிடியே போயி ருந்தாலும் கூட ஒண்ணும் தெரியாது.சரி போறான் தொழஞ்சின்னு விட்டுருக் கலாம். அவன் பேசுன பேச்சு இருக்கே அந்தப்பேச்சு பேசீட்டான், அதான் எனக்கு கோபமா போச்சி,அவனும் எட்டி சட்டையப்புடிக்க நான் ரெண்டு அடிஅடிச்சிட் டேன்,அடிச்சிட்டுகடையிலவந்துஉக்காருறேன்,என்னவேகத்துலபோயிவந்தான்னுதெரியலஅவுங்க தெருவுலபோயிஆட்களகூட்டிக்கிட்டு வந்துட்டான்.

வந்தவன் சும்மா இல்லாம நான் இன்னாரு ஏங் ஆளுகிட்டயேவா வந்து நொரண்டு இழுக்குறன்னு சொல்லி பெரிசா பேச ஆரம்பிச்சிட்டான்,

நான் எதுக்கும் அசையல,ஒக்காந்த யெடத்த விட்டு கூட அசையல.என்ன சத்தம் குடுத்தவனுக்கு மறுப்பு சொல்லி பேசும்போது எழுந்திச்சி நிக்க வேண் டியதா போச்சி/கொஞ்சம் சத்தம் போட்டு பேச வேண்டியதா போச்சி சார்,

ஏய் இந்தா பாரு ஒன்னைய எனக்கு தெரியும்,ஆனா என்னையப்பத்தி ஒனக்கு த்தெரியாது,ஒங்க தெருவுலயே ஒனக்கு பக்கத்துலயே எனக்கு ஆள் இருக்கு பாத்துக்க,,,,,ஒனக்கு ஆள்களோட வந்து அரட்டுற தெம்பு இருந்துச்சின்னா அந்த மெரட்டலுக்கு பயபடாமா அத எதுத்து நிக்குற தெம்பு எனக்கு இருக்கு . வேணு முன்னா இன்னைக்கி ஓங் வீட்டு வாசலுக்கு வரட்டுமா பாத்துக்கிருவமா என்றதும் என்ன பாய் நீங்க யாருன்னு தெரியாம வந்துட்டேன். வேணுமின்னா ஒடச்ச ஒங்க கடை ஓட்ட மாத்திக்குடுத்துருரேன் பாய்ன்னு சொல்லீட்டு கால்ல விழுகாத கொறையா மன்னிப்பு கேட்டுப்போனான்.

அன்னையில இருந்து அந்த விருதாபைய இந்தக்கடைப்பக்கமே வர்றதில்ல, இன்னைக்கி மதியம் கடை பூட்டபோன சாப்பாட்டு வேளையில வந்துட்டு கடைஓரமாமொகத்ததொங்கப்போட்டுட்டுநின்னான்,நாந்தான் தொலஞ்சி போறா ன்னு ரெண்டு வாழை பழத்த பிச்சிகையில குடுத்து விட்டேன்.என்ன செய்ய பின்ன நமக்கு மனசு கேக்கல சார் என்கிற பேச்சின் முடிவோடு கையில் புத்தகத்தை எடுத்துக்கொடுத்தார்.

இன்று நேற்றல்ல கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக வாங்கி வருகிறான்,

பத்திரிக்கை சின்ன சைஸாக இருக்கும் பொழுதிலிருந்து இன்று வரை ஒரு வாரம் கூட தவறாமல் வாங்கி வந்து கொண்டிருக்கிறான்.

அதிலிருக்கிற கதைகளும் துணுக்குகளும் ஜோக்குகளும் பிரபலம் என பல பேர் சொல்லி கேள்விப்பட்டும் உணர்ந்தும் இருக்கிறான்,ஆனால் இவனுக்குப் பிடித்ததெல்லாம் வருடத்திற்கு ஒருமுறை அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை புதிதாய் ஏதாவது ஒரு தொடர் புத்தம் புது முயற்சியாய் செய்து கொண் டிருப்பார்கள்,

வடக்கு மாவட்ட பக்கமிருந்து அறிமுக எழுத்தாளரின் எழுத்து என ரத்தமும் சதையுமாய் அப்பொழுதுதான் ஜனித்த புத்தம் புதுகுழந்தையாய் ஒரு தொட ரை இறக்கி வைத்தார்கள்,அது வயலும் காடும் தோட்டமும் அது சார்ந்த ஊழைப்பாளிமக்களையும் அவர்களது குடும்பப்பாடுகளையும் பேசிச்சென்றது கொஞ்சம் ஒட்டுதலாக.

அது போல் தென் புற மண்ணிலிருந்து ஒரு எழுத்தாளர் எழுதிய சிறு கதை மற்றும் தொடர்கதை மனம் கவர்ந்ததாகவும் மிகவும் பிடித்துப்போனதாகவும் இருந்தது.

இது போலாய் அதில் வரும் கெள்வி பதில் பகுதியும் விஞ்ஞானம் சுமந்த இருப்பும் இன்னும் இன்னுமுமான பல பக்கங்கள் அவனைகவர அது கவர்ந் தது போல் வேறெதுவும் இவனை கவராமல் போக படிக்கிற பழக்கம் தொட ரட்டும்,என்கிற பிடிவாதத்துடன் வாங்கிய பத்திரிக்கை இன்று வரை கையில் இருக்கிறது,

அதன்ஈரமும்பசைதன்மையும் உயிர்ப்பும் இன்றும் அப்படியாய் இருக்க தவறா மல் வாங்கி வருகிறான்.

”எதுக்குடாஇதுக்குப்போயிகாசசெலவழிச்சிக்கிட்டுவெட்டியா,அதுக்குஏதாவது வாங்கித்தின்னாலாவது ஒடம்புல ஒட்டுமுல்ல என்கிற நண்பனிடம் அடப் போடாதின்னாலாவது தின்னாலாவதுன்னு நெறைய வாங்கி தின்னாச்சி, இனி வாங்கித்தின்ன ஏதாவது ஒரு புது ஐட்டமா கண்டுப்பிடிச்சாத்தான் உண்டு, சமையல் உலக சக்கரவர்த்திகள்கிட்ட சொல்லி செய்யச்சொன்னா சரியா இருக்கும்ன்னு நெனைக்கிறேன்” என சொல்லுவான் இவன்/

”போடா டேய் நீயி அந்தமானிக்க தின்னுட்டாலும் மிஞ்சி மிஞ்சி போனா டீக் குடிப்ப,வடைசாப்புடுவ,அதவிட்டாபன்னு,இல்லைன்னாவாழைப்பழம்இதுதான ஓங் வழக்கமா வெளிய வாங்கித்திங்குறதுல இருக்குற ஐட்டங்க, என்னமோ ஊரையே வளைச்சிப்போட்டு சாப்புட்டு அலுத்துப்போன மாதிரியில்ல பேசுற போடா டேய் போடா உண்மையிலயே சொல்லப்போன இங்க என்ன இருக்கு ன னே ஒனக்கு தெரியாது,,இதுலதின்னு அலுத்துப்போனானாம் அலுத்து,,/ போடா டேய் போடாஎன்னமாவது சொல்லீறப்போறேன்” என்பான் நண்பன்.

அவன்பதிலுக்குப்பேசுகிற போது,உண்மைதான்,அவரவர்கள் தேடித்தேடி போய் சாப்பிடுவதை பார்க்கிற போதும்சாப்பிடுவதற்கான அயிட்டத்தை தேர்ந்தெடுத் து சாப்புடுவதை பார்க்கிற போதும் கொஞ்சம் பொறாமையாகவும் கொஞ்சம் எரிச்சல் காட்டியும் ஆகிப் போகும்,

இது போக கல்யாண சமையல் சாதம் என சாப்பிடுபவர்களும் உண்டு, நான்கு இட்லி,இரண்டு தோசை, ஒரு பூரி செட்,இரண்டு வடை, ஒரு டீ,,,,, என சாப்பி டுவர்களும் உண்டு,எப்படி இப்படியெல்லாம் சாப்பிட முடிகிறது என்கிற ஆச்ச ரியம் ஒருபக்கம் இருக்க ஒருபக்கம் இப்படியும் சாப்பிட்டு செமிப்பவர்கள் மிகவும் கொடுத்துவைத்தவர்கள் என்பான்,

அப்படியாய் சாப்பிடுபர்களும் சாப்பிட வாய்க்கப்பெற்றவர்களும் மிகவும் கம்மி யாகத்தான் இருக்கிறார்கள் ,ஒன்று சாப்பிட வாய்ப்பிருப்பவனுக்கு கையில் பணம் இருப்பதில்லை,கையில் பணம் இருப்பவன் சாப்பிட முடிவதில்லை.

இப்படியானஈருகெட்டநிலைஇவனதுநண்பனுக்குவாய்த்தாய்ச் சொல்லுவான், அரசு அலுவலகத்தில் தற்காலிக ஊழியராய் வேலை செய்த போது பற்றாக் குறை சம்பளத்தில் சாப்பிடக்கூட வசதி வாய்க்கப்பெற்றதில்லை எனவும், இப் பொழுது வசதி வந்து விட்ட பிறகு சாப்பிட முடியவில்லை எனவுமாய் சொல் லுவான்,

சுருக்கமாக சொல்லப்போனால் அப்போது சாப்பிட வயிறு இருந்தது,சாப்பாடு இல்லை,இப்போதுசாப்பாடுவேண்டுமட்டும்இருக்கிறது,சாப்பிடவயிறுஇல்லை எனவுமாய் சொல்லுவான்.அவன்சொன்னசொல்உண்மைதான் என நிரூபணம் ஆகும் நண்பரைப் போல் இன்னும் சில பேரை சந்திக்கிற போது/

அப்பொழுதெல்லாம் பெரும்பாலுமாய் கலியூர்கடையில்தான்சாப்பிடுவான். கணக்கு வைத்து சாப்பிடுகிற அளவிற்கு பழக்கம்,

“பழக்கம் என்ன பெரிதாய், எங்களை வைத்து உங்களுக்கு சாப்பாடு,உங்களை வைத்து எங்களுக்கு காசு, என்பார் ,உங்களது மூலமாய் வருகிற ஒரு மாத வருமானத்தை பத்து பேர் வந்து சாப்பிட்டால்தான் பார்க்க முடியும். ஆகவே உங்களைப்போலானவர்களைசகித்துக்கொள்கிறோம்,தவிரஉங்களைப்போலா னவர்களி ன்நல்லமனமு ம் நல்ல எண்ணமும் நல்ல சிந்தனையும் எங்களைப் போலானாவர்களுக்குகூடுதல் ப்ளஸ் பாயிண்டாகவும் கூடுதல் தைரியமாவும் ஆகிப் போகிறது.”

”உங்களைப்போன்றவர்களின் நல்ல மனமும் நல்ல சிந்தனையும் இங்கு விரிகிற போது கடைக்கு வருகிற நான்கு பேர் கடையை கொஞ்சம் மதிப்புட ன் பார்க்கிறார்கள்.கடை வளர்ச்சிக்கும்,கடை விரிவாவதற்கும் இன்னும் கொஞ் சம் அது உதவியாய் இருக்கிறது,என அவர் சொல்லிக்கொண்டிருந்த நாட்க ளில் இவனுக்கு அறிமுகமான தந்தையின் நண்பரை கூட்டிக்கொண்டு ஒரு நாள் கடைக்கு சாப்பிடப்போனான் .

இவன்கொஞ்சம்வேகமாய்சாப்பிட்டுமுடித்துவிட்டான்.அவர்பதறாமல்சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.இவன் வெளியில் போய் விட்டு வருவதாய் சொல்லி விட்டுச் சென்றான்,

சென்ற வேலை கொஞ்சம் தாமதமாகிப்போக இவன் வருகிற போது அவர் கடைகல்லாஓரமாகஅமர்ந்திருந்தார்.கடைமுதலாளிதான்அமரவைத்திப்பதாகச் சொன்னார்,”ஏன் அவரை போகச்சொல்லியிருக்கலாமே” என முதலாளியிடம் கேட்ட போது அவர் கடையையும் வியாபாரத்தையும் பார்க்க வேண்டும் எனச் சொன்னதாகவும் சொன்னார்,

அனுப்பி வைத்தலுக்கும் இருப்பிற்குமான இன்மை அவ்விடத்தில் உறை கொண்டு தெரிய அவரை அழைத்துக்கொண்டு போனான்.

போகும் போது நண்பனின் அப்பா ஒரு ஹோட்டல் வைக்க வேண்டுமானால் எவ்வளவு செலவாகும் எங்கு வைத்தால் வியாபாரம் ஆகும்,அதற்கு பேங்கில் லோன் தருவார்களா என இன்னும் இன்னுமாய் நிறைய நிறைய கேட்டுக் கொண்டே வந்தார்.

அதைஅப்படியே தாங்கி ஏந்திக்கொண்டு போய் நண்பனிடம் சொன்ன பொழுது நீ இரு பேசாமல்,,,/அவரு இப்ப கொஞ்ச காலமா எதப் பார்த்தாலும் இப்படித் தான்பேசிக்கிட்டும்கேட்டுக்கிட்டுமாஇருக்கிறாரு,பெட்டிகடைக்குப்போனாலும் சரி டீகடைக்குப்போனாலும் சரி ,இல்ல வேற ஏதாவது ஒரு சின்ன கடையை பார்த்துட்டாலும்சரி ,அதை தான் செஞ்சி பார்த்தா எப்படி இருக்கும்,அதுக்காக பேங்க் லோன் கிடைக்குமான்னு விசாரிட்டு இருக்குறாரு,சமீப காலங்களா,,, நீ ஒண்ணும் கண்டுக்காதே அதப்பத்தி கேட்டா நல்ல படியா விசாரிச்சிச் சொல் றேன்னு சொல்லீட்டு ஒதுங்கிக்க,,,, வருசமெல்லாம் அரசின் அதிகாரம் செலுத்தும் பதவியில இருந்தவர்,நல்லதானாலும் கெட்டாதானாலும் முடிவெ டுக்கிற இடத்தில் இருந்தவர்,இப்பொழுதும் அப்படியேஇருக்க நெனைக்கிறாரு. அதுதான் பிராபளம் இப்பொழுது,அதை ஜெயித்து வந்து விட்டால் போதும் இப்போதைக்குங்குறநெலைமையிலஇருக்குறோம்நாங்க”/எனசொன்னநண்பன் இன்னும் சிறிது நேரத்தில் இங்கு வருவான்,டீ சாப்பிட/

பூத்துக்குலுங்குகிற மரங்களில் இருக்கிற பூக்களிடம்யார்பேசிஎன்ன அறிந்து கொள்ளமுடிகிறதுஎனத்தெரியவில்லை.

பூத்து நிற்கிற பூக்கள்,வளர்ந்து நிற்கிற மரம் கிளர்ந்து நிற்கிற இலைகள், மற்றும் மற்றுமான இன்னும் இன்னுமானவைகளுடன் உருக்கொண்டு நிற்கிற மரம் மரமாகஅல்லாமல் ஒரு அடையாளம் கொண்டு அந்தக்கடை முன்னாக நிற்கிறது,பூக்கிற மரம் காய்க்கவும்,காய்த்த மரம் கனியவுமான காட்சியை முன் நிறுத்திக் கொண்டு/

ராஜன் மாஸ்டர் போட்டுத்தருகிற டீக்கும் பெயர் தெரியாத ஒரு மாஸ்டர் சுட்டெடுத்துத்தருகிற வடைக்குமான தூரம் அந்த கடையில் வெகுவாய் வித்தி யாசம் கொண்டு தெரிந்ததாய் தெரியவில்லை.

ஒரு வடை சாப்பிட்டால் ஒரு டீ அல்லது டீக்குடிக்க போகும் முன் ஒரு வடை என்பது அங்கு டீக்குடிக்க வருகிறவர்களுக்கு முன் எழுதப்படாத சட்டமாயும் முன் வரைவாயுமாய் இருக்கிறது.

அந்தகடைக்குமுன்னாய் இருந்த பாய் கடையில் நின்றுவாரந்திரியை வாங்கிக் கொண்டிருக்கும் போதுதான் நண்பரும் தோழரும் உடன் பணி புரிபவருமான மகேஷ் கடந்து போகிறார் இவனை,

”என்ன சார் இப்பத்தான டீ சாப்பிட்டீங்க ஆபீஸ் முடியப்போற நேரத்துல, அதுக்குள்ள என்ன தேவை இருந்துற முடியுமுன்னு இன்னொரு டீ சாப்புட வந்துருக்கீங்க,”எனக்கேட்ட அவரை நோக்கி சொல்கிறான்.

இல்ல சார்,நான் டீக்குடிக்க வரல,இங்கன நண்பர்கள் சில பேர பாக்கறதுக்காக வந்தேன்,இங்க எனக்குன்னு சில பேரு இருக்குறாங்க,நட்பு கொள்ளவும் தோழமை பூக்கச்செய்யவுமா,/

அப்பிடியா இருக்குற நாங்க எல்லாரும் இங்க ஒண்ணு கூடுவோம்/அதுக்காக வர்றதுதானே ஒழிய டீக்குடிக்க வர்றது ஏங் நோக்கம் இல்லை.அப்படி வர்ற நேரத்துல டீக்குடிக்க வர்றது தவிர்க்க முடியாம போகுது.அவ்வளவுதான்.என ச் சொல்லியவாறே பேசிக்கொண்டிருந்த காட்சியை முடித்து அவரை வழிய னுப்பி வைக்கிறான்.

1 Oct 2014

லால் சலாம்,,,,,,


இன்னும் இன்னுமாய் இந்த நொடி வரை கூட உங்களது மனஉறுதியையும்,  திடத்தையும் நீங்கள் ஆற்றிச்சென்ற பணியையும் கண்டு வியக்கிறவனா யும்,,,,,,,,,.எட்ட நின்று பார்க்கிறவனாயும்,,,/

ஒருகுளிர்கால அதிகாலைப்பொழுதொன்றின் நகர்வில் மனிதர்களின் மென் நடமாட்டமிருந்தவேளையில்நீங்களும் நானுமாய் போஸ்டர் சுமந்து விருது நகர்வீதிபூராவுமாய்ஒட்டியது இன்னும் என் மனதின் ஊடறுத்துச் செல்கிற நிகழ்வாய்/

ஒட்டிய பசையின்ஈரம் இன்னும் காயவில்லை,கைகளில்/இருக்கி மூடிய கைகளைதிறந்துபார்க்கிறபோதுஉள்ளங்கைகளில்ஓடித்தெரிகிறரேகைகள் சொல்லிச்செல்கிற செய்திகள் பல பலவாயும்,முக்கியம் காட்டியுமாய்/

அப்பொழுதெல்லாம்எனக்குசைக்கிளில்ஒன் ஹேண்ட் டிரைவிங் தெரியாது. ஆனால்நீங்கள்நன்றாகஓட்டுவீர்கள்,ஒருகையில்பசை வாளியைப் பிடித்துக் கொண்டு இன்னொரு கையில் சைக்கிளை ஓட்டு கிறதங்களின்விரைவான அனாசியம் என்னை ஆச்சரியப்படுத்தியதுண்டு அந்தநாட்களில்/

அந்தஅனாசியம் இயக்கப்பணிகளுக்காய் என்பதை பின் நாட்களில் நான் புரிந்து கொண்டேன்/சற்று தாமதமாய் என வைத்துக்கொள்ளுங்களேன்/

அப்பொழுதெல்லாம்கூலிக்குபோஸ்டர்ஒட்டுகிறவர்கள்கிடையாது.அவரவர் இயக்கப்போஸ்டர்களை அவரவரே ஒட்டிக்கொள்கிற ஏற்பாடு தான் இருந்தது. சினிமா போஸ்டர் தவிர்த்து/

இப்பொழுது இருக்கிற புது பஸ்டாண்டும் அப்பொழுதுஇல்லைஎனநினைக் கிறேன்,தெப்பத்தின் இறக்கத்திலிருந்து ஆரம்பித்தால் மேலத் தெருவின் சந்து வழியாய் வந்து பொட்டல் சுற்றிலும்,பஸ்டாண்ட் மற்ற ,மற்ற ஏரியா க்கள் என நகர் நிரப்பி போஸ்டர் ஒட்டிவிட்டி விட்டு கடைசியாய் நாம் போய் சேர்கிற இடம் திரும்பவுமாய் பொட்டலில் இருக்கிற தேர் முட்டி யாய் இருக்கும்.

அங்கு நாம் போகிற வேளைகையிலிருக்கிறபோஸ்டர் எல்லாம் குறைந்து மிஞ்சி இருக்கும் ஒன்று அல்லது இரண்டு போஸ்டர்களை தேர்முட்டியை சுற்றிலுமாய் சுவராய் உயர்ந்து நிற்கிற தகரத்தில் ஒட்டி விட்டு அங்கிருக் கிற கடையில் டீ சாப்பிட்டு விட்டு வருவோம்/ கொஞ்சம்வசதிப்பட்டால் ஒருசெட்பூரி கூட கைகோர்க்கும்.

நகரில்இரவுமுழுவதுமாய்விடியவிடியதிறந்திருந்தடீக் கடைகளில் அதுவும் ஒன்றாய்/

எத்தனைதான் இருந்தாலும் நம் ஏரியா முருகன் ஹோட்டலுக்கு இணையா காது.அந்தஹோட்டலின்ஓனர்டீப்பட்டறையின்மாஸ்டர்செல்வம்இருவரும் நமக்காகவும்நம்இயக்கம் சார்ந்த பணிகளுக்காகவும் மட்டுமே அங்கு கடை வைத்திருந்தது போலவும்டீஆற்றியது போலவுமாய் ஒருமாயத் தோற்றம் கிடைக்கும்.அந்நாட்களில்/

புதியவானமும்புதியதொருபூமியும்கைவரப்போவதாய்அல்லதுகைவரப் பெற் றதாய்நீங்கள்,நான்,ஜே.ஜே,எஸ்தீக்கதிர்ராஜேந்திரன்,சந்துரு,கெரோக்கண்ணன், முருகன்,பாண்டியன்,அசட்டுச்சீனிமற்றுமானநண்பர்களுடன்பேசிக்கொண்டும் உறவிட்டுக்கொண்டுமாய்அங்கு கூடிய நாட்களின் நூற்பில் உருப்பெற்றும், பிள்ளையார் சுழியிட்டுமாய் அங்கு சுழியிட்ட இயக்க வேலைகள் பல,பல/

அதில்ஒன்றுதான்கிராமம் தோறுமாய் சென்று சைக்கிள் பிரச்சாரம் செய்து இயக்கத்தின் கொள்கைளை பறை சாற்றுவது, என திட்டமிடுகிறோம். கிளம்பினோம் அதன் படி.

கிட்டத்தட்டஇருபதிற்கும்குறையாதசைக்கிள்கள்இருக்கும்.சைக்கிளின்ஹேண் டில் பாரில் கட்டப்பட்ட கொடியுடனும், கோஷங்கள் தாங்கிய தோழர்களு டனுமாய் சென்று வந்த சைக்கிள் பிரச்சாரப்பயணத்தின் ஊடுபாவான நிகழ் வாய்ஆரம்பிக்கப்பட்டநிஜநாடகக்குழுவில் நீங்கள் பங்கேற்றதாய் நினைவு,

மன்றத்தில்அருகிலுள்ளவீதியில்பயிற்சி முடித்து வடமலைக் குறிச்சி வரை சைக்கிளில் சென்று அந்த குளிர் கால இரவில் விரிந்துக்கிடந்த வீதியில் நாடகம் நடத்திவிட்டு வந்தோம்,

அந்நினைவுகளும்,நிஜமுமாய்மனம்நிறைந்துகிடக்கையில்பணிநிமித்தமாயும், பிழைப்புநிமித்தமாயும்பயணப்பட்டு ஆளுக்கு ஒரு பக்கமாய் பிரிந்து போய் வருடங்கள் கழித்து உங்க ளை திரும்பப்பார்த்தசமயம் நீங்கள் இயக்கத்தின் முக்கியப்பொறுப்பில் இருப்பதாய் அறிந்தேன்.

சந்தோஷம்,வாழ்த்துகள்எனகூறிக்கொள்கிறவனாய்ஆனநான்எப்பொழுதாவது, என்றாவதுநான்சார்ந்ததொழிற்சங்கம்சார்ந்தபணிநிமித்தமாய் அல்லது அதன் தாவா சம்பந்த மாய் தங்களைப்பார்க்கிற நேர்ந்ததுண்டு. 

அப்படியானதருணங்களில்ஆழமான தங்களின் பேச்சும் கருத்தும், ஆலோச னையும் என்னை ஈர்த்ததுண்டு. 

அந்தஈர்ப்புடன் பல நேரங்களில் பல சந்தர்ப்பங்களில் பல கூட்டங் களில், பலதெரு முனைபிரச்சாரத்தில் தங்களைப்பார்க்கவும் தங்களது பேச்சுகேட்க வுமாய்நேர்ந்ததும் உண்டு,

அந்தப்பேச்சும்தெளிவும்கம்பீரக்குரலும்,கொள்கைமுழக்கமும்,கோஷமும் காதுகளிலும்,மனம் முழுக்கவுமாய்ஆக்ரமித்துக்கொண்டிருந்தவேளை தங்க ளுக்கு உடல் நலமில்லை, மருத்துவமனையில் இருக்கிறீர்கள் என செய்தி சொன்னார்கள்தோழர்கள்,செய்தியின்கனம்அறியசொன்னதோழர்களைசற்றே நெருங்கிப்போய்க்கேட்ட போது .ஆமாம் தங்களுக்கு புற்று நோய் என்றும் அதற்கானமருத்துவம் பார்க்கவே நீங்கள்மருத்துவமனை சென்றிப்பதாயும் செய்தியை நிஜப்படுத்தினார்கள்.

அன்றுஒருஅதிகாலைவேலையிலாய்அவர்கள்நிஜப்படுத்தியசெய்தியின்வீரிய த்தை, கனத்தை உடைத்து மருத்துவம் முடிந்து வந்து  வழக்கம் போல் இயக்கப் பணியாற்றிக்கொண்டிருந்தீர்கள் இந்த ஒரு வருடமாய்.

தெரியும்எங்கள்எல்லோருக்கும்,இன்னும்,இன்னுமானபலபேருக்குமாய்.ஆறாத ரணத்தையும் அதன் அழியாத அதன் சுவட்டையும்உடலினுள்ளாய்தாங்கிக் கொண்டு நீங்கள்இயக்கப்பணிய்யாற்றிக் கொண்டிருந்த நாட்கள் ஒன்றின் நகர்வில்தான் தங்களது முகநூல்ப்பதிவில் சாகும் வரைபுத்தகம் படிப்பதே என்னைதெளிவாக்கும்எனச்சொல்லியிருந்தீர்கள், 

அப்பொழுது நெருடியமன நெருடலுடன் சாத்தூர் ஆஸ்பத்திரியில் இருந்த தங்களைவந்துபார்க்கிற மன தைரிமற்று இருந்தநாட்களின் நகர்வொன்றில் தான் தாங்கள் மரணித்துவிட்டதாய் செய்தி வருகிறது.

மண் பிளந்து துளிர்த்து வளர்ந்து கிளைபரப்பி பூவும் பிஞ்சும்காயும்கனியுமாய் இருந்த மரம் ஒன்று விதைகளை இம்மண்ணின் பரப்பில் ஆழ பதிய னிட்டு விட்டு மரணித்துப்போனது எங்களின் பேரிழப்பே,,,,

இழப்புகள் அனைவரின் வாழ்வில் வருவதுதான் என்றாலும் கூட அதை தாங்கி ஏற்றுக்கொள்வது சற்று கடினமாகவே/

தோழர் சேகர் அவர்களே,தங்களுடன் சைக்கிள் பிரச்சாரப் பயணத்திலும், இன்னும் இன்னுமான பிற இயக்கப்பணிகளிலும் கலந்து கொண்டு என்றோ பணியாற்றிய நாட்கள் இன்று ஏனோ நினைவின் ஊடறுத்துப் போகிறதாய்,,, 

இழப்பை எண்ணி கலங்குவது தோழனுக்கு அழகல்ல என்கிற சொல் நினைவு க்கு வருகிற இத்தருணத்தில் தங்கள் மரணத்தை எண்ணி மனம் கலங்காமல் இருந்து விட முடியவில்லை,

சென்றுவாருங்கள்தோழர்,

உங்களது உடல் மதுரை மருத்துவக்கல்லூரிக்கு தானமாய் வழங்கப்பட்டிருக் கிறது.மரணித்தபின்னும் பயனுக்குண்டாகிற மனிதராய் நீங்கள் அடையாளப் படுகிறீர்கள்/

லால்சலாம்,,,,,

லால்சலாம்,,,,,

லால் சலாம்,,,,,/