4 Nov 2010

ஜவ்வு மிட்டாய்

  


             பள்ளிப்பருவத்தில் ஜவ்வு மிட்டாயை பார்க்காதவர்கள் யாரும் இருக்க முடியாது நம்மில்.

       அதன் இருப்பும்அதன் நிறமும்,அதன் வர்ணங்களும் நம்மை எளிதில் கவர்ந்து விடும்தான்

      ரோஸ்,சிவப்பு,மஞ்சள்,பச்சை,அதனூடாக வெள்ளை எனஅடர்த்தியாக
சுற்றப் ப ட்  டிருக்கும்
அதன்மேல் பாலிதீன் பேப்பர் போட்டு கட்டியிருப்பார்கள்.

      அந்த ஜவ்வு மிட்டாயை சுமந்தவாறே வரும் வியாபாரியையும் ,அவர் ஊதி வரும் தகரப் பீப்பியின் சப்தத்தையும் கேட்டதுண்டா அண்மைகாலத்தில் யாராவது?
     ஒரு வெயில் நாளின் நகர்வினூடாக நான் பார்த்தேன்.நல்ல பசி நேரம் மதியம் ஒரு மணி இருக்கலாம்.ஒரு கல்யாணத்திற்கு போய்விட்டு வேகமாக வந்து கொண்டிருந்தேன்.(கல்யாண வீட்டில் சாப்பிடும் பழக்கம் என்னை விட்டு காணாமல் போய் நாட்கள் அனேகம்
ஆகிவிட்டிருந்தது.காணாமல்ப்போன ஜவ்வு மிட்டாய் மாதிரி)

நீண்டு,விரிந்து,நகர்ந்த சாலையின் அதிர்வு மிகுந்த திருப்பத்தில் பிளாட்பார ஓரமாய் அமர்ந்திருந்த டீக்கடையில் டீக்குடித்துக்கொண்டிருந்த அவரது தோளில் சாத்தியபடி ஒரு
கம்பு உயரமாய்.
    கம்பு நுனியில் மொந்தையாய் சுற்றப்பட்டு தெரிந்த ஜவ்வுமிட்டாய்./அந்த டீக்கடை,
அங்கிருந்த கூட்டம்,சாலையின் நகர்வு.கடையின் ஸ்பீக்கரில் வழிந்த நல்லதொரு காதல்
பாடல்,எல்லாவற்றையும் மீறி எனது கவனம் ஜவ்வு மிட்டாயின் மீதும்,ஜவ்வு மிட்டாய்
வியாபாரியின் மீதும்.
     ஜவ்வு மிட்டாய் வியாபாரிக்கு வயது நாற்பது இருக்கலாம். பேண்ட்,சர்ட் போட்டிருந்தார். சுண்டினால் கன்றிப் போகும் அளவு இல்லையென்றாலும் சிவப்பாக இருந்தார்.        ஒழுங்காக படியவாரப்பட்ட தலை,செதுக்கிய மீசை,மளு,மளுவென்று ஷேவிங்க் செய்திருந்த முகத்தில் எண்ணெய் வழிந்து களைப்புடன் காணப்பட்டார்.     எந்த பரபரப்புமற்று ,அடிக்கும் வெயிலையும், புழுங்கும் வெப்பத்தையும் பொருட்படுத்தாதவராய் டீசாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

   தான் பக்கத்து ஊர்தான் என்றும், அங்கிருந்து சைக்கிளில் மிட்டாயை விற்றவாறே வருகிறேன் என்றும் கூறிய அவர் வியாபாரம் பரவாயில்லை என்றார்.     நான்,மனைவி,இரண்டு பிள்ளைகள் நால்வருக்குமாய் சேர்த்து மிட்டாய் கேட்டு பணம்
நீட்டியபோது கையிலிருந்த தகரப்பீப்பியை கீழே வைத்துவிட்டு கொஞ்சம் பிய்த்துக் கொடுத்தார்.
     சின்ன வயதில் கொடுக்கப்படும் ஐந்து பைசாவிற்கு ஜவ்வுமிட்டாயிலேயேவாட்ச்,

மோதிரம்,வளையல் என கையிலேயே கட்டி விடுவார்கள் .இப்போது விலைவாசி ஏறிப்போனதால் இவ்வளவுதான் தரமுடிகிறது என்றார்.அவர் மீதும்
குற்றம் சொல்ல முடியாது.அவரும்தான் என்ன செய்வார் பாவம். கட்டுபடியாகவில்லை
என்கிறார்.
    ஆமாம் இப்படி சொல்பவர்களும், கையில் வாட்சும்,மோதிரமுமாக கட்டிவிடும் வியாபாரிகள் யாராக இருக்கிறார்கள்.     தெற்கு பாஜாரில் உள்ள கொண்டல்சாமி கடையிலும் பெரியசாமிகடையிலுமாய்
சரக்கு வாங்கி ,அவரே சொந்தமாய் தயாரித்த ஜவ்வுமிட்டாயைஉங்களதுபிள்ளைகளிடமும்,

எனது பிள்ளைகளிடமும் விற்று தனது வாழ்க்கைக்கான வருமானம் ஈட்டும் நம் ஊர்க்காராக, நமக்குத்தெரிந்தவராக,நம் உறவினராகத்தானே இருக்கிறார்கள்.        இப்படிநமதுவாழ்வியல்முறைகளோடும்,நமதுகலாச்சாரத்தோடும், அன்றாடங்களின்
நகர்தலோடும் ,பின்னிப்பிணைந்த,ஒட்டி உறவாடிய அந்த ஜவ்வுமிட்டாய் வியாபாரியின்
மனங்களோடு இன்னும் கொஞ்சம் நெருக்கமாவோம்.
        அவர்களுடன் உறவை வளர்த்துக் கொள்வோம்.அவர்கள் தயாரித்த பொருட்களை
வாங்குவோம்.வாங்கப்பழகிக் கொள்வோம்
    

            இதோ வெயிலுக்காக டீக்கடையோரமாய் ஒதுங்கி நிற்கிற ஜவ்வுமிட்டாய் வியாபாரி
கூப்புடுகிறார். என்னவென கேட்டுவிட்டு வருகிறேன்.


 

2 comments:

அகல்விளக்கு said...

நிதர்சனமான உண்மை....

சிறகடிக்கும் சிட்டுக்குருகளைக் கூட நாம் தொலைத்துக் கொண்டிருக்கிறோம்...

vimalanperali said...

nanri sar