20 Nov 2010

காக்காச் சோறு.

                   


        அந்தகாக்கைகளுக்குத்தெரியுமா,இழவுவீட்டின்மேல்சோற்றுக்காக
உட்காரக் கூடாது என.?
இளம் மனைவி.இரண்டு பிள்ளைகளை விட்டு இறந்து போன அவனுக்கு 35 வயது இருக்கும்.
     ஆண்பிள்ளைக்குஐந்துவயதுஇருக்கும்படிக்கிறாள்.பெண்பிள்ளை
கைக்குழந்தை.
    அன்பும் காதலும் நிறைந்த,மனைவியையும்,பிள்ளைகளையும் அனாதரவாய் விட்டு இறந்து போகிறான்.ஒரு வாரம் முன்பு நடந்த பஸ் விபத்தில் ஆறு நாட்கள் ஆஸ்பத்திரியில் துடித்து விட்டு,ஏழாவது நாள் இறந்து போகிறான்.
     நல்ல மனைவி.நல்ல குழந்தைகள் வாய்த்த அவனுக்கு ஆயுசு நிலைக்கவில்லை.என ஊரில் பேசிக் கொண்டார்கள்.
   அந்த வீட்டை நிறைத்த சோகம் ஊரையும் பற்றிக் கொண்டது.அந்த வீட்டிற்கு துக்கம் கேட்டு வராதவர்கள் இல்லை ஊருக்குள்.அப்படி வருகிற எல்லோரிலும் ஆணும் உண்டு பெண்ணும் உண்டு.
     பெண் இழவு வீட்டிற்குள்ளேயே அமர்ந்து விடுகிறாள்.வயதானவளானால்  ஒப்பாரியில் சேர்ந்து கொள்கிறாள். இளம் பெண்ணானால் சோகமாய் அமர்ந்து விடுகிறாள்.ஆண் வீட்டிற்குள் போகிறான்.வெளியில் வருகிறான்.
   வீட்டின் நான்கு முனைகளிலும் இழுத்துக் கட்டப் பட்ட தார்பாய். அதன் கீழ் நின்று மேளம் அடிப்பவர்களின் மேல ஓசை.தெருவின் இரண்டு ஓரங்களிலும் போடப்பட்டிருந்த மரபெஞ்சுகள்,சேர்கள்,அவற்றில்நிறைந்துதெரியும் மனிதர்கள்.
     சாவு வீட்டை விட்டு சற்றுத் தள்ளி கட்டப் படும் தேர்,கொள்ளிச் சட்டி எல்லாவற்றையும்பார்க்கிறான்.கூடவேஅந்தகாகங்களையும் பார்கிறான்.
    கழுத்தில் வெள்ளை விழுந்த காகம் ஒன்று,உடல் முழுவதும் கருப்பாய் ஒன்று.தலையை,அங்கிட்டும்,இங்கிட்டுமாய் சாய்த்தவாறு பொசுக்,பொசுக்கென விழித்துக் கொண்டு நிற்கிறது இரண்டும்.அதைவிரட்டவில்லை யாரும்.அதை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை எவரும்.
   அவரவர்காரியம்அவரவருக்கு.வந்தார்கள்,காரணகாரியம்கேட்டார்கள்.
சோகப்பட்டார்கள்.அனுதாபத்தைபகிர்ந்து கொண்டார்கள்.போய்விட்டார்கள்.
   ஆனால் யாருமே காகங்களை கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.
அப்படியே கண்டுகொண்டாலும்,அவைகளின் பக்கம் கவனம் செலுத்துவது அநாகரீகம் என நினைத்துக் கொண்டார்கள்.
   கறுப்பாய் சாம்பல் நிறகழுத்துடன் ஒண்ணரை அல்லது இரண்டு சாண் நீளமும்,ஒரு சாண் உயரமும்,குச்சிக் குச்சியான கால்களும், சின்ன உருண்டை கண்களும்,ஒண்ணரைஇஞ்சிவாயும்கொண்டுநம்மை சினேகமாயும்,
அப்பாவித்தனமாயும்,மிகுந்த ஜாக்கிரதை உணர்வுடன் பார்க்கும்,நடமாடும் அந்த சின்ன ஜீவன்களுக்கு ஒரு கவளம் சோறே  உயிகாக்கும் உணவு.  
    அதைத் தேடித் தானே அவைகள் அங்கே.அவைகளுக்குத் தெரியுமா?உணவு தேடி ஊருக்குள் வரும்பொழுது அந்த இழவு வீட்டின் கூரையில் உட்காரக் கூடாது என.கத்தக் கூடாது என.
      முன்பெல்லாம் ஏதாவது விசேஷ நாட்களில் காக்காய்க்கு சோறு வைப்ப தென்றால் சோற்றை கையில் வைத்துக் கொண்டு காக்காய் வாராதா,வராதா என காத்திருப்பார்கள் மனிதர்கள்.
     சில சமயங்க்களில் காக்காய் வராமல் சோறு காய்ந்து  போகும்.இப்பொழுது காக்கைகள் சோற்றுக்காகவும் சோறு வைக்கும் மனிதர்களுக்காகவும் காத்திருக்கின்றன.
     முன்பெல்லாம் தோட்டங்காடுகளில்,வயல்களில் தானியம்,தவசிகள் விளைந்து கிடக்கும்,அவைகளே அந்த காகங்க்களுக்கு போதுமானதாய் இருந்தன.
  இப்போதுஅந்ததானியம்,தவசிகள்,காடுகரைகளில் இல்லை.விளைச்சளில்லை.
  ஏன் அப்படி பருவ மழை முறையாக பெய்யவில்லை.அதானால்தான் என்கிறார்கள்.அப்படிப் பார்த்தால்  “நன்செய்”பாசன விவசாயமும் கிட்டத்தட்ட “குளுக்கோஸ்” ஏற்றப்பட வேண்டிய நிலையில்தானே உள்ளது?
   விவசாய விளை பொருளுக்கு கட்டுபடியாகாத விலை,ஏறிப் போன கூலி,மற்றும் நிலங்களை கட்டுப் படுத்தும் ரசாயன உரங்களும்,அத்தோடு சேர்த்து பருவமழையும் என்கிறார்கள் விவசாயிகள்.
      இவைகள்தான்விவசாயம்வாழவும்,தாழவும்காரணமாக இருக்கிறது
என்கிறார்கள் சாதாரண கிராமத்து விவசாயிகள். அப்படியான அவர்களது கூற்றும்,நிஜமுமாக சேர்ந்து கைகோர்த்து இனி விவசாயம் செய்து பிழைக்க முடியாது என நம்ப வைக்கிறது அவர்களை.
    அந்த நம்பகத்தன்மையின் வெளிப் பாடுதான் இன்று வீட்டுமனைகளாக உருவெடுத்து விட்ட விளை நிலங்கள்.
    அப்படியான விளைநிலங்களில் பறந்து திரிந்து தானியம்,தவசிகள் ஒன்றுமற்று ஏமாந்து போய் ஊருக்குள் வருகிற காகங்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே வருகிறதுதான்.
    அப்படி வருகிற காகங்களுக்கு சில சமயம் ஒரு கவளம் சோறும்,பல சமயங்களில் அதுவும் கிடைக்காமல் போகிற அவலமும் ,சோகமும் ,நிகழ்ந்து விடுகிறதுண்டு.
     இன்று காகங்களுக்கு ஏற்பட்ட சோகம் நாளை நமக்கும் ஏற்பட்டு விடுமோ என்கிறஅச்சம்சின்னதாகவேனும்ஏற்படுகிறதுதான்நண்பரேநம் மனதினுள்ளாக.
    அந்த அச்சம் நியாமாகிப் போகிற பட்சத்தில் நாளை காக்கைகள் இருந்த இடத்தில் நாம் இருப்போமோ என்கிற கேள்வியும் எழாமல் இல்லை.
  














4 comments:

காமராஜ் said...

உனது தொகுப்பில் முக்யமான கதை இது.

vimalanperali said...

வணக்கம் காம்ஸ்,பதிவுகள் இழுத்துச் செல்லும் பாதையில் நான் செல்வாதாக தெரிவதும்,உணர்வதும்,சுகமாகவே உள்ளது.

தமிழ் உதயம் said...

உண்மையான கவலை. காக்கைக்கு மட்டுமல்ல நாளை நமக்கும் அதே நிலை தான்.

vimalanperali said...

வணக்கம் தமிழ் உதயம் சார்,உங்களின் கருத்துக்கு.