6 Jun 2011

ப்ளாங்கி,,,,,,,




                 




  


தரையை பெருக்கும்போது அவர்களை பற்றியதான நினைப்பு வருகிறது எனக்கு.
வீட்டின்பக்கவாட்டாகஇருந்தவெட்டவெளியில்நின்ற வேப்பமரம்,
புளியமரம்,பன்னீர்மரம், அசோகமரம் என வகைக்கொன்றாய் இருந்த இடத்தைதோட்டம்என்றோம்.
     மரங்களின் இலைகள் பச்சையாயும், மஞ்சளாயும், பழுத்தும்
காணப்படுகிறது.மண்பிளந்து,துளிர்த்து,வளர்ந்து,கிளைபரப்பி பூத்து
காய்க்கிற சமயங்களில் இப்படியான உதிர்வுகளை அவை
எதிர்பார்த்திருக்குமா தெரியவில்லை.
    மண்ணும் ,கல்லும், இலைகளும்,பூவும் தூசியுமான வெளி எதை சொல்லி அழுத்துகிறதெனவும் பிடிபடவில்லை.
    நாற்பது பவுன் நகை,நாற்பதினாயிரம் ரொக்கம் என்றார்கள்.அந்த காலத்தில்அதுபெரியவிஷயம்தான்..வீட்டின் ஒரே பெண் வாரிசு .
வழி வழியாக கொண்டுவந்த நகைகளை வைத்து பணத்தை எப்படியோ புரட்டிகட்டிக்கொடுத்தார்கள்.
        “கா காசுன்னாலும் கவர்மெண்ட் உத்தியோகம்” என்கிற    

    சொல்லாடல் மயக்கத்திலும்,அழுத்ததிலுமாய் செய்துவித்த திருமணம்    
    இப்போது பஞ்சாயத்தில் நிற்கிறது.
        கூட்டிஅள்ளும்உதிர்ந்தபூக்காளாய்,இளைகளாய் தூசியாய்,கல்லாய்,
    மண்ணாய் அவளது வாழ்க்கை சிதறுண்டு.

       அவள்,அவள்எனச் சொன்னது அவளது தங்கையைப் பற்றி.
   
          சொன்னவளுக்குவயதிருக்கலாம்முப்பதிலிருந்துமுப்பத்தி
   இரண்டிற்குள்ளாக.
        சிவந்த  நிறம்,களையான முகம்,ஆளை அடிக்கிற அழகு என      
   இல்லையென்றாலும்பார்க்கபாந்தமாகத்தெரிந்தாள்.அணிந்திருந்த  
   சேலையும், ஜாக்கெட்டும் மேட்சிங்கற்று குப்கலர்களில் சாதாரணமாக.  
   எண்ணை வழிந்திருந்த முகத்தில் ஸ்டிக்கர் பொட்டை ஒட்ட
   வைத்திருந்தாள்.அரைகுறையாக இருந்த கூந்தலை அவசரகோலத்தில்
   அள்ளிமுடிந்திருந்தாள்.
   பேச்சிற்குதக்கவாறு கைகளின்அசைவும், முகபாவனையும்.
  ”அவளுக்கு ஒரு வழிபண்ணனுமில்ல” என்றவாறு  உள்ளே
   நுழைகிறாள்.
        அவள் எங்களது வங்கியின் வாடிக்கையாளர்.
   கட்டிடத்தின் முகப்பில் நின்ற கம்பிகேட்,அதைதாண்டிய மரக்கதவு,  
அதையும் தாண்டி வந்தால் கண்ணாடி கிளாஸ் போட்ட நீளமான மரக்கவுண்டர்.அது வங்கிகளுக்கேயென கண்டுபிடிக்கப்பட்டது போலும்.
     அதன் பின்னே அமர்ந்திருக்கும் நான்.கிளார்க்,மேலாளர் என நீண்டிருந்த  சின்னதான வரிசை.
    அவள் என்னை நோக்கிதான் வந்தாள்.நான் பொதுவாகவே நான்,எனது என மட்டும் இல்லாமல் பதினைந்து அடி நீள கவுண்டரில் இருக்கும் மூன்று கம்யூட்டர்களிலும் மாறி,மாறி வேலைபார்ப்பவனாக இருப்பதால் அலுவலகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் எல்லாம் என்னை நோக்கியே.
      அவளும் அது மாதிரிதான். அவளது எண்ணம்,அதன் மீதான் படர்வு அவதானிப்பு எல்லாம் சுமந்தவளாய் வந்திருக்க வேண்டும்.
     வீடு,வீடு தாண்டி நடை,நடை தாண்டி நீண்டு கிடந்த தெரு,தெருவில் கால் பதித்த மனிதர்கள்,மனிதர்களின் தடம் வாங்கிக்கிடந்த மண்,மண்கீறி ஓரங்களில் முளைத்துக்கிடந்த பச்சைகள் என எல்லாவற்றின் மீதிலும் தனது எண்ணப் படர்வுகளை படரவிட்டவாறும்,போர்த்தி எடுத்தவாறும் வந்திருக்க வேண்டும்.
      துருவேறியகம்பிக்கிராதிகளும்,அழுக்கேறி நின்ற மரக்கதவும்,எனக்கு முன்னாலிருந்த மரக்கவுண்டரும் அதையே முன் மொழிந்தது.
     எத்தனைநாள்நினைவோ,எத்தனை நாள் சுமத்தலோ?அதையெல்லாம் ஒன்று திரட்டி ஒற்றை சொல்லாக இறக்கி பிரயோகித்து விட்டாள்.
     எல்லாம்பூபதிசம்பந்தப்பட்ட பிரச்சனையாய்த்தான் இருந்தது.அவளது தங்கை மாப்பிள்ளைதான் பூபதி.

   
     








         பூபதிநேற்றுகூடபேசினான்.அண்ணேஎங்கஇருக்கீங்க,
ஆஸ்பத்திரியிலயாஎன்றான் செல்போனில்.
“என்னது இது ஆரம்பப்பேச்சே அபசகுணமாக இருக்கிறதே”?என்கிற சலிப்பில் “என்னண்ணே,என்னவிஷயம்”? என்கிறேன்.”ஹார்ட் ரொம்ப வலிக்குதண்ணே.விருதுநகர் பஸ்டாண்டுல இருக்கேன்.இனிமேதான்   ஆஸ்பத்திரிக்கு போகணும்னே”, என்கிறான். முழுதண்ணியில் இருந்தான்.
அவனதுஅளவுக்கு“முழு”என்பது எவ்வளவு எனத் தெரியவில்லை.அது எப்படி என தண்ணியில் கற்று தெளிந்தவர்களிடம்தான் கேட்க வேண்டும்.எண்ணனே,என்ன சொல்றீங்க?என்கிற அதட்டலான  குரலோடு  போனை கட் பண்ண சொல்லிவிட்டு ராமராஜீக்கு போன் பண்ணினால் அவனைப்பற்றிய அவரது பேச்சின் பதிவு வேறுமாதிரியாக இருந்தது.
   “அவனுக்கு நெஞ்சு வலியும் இருக்காது,.........இருக்காது.எவனாவது கடன் குடுத்தவன் தேடி வந்திருப்பான்,தொந்தரவுக்கு ஆத்தமாட்டாம இங்கிட்டுதப்பிச்சுவந்திருப்பான்.தண்ணியை போட்டிருப்பான்.
    ஆபிசுலயிருந்துதப்பிச்சுவந்ததுக்குஏதாவதுசாக்கு வேணுமில்ல.
அதான் ஓங்கிட்ட இப்படி பேசியிருப்பான்” என்றார்.
    “அதுசரிஒனக்குஎதுக்காகபோன் பண்ணுனான்,நெஞ்சுவலின்னா நேரா ஆஸ்பத்திரிக்கு போறத விட்டுட்டு,க்ளாஸ் போர் எம்ப்ளாயி பூராம் இப்படித்தானப்பா இருக்கீங்க.மொதல்ல அவன் பொண்டாட்டிய
விட்டு நாலு மிதி மிதிக்கச் சொல்லணும் அவன அப்பத்தான்
உருப்படுவான் ராஸ்கல்”
“இல்ல அவனப் பத்தி முழுசாஒனக்குத் தெரியாது.வாங்குற சம்பளத்தப்
பூராவும்தண்ணியடிச்சு தொலைச்சிட்டு வெளியிலகடன் கப்புன்னு
அலைஞ்சா?அவன்அலையிறதுமட்டுமில்லாமஅவன் வீட்டுக்காரிய
விட்டு என்னையமாதிரி ஆள்கள்ட்ட கேட்க விடுறது,அது பாவம்
அப்புராணி.வாய்திறந்தா நாலு வார்த்தைக்கு மேல பேசமாட்டேங்குது
அது அவனுக்கு ரொம்ப செளகரியமாப்போச்சு”என்றார்.
    ராமராஜ் பூபதியுடன் வேலைபார்க்கும் கிளார்க்.
பூபதிக்கு போன் பண்ணினேன் மனசு கேட்காமல்.எதிர்முனையில் அவன் போதை கலையாமல் பேசினான்.இப்ப ஒண்ணுமில்லண்ணே,
ஆஸ்பத்திரிக்குப்போயி ஊசிபோட்டுட்டு கிளம்பீட்டு இருக்கேன்.ஒங்கள “ட்ஸ்ட்ரப்” பண்ணுனதுக்கு  சாரிண்ணே என முடித்தான்.
அவன்பேச்சினது முடிவின் தொடர்ச்சியாகஅவள் வந்திருக்க வேண்டும் இப்பொழுது.
நேத்து இங்க வந்திருந்தாராமில்ல?,என பேச்சை மாற்றும் விதமாக கேட்டேன்.ஆமாம் வந்திருந்தாரு,வந்திருந்தாரு,அவரு வந்த வரவப் பாத்தா நாய் கூட என்னானுகேட்டிருக்காது.அப்படி ஒரு மணத்தோடவந்தாரு,
நெற தண்ணியோட ரோட்ல கெடந்தவர எங்க வீட்டுக்காரருதான் தூக்கீட்டு வந்தாரு.வந்த கோவத்துல செருப்புட்டு நாலுபோட்டு படுக்க வச்சாரு,அன்னைக்கு பூராம் புள்ளைங்க சாப்புடல, தூங்கல,வெளையாடல இவரையேவெறிச்சு,வெறிச்சு பாத்துட்டு நின்னுக்கிட்டு இருந்துச்சுக,
    நல்ல அழகு வாஞ்ச புள்ள,அப்புராணி புள்ள,சீரழிச்சுட்டாரு,இனியும் அவருகூட வாழனுமா அவன்னு பேசிமுடிக்கப் போறம் இன்னைக்கு.
   
   “வருசமெல்லாம் சோத்துக்கும்,துணிமணிக்கும்,கைசெலவுக்கும்,இவன்ட்ட லோல்பட்டு,புடுங்குப் பெத்து,சீரழிஞ்சு,சின்னாபின்னபட்டு,கருமாயப்பட்டு அலையுறதுக்கு ஒரேயடியா எங்க வீட்ல வந்து இருந்துட்டு போகட்டும்னு பேசலாம்ன்னு இருக்கோம்”.என முடித்தாள்.













5 comments:

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
குடி சீரழிக்கிறது.

vimalanperali said...

வணக்கம் ரத்தினவேன்சார்.நலம்தானே?உங்களது வருகைக்கும் கருத்துரைக்குமாக நன்றி.

கணேஷ் said...

பத்திக்கு பத்தி கொஞ்சம் இடம் விட்டு எழுதலாமே..படிக்க எளிதாக இருக்கும்...

'பரிவை' சே.குமார் said...

நல்ல பதிவு.

vimalanperali said...

வணக்கம் சே.குமார் சார் நலம்தானே?உங்களதுவருகைக்கும்கருத்துரைக்குமாய் மிக்க நன்றி.