சிதறிக்கிடந்த அரிசி
பத்து கிலோவிற்கும்
குறையாமல் இருக்கலாம்.
அரிசியும்,மண்ணும்,
அழுக்கும்,புழுதியுமாய் சேர்த்து/
புகை வண்டி நிலையத்தில்
சரக்கு வண்டிகள் நிற்கிற
இருப்புப்பாதை ஓரத்தில்
சிதறிக்கிடந்த அரிசி
மூட்டைகளுள் குடிகொண்டிருந்த
போது அங்கிருந்து ஏற்றுமதியானதா
அல்லது எங்கிருந்தாவது
இறக்குமதியானதா தெரியவில்லை.
எத்தனை பேரின் கைகள்
அந்த மூட்டைகளை ஏற்றவும்,
இறக்கவும் செய்ததோ
என்பதும் விளங்காமலேயே/
வேர்வைக்கோடுகள்
உடலில் பதிய மூட்டைகளை
சுமந்தவர்களின் வீடுகளில்
இன்றிரவு பொங்கிச்சாப்பிட
அரிசி இருக்குமா என்பது கேள்விக்குறியே/
சிதறிக்கிடந்த அரிசி
பத்து கிலோவிற்கும்
குறையாமல் இருக்கும்.
தூசியும்,மண்ணும்,
அழுக்கும்,புழுதியும் சேர்ந்து/
7 comments:
ம்.... சிதறித்தான் கிடக்குது
மனசும் அதையே நினைக்குது. சிதறும் அரிசிகூட வீட்டில் இல்லையே.
நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக மனசாட்சி தோழர்.
வணக்கம் விச்சு சார்.சிதறிக்கிடப்பது அரிசி மட்டுமா?நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
பறவைகளுக்கு உணவாக மாறினால் நல்லது.
வணக்கம் வேல்முருகண் சார்.ஒரு படைப்பு பலவிதங்களில் கருத்துக்களை உருவாக்குகிறது.பறைவகளுக்கு உணவானால் நல்லது என்கிற சிந்தனை கவிதை எழுதும் போது எனக்கு எழவில்லை. நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் ராமலட்சுமி மேடம்.நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/
Post a Comment