3 Aug 2012

தூறல்,,,,,



சிதறிகிடக்கிறது வாழ்க்கை.

வேப்பம் பழம் பொறுக்கும் மூதாட்டி/

                      =====

நெடித் துயர்ந்து நிற்கிறது மரம்.

நிழல் தேடி ஓடிக்கொண்டிருக்கும் நாய்/

                      =====

பூத்து மலர்ந்து நிற்கிறது செடி.

ஒற்றை ரோஜாவை தலை முடியில்

சொருகியொருக்கும் சிறுமி/

                      =====

படர்ந்து நிற்கிற கொடி,

வீதியில் பார்த்த நண்பர்./

                     =====

வெடித்து சிதறியிருக்கிறது மண்.

பொக்கை வாய் சிரிப்புடன் குழந்தை/

                    =====

மண்கீறி துளிர்க்கிற செடி.

மருத்துவச்சி கையில் குழந்தை/

                   =====

சிதறிக்கிடக்கிற மண்.

தூரத்தில் நடந்து செல்கிற மனிதர்கள்/

                   =====

உயர்ந்து நின்ற வீடுகள்.

சுவரை ஒட்டி ஊர்ந்த எறும்புகள்/

                   =====

நடந்து செல்கிற பாதசாரிகள்.

கலர்க்கலராய் பூத்து நிற்கிற மலர்ச்செடிகள்.

விரிந்து கிடக்கிறது வீடு.

வீதி முனையில் அடிக்கப்பட்டிருக்கிற

சாலையோர வியாபாரியின் டெண்ட்/

                 =====

நடு வீதியில் இரு சக்கர வாகனம்.

தவழ்ந்து படியேறுகிறது குழந்தை/

                 =====

நகர்கிறது பேருந்து.

பேசிக்கொண்டே செல்கிற பெண்கள்/

                =====

கடையினுள் அடுக்கப்பட்டிருக்கிற புத்தகங்கள்.

மனதினுள்ளே விரிகிற கதைகள்.

                 ======

நண்பணின் அழைப்பொலி.

மயிலிறகு ஒன்று வருடிவிட்டுச்

செல்கிறது மெலிதாக/

                 ======

விரிந்து செல்கிறது சாலை.

பறந்து செல்கிறது பறவைகள்/

                ======

தேநீர் கடை முன் கூட்டம்.

நிறைந்தோங்கி தேங்கியிருந்த உழைப்பின் வாசம்/

                   ======

விறைந்து கடக்கிறது வாகனம்.

பறந்து செல்கிறது பறவை.

அருகில் எரிபொருள் நிரப்பும்

நிலையம் ஏதுமில்லை/

                  =====

மலர்ந்திருக்கிறது மண்.

காற்றில் கலந்து வருகிற மழை வாசம்/

17 comments:

கவி அழகன் said...

Sinthanai kavi varikal valthukkal

vimalanperali said...

நன்றி கவி அழகன் சார்.தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

வை.கோபாலகிருஷ்ணன் said...

//சிதறிகிடக்கிறது வாழ்க்கை.
வேப்பம் பழம் பொறுக்கும் மூதாட்டி//

நல்லாயிருக்கு. படமும் அழகாக உள்ளது.

தனிமரம் said...

கவிதை அருமை மூதாட்டியின் நிலை !ம்ம் காலத்தின் கோலம்!

vimalanperali said...

வணக்கம் வை கோபாலகிருஷ்ணன் சார்.மூதாட்டிகள் எப்போதுமே காலத்தின் அசைக்க முடியாத அடையாளமாகத்தான் இருக்கிறார்கள்,தங்களதுவருகைக்கும்,
கருத்துரைக்குமாய் நன்றி.

vimalanperali said...

வணக்கம் தனிமரம் சார்.நலம்தானே?நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

Yaathoramani.blogspot.com said...

அன்றாட நிகழ்வுகள் குறித்த
ஆழமான அருமையான
வித்தியாசமான சிந்தனை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... அசத்திட்டீங்க... பாராட்டுக்கள்...
நன்றி…

சசிகலா said...

ஒவ்வொரு வரிகளிலும் அனுபவம் பேசுகிறது அருமை அருமை.

வலையுகம் said...

ஒவ்வொன்றும் அருமை,யாதர்த்தம்

vimalanperali said...

வணக்கம் ஹைதர் அலி சார்,நலம்தானே?நன்றி தங்கள்து வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் சசிகலா மேடம்.நன்றி தங்களது வருகைக்கும்கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,நன்றி தங்களது மேலான வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...
This comment has been removed by the author.
vimalanperali said...

வணக்கம் ரமணி சார்,தங்களது ஆழமான கருத்துரைகள் குறித்து ஒரு பதிவு போடலாம் என ஆசை.நேரமும் தங்களது அனுமதியும் அனுமதிக்குமாயின் எழுதி விடுகிறேன்.நன்றி,வணக்கம்

ஹேமா said...

குறிப்பிட முடியவில்லை.அத்தனை ஹைக்கூக்களுமே அருமை.சிறப்பு விமலன் !

vimalanperali said...

வணக்கம் ஹேமா மேடம்.தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக நன்றி.