29 Dec 2012

கலர்ச்சுமை,,,,,



நின்றிருந்த சைக்கிள் கறுப்புக்கலராயும்,

அது நிறுத்தப்பட்டிருந்த தரை

வெண்மை சுமந்துமாய்/

மார்பிள் பதித்திருந்த தரை அது.

கட்டியிருந்த வீடு முழுவதுமாய்

விரிந்து காட்சியளித்த மார்பிளின்

கலர்கள் ரூம்,வராண்டா,சமையலறை

என வேறு பட்டு காட்சியளித்ததாக/

அது போலவே வீட்டின் சுவர்கள்

ஒவ்வொன்றும் ஒவ்வொறு கலர்

பூசித்தெரிந்ததாக/

வராண்டாவின் வலது ஓரமாய்

ஒதுங்கி அமர்ந்திருந்த சிலிண்டர்

சிவப்புக்கலர் பூசி

எழுத்துக்கள் பொரித்துத்தெரிந்ததாய்/

சைக்கிள் மீது கட்டப்பட்டிருந்த கொடியில்

துணிகள் தொங்கி ஆடியவாறு/

ஆடிய துணியின் நுனி

ஒன்று சேலையாயும்,

இன்னொன்று நைட்டியாயும்

இன்னொன்று துண்டாகவும் நூல் பிரிந்து/

கருப்பு,சிவப்பு,வெள்ளை என

கலர் கலந்து காட்சிப்பட்ட

வீட்டின் வராண்டா

அவ்வீட்டில் வசிப்பவர்களது எண்ணங்களை

பிரதிபலிப்பதாகவும்,வெளிப்படுத்துவதாகவும்/

2 comments:

ezhil said...

வண்ணங்களை வரிகளாக்கும் வித்தை உங்களுக்குத் தெரிந்திருக்கிறது விமலன் வாழ்த்துக்கள்

vimalanperali said...

வணக்கமெழில் மேடம்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/