30 Dec 2012

விலக்கல்,,,


அப்படியொரு அழைப்பை

நிராக்கிற எண்ணமெல்லாம்

இவனிடம் இல்லைதான்.

பின் ஏன் நிராகரித்தான் அப்படி?

அழைத்தவர்களையும்,

அழைப்பு விடுத்தவர்களையும்

புறக்கணித்து என்பது

அவனுக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக/

முள் கீறிய ரணமாய் அவர்களது

பேச்சு பட்டுப்படர்கிற சமயங்களிலும்

தன் இருப்பிட்த்திற்கு ஆபத்து

வந்து விடுமோ என்கிற அச்சத்தில்

அவர்களால் இவன் விலக்கி

வைக்கப்படுகிற போதும்,

வார்த்தைகளால் கீறப்படுகிற சமயத்திலுமாய்

இப்படியாய் ஆகிப்போவது

இவனது இயல்பாய் இருக்கிறது.

வேறென்ன சொல்ல?

2 comments:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

ஏதோ ஒரு காரணத்திற்காக விலக்கலும் விலகலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதை அருமையாக கவிதை யாக்கிவிட்டீர்கள்

vimalanperali said...

வணக்கம் டீ.என் முரளிதரன் சார்.
நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/