பூப்போட்ட சேலைகள் என்றால் செவ்வந்தியக்காவுக்கு மிகவும் பிடித்திருந்தது.எப்பொழுதிலி -ருந்து அப்படியானது
என்பது அவளுக்கு நினைவில் இல்லை.
அவளது மாமன் முத்துச்சாமி பூப்போட்ட
பாவடையும்,அதே நிறத்தில் ப்ளைனாக ஒரு தாவணியும் எடுத்து வந்திருந்தான் அவள்
வயதுக்கு வந்த நாளன்றில்.அவளுக்கு அது மிகவும் பிடித்திருந்தது.அன்று அவள்சிரித்தசின்னசிரிப்புவீடுமுழுவதும்
எதிரொலித்துப் பரவியதாக/
வீட்டின் நடையிலிருந்து உள் ரூம்
வரை இருந்தவர்களுக்கு அந்தச்சிரிப்பு சொல்லிச் சென்ற அர்த்தம் பலவாய் பிரதிபலித்துத்
தெரிந்தது.சின்ன வானவில் சிவந்து போகிற அளவுக்கு?சிவந்து போகலாம்
சரி.அதற்காக,,,,,,,,,?
அவன் அன்று கேலியாகசொல்லிவிட்டுச்சென்றஒற்றைவார்த்தைஇன்று
வரை அவளது மனதில் நிழலாடுகிறதுதான்.தலை
நிறைந்து வைத்திருந்த பூவும்,உடல் நிறைந்த அலங் காரமும் ,விசேஷத்திற்கு வந்திருந்த
கூட்டமும் கலைந்த பின்பும் அவன் மாமன் முத்துச்சாமி காதில் சொன்ன ரகசியம்
இன்றும் மனம் இனித்துக்கிடப்பதாகவே/
நாக்கினடியில் ஒட்டிக் கிடக்கிற மிட்டாயின் ருசியைப் போலவே இனித்து கிடப்பதாக/
மனம் பாவி வியாபித்த நினைவுகளின்
இனிப்பும்,கரிப்பும்ஒருசேரஉருத்தரித்துஉருக் கொண்ட நாட்களின் நகர்வுகளில் செவ்வந்தியக்கா
தாவணியை விட்டுசேலைக்குமாறிய நாளில்
அவள் கட்டியது அவளது மாமா முத்துச்சாமி கொடுத்திருந்த பாவடையும் தாவணியும்தான்/
அவளுக்காகவே “கம்ப்யூட்டரில் புதிதாய்
டிசைன் போட்டு வாங்கிவந்தேன்”என அவன் சொன்ன
பொய்யான வார்த்தைகளுடனும், வார்த்தைகளின்ஈரத்துடனும்மடித்து வைத்து இன்றும்
பீரோவில் பத்திரமாக இருக்கிறது பாச்சா உருண்டை வாசம் வீச/
அது எப்படி நடந்தது
எனத்தெரியவில்லை.ஏன் நிகழ்ந்தது என்பதையும் மனம் ஏற்று மகிழிந்து கொள்ளும்
நிலையிலெல்லாம் இல்லை.ஆனாலும்மனதில் பூத்து விரிந்திருந்த மலரின் மலர்வாக அவளுள்
சேலைகளில் பூத்திருந்த பூக்களின் வாசமும்,நிறங்களும்/
பெரிது ,பெரிதாய் முளைத்திருந்த
பூக்களும், சின்னச்சின்னதாய்அரும்புவிட்டு சிரிக்கிற பூக்களும் அவளது சேலையில் எப்பொழுதும் பார்க்கக் கிடைக்கும். அவளும் அம்மாதிரியான
புடவைகளில்
அதுவும் சிவப்புக்கலர் காண்பித்த புடவையில் வெள்ளையாய் பூத்திருந்த பூக்களிலும்
அதன் அருகில் கைகோர்த்துநின்றசின்னசின்னப்பூக்களிலும்அதன்நிழலிலுமாய் மனம்
பறிகொடுத்து ஒட்டிக்கொண்டிருந்தாள்.
நூர்ஜஹான் டீச்சர் கட்டிவருகிற
பூப்போட்ட புடவைகள் செவ்வந்தியக்காவுக்கு மிகவும் பிடிக்கும்.
கறுப்புக்கலர் புடவையில்
பெரிது,பெரிதாய் பூத்திருந்த வெள்ளைப்பூக்கள், சிவப்பு நிறப் புடவையில்
பொடிப்பொடியாய் நிறைத்து நின்ற கலர்ப்பூக்கள் இவை எல்லாமும் அவள் மனதை ஆக்ரமித்து
பூப்போட்ட புடவைகளின் மீது ஆசை ஏற்படகாரணமாய் இருந்தது.
ஆனால் அதே நூர்ஜஹான் டீச்சர் ஆறாம்
வகுப்புக்கு சரித்திரப்பாடம் எடுக்கப்போன நாளொன்றில் கேட்டகேள்விக்கு சரியாக பதில்
சொல்லவில்லை என ஒரு மாணவனின் கால் வீங்க அடித்துவிட்டாள்.
வலது கால்,முழங்காலுக்கும்
பாதத்திற்கும் இடைப்பட்ட கெண்டைசதைப்பகுதி இருந்த இடம்.புசுபுசுவென வீங்கிப்போனது கால்.அவசரத்திற்குபள்ளியில்இருக்கிறமுதல்
உதவி சிகிச்சை மருந்தை போட்டு விட்டு அவனை
ரிக்க்ஷாவில் ஏற்றி வீட்டிற்கு அனுப்பி வைத்தார்கள்.
அன்றிலிருந்து மூன்று நாட்கள்
நூர்ஜஹான் டீச்சர் பள்ளிக்கு வரவில்லை.பள்ளிக்கு வந்த நாளன்று பூப்போட்ட சேலைக்குப்
பதில் ப்ளைன்சேலையைத்தான்கட்டி வந்தாள்.
மாணவனை அடித்த நாளில் டீச்சரின்கணவனுக்கும்,டீச்சருக்கும்சண்டை,டீச்சர்
இப்படி பூப்போட்டபுடைவையுடனும்,மிகையானமேக்கப்புடனுமாய்வேலைக்குச்செல்வதுடீச்சரின்
கணவனுக்கு பிடிக்கவில்லை.வழக்கம் போலபள்ளிக்குக்கிளம்பியடீச்சரை கணவரின் வாய்வார்த்தை
இப்படித்தான் கொக்கிபோட்டு தடுத்திருக்கிறது. “பள்ளிக் கூடத்திற்கு வேலைக்குப்
போறியா,இல்ல,”,,,,,,,,,,,,என்கிற திராவகச்சொல் அவளை சுட்டு விட அந்த
கோபம்தான் மாணவனின் கால் வீங்க காரணமாய்
அமைந்து போனது எனச் சொல்லி இருக்கிறாள் பள்ளி நிர்வாகத்திடம்/
நிர்வாகத்திடம் அப்படியொரு
காரணத்தைச் சொன்ன நாளிலிருந்து செவ்வந்தியக்கா படிப்பை நிறுத்தி விட்டு பள்ளியை
விட்டு வெளியே வருகிற நாள் வரை நூர்ஜஹான் டீச்சர் கட்டியிருந்த பூப்போட்ட புடவை
அவள் நினைவை விட்டும்,கண்களை விட்டும் அகலாததாய்/
அப்பாவின் நிலையறிந்து அவரிடம்
ஏதும்கேட்கமாட்டாள்.அவருடையவேலை, அவரின் சம்பளம்,வாரத்தில் ஒரு நாள்,அல்லது இரண்டு நாள் அவருக்குஇல்லாமல்போகிற
கூலி வேலைஎன மற்றமற்றதெல்லாம் கணக்கில் கொண்டு அவரை அவள் ஒன்றும் கேட்பதில்லை அம்மாவிடம் தான் எல்லாம். “ஏய் மூதி நீ என்னசின்னப்புள்ளையா,நாளைக்கு
இன்னொ ருத்தன் வீட்டுக்கு போகப்போற,இன்னும் வீட்டு நெலம தெரியாம திரியிற. ஒனக்குப்
பின்னாடி ஒருத்தி நிக்குறா வயசுக்கு வந்துங்குறத மனசுல வச்சிப்பேசு.இன்னும்
சின்னப் புள்ள மாதிரி சேல வேணும் ,நோலவேணும்ன்னு,நெசவுபண்ணுறவுங்ககிட்டசொல்லிமொதல்ல பூப்போட்ட சேலை நெய்யிறத நிறுத்தச்சொல்லணும்,அப்பத்தான் நீயி வழிக்கு வருவ”
என அவளதுஅம்மாவைவாள்செவ்வந்தியக்காபுடவை கேட்கையில்.
ஆனாலும் செவ்வந்தியக்கா
விடாப்பிடியாகதனதுதீப்பெட்டிஆபீஸ்வேலைச்சம்பளத்தில் மிச்சம் பிடித்து தள்ளி முள்ளி
கண்ணைக்கசக்கி ஒரு புடவை எடுத்து விடுவாள்.
அவளுடன் படித்த மகேஸ்வரியும்,
சுமதியும்,மாடத்தியும் இப்பொழுது புடவை கட்டிக் கொண்டிருப்பார்களா அல்லது இன்னும்
பாவடைதாவணியில்தான்இருப்பார்களா எனத் தெரியவில்லை,மூன்று பேரில் மகேஸ்வரி
மட்டும்தான் ஒல்லியாக இருப்பாள்.மற்ற இருவரும் கொஞ்சம் பூசினார்ப்போல அவர்களுக்கும் என் வயது இருக்கும்தானேபின் எப்படி?,,,,,,, அவர்களும் என்னைப் போல சேலைக்கு
மாறியிருப்பார்கள்.
மூன்றாம் வகுப்பு கதிரேசன் சார்தான்
அடிக்கடி சொல்வார்மாடத்தியையும், சுமதியையும் பார்த்து/ஏய் பிள்ளைகளா,ரெண்டு பேரும் என்ன
இன்னும் சின்னப்புள்ளைகளா?வீட்ல சொல்லி காலகாலத்துல ரெண்டு பேருக்கும் சேலை
எடுத்துக் குடுக்கச் சொல்லுங்க, என்பார்.
இப்போது அவர்கள்எங்கிருக்கிறார்கள்,எப்படியிருக்கிறார்கள்,கல்யாணம்
ஆகியிருக்குமா அல்லதுஇன்னும்படித்துக்கொண்டுதான்இருப்பார்களாஇல்லைஎன்னைப்போலஏதாவது
ஒரு தீப்பெட்டி ஆபீஸின் புழுக்கத்தில் தஞ்சம்அடைந்திருப்பார்களா? தெரியவில்லை.
அவர்களின் நினைவுஇப்படிஅவளில்மையம்கொள்கிறநாட்களில்அவர்களுடன்
சேர்ந்து படித்த படித்த பாடங்கள் அவள்
மனதில் இனிப்பு தடவியவையாய்/ அவர்களுடன் பகிர்ந்து
சாப்பிட்ட சாம்பார் சாதத்தின் ருசியும்,முகம் கோணி சப்புக்கொட்ட வைக்கிற ஊறுகாயின்
சுவை இன்னும் மனம் இனித்துக் கிடக்கிறவையாகவே/இதில் மகேஷ்வரி தனிரகம், சுமதியக்காவைப் போல செவ்வந்தியக்காவுக்கு அவர்கள் குடியிருக்கிற வீட்டை சுத்தமாக வைத்திருக்க பிடித்திருந்ததைப்
போல அந்த வீதியில்உள்ள அனைவரையும்பிடித்திருந்தது. வீதியில் உள்ள வீடுகளின் சிலர் வீட்டுவாசலில் இவளே
வலியச்சென்று கோலமிடுவாள்.
அப்படியாய்தான் இன்னும் மகேஸ்வரியும் இருக்கிறாள் அல்லது இருப்பாள்என்பதைஉறுதிப் படுத்த யாருக்கு மனுப்
போட்டுவிசாரிப்பதுஎனத் தெரியவில்லை.
இளையராஜாவின் பாடல்களைகேட்பது போல இது ஒன்றும் எளிதாகத் தெரியவில்லை அவளுக்கு/
அவளுக்கு அப்படி ஒரு பித்து
அந்தப்பாடல்களின் மீது.வேலைக்குப் போகிற வழியில் எங்கு அந்தப்பாடல்களைகேட்க
நேர்கிற சமயங்களிலும் அப்படியேநின்றுவிடுவாள்அல்லது அவளது நடை
நிதானப்பட்டுவிடும்.
அவள் குடியிருக்கிற தெருவில் பூத்திருந்த காகித மரத்தின் ரோஸ் நிறப்பூக்களும், வெண்மை சொன்ன பூக்களும்
அவள் முணுமுணுக்கிற பாடல்களை காற்று வழியாய் சொல்லிச் செல்லும்.
இதை சைக்கிள் கடை முருகேசன்
எப்படியோ மோப்பம் பிடித்து விட்டான்.ஏற்கனவே அவன் ஒரு பாட்டுப்பிரியன்.ஆனால்
அவனுக்கானால் கண்ணதாசன் பாடல்கள் மீது ஒரு மெல்லிய அல்ல கனமான ஈர்ப்பு உண்டு.
அவன் எங்கு போனாலும் அவனுடன்
ஒட்டிக்கொண்டதாக ஒரு சின்ன சோனி டேப்ரிக்கார்டர் இருந்து கொண்டேயிருந்தது.
அவன் செவ்வந்தியக்காவின் வீட்டை
கடந்து போகிற போது காற்றில் தவழ்ந்து வந்து அவளது செவி நுழைந்து இதயம் தொடுவது
அவனது டேப்ரிக்கார்டரிலிருந்து தவழ்ந்து வந்த பாடலாக இருந்தது.
குப்
கலரில் தொள,தொளப்பாய் ஒரு பேண்டும், மிருதுவான வெளிர் கலரில் ஒரு சட்டையும் அணிந்திருந்த அவன் அவனைப்போலவே அவனது
சைக்கிளையும் பளிச்சென்றே வைத்து இருப்பான்.
அவுட்
ஆப்பேசன் ஆகிப்போன நேரத்தில் கூட செவ்வந்தியக்கா ரெட்டை ஜடை போட்டு ஒற்றை ரோஜாவை
சொருகிக்கொண்டு காட்சிப்படுவாள்.
முருகேசனின்
கடை செவ்வந்தியக்காவின் வீட்டிலிருந்து நடந்தால் ஐம்பதடி தூரத்தில் வந்து
விடக்கூடியதாய் இருந்தது.அந்த வழியாகத்தான் செவ்வந்தியக்காதினமும்தீப்பெட்டி
ஆபீஸ் போய் வருவாள்.போகும் போதும் வரும் போதும் முருகேசனின் கடை வருவதற்கு
பத்தடிக்கு முன்பாகவும்,கடை கடந்த பின்புபத்தடிபின்பாகவும்செவ்வந்தியக்கா வின் நடை
நிதானிக்கும்.
முருகேசனின்கடையிலிருந்துவருகிறபாட்டைகைபிடித்தும்,மனம்பிடித்துமாய்கூட்டிச்செல்லும் அந்நேரம் சைக்கிள் கடையிலிருந்து
வருகிற பாடலின் சப்தம் கூடும்.
முத்து
ரீகன் டாக்கீஸில் தரைடிக்கெட்டில்மகேசுடன் உட்கார்ந்துபடம்பார்த்தநாட்களில் வந்த
கூடிகுறைந்த பாடல்களின் ஒலி இப்பொழுது முருகேசனின் கடையி லிருந்து.
இப்படியாய்கூடியும்,குறைந்துமாய் வந்த பாடலின் சப்தங்கள் செவ்வந்தியக்கா
திருமணமாகிப் போன நாட்களின் நகர்வன்றிலிருந்து முருகேசன் கடையிலிருந்து
கேட்கவில்லை.
செவ்வந்தியக்கா
திருமணமாகிப் போன ஆறு மாதங்களில் தனது தாய் வீட்டிற்கே வந்து விட்டாள்
கணவனைக்கூட்டிக்கொண்டு.அங்கு பிழைப்பிற்கு ஆதாரம் இல்லை என/
இப்போது
கணவன் மில்லிலும்,செவ்வந்தியக்கா பழைய தீப்பெட்டி ஆபீஸிலுமாய் வேலை பார்க்கிறாள்.
திருமணமாகிப் போன
இடத்திலிருந்து பழைய படியும் தனது தாய் வீட்டில் பதியனிடப்பட்ட
செவ்வந்தியக்கா எப்பொழுதும் போல தனது தெருவிலிருக்கிற குழந்தைகளின் மனதில் படம் பிடித்து மாட்டப்பட்டும்,பெரியவர்களின் மனதில் அன்பால் அர்ச்சிக்கப்பட்டும் கொண்டிருக்கி -றாள்.அவ்வளவு வறுமையிலும் சந்தோசத்திலும் இருந்த போதும் கூட/
செவ்வந்தியக்கா எப்பொழுதும் போல தனது தெருவிலிருக்கிற குழந்தைகளின் மனதில் படம் பிடித்து மாட்டப்பட்டும்,பெரியவர்களின் மனதில் அன்பால் அர்ச்சிக்கப்பட்டும் கொண்டிருக்கி -றாள்.அவ்வளவு வறுமையிலும் சந்தோசத்திலும் இருந்த போதும் கூட/
No comments:
Post a Comment