31 Mar 2013

கண்ணீர் வடு,,,,,,,




கிராமவங்கிகள் சங்கத்தின்(AIRRBEA)மகத்தான தலைவர். தோழர்.திலிப்குமார் முகர்ஜி  காலமாகிவிட்டார்!

தன் காலத்தை, கிராம வங்கிகளின் எதிர்காலத்திற்காகவும், கிராம வங்கி ஊழியர், அலுவலர்களின் வாழ்விற்காகவும் அர்ப்பணித்துக்கொண்ட அற்புதமான தலைவர் நம்மையெல்லாம் விட்டு பிரிந்து சென்று விட்டார். நமது மகத்தான தலைவர், தோழர்.திலிப் குமார் முகர்ஜி இன்று அதிகாலை காலமாகிவிட்டார். 

பார்த்ததும்சிரிக்கும்சிரிக்கும்அந்தகுழந்தை முகமும், மேடைகளில் பிரச்சினைகளை முன்வைத்து ஆர்ப்பரிக்கும் அந்தபோராளியின்முகமும் ஒருசேரத் தோன்றுகின்றன. பிரியமும், உற்சாகமுமும், விடா முயற்சியும் நம்பிக்கையும்தான் தோழர்.முகர்ஜி. 

அவர்ஆற்றியபணிகள், தலைமை தாங்கி நடத்திய இயக்கங்கள், பேச்சு வார்த்தைகள்,  மேற்கொண்ட பயணங்கள் எல்லாம் நமக்காகவே இருந்தன. காட்சிகள் நினைவுகளில் மிதந்த வண்ணம் இருக்கின்றன. கண்கள் குளமாகின்றன. 

கிராமவங்கிஊழியர்களுக்குபென்ஷனைபெற்றுத்தந்துவிட்டுத்தான்மரணமடைவேன்”என்னும்அவரதுவார்த்தைகள் இந்த நேரத்தில் ரீங்காரமிடுகின்றன. அவர்  காட்டிய  பாதை நம்முன்னே நீண்டு செல்கிறது.

(நாளை மாலை விருதுநகரில் பாண்டியன் கிராம வங்கி தலைமையலுவலகத்தின் முன்பாக இரங்கல் கூட்டம் நடைபெறும். )

No comments: