12 May 2013

வாட்டர் ஸ்பிரேயர்,,,,


             

எப்படி மறந்தேன் இப்படி?எப்பொழுதும் ஆனதில்லை இப்படியெல்லாம் எனக்கு. நேற்று மதியம் ஷேவிங் பண்ணிய போது வைத்த நீர் அது.இன்று காலை பதினோரு மணிவரை அப்படியே இருக்கிறது.நல்ல வேளையாக யார் கைபட்டும் தட்டி கீழே விழுந்து விடவோ தண்ணீர் சிந்தி தரையில் பரவவோ ,இல்லை. 

நேற்று அரை நேர அலுவலகம்.அரை நேரம். “அரைபள்ளிக்கூடம்” என்கிற சொல்பதம் தாங்கி அலுவலகம் முடிந்து வீடு வருகையில் முடிவு பண்ணிக் கொள்கிறேன்.ஒருவாரமாய்நினைத்துமுடியாமல்தட்டிப்போனமுடிவெட்டுகிற வேலையை இன்று மிகக்கறாராக முடித்து விட வேண்டும், 

சலூன்க்கடைகாரர் பார்க்கிறபோதெல்லாம்முறைத்து,முறைத்துப்பார்ப்பது போல் இருக்கிறது.வளர்ந்த உருவம்,சிவந்த மேனி,கத்தரித்து வெட்டிபடிய வாரப்பட்ட முடி என காட்சிப்படுகிற சலூன்க்கடைக்காரரை அனேகமாக தினசரி பார்த்துவிட நேர்ந்து விடுவதுண்டு, அப்படி பார்க்கிற தினங்களில்  என்னை பார்ப்பதை விடுத்து என் தலையை மட்டுமே அவர் பார்ப்பதாய் நினைப்பெனக்கு/ 

வருகிறவழியில் கதிரேசன்கடையில்குடித்தடீஓரளவுபசியை மட்டுப்படுத்து ம். மதியம்சாப்பிடும் வரை பசி தாங்கக்கூடும். 

கலங்கலான ஒரு டீ,ஒரு மாதிரி திவ்யமாய் குடிக்க கிக்காய் இருந்ததாய் ஞாபகம். டீயை வலது கையில் வாங்கி தட்டில் மிதந்த வடைகளையும், பஜ்ஜிகளையும் இனிப்புஉருண்டைகளையும்பார்த்தவாறேஎச்சில்முழுங்கி விட்டுகுடிக்கிறேன். மனதின்  ஓரத்தில்அந்நேரம்எழுந்தஆசையை வாயில் விரல்வைத்துஎச்சரிக்கை செய்து விட்டு/(ஒழுக்கமாய் இரு, கண்டபடி  நாக்கை சுழட்டிக்கொண்டு திரியாதே, அப்புறம்கவிஞரிடம்  சொல்ல வேண்டியிருக்கும் ஜாக்கிரதை.)டீயை மட்டும்  குடித்துவிட்டு  கடிக்க மறந்த  இனிப்பு உருண்டைகளும்,வடைகளும் என்னையேஏக்கத்துடன்பார்ப்பதாகநினைத்துக்கொண்டுபிரிக்கமுடியாத பார்வை யை கஷ்டப் பட்டு பிரித்தவனாய்வருகிறேன். 

கதிரேசன்தான்  அன்று கடையில் இருந்தார்.அதுவரை பரவாயில்லை. வழக்கமாக மதிய நேரத்தில் அவரது மனைவியோ மகளோதான் கடையில் இருக்கக் கூடும். என்னஅவர்கள் கடையில்  நின்றால் டீ ,,டீடீடீடீ,,,,,,,,,யாக இருக்கும்.இவர் தந்தால் டீ டீயாகமட்டுமே இருக்கும். அந்த கிக்கோடும் திருப்தியோடும் திரும்பிப் பார்க்காமல்வந்துவிட்டால்தப்பித்தோம். இல்லை யென்றால் குடித்த டீ குடலிருந்து வாய்வரை பயணப்பட்டு வந்து நலம் விசாரித்து விட்டுப்போகும்.இந்த வம்பு என பெரும்பாலான தினங்களில் பெரும் பாலானதினங்களில் யோசிக்காமல்விட்டு விடுவது மாதிரிதான்இன்றும் வ ந்துவிட்டேன். 

கதிரேசனுக்கு இரண்டு மகள்கள்.ஒரு பையன்.பையன் விருதுநகரில் மில்லில் வேலை செய்கிறான்,ஒருமகளைசென்னையிலும்,இன்னொரு மகளை தூத்துக்குடி -யிலுமாக  கல்யாணம் செய்து கொடுத்திருக்கிறார். 

“தூத்துக்குடியில கட்டிக்குடுத்தது மூத்த தாரத்துப்பொண்ணு  சார். சென்னையில் இருக்குறதும்,பையனும் யெளைய தாதத்துப்பசங்க சார், 

நம்ம வளசலே அப்பிடி ஆயிப்போச்சு சார்.எல்லாருக்கும் ரெண்டு கல்யாணம் சார்.எங்க சித்தப்பா தவிர்த்து எங்க அப்பாவுக்கு ரெண்டுதாரம் சார்,எங்க அண்ணனுக்கு ரெண்டு தாரம்தான்.எங் கூட ப்பொறந்த அக்கா புருசனுக்கு ரெண்டு தாரம்தான்,எங் தம்பிக்கும்ரெண்டுதாரம்தான், இப்பிடி  இருக்கையில எனக்குமட்டும்ஒருதாரம்ங்குறதுஎப்பிடிசரியா இருக்கும்ன்னு  ஆண்டவன்கணக்கு போட்டுடானோஎன்னமோஇப்பிடியாயிருச்சிஎன்பார்கதிரேசன்டீப்போட்டுக் கொண்டே/ 

அப்படிச் சொல்லும் போது அவருக்கு வருகிற வெக்கத்தைப்பார்க்க வேண்டுமே ஏயப்பா,,,,,,பிரமாதம்,முகம் சிவந்து போகிறார் இந்த 45 வயதிலுமாய்/ 

அப்படி பேசிக்கொண்டிருந்த  ஒரு நாளன்றின் மாலை வேளையில் பக்கத்தில் கேட்ட ரேடியோ சப்தத்தை என்ன எனக்கேட்ட போது ”இது சார்.ரோட்டு மேல இருக்குறபள்ளிக்கூடத்துல வேலை பாத்தஹெட்மாஸ்டர்ரிட்டையர் ஆகுறாரு,அவ ரும் இங்க வந்து வருசம் இருபதுக்கு மேல இருக்கும்சார்.அவர்வந்தநேரத்துல இந்த பள்ளிகூடம்இடிபாடுலகெடந்துச்சி.  

இவருமுன்முயற்சியிலதான்இப்பமுழுக்கட்டமாபாக்க முடியுது,  அவரும் நடக்காத நடையில்ல ,பாக்காத ஆபீஸரில்ல, யாருயாரையோ  பாத்து எங்க,எங்கயொ போயி இந்த இடிபாடான கட்டிடத்த எடுத்துக்கட்ட உதவி வாங்கீட்டு வந்தாருன்னு சொல்லாம்.இதுக்காக இருபது வருசத்துக்கு முன்னாடியே மெட்ராஸ் வரை போனவருசார். அப்பியாங்கொந்த நல்ல மனுசன்,சரிஅப்பிடியெல்லாம் இடிபாடா கெடந்தபள்ளிக்கூடத்தயெடுத்துக் கட்டீட்டு திரும்பிப்பாத்தா படிக்கிறதுக்கு புள்ளைக இல்ல, என்ன செய்ய பின்னே?,மதியச்சாப்பாடு வாங்கமட்டும் பள்ளிக் கூடத்துக்குவந்த புள்ளைங்கள கணக்கு எடுக்குறாரு,அப்புறம் வீடா,வீடா விடாம மாசக்கணக்குல நடையா,நடந்து புள்ளைங்கள பள்ளிக்கூடத்துல சேருங்கன்னு கெஞ்சி கூத்தாடி இப்ப இந்த அளவுக்கு பள்ளிக்கூடத்த வளத்து வச்சிருக்காரு புண்ணியவான்,எங்க புள்ளைங்கலெல்லாம் ரெண்டு எழுத்து தெரிஞ்சி வச்சிருக் குன்னா அது அவரு பண்ணுண உபகாரம்னு சொல்லலாம் சார், அப்பிடியாகொந்த மனுசன் ரிட்டையர் ஆகுறாரு இன்னைக்கு,அத இன் னைக்கி ஊரே சேந்து பார்ட்டி வச்சி கொண்டாடுற மாதிரி கொண்டா டுறாங்க.நல்ல மனுசன் ,இவருக்கு அப்பறம் யாரு வரப்போறாருஹெட் மாஸ்டரான்னு தெரியல,,,,,,,வர்ரவரு இவருக்கு அவரு தேவலைன்னு வர்ராறோ, இல்ல,,,,,,,,எப்பின்னு தெரியல,அதுதான் இன்னைக்கு ஊரு பூராம் பேச்சு எனச்சொன்ன அவரோடுதான் சென்னையில் கட்டிக்கொடுத்த பெண் இருக்கிறாள். 

மாப்பிளைமகாராஷ்ட்ராவில்பேங்க்உத்தியோகம்கிடைத்துப் போய் விட்டார்.புது மண்,புது மனிதர்கள்,மனைவியும் புது மனைவி,,,,, ஆகவே  யோசித்துக்கொண்டு கதிரேசனும் மகளைஅனுப்பத்தயங்கினார்.அதற்கு மேல் அவரதுமாப்பிள்ளையும் அவரைகுடும்பத்துடன்போய்இருக்கதயக்கம் கொண்டார், மகளையும் மகள் வழி பேரனையும் அவர்தான் பார்த்துக் கொள்கிறார். 

பேரனுக்கு மூன்று  வயது இருக்கும்போதுதான்மருமகனுக்கு வேலை கிடைத்தது, முதல்போஸ்டிங்கேமகாராஷ்ட்ரா எனும் போது சற்று  தயங்கி னார்கள். வேலையைக்கூடவிட்டுவிடலாம் என யோசித்தார்கள்,அப்புறம் தேடிவந்த அதிர்ஷ் -டத்தை  விட்டுவிடவேண்டாம்எனஅவர்மகாராஷ்ரா போய் விட்டார்.
இப்பொழுது அவர் அங்கும்,மனைவிஇங்குமாய்,,,,,மாதத்திற்கு ஒருமுறை   இரண்டு நாட்கள்லீவில் வருவார்.அப்பொழுதான்அவர்,மனைவி மகளை  கண்ணாரப் பார்ப்பது/ 

அந்த மகள்தான் மதிய வேளைகளில் கடையில் வந்து நின்று அப்பாவை சாப்பாட்டுக்கும்,ஓய்வுக்குமாய் மாற்றி விடுவாள்.அதைப்பற்றி கூட கதிரே சனிடம் சில பேர் சொல்வதுண்டு,“டீக்கடையிலபோயிபொம்பள புள்ளைய  நிறுத்திக் கிட்டு,,,,,என, அவரு அதனால் என்ன,கடைக்கு வார சில்லறைப் பசங்கசில பேரு நம்மகடைன்னாவாலாட்டுறதுஇல்லஆரம்பத்துலகொஞ்சம்அப்பிடி,இப்பிடி இருந் தாங்கெ, இப்ப அப்பியெல்லாம் இல்ல ஒரு நாள் புடிச்சி கடுமையா சத்தம் போட்டுப்புட்டேன்.அதுலயிருந்துபயக கொஞ்சம்  பம்மித்தான் திரியிறாங்க, பரவாயில்ல சார்.அப்பிடியெல்லாம் கைய மீறி எதுவும் நடந்துறப்போறதில்ல சார், சின்ன ஊர்தான இது சுத்திச்சுத்தி தெரிஞ்சவுங்க, சொந்தக்காரங்கதான, அப்பிடியெல்லாம் ,,,,,,,அத மீறி வந்தா பாப்போம் சார்”.என்பார் கதிரேசன்,”தவிர சும்மா எப்பிடி அவள வீட்ல வச்சிருக்குறது,அவளுக்கும் சொகம் கண்டு போகும்,அம்மா,அப்பா நம்மள இப்பிடியெ வச்சிப்பாத்துக்குவாங்ன்னு”/என அவர் சொல்லி வாய் மூடாத பொழுதன்றிற்குள்ளாய் தூத்துக்குடியில் இருக்கிற இன்னொரு மகளும் போட்டிபோடுகிறாள். 

”அவளை மட்டும் வைத்து பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். நான்இங்கே தூத்துக்குடியில்கைக்கும்,வாய்க்கும் பத்தாமல்அல்லாடுகிறேனே, இரண்டு  பிள்ளைகளை வைத்துக்கொண்டு ,எனதுபுருசனுக்கும்நிலையான  வேலை  என உருப்படியாய் ஏதும் இல்லை.ஆகவே,”,,,என அவள் போட்ட மனு நிராகரிக்கப் பட்டு விட்டதுஅவளது செலவுக்கு மகாராஷ்ராவில் இருந்துமாதா மாதம் பணம் வருகிறது  என்கிற சொல்லுடனுன்/ 

போகும் போதே முடி வெட்டிக்கொண்டுபோனால்தான். வீடுபோனால் திரும்பவும்வருவதுசிரமம்.இத்தனைக்கும்  வீட்டிற்கும்,சலூனுக்கும் மிகப் பெரிய  தூரமெல்லாம் ஒன்று இல்லை.வீட்டிலிருந்து தலையை நீட்டினால் கடையிலிருந்துமுடியைவெட்டிவிடுகிறதூரம்தான்.ஆனாலும்சமயங்களில்  அதிகரித்துப்போகிறசோம்பல்அப்படிசெய்யவிடுவதில்லைஎன்கிறநினைப்புடன்வந்துகொண்டிருந்தநான்இன்றுஎப்படியும்முடியைவெட்டிக்கொண்டுதான் வீட்டிற்குப் போகவேண்டும்எனநினைத்துமுடியை வெட்டிக் கொண்டு போன மதியத்தில் ஷேவிங்பண்ணிய போது வைத்த நீர்தான் இன்றும் அப்படியே கப்பில் இருக்கிறது.

10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பிரிவு சிரமம் தான்...

ஏதேனும் சொல்லி மனு நிராகரிக்கப்பட்டும் விடும்...

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நன்றி தங்களின் வருகைக்கும், கருத்துரைக்குமாக/

இராஜராஜேஸ்வரி said...

நிதர்சனக்கதை ..!பாராட்டுக்கள்.

கோமதி அரசு said...

வாழ்க்கையில் நடப்பதை அப்படியே காட்டிவிட்டீர்கள்.

கரந்தை ஜெயக்குமார் said...

வாழ்வியல் யதார்த்தம்

vimalanperali said...

வணக்கம் ராஜராஜேஸ்வரி மேடம்,நலம்தானே?நன்றி தங்களின் வருகைக்கும் கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் கொமதி அரசு சார். நன்றி தங்களின் வருகைக்கும், கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

Yaathoramani.blogspot.com said...

சொற்சித்திரம் அருமை
சொல்லிச் சென்றவிதம்
சித்திரமாய் நிகழ்வினை என்னுள்
பதியச் செய்து போனது
தொடர வாழ்த்துக்கள்

vimalanperali said...

வணக்கம் ரமணி சார்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/