23 Feb 2014

நட்பு,,,,,,



               நண்பர்கள் புடை சூழவே

இருந்திருக்கிறது அவனது உலகம்,
பத்தாம் வகுப்புப்படிக்கிற அவனுக்கு
இப்படியானதொரு பாக்கியம் வாய்த்திருப்பது
எங்களுக்கெல்லாம் சற்று பெருமையாகவே/
காலை பள்ளிபுறப்படுகிற பொழுதிலிருந்து
மாலை விளையாடி முடித்து வருகிறவரை
அவனை நண்பர்களும் தோழர்களும்,
உடன் படிக்கிறவர்களுமே
அவனை தீர்மானிக்கறவர்களாக/
இதில் எப்பொழுதாவது
தாய் தந்தையின் பங்கும்,
சகோதர,சகோதரியின் பங்கும்
சேர்ந்தே இருந்திருக்கிறது.
டேய் நண்பா,டேய் கண்ணா,டேய் தோழா,,,,,,,,,
என்கிற சொல்லாக்கங்களுடன்
வரையப்பட்டிருக்கிற அவனது உலகம்
எப்பொழுதுமே நண்பர்கள் சூழ்ந்தே/  

12 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
அண்ணா.

நண்பர் உலகம்.... எப்போதும்... மகிழ்ச்சிதான்...
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

'பரிவை' சே.குமார் said...

நண்பர்கள் உலக்ம் என்பது எப்பவுமே சந்தோஷத்தைக் கொடுக்கும் உலகம்...
அருமையான கவிதை...
வாழ்த்துக்கள் அண்ணா.

திண்டுக்கல் தனபாலன் said...

எப்பொழுதுமே நண்பர்கள் - எப்பொழுதுமே மகிழ்ச்சி...

vimalanperali said...

வணக்கம் ரூபன் சார்,
நன்றிதங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் சே குமார் சார்
நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தன்பாலன் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

உஷா அன்பரசு said...

அழகான உலகம் அது.........

மகிழ்நிறை said...

நட்பே ஒரு கவிதை தானே!?

vimalanperali said...

வணக்கம் உஷா அன்பரசு அவர்களே,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் மைதிலி கஸ்தூரிரெங்கன் அவர்களே/
நன்றி வருகைக்கும்,.கருத்துரைக்குமாக/

கரந்தை ஜெயக்குமார் said...

நட்பின் பெருந்தக்க யாவுள
நன்றி நண்பரே
த.ம.3

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/