22 Aug 2014

அடுப்புக்கல்,,,,,,,


வந்துவிடுகிறபின்மாலைஅல்லதுமுன்மாலைபொழுதுகள் பசியாய் மாறி உருவெடுக்கையில் கொண்டுபோகாதசாப்பாட்டிற்கு மாற்றாய் மாரிக்கண்ணுகடைதிகழ்கிறது.சமயத்தில் ஆபத்பாந்தவனாயும் கூட/

ஒருமனிதன்,ஒற்றைஅடுப்பு ,ஒற்றை புரோட்டாக்கல்,,,,,,,, இதுவே அவரது கடையின் தோற்றமும்,பதிவும்/செம்மண் வைத்து பூசப் பட்டிருந்தஅடுப்பு,அதன்மேல்வெந்துகொண்டிருக்கிறபுரோட்டாக்கல், எரிந்துகொண்டிருக்கிறஅடுப்புஅதன்முன்கட்டம்போட்டகைலியும்,
பனியனுமாய் மாரிக்கண்ணு.

நீண்டு செல்கிற சாலை தன் பதிவாய் கண்மாய்க்கரையின் மேட்டில் அவரது கடையை விதைத்து விட்டோ,ஊன்றி விட்டோ சென்று விட்டது போலும்.

அவரது கடையை கடந்தால் இன்னொரு கடையும் உண்டு .அவரது கடையின் எதிர் பக்கமாய் இருந்தது அது. ஆனால் அதில் சென்று சாப்பிடுவது என்பதெல்லாம் ஆசைப் பட்டாலும் எங்களால் இயலாத காரியமாகவே.பழக்கம்தான் அதற்குமுக்கிய காரணமாய்/ அப்படி எங்களில் யாராவது கடையை அவரது கடைதாண்டிச்சென்று டீ சாப்பிட சென்று விட்டால் மறு நாட்களில் அவரதுவெளிப்படை யான புலம்பலும்ஆற்றாமையும் வெளிப்பட ஆரம்பிக்கும் ஆதங்கமான பேச்சாக/

“நம்மளும் நல்லா ஷோபண்ணி கடை வச்சிருந்தா இங்க சாப்பிட வருவாங்க,நாம இப்பிடி ஓட்டக்கடை வச்சிருக்குறதால நம்ம கிட்ட சாப்பிட வரமாட்டேங்குறாங்க என்பார்.

அவரது பேச்சு அப்படி வெளிவந்த நாளன்றிலிருந்து மறுநாள் முதல் வேறு கடையை நினைத்துப்பார்க்கிற மனதைரியம் எங்களுள் எட்டிப் பார்த்ததில்லை.நீண்ட நாட்களாய் எங்களது அலுவலகத்திற்கு டீக்கொடுப்பவர்.அன்பும் வாஞ்சையும் கொண்ட மனிதர். அது இருந்தால் மட்டும்வியாபாரத்திற்குபோதாதுஎன்பதுஅவருக்குஏனோ புரிவதில்லை. அல்லது எங்களுக்கு அதை சொல்லுமளவு தைரியமும் இல்லை.அதனால்அவரது குறை அவருக்கு தெரியவில்லை என்பதில்லை. அவ்வளவுதான் அவருக்கு என பேசிக் கொள்வார்கள்.


மதியப் பொழுதுகளில் 12 மணி டீ அவரது கடையிலிருந்து வருவது தான் வருவார், “சார் டீ,”என்கிற ஒற்றைச்சொல்லை தாங்கி நீள்கிற கரத்துடன் டீயை தந்து விட்டுப்போய் விடுவார்
அப்படியொரு பிளாஸ்டிக்டம்ளர் அவருக்குஎப்படிகிடைக்கும்என்பது ஆச்சரியத்திலும்ஆச்சரியமாகவே/மிகமெலிதாகவும்ரொம்பவும்சின்ன
தாயும்இருக்கும்டம்ளரைப்பிடித்துத்தூக்கமுதலில்ஒருஇரண்டுநாட்களா
வதுபயிற்சிஎடுக்கவேண்டும்.பயிற்சியாவதுவெளிப்படையாக எடுத்துக்கொள்ளலாம்,அவர் கொண்டு வருகிற டீயைக்குடிக்கிற தைரியத்தைவரவழைக்கஎங்குபோய்பயிற்சிஎடுப்பதெனதெரியவில் லை. விசாரித்துக்கொண்டிருக்கிறேன்,தெரிந்தவர்கள் சொல்வார்கள் என.சொல்லட்டும் அதுவரை காத்திருக்கலாம் பொறுமையாக என்ப தே இங்கு சொல்லப்பட வேண்டியதாக/

அப்படியெல்லாம் விறகுகள் அவருக்கு எப்படி கிடைக்கும் எனத் தெரியவில்லை.எல்லாம்வேர்முடிச்சுவிழுந்தவைகள்.சீமைக்கரு
வேலந்தூர்கள்.முண்டும்முடிச்சுமாக/அவைகளில்சிலவற்றில்மனித முகம் பார்க்கலாம்.சில சமயங்களில் வேறொரு ன்றும் உருப்பட்டுத் தெரியும்.

அவர் பிசைகிற புரோட்டா மாவு அந்த ஊரையும் தாண்டி பக்கத்து ஊருக்கும் சரியாகிப் போகும் போலும். அப்படி ஒரு பிசைவு. பெரிய, பெரிய கடைகளில் கூட இப்படி மாவு பிசைந்து நான் பார்த்ததில்லை. விட்டால்இருபத்திநான்குமணிநேரமும்மாவைபிசைந்துகொண்டிருப்பார் போலும்கடையினுள்ளேநீண்டுவிரித்துபோடப்பட்டிருக்கிறகடப்பக்கல் பதித்தமேஜைகள்இரண்டுடானாப்படகாட்சியளிக்கஅதன்முன்பிளாஸ்
டிக்ஸ்டூல்கள்கலர்களில் அமர்ந்திருக்கும்.கடைக்கு வெளியே ஒரு பிளாஸ்டிக்வாளியில்வைக்கப்பட்டு இருக்கிற நீரில் கைகழுவிக் கொள்ளலாம்,பிளாஸ்டிக்வாளிகூடஇல்லைஅது.
லாரிகளுக்குஊற்றுகிற எஞ்சின் ஆயில்டப்பா அது.அதி பாதி அல்லது பாதிக்கும் குறைவாக நிரம்பி இருக்கிற தண்ணீரில் மஞ்சள்க்கலரில் ஒருபிளாச்டிக்டம்ளர்தண்ணீரில்மிதந்துகொண்டேகண்சிமிட்டும்.அதில் ஒட்டி இருக்கிற அழுக்கை சகித்துக்கொள்ள தனி மனம் வேணும். அதில் மிதக்கிற இலைகளைக் கூடதள்ளிவிட்டுவிட்டு கைகழுவிக் கொள்ளலாம்.ஆனால்தண்ணீரில்மிதக்கிறஅழுக்கையும் வாளியி ன் அழுக்கையும்சகித்துகொள்ளஒருதனிமனம்வேணும்.அதுஅங்கு சாப்பிடவருகிறஎத்தனைபேரிடம்இருக்கிறதுஎனத் தெரியவில் லை.


மாரிக்கண்ணுவிடம்கேட்டால்“கடையின்கூரைக்கு மேல் இருக்கிற மரங்கள்இரண்டுஉதிர்ப்பவைதான்,இவைகளைநான்எவ்வளவுகூட்டிப் பார்த்தபோதிலும்திரும்பத்திரும்பவந்துவிடுகிறதுஎன்னசெய்ய”என்கி றார்.“இதுபரவாயில்லை,சாப்புட்டுஇருக்கும்போதுயெலையிலவந்து  விழுந் துருது சார்,என்ன செய்ய ,,,,,சொல்லுங்க” என்கிற மாரிக் கண்ணு புரோட்டாக்கடை மட்டுமில்லாமல் டீக்கடை,கோழிக் கறி க்கடை என எல்லாம் சேர்த்து வைத்திருக்கிறார்.

”பின்னஒடம்புலதெம்புஇருக்கும்போதுநாலுகாசுபாத்துக்கிட்டாதான்சார்.30 வயசாகப்போகுதுஎனக்கு.ரெண்டுபொம்பளப்புள்ளைங்கநிக்குது.இப்பத் தான்ஒருத்திஒண்ணாப்புபோயிருக்கா,இன்னொன்னுக்குரெண்டுவயசாகுது.அதுகளுக்காகத்தான்சார்இத்தனையும்.என்னதான் மூச்சப் புடிச்சிகட்டி இழுத்துப்பாத்தாலும் சமயத்துல கயிரு அந்து போகுது சார்.முன்ன மாரி இல்ல சார்யே வாரம். அந்தாஅந்த எதிர்க் கடை வந்ததுலயிருந்துநமக்குக்கொஞ்சம்யேவாரம்டல்லாயிருச்சி. போதாதுக்குபக்கத்துலயேவெனையவச்சிருக்கேன்“.எனபக்கத்துவீட்டுக்
கார்ரைகைகாட்டுகிறார்.


அவர்பழையஇரும்புவியாபாரி.பெயர்தான்பழையஇரும்புவியாபாரம். பழையபேப்பர்,அட்டைப்பெட்டி,பைகள்,இத்துப்போனசைக்கிள்,பழைய மோட்டாரின்உதிரிப்பாகங்கள்,சாக்குகள்,இத்துடன்பழைய இரும்பை யும் சேர்த்துக் கொள்கிறார்.இங்கிருந்து 20கிலோ மீட்டர்கள் வரை சுற்றிஇருக்கிறஊர்கள்தான்.அவரதுவியாபாரஇலக்கு.இதுதவிரயாராவது
வரச்சொன்னால்கொஞ் சம் தூரமானாலும் கூட போய் வாங்கி வந்து விடுவார்.

அவரது வாகனமான சூப்பர் XL ல் காலையில் 8 மணிக்கு வீட்டை விட்டு கிளம்புவார். மாலை மூணு அல்லது நாலு மணிக்கு வீடு திரும்புவார்.வாங்கியபொருட்களையெல்லாம்ஒன்றுசேர்க்கிறஇடமா கவும்,தரம்பிரிக்கிற இடமாகவும் அவரது இடம் இருக்கிறது. பாட்டில் தனி ,பேப்பர் தனி,அட்டை தனி என ரகம் பிரித்து கட்டுப்போட்டு அடுக்கப் படுகிற தருணங்களிலெல்லாம் மாரிக்கண்னுவின் டீதான் அவருக்குசக்தியூட்டுகிறபானமாக/ எப்போதாவது ஒரு நாள் “ரொம்ப ஆசையாகஇருக்குடாநாக்குஅரிக்குதுடா”எனசால்னாநிறைய ஊற்றி மூன்றுபுரோட்டாக்களும்இரண்டுஆம்லேட்டுகளுமாய்வாங்கிச்சாப்பிடு
வார்.
சமயத்தில்எப்போதாவதுகோழிக்கறிவாங்குவார்.அவர்சாப்பிடுவதற்கு
மாரிக்கண்னுஎப்பொழுதுமேகணக்குப்பார்த்துகாசுவாங்கியதில்லை. அவரும் வஞ்சகமில்லாமல் ”நம்மள மாதிரி ஆளுக ளுக்குநம்மளப் போலவுகதான்ஆதரவு”எனபையிலிருந்து ரூபாயை அள்ளிக் கொடுப் பார்.அதுஒருகணக்கு,அள்ளிக்கொடுத்தபோதுஅவரது கையிலி ருந்து அளவுக்கு மீறி வந்ததில்லை. குறைந்தும் போனதில்லை. மாரிக் கண்ணுபெண் எடுத்த ஊர்தான் அவரது ஊரும்.பிழைப்பிற்காய் இங்கு வந்து விட்டார்.


“நேத்துப்பைய சார் இவன், இவன் பொண்டாட்டி சின்னப் புள்ளையா இருக்கும்போதுஏங்தோள்மேலயும்மார்மேலயும் போட்டுவளத்தேன் சார்,இப்பஏன்முன்னாடியேநெஞ்சதூக்கிட்டிஅலையுறான்.ஏங்வீட்டுப் பக்கத்துலஇருக்குறமரங்கரெண்டு இவனுக்குயெடைஞ்சலா இருக்கு துன்னு சொல்லி ஏன் வீட்டுப்பக்கத்துல இருக்குற ரெண்டு மரங்க ளையும் வெட்டச்சொல்றான் சார். கிட்டத்தட்ட அதுகரெண்டும் ஏன் உசுருமாதிரி. நான் என்னத்த சொல்ல,அவன் மாமனார் கிட்டப் போய்தான்ஒருநாபேச்சுவாக்குலசொன்னேன்,அதுக்குஎப்பிடிநீங்க
அவர்கிட்டசொல்லப் போச்சு ன்னு மல்லுக்கு நிக்குறான் சார்.நானும் எவ்வுளவுதான் பொறுக்க சொல்லுங்க,மனுசந்தான நானும். சின்னப் பயன்னு பாக்காம பதிலுக்கு சத்தம் போட வேண்டியதுதான் இருக்கு. பின்ன என்னசெய்யச் சொல்லுங்க, எனக்கு மாப்புளத்தான் வேணும் அவென்,மாமென்னு அவன் என்னய நெனைக்காதப்போ நான்மட்டும் ஏன்சார்அவனமாப்புளைன்னுதயவு காண்பிச்சு மருகி நிக்கணும் சொல்லுங்க”/என்கிறார்.


இதுவும்மாரிக்கண்ணுவுக்குள்சமீபகாலவருத்தங்களில்ஒன்றாகசேர்ந்து
கொண்டநாட்கள்ஒன்றில்தான்அவரதுமனைவியையும்,பிள்ளைகளை யும்பார்க்கநேர்ந்தது.பிள்ளைகள்இருவரும்கவுன்அணிந்தகுட்டிப்பூங் கொத்துக்களாய்நின்றார்கள்.மனைவிபூப்போட்டசேலையில்அப்புராணி யாய்நின்றுகொண்டுசிரித்தார்.


அவர்களனைவரையும்ஒன்றாகபார்த்தநாளன்றிலிருந்துநான்வேறொரு கடைக்கு போக நான் எண்ணியதில்லை.

10 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

நன்றி நண்பரே
தம 1

'பரிவை' சே.குமார் said...

அருமை... அருமையான கதை

vimalanperali said...

வணக்கம் கந்தை ஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் சேகுமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

KILLERGEE Devakottai said...

நல்லகதை நண்பரே வாழ்த்துக்கள், கவிதைப்போட்டிக்கு அனுப்பிய எனது கவிதை காண்க....

vimalanperali said...

வணக்கம் கில்லர் ஜி சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
இதோ கவிதை பார்த்து விடுகிறேன்/

ezhil said...

உண்மைதான்.....பூங்கொத்தாய்க் குழந்தைகளைப் பார்த்த பின் பரோட்டா செய்முறை கவனத்திற்கு வராதுதான்.....

vimalanperali said...

வணக்கம் எழில் மேடம்
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

விச்சு said...

டீ..யில்தான் நீங்கள் மயங்குகிறீர்கள். அனிமேசன் படங்கள் எல்லா பதிவுகளிலும் அருமை.

vimalanperali said...

வணக்கம் விச்சு சார்,
நன்றி வருகைக்கும் கருத்துரைக்குமாக/
டீ வியிலும் நேரிலுமாய்
காட்சிகளின் தொகுப்பும்தானே
எழுத்தாய் வரமுடியும் இல்லையா?