22 Aug 2014

அலைவரிசை,,,,,,,,


 
கூப்பிடவில்லை,மனதிற்குள்ளாய் 
நினைத்துக்கொண்டேன்.அவ்வளவே/
அது எப்படி உன் செவியை எட்டியது
எப்படி தெரியவில்லை.
நினைக்கிறவைகளை எல்லாம்
உணர்ந்து கொள்கிற சக்தி
புலன்களுக்கு வந்து விட்ட்தா என்ன?
கை,கால்,முகம் என உடல் முழுவதும்
நனைத்த தண்ணீர் நடு வயிற்றை
நனைக்கையில் சோப் கைக்கு வருகிறது.
இடதும், வலதுமாய் மாறி மாறி
கைகளில்  பயணித்த சோப் 
உடல் முழுவதையும் தேய்த்த பொழுதுதான்
என் மனைவியின் குரல் வருகிறது,
என்ன கூப்பிட்டீர்களா? என.
இல்லை கூப்பிடவில்லை,
மனதினுள்ளாக நினைத்துக்
கொண்டிருந்தேன் அவ்வளவே/
அது எப்படி உனக்கு எப்படி கேட்டது.
நேரம் இருக்கையில் பதிலளி அன்பே/  

No comments: