1 Sept 2014

டக்டகா,,,,,,,





சொல்லாமல்கொள்ளாமல்மின்சாரம்தன்கண்களைஇறுக மூடிக் கொண்ட நேரம் இரவு மணி ஒன்பது.
ஒன்பது மணிக்கு ஒரு நிமிடம் முன்னும் இல்லை,பின்னும் இல்லை.இனி பத்து மணிக்குத் தான் வரும்.இரு மணீ நேரம் என்னசெய்ய?வேறுஎந்தவேலைகளையும்செய்ய முடியாதே?
நண்பர்களிடமும்,தோழர்களிடமும்மனம்விட்டுபேசுவதைதவிர் த்துஉறவுகளிடமும்பேசக்கூடாது என இல்லை.ஆனால் பின்ன தை விட முன்னதற்கே முக்கியத்துவம் தந்து பழகிப்போனான்.
சொந்தங்களின் வீட்டுத்திருமணம், சடங்கு நிச்சயதார்த்தம் ஒரு விசேச வீடு என்றுமாய் கலந்து கொள்கிறதில் இல்லாத விருப் பம் நண்பர்களின் தோழர்களின்,வீட்டு விசேசங்களிலுமாயும் தொழிற்சங்க வேலைகளிலுமாய் மையம் கொள்கிற மாயம் என்ன என்பார் இவனின் நண்பர் ஒருவர்.
அவர் சொன்னபடி தான்  மையம் கொண்டு விடுகிறது மனது. மனைவி அருகில் இருந்தால் மட்டுமே பிறரிடம் பேசுவதை தவிர்த்திருக்கிறான். இல்லையென்றால் ,,,,,,,,,,,,அது ஏன் என இதுவரைஅவனுக்குத்தெரிந்ததில்லை.தெரிந்துகொள்ளமுயற்சித் ததும் இல்லைசீட்டுக்குலுக்கிப் போட்டதில் வரிசையாக வந்த பெயர்களில்.முதலாவதாகசுழியிட்டதுதோழர்பெயரே.இரண்டாவ தாயும்,மூன்றாவதாயும்,நான்காவதாயும்,,,,,,,,,,,நண்பர்களின் உடன்வேலைபார்ப்பவர்களின்பெயருமாய்வந்து பளிச்சிட்டது. இதில்பிரியம்பொருத்தும், நெருக்கம் பொருத்துமாய் அமைகிற பேச்சுக்களில்விளைந்து போகிற மனிதர்களாய் நிற்பவர்களின் பெயர்களை வரிசையாக பிடித்து  நூல் கோர்த்தாய் முதலில் தோழருக்கே போன் பண்ண நினைக்கிறேன்.
பேச்சுஎதுவாகவேண்டுமானாலும் இருக்கட்டுமே,எதைப் பற்றி யும் பேசிவிட்டுத்தான் போகட்டுமே,என்ன குறைந்து போனது இப்போது? தங்கத்துரைத்தோழர் கடை டீயின் ருசியிலிருந்து உலக அரசியல் வரை பேசிகொள்ளலாமே இப்பொழுதுஎன்ன என்கிறதான   நினைப்புடன் எண்களை அழுத்துகிறான்,
ரெடியாகஇருங்கள்தோழர்பேசுகிறேன்நான்என்கிறஅசரீரியை அவருக்குமனத்தந்தி மூலமாய் அனுப்பி விட்டு/

5 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
நன்றாக உள்ளது கதை நகர்த்தல் பகிர்வுக்கு நன்றி

ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...:

வலையுலக உறவுகள் கேட்டதிற்கு ஏற்ப காலம் நீடிக்கப்பட்டுள்ளது என்பதை  மிக்க மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறேன்


-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Geetha said...

அருமை வழிந்தோடும் நீரைப்பிடிக்க கை துடிக்கின்றது...கதை இன்னும் தொடரலாமே நன்றாக உள்ளது.

vimalanperali said...

வணக்கம் கீதா அவர்களே,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

Yarlpavanan said...

சிறந்த பகிர்வு
தொடருங்கள்

vimalanperali said...

வணக்கம் காசி ராஜன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/