4 Sept 2014

எழுதிச்சென்ற பக்கம்,,,,,

    மிகச்சரியாக மூன்றுதான்,ஒன்று கூடி நான்கோ அல்லது ஒன்று   
           குறைந்து இரண்டோ அல்ல.
உருட்டபட்டுவட்டவடிவில்தேய்க்கப்பட்டிருந்தபூரிமாவின்வடிவுகள் அவை.வட்ட வடிவில் யாரோ ஒரு கை தேர்ந்த ஒவியன் வரைந் தெடுத்த ஓவியம் போல காணபட்ட அவைகள் அலுமினிய தேக்சா மூடியின் மீது பரப்பியும்,ஒன்றின் மீது ஒன்றாய் அடுக்கப்பட்டுமாய்/

அப்படிகூட்டுறவாய்அமர்ந்திருந்தஅவைகளைதனதுவலதுகையால் எடுத்து இடது கையில் வைத்துக்கொள்கிறார்.வலது கையால் கொதி க்கிற எண்ணெய்யில் வெந்து கொண்டிருக்கிற பொன் நிறம் காட்டிய பூரிகளை கையகலம் கொண்ட கண் கரண்டியால் அரித்தெடுக்கிறார்.

”என்கண்ணில் எண்ணெய் வழிந்தால்”என இறங்கிச்சொட்டுகிற எண் ணெய் ஒழுக லுடனும் தன் கையில் தாங்கிக்காட்டிய பூரிகள் மூன்று டனுமாய்இருந்தஅவைகளை கரண்டியுடன் சட்டியின் விளிம்பில் தாங்கு கொடுத்து அப்படியே உட்கார வைத்து விட்டு இடது கையில் இருந்த வட்ட வடிவ பூரியின் வடிவை வலது கைக்கு மாற்றி எண் ணெய் கொதிக்கும் சட்டியுனுள் வீசுகிறார்.

ஒருகிலோமீட்டர் அகலத்திற்கோ,அல்லது கால் பர்லாங்கின் சுற்றள விற்கோ தன்னைகாட்டிக் கொள்ளவில்லைசட்டி.சின்னதாய்கைக்கு அடக்கமான சட்டிதான் அது. அதில்தான் இத்தனை யும் செய்கிறார் அவர்.

ஒரேசீராக எரியும் ஸ்டவ்வின் மீது அகல விரிந்த தீ ஜ்வாலையின் மீது அமர்ந்திருந்த அந்த இரும்புச்சட்டி அதனுள் ஊற்றப்பட்டிருந்த அரைச்சட்டியின்அளவேயானஎண்ணெயையும்அதில்வெந்து கொண் டிருக்கிற பூரிகளையும் சுடப்படுவதற்காய் வீசப்படுகிற பூரி மாவின் வட்டவடிவங்களையும்உள்வாங்கிக்கொண்டுமாய்காட்சியளிக்கிறது. அப்படிஇருந்தஇரும்புச்சட்டிசற்றேகரிப்பிடித்தும்,தன்கருநிறம்காட்டி யுமாய்/

தண்ணீர்ஊற்றிபிசையப்பட்டமாவைஉருண்டைகளாய்உருட்டிஅதை
வட்டவடிவில்தேய்த்தெடுத்துஎண்ணெய்கொதிக்கிறசட்டியில்சுட்டெடுக் கிறவரின் வேலை அன்றாடம்அதுவாகத்தான் இருக்கிறது.

சற்றேபொன் நிறமாயும்வெள்ளையாயும்கலர் காட்டி வட்ட வடிவில் சுட்டெடுக்கப்படுகிறபூரிகள்சட்னி,சாம்பார்,மற்றும்உருளைக்கிழங்கு மசாலாவுடன் சேர்த்துசாப்பிடக்கொடுக்கப்படுகிறது பார்சலாகவோ
அல்லதுகடையில்அமர்ந்துசாப்பிடுபவர்களுக்கோ/

திருப்பதிகடையில்எப்போதுமேஇந்நேரம்ரெடியாகஇருக்கும்.என்னவென
தெரியவில்லை.இன்னும்ரெடியாகவில்லை.ஆரம்பத்தில்சைக்கிள்க்கடை வைத்திருந்தவர்.கடைநடத்திகட்டுபடிஆகவில்லையாஅல்லதுமுடிய வில்லையா,இல்லைசமாளிப்பதுகடினமாகஇருந்ததாதெரியவில்லை.

கேட்டதில் வம்பு போலீஸ் கேஸ் என நிறைய வருவதாய்ச் சொன் னார்.

நன்றாக கடை நடந்து கொண்டிருந்ததாய் எல்லோரும்நினைத்துக் கொண்டிருந்தஓரு நாளின் இரவு சைக்கிள்களை கைமாற்றி விட்டு ஒரு வாரத்திலேயே கடை இருந்தஇடத்தை விரிவு செய்தும்,செமன் செய்தும் ஓட்டல் ஆக்கிவிட்டார்.

நன்றாகத்தான்ஓடிக்கொண்டிருந்தது,இப்பொழுதுவரைநன்றாகத்தான்  ஓடிக்கொண்டும்இருக்கிறது.என்ன செய்யபாலாய்ப் போன போதைப்
பழக்கம் ஆளையே உருமாற்றிப் போட்டு விடுகிறதே/

இரவுமணிபத்தைத்தொட்டுவிடக்கூடாதுஒயின் ஷாப் பக்கம் நகன்று விடுகிறார், எத்தனைக்கூட்டம் கடையில் இருந்த போதும்.

முதலில் இரவில் கடைக்கு வருபவர்கள் யாராவது வற்புறுத்தினால் மட்டுமே குடித் தவர் இப்போதெல்லாம் பகலில்கூட,,,,/

போதையில்சிவந்திருக்கிறகண்களுடன்அவர்வணக்கம்சொல்லிமரியா தை தெரிவிக்கிறதை அவர் மேல் நல்ல மதிப்பு வைத்திருந்தவர்கள் கூடவிரும்பவில்லை. கடைக்கு வருவதைத் தவிர்க்கவும் திருப்பதி யை பார்பபதை தள்ளிப்போடவுமாய் விரும்பினார்கள்.

இப்படி இருந்த நேரத்தில் அவனைப் பார்த்தால்நல்லமரியாதையுடன் பேசும் திருப்பதி இப்பொழு தெல்லாம் அப்படி இருப்பதில்லை என்றாலும் கூட பழகிய பழக்கத்திற்காய்,,,,,,,,,,கடையை நெருங்கி விட்டிருந்த நேரம் அங்கு இன்னும் பூரி ரெடியாகவில்லை எனத் தெரிந்தது.

இட்லி ரெடியாகி இருக்கலாம்,அல்லது தோசை கேட்டால் ஊற்றித் தரலாம்.ஆனாலும்அவன்பூரிதான் வாங்க வேண்டும் என நினைத்துத் தான்வந்தான்.அவனது பையனுக்கு பூரி என்றால் கொஞ்சம் இஷ்டம். மதியச்சாப்பாடுடிபன்பாக்ஸிலும்,நிரப்பப்பட்டதண்ணீர்பாட்டிலுமாய் அடைபட்டிருந்த வயர்க்கூடையில் வைக்கப்படாத காலை டிபனை வாங்க வந்திருந்தான்.

இன்றைக்குகேம்ஸ்எனகாலைஆறரைமணிக்கெல்லாம்ஹாக்கிபேட் டுடனும்,பந்துடனுமாய்சென்றுவிட்டமகனுக்கு8.40ற்குள்ளாகசாப்பாடு கொண்டுபோய்கொடுக்கவேண்டும்.9 ஆம் வகுப்புப்படிக்கிற அவனுக் கு கேம்ஸ்ஸில் நிறைய ஆர்வம் உண்டு. அவனதுவிருப்பப்படியே ஹாக்கிடீமில்சேர்ந்துவிட்டான்.விருப்பம்மட்டுமில்லை.ஸ்போர்ட்ஸ் கோட்டா,,,,,,வேலை,,,,,,,, ,என்கிறபேச்சையும்உள்ளடக்கி வைத்திருக் கிறான். ”பையன்களாய் ஸ்கூலில் பேசுவார்கள் போலிருக்கிறது, நம் காலத்தில் எல்லாம்இதெல்லாம்எங்கே தெரிந்தது நமக்கு” என அவ னும் அவனது மனைவியுமாக பேசிக் கொள்வார்கள்,மகன் அப்படி சொல்கிற சயங்களில்/

இதோரெடியாகிவிடும்பத்துநிமிடங்களில்,நீங்களும்கூடகிளம்புங்கள். இன்னும்எதற்குஅவன்படிக்கிறபள்ளிக்குப்போய்திரும்பவருவானேன்? மூன்றும், மூன்றுமாய் ஆறு கிலோ மீட்டர் நீள்கிறஇழுவைதூர பயணத்தில்தென்படுகிறகாட்சிகளும்,தொற்றிக்கொள்கிறஎண்ணங்க
ளுமாய்கூடவேவேஸ்டாய்செலவாகிறபெட்ரோலும்எதற்குவீண்செலவு? அதுதான்ஏற்கனவேகுளித்துரெடியாகித்தானேஇருக்கிறீர்கள்?பேண்ட் சட்டையைமாட்டிகொண்டால் ஆயத்தம் என்ற குரலுடன் ரெடியாகி விடுகிறதன்மைவந்துவிடும்.என்றைக்கும்இல்லாதஅதிசமாய்இன்றை க்குஅதிகாலை4.30மணிக்கெல்லாம்எழுந்து6.00மணிக்குள்ளாய்குளித் து ரெடியானஅதிசயம்நடக்கும்போதே நினைத்தான்,அது இப்படி ஒரு  தற்செயல் ஒற்றுமையாய் ஆகிப் போனது ,அதுவும் நல்லதற்கே எனச்சொன்ன அவனின் மனைவி மகனுக்கான மதியச் சாப்பாட்டை யும் தண்ணீர் பாட்டிலையும் வயர்க்கூடையில் வைத்துக்கொடுத்த நேரம் மணி காலை எட்டை எட்டித்தொடப்போகிறதாய்/

பூப்போட்டசேலையில்சிறுபிள்ளைபோலஇருந்தாள்.அவளிடம்கேலி யாக அடிக்கடி சொல் வதுண்டு.”உன்னை யாரும் பெண் கேட்டு வந்து விடாமல்,அப்புறம்என்பாடு சிக்கல்ஆகிவிடும்” என/

அம்மாவை கேலி பண்ணாமல் இருக்க முடியாது உங்களால் என அதற்கு பதில் மொழி நவிழ்கிறமகள்”கல்யாணவயச நெருக்கி நான் இருக்கையில அம்மாவப் போயி,,,,,,,,போங்கப்பா என பொய்க் கோபம் காட்டுவாள்.கல்லூரியில் இளங்கலையில் மூன்றாமாண்டை குத்த கைக்கு எடுத்திருக்கிறவள்.

அதிகாலைஐந்துமணிக்கெல்லாம்அண்ணா போன் பண்ணி விட்டார்.  சென்னையிலஇருந்து நண்பர் ஒருத்தர் வர்றாருப்பா,அவர ரயில்வே ஸ்டேஷன்ல ரீசீவ்பண்ணி எங்க சொந்தக்காரங்க வீட்ல விட்டுரு ப்பா என அவர் அடையாளம் இட்ட இடம் தோழரின் வீடாய் இருந்தது.

நண்பர் என அண்ணா குறிப்பிட்டவர் ஒரு பொது நலவாதியாய் இருந்தார்.காலை 6.05ற்கு வரவேண்டிய ரயில் இன்னும்வரவில்லை. ஒருமணிதாமதமாகும் என்றார்கள். அதுவும் ஒரு வகைக்கு நல்லதாகவே போயிற்று, கையில் பெரிதாக அவன் எதுவும் பணம் கொண்டு வரவில்லை.ஆட்டோவிற்கு,அண்ணாவின் நண்பரு டன் சேர்ந்து அருந்த டீக்கு என எதற்குமே பணம் கொண்டு வரவில்லை, பத்து ரூபாயை மட்டுமே பையில் வைத்துக்கொண்டு எந்த தைரியத் தில் வந்தான் எனத் தெரியவில்லை.

இனி வீட்டிற்கு போய்விட்டு வரும் போது கையில் ஒரு இருநூறு ரூபாயாவது கொண்டு வர வேண்டும்.ரயில்வே ஸ்டேசனுக்கும், அவனது வீட்டிற்கும் இரண்டு கிலோ மீட்டர் தூரமாவது இருக்கும். சர்வேயர், மைக்கல் எல்லாம் இல்லாத உத்தேசக் கணக்கு இது/
அண்ணாசொன்னநண்பரிடம்போன்நம்பர்வாங்கிக்கொண்டுஅண்ணா விடம் விஷயத்தைச் சொல்லி ரயில்வே ஸ்டேசனின் சூழலிலிருந்து விடைபெறுகிறான்.இந்தஇடைவெளியில்வீட்டிற்குபோய்பையனுக்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு, தானும் சாப்பிட்டுவிட்டுவந்துவிடலாம் என்கிற முடிவுடன் வீடு வந்து சேர்ந்த போதுபிடாரனின் மகுடிக்கு சொக்கி ஆடுகிற பாம்பு போல மனம் சொன்ன சொல்லுக்கு கட்டுப் பட்டு தலையாட்டிக் கொண்டிருந்தான்.

இன்னும் அரை மணியில் ரெடியாக வேண்டும்.சூரியன் வெளிச்சம் காட்ட ஆரம்பித்து விட்டான்.அவனது வேலை அவனுக்கு,இவன் வேலையை இவன் செய்ய வேண்டுமே?என எண்ணம் பூத்தவனாய் இருசக்கரவாகனத்தை வீட்டின் ஓரமாய் நிறுத்திவிட்டு வீட்டிற்குள் நுழைந்தான்.

சற்றெ நாட்களுக்கு முன்புவரை நின்ற இரண்டவேப்பமரங்களும், இரண்டுபன்னீர்மரங்களும்இப்போதுஇல்லை.போர்க்குழியின்அருகே முளைத்துநின்றதால்அனுமதியில்லாமல்அதனுள்நுழைந்துகுழியை மூடிவிடும் ஆபத்து இருக்கிறது.தவிர வீட்டின்சுவரருகே இப்படி வேப்ப மரங்களை வளரவிடுவது பெரும் தவறு.அஸ்திவாரக்குழிக் குள் சென்று விடக்கூடும்.ஆகவே வெட்டி விடுங்கள் நாலாம் பேரி டம் கருத்துக்கேட்காமல்,என யாரோ எப்போதோ சொன்னது ஞாபகத் திற்கு வர அவர்கள் சொல்லிய ஒரு வருடத்திற்குள்ளாக அவர்கள் சொன்னசொல் லின் ஈரம் காயும் முன் அதன் வடு தெரிய இருபது நாட்கள் முன்பாக வெட்டிய மரங்கள் இப்போது இல்லாதிருந்தாலும் கூட இரு சக்கரவாகனத்தை நிறுத்தும் போதெல்லாம் தன் உருக் காட்டி அசைந்து நிற்பதாய் ஒரு நினைவு அவனுக்குள்/

வெட்டிய இலைகளையும்,சிலும்புகளையும் குப்பையாய் ஒரம் கட்டி விட்டு வெட்டிய மரத் தை மட்டும் துண்டு போட்டு மரம் வெட்டிய வர்கள் எடுத்துப்போன பின் அவர்கள் விட்டுச் சென்ற குப்பைகளை கூட்டிஅள்ளிஎரிக்க மிகவும்சிரம்பட்டுப்போனான்.அவைகளை கூட்டி எரித்த மறுநாள் உடல் வலி மிகுதியாகி காய்ச்சலில் போய் சுழியிட்டது.அப்புறமாய் ரவி சுப்பரமணியம் டாக்டரிடம் போய்தான் அந்த சுழியை எடுக்க வேண்டியதாகிப்போனது.


ரவிசுப்ரமணியம் அவன் குடியிருக்கிற ஏரியாவின் முக்கிய அடை யாளங்களில் ஒன்றாய் இருப்பவர் இன்றளவுமாய்.இரண்டு ரூபாய் க்கு மருத்துவம் பார்த்து தனது மருத்துவ வாழ்க்கைக்கு பிள்ளையார் சுழியிட்டவர்.

நெட் கனெக்‌ஷன் கிடைக்கவில்லை சரியாக,ஒவ்வொருமுறையும் கம்ப்யூட்டரில் பணி செய்கிற போதும் தேவுடுகாத்தது போல காத்திருக்க வேண்டியிருக்கிறது. கம்ப்ளெயிண்ட் கூட புக் பண்ணி விட்டேன் என ரயில்வே ஸ்டேசன்போய்திரும்புகையில்எதிர்ப்பட்ட வெங்கடேஷ் அண்ணனிடம் சொன்னேன்.அவர் அங்கு பணிபுரிபவர்.


வேலமூர்த்திசாலையிலிருந்தஅக்காகடையில்நீயூஸ்பேப்பர்வாங்கிக்
கொண்டிருந்தார்.அந்நேரமேநீட்டாகபேண்ட்சர்ட்அணிந்துஇன்பண்ணி யிருந்தார்.”தம்பிநம்பளப்பாத்தாநாலுபேருக்குஉற்சாகம்வரணும்தம்பி, டல்லாயிரக்கூடாது, அதுக்காக நம்ம ஒண்ணும் பெருசா மெனக் கெடனும்ன்னு இல்ல, என்பார்.

யாரது வெங்கடேஷ் அண்ணனா இப்படிப்பேசுவது?ஒரு காலத்தில்,,, ஒருகாலத்தில்என்ன? சற்றே பிந்தைய ஐந்து வருடங்களுக்கு முன்பு வரைஐந்தரைஅடிஉடம்பை சின்னோ ண்டா ன சாராய பாட்டிலுக்குள் அடைத்துக்கொண்டு திரிந்தவர்.எங்கு பார்த்தாலும்,எப்போது பார்த்தா லும்போதைநிரம்பியவிழிகளுடனும்,உடலுடனும்,நடையுடனுமாய்  திரிந்தவர்.

அவரதுஅம்மாஅவனிடம் சொல்லி அழுகாத நாள் இல்லை .எனக்கு மட்டும் ஏன்பா இப்பிடி? குடிச்சிட்டு கண்ட யெடத்துல அவன்விழுந்து கெடைக்கையிலமனசுகதறுதுப்பா.அடஅதுதான்பரவாயில்லைன்னு  விட்டா எந்நேரம் யாரு கூட வம்புஇழுத்துட்டு வந்து நிக்குறான்னு சொல்ல முடியலப்பா,,,,,,,,என்கிற பேச்சுடனும் அழுகையுடனுமாய் வெங்கடேஷ்அண்ணனின் தாயார் வந்து சொல்கிற ஒவ்வொரு நாளும் அவனுக்கு சங்கடமாய் இருந்ததுண்டு.

மிதமிஞ்சிய போதையில் எங்காவது விழுந்து கிடக்கிற வெங்கடேஷ் அண்ணனை தூக்கிக் கொண்டுவந்து வீட்டில் சேர்த்த நாட்களும் உண்டு.அதையெல்லாம் எப்போதாவது அவரைப் பார்க்க நேர்கிற சமயங்களில் நினைக்க வாய்க்கிறதுண்டு.அப்படியெல்லாம் இருந்த அவர் இப்படிச் சொல்வது ஆச்சரியத்திலும் ஆச்சரியமாகவே/

அவருடையஇந்தமாற்றத்திற்குக்காரணம்அவரின்சொந்தங்கள்தான்
எனச்சொல்கிறார்கள்.சிதைந்துகிடந்தவெங்கடேஷ்அண்ணனைகொஞ் சம் கொஞ்சமாய் செதுக்கி அவரின் உடலில் இருக்கிற அனாவசிய ங்களை எடுத்தெரிந்து விட்டு அத்தியாவசி யத்தை மட்டுமே அவரின் முழு உருவாய் ஆக்கி அவரின் ரத்தமும் ,சதையுமான உடலுக்கு புத்துயிர் ஊட்டியவர்களும்,புது அர்த்தத்தைக் கொடுத்தவர்களுமாய் ஆனவர்கள்.வெங்கடேஷ்அண்ணனைஇன்றுஇந்தஅளவில்அடையாளப் படுத்திவைத்திருக்கிறவர்களாய்சொல்லப்பட்டார்கள்.அப்படிஅடையாளப்
படுத்தப்பட்டஅவர்இப்போதெல்லாம்பாட்டிலுக்குள்அடைபட்டுத்தெரியா மல் இவருக்குள் பாட்டிலை சிறைபடுத்தி வைத்திருக்கிறார்.
அவரில்அடையாளப்பட்டுத்தெரிந்தஇந்தவித்தியாசம்அவரினுள்முளை
விடஆரம்பித்தநாளிலிருந்துபளிச்னெஸூம்,பிரெஷ்னெஸூமாயும்,
அதிகாலைக்குளியல்,அன்றாடம்ரோமக்கட்டைதட்டாதஷேவிங்,நல்ல தாய்உடுத்துதல்என்கிறஅடையாளங்கள்அவரின்மேல்ச்சட்டைஆகிப்  போகிறது.


அப்படியானஅடையாளம்முளைவிட்டுப்போனநாளிலிருந்துபாட்டிலை
யும்,போதையையும் ஓரம் கட்டிவிட்ட அண்ணன் வெங்கடேஷிடம் சொல்லிவிட்டு வந்த வேலை அனேகமாய் முடிந்து விடும்.நான் சொல்லிஏற்பாடுசெய்கிறேன்எனவுமாய்சொல்லிஇருக்கிறார்.வீட்டில் வந்துமனைவிரெடிபண்ணிக்கொடுத்தடிபன்பாக்சையும்,தண்ணீர்
பாட்டிலையும்வாங்கிக்கொண் டிருந்த நேரம் அண்ணாவின் நண்பர் போன் பண்ணி வந்து இறங்கி விட்டதாகவும், தன்னு டன் இன்னொரு நண்பர்வந்திருப்பதாகவும்நாங்களேஆட்டோப்பிடித்து சென்று விடுகி றோம்,அண்ணாசொன்னவீடுஎங்கிருக்கிருக்கிறதெனமட்டும்சொல்லு
ங்கள். நீங்கள் எங்களை அங்கு வந்துபாருங்கள் என்கிறார்.

எளிதாகிப்போகிறதுவேலை.சற்றேநிதானமாகக்கிளம்பலாம்.மிகவும் நிதானம்காட்டினால் பையனுக்கு சாப்பாடு கொண்டு போய்க் கொடுப் பதில்தாமதம் ஏற்பட்டுப் போகலாம் என்கிற எண்ணத்துடன் கிளம்பிச் சென்றபோதுடிபன்வாங்கநின்றரோட்டோரக்கடைதான்இத்தனையும்  அடையாளப்படுத்தியும், சுமந்து கொண்டுமாய்/

ஒன்று கூடி நான்கோ, அல்லது ஒன்று குறைந்து இரண்டோ அல்ல, மிகச்சரியாக மூன்றுதான்.சுட்டெடுத்தபூரிகளும், சுடப்படுவதற்காய் எண்ணெய்ச் சட்டியில் வீசப் படுகிற மூன்று பூரிகளுடன் இன்னமும் ஒன்று சேர்த்து நான்காய் வாங்கி பார்சலாய் கொண்டு செல்கிறான்.

சுட்டபூரிகள்விற்பனைக்காகவும்,சுடப்படப்போகிறவட்டவடிவ மாவு  வடிவங்கள் பூரியாய் உருவெடுப்பதற்காகவும்/

1 comment:

vimalanperali said...

வணக்கம் காசிராஜன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/