15 Oct 2014

லேசுப்பட்டதாய்,,,,,,,,



                                                எதிர்பார்ப்புகளேஇங்குகனவுகளாய்விரிவதாகியும்விளைவதாயும் தெரிகிறது.
எங்கும்,எதிலும எப்பொழுதும் நிறைந்திருக்கும் பரம்பொருளைப்போல கனவு களின் வாக்கியமே பிம்பங்களாய் நம்கைபிடித்தும்,மனம் பிடித்துமாய் நிறைந் திருக்கிறது.

இதில்பகல்கனவுக்குத் தரப்படுகிற முக்கியத்துவம் வேறு எந்த வேளையிலும் அழையா  விருந்தாளியாய் வந்து போய் விடுகிற  கனவுக்கு தரப்படுவதில்லை என்பதே எளிய கணக்காக/

காலை,மதியம்,இரவு மூன்றில் எவ்வேளையானாலும் கூட உயர் உடல் அயர்ச் சியின் காரணமாக வந்து சற்றே கண்ணயர்ந்து விடுகிற வேளையில் சட்டென சொல்லாமல், கொள்ளாமல்பிரவேசித்துவிடுகிற கனவு சமயாசமயங்களில் கனம்சுமந்தும்,லேசாகவும்/

சுமக்கிற கனம் எதைப்பொறுத்தது என்பதே கனவுவிற்குரிய பலனாகவும் அது விளை விக்கப் போகிற செயலாயும் இருப்பதாய்ப்படுகிறது.

அன்றொரு நாள்,,,,,, முதல் நாள் இரவு சற்றே அதிகமாய் விழித்து விட்ட கார ணத்தால் மறுநாள் அலுவலகம் விட்டு வந்து கையில் தேநீர் டம்ளருடன் அமர்ந்திருந்த அவனை சற்றேகண்ணயரவைத்து விடுகிறது அசதியும், முதல் நாள் விடுபட்டுப்போன தூக்கமும்/

கண்ணயர்விற்கும்,விழிப்பிற்கும் இடையிலாக வந்துவிட்ட கனவு கனம்தாங் கியதாஅல்லதுலேசானதா தெரியவில்லை.ஆனால்திரைகட்டியதியேட்டரில் சினிமாப்படம் போல வந்தெழுந்துசெல்கிறது ப்ரஜெக்டர் மற்றும் ஆபரேட்டர் உதவியில்லாமல்/

இப்படி நால்வழிச்சாலையில் பயணித்து வருகிற வேகத்துடன் எந்த சிக்னலி லும், ட்ராபிக்கின் இடைஞ்சலிலும் மாட்டிக் கொள்ளாமல்  நண்பர்கள் தோழர் கள் மற்றும்உறவினர்கள்உடன்வேலைபார்ப்பவர்கள்இன்னும்இன்னுமான,,,, பிறர்களைகாட்சிப்படுத்துகிறகனவுஎப்போதுமேஎதிர்பார்ப்புகளையும், ஆசைக ளையும் உள்ளடக்கியதாகவே இருக்கிறது.

இருக்கட்டும் அதனால் என்ன?எப்பொழுதும் போல சம்பவங்களும், நண்பர்க ளும், தோழர்களும் இன்னும் பிறர்களுமாய் வந்து போகட்டும்.நம் எல்லோரின் கனவிலு மாய்/

கண்ணயர்விற்கும் விழிப்பிற்கும் இடையிலாய் வந்து விடுகிற கனவு எப்பொ ழுதும் கனம் தாங்கியதாயும்,லேசாகவும்/

5 comments:

'பரிவை' சே.குமார் said...

அருமை அண்ணா...

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
அண்ணா.
கதைக்கரு நன்றாக இருக்கிறது.. ஆரம்பித்த இடமும் முடித்த விதமும் சிறப்பாக உள்ளது பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

vimalanperali said...

வணக்கம் சேக்குமார் அண்ணா,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் ரூபன் அண்ணா,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

Thulasidharan V Thillaiakathu said...

அருமையான கதை! எப்படி விட்டுப் போனது என்று தெரியவில்லை!