23 Oct 2014

மென் மேகம்,,,,,,,



வேகப்படுகிறபொழுதுகள் வாய்க்கப்பெறுகிற பெரும்பாலான நபர்களில் ஒருவனாகிப் போன ஒருநாளின் மாலையில் நானும்எனது இருசக்கரவாகனமுமாய் வந்து கொண்டிருக்கிறோம். கூடவே கைகோர்த்துக்கொண்டுவந்த கருநிற சாலையும். அதன் ஓரத்து மண் வெளியும்/

ஒரு மென் வரைபடம்அவைபோலபின்நோக்கிச்செல்லநாங்கள் முன் நோக்கி நகர்ந்தவறாய்/ கறுத்திருந்தசாலையின்மென்மேனிமீதுந்தவிதநடமாட்டமும்இல்லைஅவ்வளவாக/அங்கொன் றும் இங்கொன்றுமாய் ஊர்கிற வாகனங்கள் தவிர்த்து/

கனரகவாகனங்களை முந்தமுயல்கிறஇலகுரகவாகனங்களும், இலகுரக வாகனங்களை முந்த முயல்கிறகனரகவாகனங்களுமாய்பயணப்படுகின்றசாலையில்வெயில்காலத்தில்மனிதநடமாட் டம்சற்றுமட்டுப்படுவதை முன்னறிவித்துச் செல்வதாக/

ள்அரவமற்ற தூரங்களைகடந்துநகர்கையில்சாலையின்ஓரமாய்நட்டுவைக்கப்பட்டிருக்கிற சிறிய ஊராய் காட்சிப்படுகிறது அது.மண் சுமந்தும் மனிதர்கள் சுமந்தும் ஈரம்சுமந் துமாய் நிற்கிறகிராமத்தின்உள்கூடுவிவசாயம் சார்ந்து நிற்கிற குடும்பங்களை க்கொண்டு கட்டமைக் கப்பட்டதாக/எல்லாம்மானாவாரிநிலங்களாகவேபெரும்பாலுமாய்.

வானம்பெய்தால்செழிப்பு,பொய்த்தால்வறுமைஎனகண்ணைக்கட்டிக்கொண்டுபெரும்பாலுமாய் வறுமைக்கு வாழ்க்கைப்பட்ட பிழைப்பு/ செழிப்பிற்கும், வறுமைக்கும் ஊடாக வேகமெடுத்து ஓடுகிறவாழ்க்கைஇப்போதுஏதோஒரு மென்சொல்லெடுத்து தடைபடுவதாக /

பருவமழைபொய்த்துப் போகிறது.விதைத்தது கைவரவில்லை. விவசாயத்திற்காய் செய்கிற செலவுகட்டுபடியாகவில்லை.மொத்தத்தில்பொய்த்துப்பொனது விவசாயம் என நிலங்களை வந்தவிலைக்குவிற்றுவிட்டு விளைநிலங்கள் வீட்டு மனைகளாக மாறி நிற்கிற கோலத்தை கனத்த மனதுடன் பார்க்கிறவர்களாக /அப்படியான மனிதர்களை இன்னும் தன்னகத்தே தக்க வைத்துக்கொண்டுள்ளஊரைநெருங்கசற்று தூரத்தே வருகிற போது விழிபடலத்தில் காட்சிப் பட்டவைதான் இப்படியெல்லாம் விரிவுபட்டுத்தெரிவதாக/ 

உதிர்ந்து கிடக்கிறது இலைகள் சாலையை மூடி/வேறெந்த இடத்திலும் எதுவும் தென் ---பட மறுத்துஅதுமட்டும்விழிவிரிந்தபார்வைக்குப்படுவதாய்/அரசமரத்துஇலைகள்அவை. அண்ணா ந்து பார்க்கையில் தெரிகிற இலை உதிர்த்த மரம் தனது வெற்றுக் கிளைகளைக்காட்டி/

ஆகா என்ன இது இப்படி ஒரு தோற்றத்துடன் உருமாறி காட்சி தருகிறாய் நீ?மற்ற மரங்க ளெல்லாம்தன் இலைகளை எப்போதோ உதிர்த்துவிட்டுஇப்போது புதிதாய் துளிர்க்க ஆரம்பி த்தும்,கம்பீரம் காட்டியுமாய் அடர்ந்து சிரித்து நிற்கிற பொழுது நீ மட்டும்  விடாப்பிடியாய் உன் மேனியின் ஆடைகளை களைத்து எறிவது போலஉனதுகிளைகளிலிருந்துஇலைகளை உதிர்த்து எறிகிறாயே ஏன்அப்படி?அதுவும்வாகனங்கள் ஊறும் சாலை மீது?ஊர் ஓர சாலை அது.நிழல்போர்த்திக்கிடக்கும்மரங்களும், மரங்களின் கீழ் தஞ்சம் கொண்டுள்ள டீக்கடைக ளுமாய் இருக்கிற சாலையின் ஓரமாய் மெதுவாய் ஊர்ந்துவரும்போதேபெரிதாய் எதுவுமே தென்படாத சாலையில் வட்டமாய் கட்டம் கட்டியது போல் உதிர்ந்து கிடந்த இலைகள் தூரத்தில்வரும்போதுஏதோ பார்ப்பதற்கு கண்ணாடிச்சில்லுகள் சிதறிக் கிடப்பது போலவே த் தெரிகிறது.

மாலைவெயில்பட்டுவெள்ளையாய்,பழுப்பாய்பலகலரில்மின்னுகிறது.தூரத்தில்இருந்துவருகிற வனுக்கு ஒரு சந்தேகம்?என்னடா இது நடு ரோட்டில்இப்படி கண்ணாடிகளாய் உடைபட்டு மின்னுகிறதே?என/

ஆமாம்ஆனால் அருகில் வரவர அது உடைந்த கண்ணாடிச்சில்லுகள் இல்லை.மாறாக உதிர் ந்தமரத்துஇலைகள்.பார்க்கிற வேளையிலேஅவன்உடல்மீதாய்ஒருஇலை ஒன்று மெல்லிதாய் உதிர்ந்து படர்ந்து உடல் தழுவிச்செல்கிறது. 

செல்லட்டும்,செல்லட்டும்,மெதுவாக,எனநினைத்தவாறேமரத்தின்கீழிருந்தடீக்கடையில் டீசாப் பிட்டுவிட்டுகிம்பும் பொழுது அவனைக்கடந்தடவுன் பஸ்ஸின் மீதும் ஒருஇலைஉதிர்ந்து அழகுகாட்டிச் செல்கிறது. 

செல்லட்டும்அதன்திசையில்என உதிர்ந்த இலைக்கு கைகாட்டியவாறே கிளம்பி வருகிறேன்.

5 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை நண்பரே
தம 1

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

நன்றி சார் வாக்களிப்பிற்கு/

Thulasidharan V Thillaiakathu said...

அழகிய இலக்கிய நடை! அருமை!

vimalanperali said...

வணக்கம் துளசிதரன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/