12 May 2015

மத்தாப்பூ,,,,,,,

இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது.மெலிதான சாரல்.மத்தாப்பூவாய் மலர்ந்தி ருக்கிறமனது.சாலையில்எதிர்ப்படுகிறஇருசக்கரவாகனமும்,மிதரகவாகனமும்,  கனரக வாகனமுமாய்/

அருப்புக்கோட்டையிலிருந்துநூல்ப்பிடித்துவிருதுநகர்வரைவருகிறசாலையது. கருப்பாய் நீண்டு வாலோடியாய் படுத்திருந்த சாலையின் மார் மீதுஎனது இரு சக்கரவாகனத்தில்வந்துகொண்டிருக்கிறேன்.சக்தியண்ணன்கடையில்டீக் குடிக்கையில்பெரிதாய்வீசியெறிந்தசாரல்என்முகத்தில்வீசியெறிந்துதெரித்தது ஒவ்வொருதுளியாகவும்.ஒவ்வொருமடக்காகவும்நாவின்சுவையறும்புகளில்
ஊறித்திளைத்தடீசுவையூட்டிய நேரம். மழையின் துளியும் உடன் சேர்ந்து கை கோர்த்துக் கொள்ள ரோட்டின் வலது பூரமாய் பெரிதாய் கூரை வேயப்பட்டு அமர்ந்திருந்த டீக்கடை பார்க்க நன்றாகவே இருந்தது.

அந்தநன்றாக இருந்ததுக்கு மட்டுமே அல்ல டீசாப்பிடப்போவது.எப்படியோ ஏற்பட்டபழக்கத்தின்நுனி விரிந்து பரப்பிய மென்பரப்பின்மீது ஏற்பட்ட பழக்கம்.
இப்போது டீயும், பஜ்ஜியுமாய் கழிகிறது.ஒரு வடைஅல்லது பஜ்ஜிடீ இரண்டு மாய்சேர்த்துஆகிப்போகிற பத்து ரூபாய்க்கு இது தேவையாஎன நினைப்பிருந்த போதும்கூடஎளிதாக விட்டு விட முடியவில்லை பழக்கத்தை.

தினசரி காலையில் அலுவலகம் செல்கிற வேலையில் ஒரு டீ,மாலையில் அலுவலகம்விட்டு வருகையில் ஒரு டீ/என்றாவது நாக்கு நமநமக்கிற வேளை களில் ஒருவடை அல்லது ஒரு பஜ்ஜியுடன் உடன் சேர்த்துக் கொள்வதுண்டு.
அதுவும் நன்றாகத்தான்இருந்திருக்கிறதுபலசமயங்களில்.எப்போதாவது ஒரு சிலசமயம்ஏதோஒருமாதிரியாய்/அதுடீயின்சுவைக்குறைவாஅல்லதுடீக்குடிப் ப வரின் மனோநிலையாஎன்பது தெரிய வில்லை.

இன்று கடைக்குப்போன நேரம் மூன்று பெண்பிள்ளைகள்ஒரேமட்டத்தில்.ஒரு பஜ்ஜி இரண்டு ரூபாய்க்கு என்றால் இரண்டு பஜ்ஜி நான்கு ரூபாய்எனகணக்கு சொல்லிக்கொண்டிருந்தார்கள்,பள்ளிலீவுதினசீசன்.வீதியெங்குமாய்விரிந்திருக் கிறமென்பூக்களாய்ஓடித்தெரிகிறபிள்ளைகளைதத்தெடுத்துக்கொண்டிருக்கிற டீவீக்கள் விரித்த அடர் படலத்தையும் மீறிதெருவிறங்கிவிளையாட வந்த பிள்ளைகள் போலிருக்கிறார் கள் அவர்கள்.

அவர்களைகடையும்,கடைகொண்டவடையும்,பஜ்ஜியும்தேர்ந்தெடுத்துகொண் டதுஇப்போது.ஒல்லியாய்ஜடைபோட்டவள்,பாவாடைசட்டைஅணிந்திருந்தவள், சுடிதார்போட்டிருந்தவள்,,,,,,எனஒவ்வொருவரும்ஒவ்வொருவிதமாய்தனித்துக் காட்சிப்பட்டுத்தெரிந்தவர்களாய்.இவர்களைப்பார்த்தவாறும்அவர்களது படிப்பு, வகுப்பு,வீதி எல்லாம் தெரிந்து கொண்டவனாயும் முகத்தில் தெரித்து விழுகிற தண்ணீர்த்துளியின் ஈரத்துடனும்,ஜில்லிப்புடனுமாய் கிளம்புகிறேன்.

கிளம்பக்கிளம்ப,,போகப்போக,,,மேலேவிழுந்தஇளம்சாரல்வளுக்கவும்இல்லை.
குறையவும்இல்லை.லேசாகஒவ்வொருபொட்டாய்வந்துமேல்விழுந்துகொண்டி
ருக்கிறது.ஒன்று, இரண்டு ,மூன்று,,என பொட்டு வைத்த சொட்டுக்கள் சட சடவென வேகமெடுத்துப் பெய்கிறது.

இரண்டு நிமிட நேரத்திற்கும் குறைவான நேரம்தான்.வேகமெடுத்த சொட்டுக் கள் அடங்கி விடுகின்றன.அப்புறம் மெல்ல பழைய மாதிரியே தூறலாய் உருவெடுத்து/

ஜில்லிட்டுமுடித்தகாற்றுடன்பெய்ததூறல்துளிகள்முகத்தில்பட்டுத்தெரிக்கஇனிமை கடந்த பொழுதுடன் மென் காற்றையும் அனுபவித்தவனாய் வந்து கொண்டி ருந்தேன். 
 
இதுவும் நன்றாகத்தானே இருக்கிறது.மெலிதானசாரல்மத்தாப்பூவாய் மலர்ந் திருக்கிறமென்மனது,சாலையில்எதிர்படுகிறஇருசக்கரவாகனமும்,மிதரக கனரக வாகனங்களுமாய்/

7 comments:

KILLERGEE Devakottai said...

யதார்த்தமான ரசனை.... அழகாக ந...ட.....ந்.....த.....து....
தமிழ் மணம் 2

UmayalGayathri said...

இனிமையான சாரலில் மென்மையான கற்றோடு நடப்பது சுகம் தான்

தம.3

vimalanperali said...

வணக்கம் உமையாள் காயத்திரி மேடம்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் கில்லர் ஜி தேவகோட்டை சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

திண்டுக்கல் தனபாலன் said...

ஆகா...! இனிமை...

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை நண்பரே அருமை
தம +1

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும் கருத்துரைக்குமாக/