11 May 2016

பார்க்கம்பி,,,

இருந்து விட்டுதான் போகட்டுமே,என்னதான் கெட்டு விட்டது இப்பொழுது? அப்படித்தான் புதிதாகஒன்றைகற்றுத்தெளிகிறவேளையில் அது கைவரப் பெற்று ,அதை தன் வயப்படுத்தி நடைமுறைபடுத்துகையில் தவறு வரும்தான் நண்பா/

அவ்வளவுவலியிலும், அவ்வளவு ரத்தப்போக்கிலும், அவ்வளவு வேதனையி லுமாய் ஜனிக்கிற அழகான குழந்தைமுதன்முதலாய்நடைபழகும் போது சுவர் பிடித்து எழுந்து நடக்கை யில்பல தடவைவிழுகிறதுதானே?பின் விழுந்த போதேல்லாம்எழுகிறதுதானே?விழுவதெல்லாம் எழுவதற்கே/என்கிற தத்துவ உண்மையை உள்ளடக்கிய செயலை தன் சின்னக்கைகளை நீட்டி, சின்னஞ் சிறிய விரல்களை அகல விரித்து தன் பூப்பிஞ்சு பாதங்களை தத்தக்கா, பித்தக்கா,,,,என எட்டெடுத்து வைத்து சுவர் பிடித்தும்,நடை வண்டி பிடித்தும் இப்போது வாக்கரிலுமாய் நடை பயில்கிற அந்தப்பிஞ்சு கீழே விழுகாமல் இருப்பது எப்படி சாத்திய மாகும் நண்பா?

அவ்வளவு தூரம்ஏன்நண்பா?டவுசரில் தபால்பை ஓட்டையுடனும், தோள்ப் பட்டையில் கிழிந்துதொங்கும்கிழிசலானசட்டையுனும், வார்அறுந்தமஞ்சள்ப் பை சுமந்தபுத்தகங்களுடனும், செருப்பில்லாவெறுங்காலில் இரண்டு,மூன்று கிலோ மீட்டர் நடந்து போய் பள்ளியில் படித்த நம் இளமைக்காலங்களில் நமக்கு சக மாணவர்களிடமிருந்து கிடைக்கிற காக்காய் கடி கடித்த மிட்டாயும்,பள்ளியின் கேட்டோரம் அமர்ந்து பாட்டி விற்ற சூம்பிப்போன இளந்தைப் பழமும்,குச்சி ஐசும்தானே?????என இருந்து விடாமல் விடாப் பிடியாய் அரைமணி, ஒருமணி (ஒரு மணி என்பது வசதியானவர்களின் பேரம்) என வாடகை சைக்கிள் எடுத்து குரங்குபெடல் போட்டு எத்தனை முறை விழுந்திருக்கிறோம்.எத்தனை முறை அடிபட்டிருக்கிறது? கை முட்டிகளிலும், கால்முட்டி -களிலும்,தவிர உடம்பின் இதரப்பகுதிகளிலும் சிராய்ப்பும், விழுப் புண்ணும் ஏற்படாத இடமுண்டா நண்பா?சொல்லுங்கள்/

இப்பொழுதெல்லாம் பிறந்த குழந்தைக்குக்கூட சைக்கிள் வந்து விட்டதைப் போல அப்போதெல்லாம் ஏது நண்பா?

பெரியசைக்கிள்,குரங்குப்பெடல்,டக்கடிப்பது,கீழேவிழுந்துகைகாலில்,விழுப்புண்ணும், சிராய் ப்பும்/இதுதானே நம் அங்க அடையாளம் அன்று/

பேனாச்சீனா,மூனா தெருவில் குடியிருந்த கூடப்படித்த சக மாணவன் ஒரு வன் இப்படித்தான் சைக்கிள் பழகிய நாட்களில் ஏடாகூடமாய் ஓட்டிக்கொண்டு போய் மரத்தில் மோதிவிட்டான். 

சைக்கிளில் ஏறத்தெரிந்தவனுக்கு இறங்கத்தெரிந்திருக்கவில்லை.ஏதோ ஒரு வீட்டின் வாசல் படியோரம் சைக்கிளை நிறுத்தி அதன் மேல் ஏறி அமர்ந்து இடுப்பை ஒடித்து, ஒடித்து ஓட்டியவனுக்கு அவனது வீடு இருந்த சந்தின் முனை திரும்பும் போது சைக்கி ளின் வேகத்தை கட்டுபடுத்தவோ அல்லது பிரேக்பிடிக்கவோ தெரியவில்லை இல்லையெனில் தோணியிருக்கவில் லை.

சந்தின் எதிர் வரிசையில் சற்றுத்தள்ளி தன் ஆகுருதி காட்டி ஓங்கி வளர்ந்து நின்றபுங்கமரத்தின்மீதுநிறுத்த முடியா வேகத்தில் சென்று மோதி விடுகிறான். மோதிய வேகத்தில் தூக்கி எறியப்பட்ட அவன் சிமெண்ட் பூசப்பட்ட சாலை யில் விழுந்ததில் உடலெல்லாம் சிராய்ப்பும், தலையில் முன் நெற்றியை ஒட்டி அடியும் விழுந்து விடுகிறது.

பட்டஅடிக்காய்ஒருமாதம்ஆஸ்பத்திரிக்கட்டும்,சில நாட்கள்பள்ளிவிடுமுறை யி லுமாய் இருந் தான்.

இப்போது அவன் பெரிய சைக்கிள் வித்தைக்காரனாய்.தன்னுடைய இந்த45 ஆவது வயதில் கைகள் இரண்டையும் விட்டு விட்டு கால்கள் இரண்டையும் ஹேண்ட் பாரில் வைத்து ஓட்டுகிறான்.அதுவும் வேகமாக/இது தவிர இன்னும் இன்னுமாய் நிறைய செய்கிறான்.

ஒருவேளை அவன் அன்று அப்படி விழுந்திருக்கவில்லை என்றால்,தலையில் அடிபட்டு கட்டுப்போட்டிருக்கவில்லை என்றால்,அதனால் அவன் சில நாட்கள் பள்ளிக்கு விடுப்பு எடுக்காமல் இருந்திருப்பானேயானால் இவ்வளவு பெரிய சாகசக்காரனாக ஆகியிருப்பானா? என்பது சந்தேகமே/எல்லாம் காலம் கற்றுத் தந்தது.

நீங்கள் இந்தத் தடவை கம்ப்யூட்ரில் டைப் பண்ணிய எழுத்துக்களில் பிழை யொன்றும் அவ்வளவாகஇல்லையே,,,,? எனஎன்னிடம்கேட்டபோது உங்களி டம் சொல்ல நினைத்து சொல் லாமல் விட்டதை எழுத்தில் காண்பித்து விடுகிறேன் நண்பா,

இப்போது என்ன தவறு வந்தால் வந்து விட்டுத்தான் போகட்டுமே? திருத்தித் தான் கொள் வோமே?

விழுவதைப்பற்றிகவலைப்பட்டால்நடை பழகுவது கடினம் என நீங்கள்தானே ஒரு முறை என்னிடம் கூறினீர்கள் ஞாபகமிருக்கிறதா?,,,,,,,,

1 comment:

Nagendra Bharathi said...

பகிர்வுக்கு நன்றி