ஆடுகிற ஆட்டமும் ஓடுகிற
ஓட்டமும் தன் நிலை கொண்டுள்ள மண்ணில் வேர் விட்டும் துளிர்த்துமாய்,,,,/
************
வேர்விட்டும் துளிர்த்துமாய்
நிலை கொண்டுள்ளவைகள் பாவியும் பரவியுமாய் ஓடித் திரிகிற பரப்பின் மீது உயிரோட்டம் காட்டி,,,/
**********
உயிரோட்டங்களின் வழித்
துள்ளல்களாய் இம்மண்ணும் மண்ணில் விதை கொண்டவைகளும்,நிலை கொண்டவைகளுமாய்,,,,/
**********
நிலை கொண்டவைகளின்
வழித்தோண்றல்கள்,
விதை கொண்டவைகளின் பின் வழி தொடர்வாயும் விதையிட்டவரின் கைபிடித்துமாய்,,,/
விதை கொண்டவைகளின் பின் வழி தொடர்வாயும் விதையிட்டவரின் கைபிடித்துமாய்,,,/
**********
பற்றிச் சென்ற கைகளின்
ஈரமும் வாஞ்சையும் நெஞ்சங்களின் அடி ஓர உரம் கொண்டும் காட்சிப்பட்டுமாய்,,,,/
***********
காட்சிப்பட்டவைகளும்,ஈரம்
கொண்டவைகளும் பரஸ்பரம் தங்கி உறை கொண்ட மனங்களின் விசாலமும் விலாசமும் நம்மில் உறை
கொண்டே,,,/
**********
உறை கொண்டவைகளின் ஓட்டமும்
நடையும் மென் நிமிர்வும் தன்னில் நிலை கொண்டுள்ளதை படம் பிடித்துச்செல்கிற நகர்வுகள்,,,/
***********
நிலை காட்டி நகர்கிற
நிமிடங்களும் நொடிகளும் வட்டவடிவம் கொண்டுள்ள கடிகாரத்திற்குள் அடைகொண்டதாய்,,,,,/
**********
அடை
கொண்டவைகள் யாவும் தன் நிலை பட்டே புலப்பட்டுச்செல்வதாய்,,,,/
*************
புலப்பட்டவைகளின்
புலர் பொழுதுகள் உயிரசைவு காட்டிச் சென்ற நிமிடங்களின் உறைவுகள் கடினம் தாங்கியே,,,/
*********
கடினம்
காட்டி காட்சிப் பட்டவைகள் யாவும் உன்னிலும் என்னிலும் நம்மிலுமாய்,,/
***************
***************
நிலையுற்றும் நிலையற்றதுமான நிறங்களின் அடைகொண்ட புள்ளிகளே துவக்கமாய்,,,,,/
*************************
துவங்கிய புள்ளிகளின் நிறங்களும் அடர்வுகளும் ஓர
விளிம்புகளின் துவக்கம் காட்டியாய்,,,,,/
5 comments:
அருமை...
அன்பும் பிரியமும்!
நன்றியுடன்!
ரொம்ப நன்றாக இருக்கிறது
துளசிதரன், கீதா
மிக்க நன்றியும் அன்பும்!
Post a Comment