22 Sept 2010

அகநிலை



    










போகும் போது சென்ற வேகத்திலெல்லாம்
இப்போது செல்லஇயலாது.
அன்பின் மனிதர் செல்லத்துரைப்பாண்டியன்
கட்டிக்கொடுத்த
எழுதுபொருள்,மற்றும் , நோட்டுக்கள்
அடங்கிய பார்சல் ஒன்று இருந்தது.
தொழிலின் பக்தி கட்டிய
பார்சலில் பளிச்சிட்டது.
நோட்டுக்களும்,புத்தகங்களுமாய்
அடுக்கியவைகளை இறுகக்கட்டிமுடிந்திருந்தான்.
அவன் காதலியை மனதினுள் ,
உள்வைத்து பூஜிப்பதைப்போலவே./
இங்கிருந்தது இப்படியே தூக்கி எறிந்தாலும்
பார்சல் அவிழாது போல/
அதே சைக்கிள், அதே சாலை,அதே நான்தான்
என்கிற படிமம்
அப்படியே நிலைகொண்டிருந்த போதும்
போகிற போது சென்ற வேகத்திலெல்லாம்
இப்போது திரும்ப இயலவில்லை,
போகும்போது இருந்த வெற்றிடமும்
இப்போது இல்லை
சைக்கிளிலும்,என்னிலும்./

No comments: