22 Sept 2010

உறைபனி,,,,,




நீங்கள்கட்சிக்காரரா?எனக் 

கேட்டவரிடம் சற்று தயங்கி

"ஆமாம்" என்றேன்.

நான் சார்ந்த தொழிற்சங்கம்

அதில் இருப்பதால்நாங்களும்

அதுவாகித்தெரிகிறோம்,

என்ற என்னைஏறிட்ட அவரை

எது பாதித்தது எனத்தெரியவில்லை.

ஒன்று கேட்டஎனக்கு மாதிரியாக

ஒன்பது காட்டினார்.


அதுவரை எனக்கு அவர் அப்படி

எடுத்துக் காண்பித்தது இல்லை.


25 ஆண்டுகளாக கடை வைத்திருக்கும்

அவர் 
மனித அசைவுகளை வைத்தே

மனங்களை எடை போடும் வல்லவர்.

கடையிலிருக்கும்துணிகளைப் போலவே

கலர்,கலராய்மனிதர்களை

பாகுபடுத்திப்பார்த்திருக்கிறார்.

"எப்பிடி இருக்கீங்க"என்கிற கேள்விக்கு

மறக்காமல்"நன்றாக இருக்கிறேன்மாமா"

எனவெள்ளந்தியாய் வாய்நிறைந்து

சிரிப்பவரிடம் எப்படி சொல்லாமல்

இருக்க?நான் ஒரு குறிப்பிட்ட

கட்சியை சேர்ந்தவன்தான் என.

நினைத்தால்நினைத்து விட்டுத்தான்

போகட்டுமே ,அரசியல் ஒரு சாக்கடை என.

அபிப்ராயபேதப்பட்டால்

பட்டு விட்டுத்தான்போகட்டுமே,

இந்தக்கட்சி சரியில்லை என.

சொன்னால்சொல்லிவிட்டுப்போகட்டுமே,

இவர்களெல்லாம் .......என்பது மாதிரிகூட.

இதற்காகவெல்லாம்தெரிந்த நண்பர்

மூலமாகஅறிமுகமான அவரிடம்

எப்படிச் சொல்லாமல் விட

நான் கட்சிக்காரன்தான் என.



 

No comments: