22 Sept 2010

சிதறல்






தரையில் சிதறியிருந்த
கடலை மிட்டாய் துகள்களின் மீது
அமர்ந்தவனை எப்படி எழுப்ப?
என்ன சொல்லி தள்ளிஅமரவைக்க?
கடலை மிட்டாய் சாப்பிட்டுக்கொண்டிருக்கையில்
வந்திருந்தவனின் வருகை
தவிர்க்க இயலாததாகிப்
போகிறது.
கடிபட்டமிட்டாயின் துண்டை
தரையிலிருந்து
எடுத்தபோதுதான் கவனித்தேன்.
வந்திருந்தவன் கண்ணன்.
பலசரக்கு வியாபாரம் செய்பவன்.
மாதம் முழுவதற்குமாக
முதல் மூன்று தேதிகளுக்குள்ளாய்
சரக்குப் போடுபவன்.
வரும்பொழுதே தாமத்திற்க்கு
வருந்திக் கொண்டேதான் வந்தான்.
சரக்குகளை இறக்கி வைத்து விட்டு
சிட்டை வாசித்து சரிபார்த்து விட்டு
கிளம்புகையில்தான் சொன்னான்.
"இனிமேல் நீங்கள் கடலைமிட்டாய் சாப்பிட்டுக்
கொண்டிருக்கையில் வரமாட்டேன்" என.

No comments: