24 Sept 2010

தாயக்கட்டை





அவனதுநினைவு
என்னில்தோன்றி
வட்டமிடும்போதெல்லாம்
அவனைஆரத்தழுவிட
முடியவில்லையாயினும்
ஒடிசலும்
பூஞ்சையுமான

அவனதுஉருவம்
சலனப்படுத்திவிடுகிறதுதான்.
அவனும், நானும்
ஒன்றாகவே
படித்த
பள்ளியும்
விளையாடியஇடங்களும்

இன்றும்.
அவனும், நானும்
ஒன்றாகவே

வேலைசெய்த
ஆயில்மில்

இன்னும்மாறாமல்.
அவனும்,நானும்
பயணம்செய்த
கிராமத்துச்சாலை
இன்றும்
இருக்கிறதுதான்.
அவனும்,நானுமாய்
முன்னும்,பின்னுமாய்
பயணித்த
வேலைக்காரசைக்கிள்
இன்னும்இருவரிடமும். அவனுக்கும்,எனக்குமாய்நகரம்
காட்சிப்படுத்தியஇடங்கள்
இன்னும்அப்படியே.ஆனால்வாழ்நாளின்
மாற்றம்
அவனை
மில்வேலைக்காரனாயும்
என்னை
அரசுஊழியனாயும்
ஆக்கிவைத்திருக்கிறது.

No comments: