25 Sept 2010

மறக்க முடியவில்லை





ஆமாம் தாயே
மறக்கஇயலவில்லை .
கருங்கல் உரலில்
நீ இடித்துத் தந்த
எள்ளுருண்டையின் சுவையை.
ஆமாம் தாயே
மறக்கஇயலவில்லை .
துவரங்காய் பறித்து
அவித்துத் தந்த நாட்களை.
ஆமாம் தாயே
மறக்க இயலவில்லை.
உளுந்தம்காயும் தட்டாம்பயறும்,நிலக்கடலையுமாய்
நீ நிலத்திடமிருந்து
வாங்கித் தந்த நாட்களை.
ஒவ்வொன்றின் அறுப்பிலும்
ஒவ்வொரு சுவையும்,வாசனையும்
உணர்த்தி மறைந்து போன
உன்னையும்,
வீட்டுமனைகளாகிப் போன
விளை நிலங்களையும் மறக்கமுடியவில்லை.

No comments: