4 Feb 2013

மென்முத்தம்,,,,,


                  
வடையை பிய்த்துத் தின்ற கரங்களுக்கு ஒரு மென் முத்தம் தர வேண்டும்.

முத்தம் தருவதென முடிவாகிப் போனபின் ஏன் மென்முத்தம் எனத்தெரியவில்லை.                                                
அழுத்தமான ஒரு முத்தமாகவே கொடுத்துவிட்டுப் போகவேண்டியதுதானே என்கிறீர்களா
அதுவும் சரிதான்.கொடுக்கிற முத்த்தில் மிச்சம் வைத்து அதை எங்கே கொண்டு போய் சேமிக்க?  எந்த வங்கியும்,எந்த ஒரு தனியார் நிதிநிறுவனமும்ஏற்றுக்கொள்ளவும் அதை சேமித்து வைத்து கொள்ளவும் இயலாதுதானே?

ஒன்றல்ல இரண்டல்ல, மிகச்சரியாக மூன்று முத்தங்கள் கொடுக்கலாம்.  என்பது அவனது நினைப்பாய்/

தினசரி  காலையிலும் மாலையிலுமாய் பதிவாய் டீக்குடிக்கிற கடையது.இன்றல்ல நேற்றல்ல போனவாரத்தின்ஒருநாளில் மாலை வேளைவழக்கம்போலவே அந்தக் கடையோரம் நிற்கிறான். மழைக்குஒதுங்கிநிற்கிறபள்ளிப் பிள்ளைகளைப் போல கைகட்டாமலும் பேண்ட் பாக்கெட் இரண்டில் கையை நுழைத்தவாறுமாய்/

மண் பூத்தும் தார் ஓடியுமாய் கறுத்து நீண்டிருந்த சாலை. அதன் மீது சென்ற  வாகனங்கள்  மனிதர்கள் அனைவரையுமாய் பார்த்த விழியின் குவி மையத்தை எடுத்து கடைக்குள் வைத்த போது அங்கொரு பாட்டி அமர்ந்து வடை கூட அல்ல,பஜ்ஜி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். அந்நேரம் அதுதான் காணக்கிடைத்ததாய்/

பானாப் பட பெஞ்சுகள் போடப்பட்டிருந்த கடையின் உள் வெளியது.சற்றே விரிந்து தெரிந்த வெளியில் அமர்ந்து டிபன் சாப்பிட இரண்டு பெஞ்சும்,அமர்ந்து கொள்ளவும் டீ சாப்பிடவுமாய் ஒன்றுமாய் என மூன்று பெஞ்சுகளைப்போட்டிருந்தார்கள்.

பத்துக்கு பத்தடி வெளி இருக்கலாம்.வலது ஓரமாய் கடையின் உள் வெளி,இடது ஓரமாய் டீப்பட்டறை, அதன் பின்னே சமையலறை இருக்கலாம் என நினைக்கிறேன்.கையின் கிடுகு வேயப்பட்டிருந்த கூரை மீதிருந்து புகை வந்தது.

அன்றைக்கு என்னமோ டீ நன்றாக இருந்தது.வரி போட்ட கண்ணாடிக்கிளாஸினுள்ளே முக்கால் அளவே நிரம்பியிருந்த கலர் திரவம் நாவின் சுவையறும்புகளை தீண்டி ஒவ்வொரு மிடராய் உள்ளே போன போது ஆ,,,,ஆயாசம்/

உடலின் களைப்பை மட்டுமல்ல ,உள்ளத்தின் களைப்பையும் போக்குகிற சக்தி அந்த திரவத்திற்கு உண்டு போலும்.டீயைஉறிஞ்சியவாறேதிரும்பவுமாய்கடையினுள்ளே பார்வையை  நீட்டிய போதுஒருபிளாஸ்டிக்தட்டில்ஊற்றபட்டிருக்கிறசட்னியில்இரண்டுபஜ்ஜிகளை வைத்து சாப்பிட்டுக்கொண்டிருந்தாள்.மூதாட்டி.நடு,நடுங்கியகைகளுடனும்,சுருக்கம் விழுந்த முகத்து ட னுமாய்/ 

பஜ்ஜிகளை சாப்பிட்டுக் கொண்டி ருக்கிற அந்த முதிய கரங்களுக்கு ஒரு மென் முத்தம் தரவேண்டும்.

16 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

என்ன ஒரு ரசனை...!

முத்தரசு said...

முத்தம்......... ம்

சசிகலா said...

வர்ணனையை மிகவும் ரசித்தேன்.

உஷா அன்பரசு said...

கதையும், கவிதையுமாய் கலந்த அழகான ரசனை காட்சி!

கோவி said...

So Nice..

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நன்றி தங்களின் வருகைக்கும், கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் முத்தரசு சார்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் சசிகலா மேடம்,நன்றி தங்களின் வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் உஷா அன்பரசு மேடம்,
நன்றி தங்களின் வருகைகைக்கும்,
கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் கோவி சார்.நன்றி தங்களின் வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

வித்தியாசமான சிந்தனை.அழகு.

ezhil said...

சின்ன சின்ன விஷயங்களைக் கூட ரசித்து அனுபவிக்கிறீர்கள்... அந்த அனுபவத்தை பகிர்தலில் எங்களுக்கும் மகிழ்ச்சி. அருமை.

ராஜி said...

உங்க வர்ணனை பார்த்துட்டு டிவி பொட்டில யாரும் கூப்பிடலையா?! செமையா கலக்குறீங்க!

vimalanperali said...

வணக்கம் டீ என் முரளிதரன் சார்.
நன்றி தங்களின் வருகைக்கும், கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் எழில் மேடம்.நன்றி தங்களின் வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் ராஜீ அவர்களே,நன்றி தங்களின் வருகைக்கும், கருத்துரைக்குமாக/