9 Oct 2017

பாவு,,,,

கண்டகனவின்பரிமாணம்எட்டுதிக்கும்நீட்சிபெற்று நெசவோடித்தெரிவதாக/

நான்,அவன்மற்றும்இன்னும்சிலருமாக அமர்ந்திருந்தோம். புற்கள்பூத்திருக்க, செடிகள் முளைத்திருக்க நெடித்தோங்கி நின்ற முள் மரங்கள் மற்றும் சில வுமாய் காற்றில் உடலைசைத்துஆடிக்கொண்டிருக்க,,,,,, இவைகளின் ஊடாக வும், அவைகளை உரசியவாறுமாய் பறந்து திரிந்த பட்டாம் பூச்சிகளும், தரையில் ஊர்ந்த இன்ன பிறவுமாய் தரையில் செடிகளினூடாகவும் அதன் உதிர்ந்த இலைகளினடி நிழலிலுமாய் ஒதுங்கி ஊர்ந்து கொண்டிருந்த புழு, பூச்சி,எறும்புகளை நலம் விசாரித்தவாறும் அவைகளை நோக்கி நேசமுடன் சிறகசைத்தவாறும்,மரங்களின்,பூக்களின் செடிகளின்இலையுதிர்வும்,தலைய சைவும் எங்களைநோக்கிஇருந்ததாகவும்,எங்களைப்பார்த்து சிரித்ததாகவும்/

ஹாய்நலமாநலம்தான்சாப்டீர்களாசாப்பிட்டோம்தரையிலிருந்தபுரதங்களே எங்களுக்கு சிறப்புணவு / 

குளித்தீர்களா?நேற்றுபெய்தமழையில்தான் குளித்துத்தீர்த்தோம்.இன்று மழை வரும் போல தெரிகிறது.வந்தால் திரும்பவும் குளிப்போம் ஆசைதீர/ மிதமா னது முதல் பலமானது வரை என்ன கொஞ்சம் ஜலதோசம் பிடிக்கும். ஆகவே வர்ண பகவானிடம் சொல்லி மழைக்கு லீவு விடச் சொல்ல வேண்டும். நாங்களும் விண்ணப்பிக்கிறோம்.

முடிந்தால் நீங்களும் பரிந்துரை பண்ணுங்களேன்,தூங்கி விட்டீர்களா? தூங்கி னோம் இரவின் மடியில்.எங்களினடியில் தூங்கி விடுகிற யாராவது நாங்கள் வெளிவிடுகிற கரிய மில வாயு தாக்கி பாதிப்படைந்து விடக்கூடாது என்கிற விழிப்புடன்பாதிதூக்கத்துடன்தூங்கியும்தூங்காமலும்இருக்க வேண்டியதாகிப்போகிறது.

மறுநாள் அதுவே தீராத உடல் அசதியாகிப்போக அடிக்கிற காற்றுக்குஎங்களது உடலை அசைக்ககூடபெரும்பிரயணத்தட்டுப்போகிறோம். என்கிற பெரு மூச்சு டனும்,ஆதங்களுடனுமாய் சொன்ன அவைகளை நேசிப்புடன் பார்த்தவாறு ஓடை, ஒடப்புகள் ஓடித்தெரிந்த பள்ளமும்,மேடுமான சமமற்ற சமவெளியில் எங்களது இருக்கை பாய் விரித்து/

நான் அவன்,மற்றும் இன்னும் சிலருமாக அமர்ந்திருந்த வெளியில் எங்களின் முன்பாக சற்று இடைவெளிவிட்டுஒரு குடில்/

அதனுள் யார் தங்கியிருக்கிறார்கள்?அது அங்கு அங்கு ஏன் அனாவசியமாய் என்கிற கேள்விகளை பின் தள்ளி விட்டு முன் நின்று காட்சியளிப்பதாக/

காட்சியளித்தகாட்சியின்முப்பரிமாணங்கள் அடர்த்தியாகவும்,மிதமற்றுமாய்/
குடிலைவிட்டுதள்ளிகுடிலின்வலதுபக்கமாகநின்றுகொண்டிருந்த,நின்று கொண்டிருந்த என்ன,,,,?பாடம்நடத்திகொண்டிருந்த அவர் என்னையும் எனது நண்பரையும்,பிறரையும் நோக்கிசபதமில்லாமல்ஏதோசொல்கிறார்.

கறுப்பு நிற பேண்டும்,ஊதாக்கலரில் கோடுகள் ஓடிய சட்டையுமாய் தென்பட்ட அவர் என்ன சொன்னார்?அது என்ன வகுப்பு?நாங்கள் ஏன் அங்கு அமர்ந்தி ருக்கிறோம் என்பது தெரியாமலும்,புரியாமலும்/

தரை தவழும் குழந்தை,தன் பூம்பாதங்கள் தரையில் பதிய வைக்கிற முதல் எட்டு போலான அவரது பேச்சு மிருதுதன்மை வாய்ந்ததாக இருந்த நேரத்தில் எனது நண்பனின் தந்தை வருகிறார்.

அவர் ஒரு விவசாயக்கூலி.தோட்டம்,காடு,வயல் கிணறு வெட்டு,மரவெட்டு வேலைகொத்து வேலை என எல்லாவற்றிலும் அவரது கரங்களும்,உழைப்பும், வேர்வை வாசமும் கலந்து இருக்கும்.

தேடிவந்துநண்பனிடம்பேசிக்கொண்டிருந்தவரைபாடம் நடத்தியவர் பார்த்து விடுகிறார்."என்ன அங்க பேச்சு" என நெற்றி சுருக்கி இடுங்கிய கண்களுடன் வந்த அவர் ஆழ்ந்த பார்வையால் எனது நண்பனையும் அவரது தந்தையையும் பார்க்கிறார். கூடவே என்னையும்சேர்த்து/

அருகில்அமர்ந்திருந்தவர்களெல்லாம்திரும்பிப்பார்க்கஎனதுநண்பனைபார்த்து யாரது என அதட்டியவராககேட்டபோது தந்தைஎன்கிற அடையாளத் தை சமர்ப்பித்த அவன் அவரைப்பற்றி சொல்கிறான்.

"பரவாயில்ல,இத்தனகஷ்டத்துலயும் புள்ள இங்கவந்துஇலக்கியம் படிக்கனும் னு அனுப்பி வைக்கிறீங்களேரொம்பசந்தோசம்எனஎனது நண்பணினது தந்தை யின் வியர்வைமின்னியவெற்றுடலைகட்டிக்கொள்கிறார்.வாரி அணைத்துக் கொள்கிறார். புழங்காகிதப்படுகிறார்.

பரஸ்பரம் புழங்காகிதப்பட்ட இருவர் மனதிலிருந்தும் ததும்பியமௌனவார்த் தைகளையும்,கண்ணீரையும் சுமந்து அங்கு நிறைந்து படர்ந்து காட்சி தருகி றார்கள்.

நான் நண்பனை பார்க்க,நண்பன் என்னை பார்க்க நான் அன்றலர்ந்து விரிந்து நிற்கும்பச்சைகளையும்,மரங்களையும்கண்ணுற்றவனாய்நண்பனின்கரம்பற்றி அமர்ந்திருகிறேன்.

கண்டகனவின்பரிமாணம்எட்டு திக்கும் நீட்சி பெற்று நெசவோடித் தெரிவதாக/ இது மாதிரியான கனவுகள் அடிக்கடி வரட்டும்.தினசரி வந்தாலும் எனக்கு சம்மதமே/

2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
தம+1

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக,,,/