22 Jan 2015

கண்ணாமூச்சி,,,,,,,


 தரையை கூட்டும் போது
முன்னால் வந்து நின்று
கொண்டிருந்த
நாயைவிரட்டுகிறேன்.
போக மறுத்து என்னையே
உற்றுப் பார்த்தவாறு சுற்றி வருகிறது.
வலப்பக்கம் திரும்பினால்
இடப்பக்கம் போகிறது.
இடப்பக்கம் திரும்பினால்
வலப்பக்கம் வந்து நிற்கிறது.
முன்னங்கால்கள் இரண்டையும்
நீட்டிப்படுத்து விறைப்பாய்
உடல் நெளிக்கிறது.
கல் எடுத்தால் போக்குக்காட்டுகிறது.
கைதட்டி விரட்டினால் பம்முகிறது.
சப்தமிட்டு அதட்டினால்
அருகில் வந்து குழைகிறது.
இடுப்பில் கைவைத்து முறைத்தால்
அப்பாவியாய் விழிமூடி
அண்ணாந்து பார்க்கிறது.
கோபமாக்க இருப்பவரின்
முன்னால் மலர்ந்து சிரிக்கிற
குழந்தையின் வெள்ளைச்சிரிப்பாய்
அதன் செய்கைகள்.
திரண்டு நின்ற தூசியையும்,
இதுவரை கூட்டிய மரத்திலைகளையும்,
கையில் வைத்திருந்த விளக்குமாறையும்
கீழே போட்டு விட்டு
தலையில்தட்டிஅதனுடன்விளையாட ஆரம்பிக்கிறேன்.

12 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

விளையாட்டை ரசித்தேன்...

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
இரசிக்கவைக்கும் வரிகள் இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம2

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

'பரிவை' சே.குமார் said...

ரசிக்க வைத்த விளையாட்டு....
அருமை அண்ணா...

balaamagi said...

அருமை கவிஞரே, நானும் உணர்ந்துள்ளேன். அருமை.

சசிகலா said...

காட்சிப்படுத்திய விதம் ரசனைக்குரியது.

vimalanperali said...

வணக்கம் சசிகலா அவர்களே,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் மகேஸ்வரி பாலச்சந்திரன் அவர்களே,
நன்றி வருகைக்கு,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் பரிவை சேக்குமார் அண்ணா,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் ரூபன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் காசிராஜலிங்கம் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

வித்யாசன் said...

இப்பொழுதுதாள் பிளாக் பக்கமாய் மெல்லெனச் சாய்கிறேன். மிகவும் அருமையாக உள்ளது. நாய் என்ற வார்த்தையை இதில் பயன்படுத்தாமல் அதனை அப்படியே சொல்லினை கையாண்ட அழகு. கிரேட்தான் போங்க... அவ்வளவு இதமா படிச்சேன். நிறைய இருக்கு இங்கு....